Tuesday, November 11, 2025

தீயோனிடமிருந்து என்னை விடுவியும்


தனக்குச் சிறிது காலமே எஞ்சியிருக்கிறது என்பதை அலகை அறிந்துள்ளது.

அதனால் கடுஞ் சீற்றத்துடன் உங்களிடம் வந்துள்ளது.

திருவெளிப்பாடு 12:12 


பிசாசு எனக்கு வலை விரிக்கிறது.

ஆனால் கிறிஸ்து என்னை விடுவிக்கிறார். 


பிசாசு நான் பொய்களை நம்பும்படி செய்கிறது;

ஆனால் கிறிஸ்து உண்மையை வெளிப்படுத்துகிறார். 


பிசாசு என்னைச் சோதிக்கிறது;

ஆனால் கிறிஸ்து அதனை வெற்றிபெற உதவுகிறார். 


பிசாசு என்னை அச்சுறுத்துகிறது;

ஆனால் கிறிஸ்து எனக்குத் துணிவைத் தருகிறார். 

 

பிசாசு என்னைப் பலவீனப்படுத்துகிறது;

ஆனால் கிறிஸ்து என்னை வலுப்படுத்துகிறார். 


பிசாசு என்னைக் கீழே தள்ளுகிறது;

ஆனால் கிறிஸ்து என்னை தூக்கி விடுகிறார். 


பிசாசு என் வீழ்ச்சியில் மகிழ்கிறது;

ஆனால் கிறிஸ்து என்னைத் தேற்றுகிறார். 


ஆண்டவராகிய இயேசுவே,

பல சமயங்களில் நான் உமக்கு அல்லாமல், பிசாசுக்கு கீழ்ப்படிகிறேன்.

பல சமயங்களில் நான் பிசாசின் பிரதிநிதியாகிவிட்டேன்.

சில சமயங்களில் நான் தெரிந்தோ, தெரியாமலோ அண்டைவீட்டார்களுக்கும் எனக்கும் வருத்தத்தை ஏற்படுத்துகிறேன். 

என்னை  பிசாசிடமிருந்தும், அவனுடைய தீவினைகளிலிருந்தும் விடுவியும்.

பிசாசுக்கு எதிராக நான் போராடும் போது எனக்கு வெற்றி அளியும். ஆமென். 


+ பேராயர் ஞானாபரணம் ஜான்சன்

~~~~~~~~~~~~~~~~~~

*Deliver me from the Evil* 


The Devil has come down to you in great fury, knowing that his time is short (Revelation 12:12, NEB). 


The devil spreads the net,

but Christ frees me again. 


The devil makes me believe the lies, 

but Christ reveals the truth. 


The devil tempts me constantly,

but Christ helps me not to yield. 


The devil threatens me,

but Christ encourages me. 


The devil exploits my weaknesses,

but Christ strengthens me. 


The devil pushes me down, 

but Christ lifts me up. 


The devil laughs at my fall, 

but Christ comforts me. 


Lord Jesus,

many times I have obeyed the devil and not you.

Many times I have become an agent of the devil.

Sometimes knowingly and sometimes unknowingly, I have brought misery both to my neighbours and to myself.

Deliver me from the devil and his evils.

Give me also victory in my fight against the devil. Amen. 


+ Bishop Gnanabaranam Johnson

தூய மார்ட்டின் திருநாள்


நவம்பர் 11ஆம் நாள் பல கிறிஸ்தவர்கள் தூய மார்ட்டின் திருநாளைக் கொண்டாடுகின்றனர். நவம்பர் 10ஆம் நாள் பிறந்த மார்ட்டின் லுத்தர் அடுத்த நாள் திருமுழுக்குப் பெற்றார். பல குழந்தைகள் வெகு சீக்கிரத்திலேயே மரித்துப் போனதால் பெற்றோர்கள் தங்களுடைய சிறு குழந்தைகள் விரைவிலேயே திருமுழுக்கு ஆசியைப் பெற்றுக் கொள்ள விரும்பினர். 11ஆம் நாள் தூய மார்ட்டினுக்கு அர்ப்பணிக்கப்பட்ட நாளாக இருந்ததால், லுத்தருக்கு மார்ட்டின் என்ற பெயர் கொடுக்கப்பட்டது.    


               மார்ட்டின் யார்? கி.பி. 316 இல் ஹங்கேரியில் புற சமயத்தைச் சேர்ந்த ஒரு உரோமானிய அதிகாரிக்கு மகனாகப் பிறந்தார். அவர் உரோம படையில் சேர்ந்து ஒரு படை வீரரானார். குளிர்காலம் ஒன்றில் அவர் ஏமியன்ஸ் (பிரான்சு) நகருக்கு வெளியே குதிரையில் சவாரி செய்து கொண்டிருந்த போது, ஓர் ஏழை பிச்சைக்காரர் மேலங்கி இல்லாமல் நடுங்கி கொண்டிருப்பதைப் பார்த்தார். அவர் தன்னுடைய வாளை உருவி, தன்னுடைய மேலங்கியை இரண்டு துண்டுகளாகப் பிரித்து, ஒரு பாதியை பிச்சைக்காரரிடம் கொடுத்தார். மறுநாள் இரவில் கிறிஸ்து மார்ட்டினுடைய மேலங்கியை அணிந்து அவருக்கு தரிசனத்தில் தோன்றி கூறினார்: "இன்னும் திருமுழுக்குப் பெறாத மார்ட்டின் அவருடைய மேலங்கியின் ஒரு பகுதியை எனக்குக் கொடுத்துள்ளார்." விரைவில் மார்ட்டின் இராணுவத்தை விட்டு விலகினார். திருமுழுக்குப் பெற்றார். அவர் ஆயராகவும் பின்னர் தூர் (Tours) நகரத்தின் பேராயராகவும் ஆனார். அவரைப் பற்றிய பல வியத்தகு செயல்கள் பதிவாகி, அவர் புனிதர் பட்டம் பெற்றார். அவருடைய பல செயல்கள் மறந்து விட்டன. ஆனால் அவரது மேலங்கியைப் பிரித்து பிச்சைக்காரருடன் பகிர்ந்து கொண்ட இரக்கச் செயல் மறக்க முடியாத ஒரு கருணை செயலாகிவிட்டது. அவர் கிறிஸ்துவின் கட்டளையை நிறைவேற்றினார். "நான் ஆடையின்றி இருந்தேன், நீங்கள் எனக்கு ஆடை அணிவித்தீர்கள்." அன்பிற்கு ஓர் எடுத்துக்காட்டாக கலைஞர்கள் அந்தக் காட்சியை ஓவியமாக வரைவதும், சிற்பமாக செதுக்கியும் உள்ளனர். கிழக்கு ஜெர்மனியில் பல நகரங்களில் சிறு பிள்ளைகள் மாலையில் தாங்களே சுயமாக உருவாக்கிய விளக்குகளுடன் பாடல்களைப் பாடி சுற்றி வருவார்கள்.  


லுத்தர் மடலாயத்திற்குள் நுழைந்த எர்பர்ட் (Erfurt) என்ற இடத்தில் சிறு பிள்ளைகள் சந்தை கூடும் இடத்தில் கூடினர்.


அக்கூட்டத்தில் உரோமக் கத்தோலிக்கப் பேராயர் புனித மார்ட்டினைப் பற்றியும், லுத்தரன் பேராயர் மார்ட்டின் லுத்தரைப் பற்றியும், மாநகராட்சி மன்ற தலைவர் மார்ட்டின் லுத்தர் கிங்கைப் பற்றியும் பேசினார்கள் என்று உள்ளூர் ஆயர் என்னிடம் கூறினார். 


புனித மார்ட்டின்,மார்ட்டின் லுத்தர், மார்ட்டின் லுத்தர் கிங் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றிய மூவர். புனித மார்ட்டின் திருநாளன்று அவர்களை நினைவு கூருவது தகுதியானது. 


மறைதிரு.அறிவர்.சீபெர்ட் ஜான்சன்

Wednesday, October 29, 2025

26 M got heart attack

Recently a doctor treated an young adult stroke victim aged 26 was shocked. Even though it's rare scenerio it's really hurts to see such cases!

His sharing follows....

The man with no habits of alcohol smoke or even gutkhas.!


He depressed for his breakup he made himself in lonely environment he quit social exposure for the past 6 months


this is a wake-up call for all of us. 


Depression is not weakness — it’s a silent warning from your mind.


Mental health matters as much as physical health.

Continuous stress, isolation, and untreated depression can affect your brain and body in serious ways.


Talk about your feelings.

Stay connected with your loved ones.

Exercise regularly.

Don’t let loneliness take control — reach out before it’s too late.


And avoid thaniya poi sapdu thaniya padam paru thaniya vazha kathuko kind of post 


Let’s spread awareness that mental well-being saves lives.

Take care of your mind, body, and soul — because healing starts within. ❤️

Monday, October 27, 2025

வெண்மை நிற புலி இளைஞனை கொன்றது

 26.09.2014 அன்று டெல்லி உயிரியல் பூங்காவில் ஒரு வெண்மை நிற புலி இளைஞனை கொன்றது. 


ஒரு உயிர் ஒரு புலியிடம் மாட்டிக் கொண்டு 10 நிமிடங்களாக கையெடுத்துக் கும்பிட்டுக் கொண்டேயிருக்கும் பொழுது அந்த உயிரை எப்படிக் காப்பாற்றுவது என்பதை பார்வையாளர்கள் யாருக்கும் நம் கல்விமுறை நமக்கு கற்றுக் கொடுக்கவேயில்லையே...!


ஆனால் பார்வையாளர்கள் மேலிருந்து கல்லெறிந்த உடன்.. அது சினம் கொள்கிறது. மேலே பார்த்து உறுமுகிறது. பார்வையாளர்கள் விடவில்லை. தொடர்ந்து கல்லெறிகிறார்கள்... கூச்சலிடுகிறார்கள்... அதன் பிறகுதான் அந்தப் புலி, அந்த வாலிபனைத் தாக்க முயற்சிக்கிறது. அதுவும் இறையைத் தூக்கிக் கொண்டு தன்னிடத்திற்கு தூக்கிக் கொண்டு சென்று விட வேண்டும் என முடிவு செய்து அவனுடைய கழுத்தைக் கவ்விப் பிடிக்கிறது. இவையெல்லாமே தவிர்க்கப்பட்டிருக்கலாம்.

காரணம்.. அறிவின்மை.. 

என்ன செய்வது என்கிற அறிவின்மை.


மிருகங்கள் சப்தத்திற்கு மிரளும்... ஆனால் நெருப்பிற்கு பயப்படும். கூடியிருந்த அத்தனை பார்வையாளர்களில் யாராவது ஒருவர், தன் சட்டையைக் கழற்றி, அதில் நெருப்பு வைத்து, அதை அந்த வாலிபனிடத்தில் எறிந்திருந்தால் புலி மிரண்டு ஓடியிருந்திருக்கும். இந்த அறிவைக் கூட கற்றுக் கொடுக்காமல்..


(a+b)2 =a2 + 2ab + b2 

என்று கற்றுக் கொண்ட வெற்றுத் தேற்றத்தினால் எனக்கு என்ன பயன்..? 


ஒரு விலங்கு தன்னைத் தாக்க வரும் பொழுது, வேறு எந்த உதவியுமே தனக்கு அந்த இடத்தில் கிடைக்கவில்லை.. தப்பித்து ஓடவும் முடியவில்லை.. மிருகமோ தன்னிலும் பலத்த உருவம்.. அது முதலையாக இருக்கலாம், சிங்கமாக இருக்கலாம், அல்லது யானையாக இருக்கலாம். அதை எப்படி எதிர்கொள்வது என்ற அறிவைக் கற்றுக் கொடுக்காத கல்வியினால் எனக்கென்ன பயன்..?


அந்த விலங்குகளின் கண்களை நம் கை முஷ்டியினால் பலங்கொண்ட மட்டும் ஓங்கித் தாக்கினால் அவை நிலை குலைந்து ஓடி விடும். நாமும் தப்பிப்பதற்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும். அல்லது சிறு மண் துகள்களை அள்ளி அதன் கண்களில் தூவினால் போதும் அவை அந்த இடத்திலிருந்து தப்பித்துச் செல்லத்தான் முயற்சிக்கும். இந்த அறிவைக்கூடக் கற்றுக் கொடுக்காமல் பட்டங்கள் என்ன.. சட்டங்கள் என்ன.. பல்கலைக் கழகங்கள் என்ன..?


தென்னாப்பிரிக்காவிலும், ஆஸ்திரேலியாவிலும் என்ன தோண்டியெடுக்கிறார்கள் என்பதை கற்றுக்கொடுப்பதை விட.. வாழ்க்கைக் கல்வியை முதலில் கற்றுக் கொடுங்கள்.


மற்றவர்களை மதிப்பது எப்படி..? மற்றவா்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்வது எப்படி..? 


பெற்றோரிடம் நடந்து கொள்வது எப்படி..?


சாலை விதிகள் என்ன..? 

ஏன் சாலை விதிகளைப் பின்பற்ற வேண்டும்..?


 அடிப்படைச் சட்டங்கள் என்ன..?

 நமக்கான உரிமைகள் என்ன..?


 காவல் நிலையங்களை எப்படி அணுகுவது..?

 

விபத்து ஏற்பட்டால் அதை எப்படி எதிர் கொள்வது..?


 விஷக்கடிகளில் எப்படித் தப்பிப்பது..?


 மாரடைப்பு வந்தால் என்ன செய்வது..?


 நோய்களை எவ்வாறு கண்டறிவது..? 


எந்த மருந்துக்கள் எல்லாம் தடை செய்யப்பட்டவை.. பின் விளைவுகள் உள்ளவை..?


மனைவியிடம் எப்படி நடந்து கொள்வது..?


 கணவனிடம் எப்படி நடந்து கொள்வது..?


 மற்றவர்களை நேசிப்பது எப்படி..?


 நேர்மையாய் இருப்பது எப்படி..?


இவை எதையுமே கற்றுக் கொடுக்காத கல்வியினால் ஆன பயன்தான் என்ன..?

Saturday, October 4, 2025

IAS - IPS

 நம்பில் பலருக்கும் தெரிந்த உயர் பதவிகள் IAS, IPS பதவி என்று தான் நினைத்து கொண்டு இருக்கிறோம்.


ஆனால், இதே அளவு தகுதி உள்ள மத்திய /மாநில அரசு பணிகளும், தேர்வுகளும் எத்தனை உள்ளது என்பதையும் தெரிந்து கொள்வோம்:-


01. IAS - Indian Administrative Service


02. IPS - Indian Police Service


03. IFS - Indian Foreign Service


04. IFS - Indian Forest Service


O5. IRS -Indian Revenue Service (Income Tax )


06. IRS- Indian Revenue Service ( Customs & Central Excise )


07. IAAS-Indian Audit and Accounts Service


08. ICAS-Indian Civil Accounts Service


09. ICLS-Indian Corporate Law Service


10. IDAS-Indian Defence Accounts Service


11. IDES-Indian Defence Estate Service


12. IIS  - Indian Information Service


13. IPTAS - Indian Post & Telecom Accounts Service


14. IPS - Indian Postal Service


15] IRAS - Indian Railway Accounts Service


16. IRPS - Indian Railway Personal Service


17. IRTS - Indian Railway Traffics Service


18. ITS - Indian Trade Service


19. IRPFS - Indian Railway Protection Force Service


20. IES - Indian Engineering Services


21. IIOFS  -   Indian Ordinance Factory Service


22. IDSE  -  Indian defence engineering services


23.  IES  - Indian Economics Services


24. ISS  - Indian Statistics Service


25. IRES - Indian railway engg service 


26. IREES -  Indian railway elec engg service


இத்தனை பதவிகளும் தேர்வுகளும், இந்திய ஆட்சி, அதிகார, ஆளுமை பணிகளுக்கான பணி இடங்கள் ஆகும்.


இவை அனைத்துக்கும் தேவையான கல்வித்தகுதி ஏதாவது ஒரு பட்டப்படிப்பு மட்டுமே...


பெரிய கல்வி தகுதி ஏதும் தேவை இல்லை. ஒரு பட்டப்படிப்பும் முறையான பயிற்சியும் இருந்தால், யார் வேண்டுமானாலும் இந்த தேர்வுகளில் வெற்றி பெற்று இந்திய ஆட்சிப்பணி பதவிகளி்ல் அமரலாம்.


இத்தனை வாய்ப்புகள் இருப்பது பெரும்பாலான இளம் பட்டதாரிகளுக்கு தெரிவதில்லை நம் தமிழக இளைஞர்களுக்கு தெரிந்தது எல்லாம், VAO பதவி, கிளார்க் பதவி, சத்துணவு அமைப்பாளர் பதவி மட்டுமே.


இனியாவது, உயர் பதவிகளுக்கு இந்திய அளவிளான தேர்வுகளுக்குத் தயார் செய்து கொள்ளுங்கள்.


எல்லா உயர் பதவி தேர்வுகளுக்கும் தகுதி ஒரே ஒரு பட்டப்படிப்பு தான். எல்லாவற்றுக்கும் முறையான பயிற்சி தான் முக்கியம். 


இதை உங்கள் பிள்ளைகளுக்கு சிறு வயதில் இருந்தே அறிந்து கொள்ள உதவுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் தெரிவியுங்கள்.

Wednesday, October 1, 2025

மனநிறைவுடன் நிலைத்திரு

 

மாதப்பிறப்பு ஆராதனை

அக்டோபர் மாதத்தின் வாக்குத்தத்தம் - சங்கீதம் 147:14

அவர் உன் எல்லைகளைச் சமாதானமுள்ளவைகளாக்கி, உசிதமான கோதுமையினால் உன்னைத் திருப்தியாக்குகிறார்.

சங்கீதம் 147:14

தலைப்பு:மனநிறைவுடன் நிலைத்திரு

அறிமுகம்

சங்கீதம் 147 என்பது “அல்லேலூயா சங்கீதங்களில்” (Psalm 146–150) ஒன்றாகும்.

“அல்லேலூயா” (கர்த்தரைத் துதியுங்கள்) எனத் தொடங்கியும், “அல்லேலூயா” என முடிவடையும் மகிழ்ச்சியான சங்கீதம்.

பின்னணி

பாபிலோனிய சிறைவாசத்திலிருந்து இஸ்ரவேலர் திரும்பி, எருசலேம் சுவர்களையும் ஆலயத்தையும் மீண்டும் எழுப்பிய காலம்.

அவர்கள் சந்தித்த கஷ்டங்களில், கடவுளே சமாதானத்தையும் வளத்தையும் வழங்குபவர் என்பதை மக்களிடம் நினைவூட்டும் சங்கீதம் இது.

வசனத்தின் முக்கியத்துவம்

 அவர் உன் எல்லைகளைச் சமாதானமுள்ளவைகளாக்கி, உசிதமான கோதுமையினால் உன்னைத் திருப்தியாக்குகிறார் – இந்த வசனம் மூன்று ஆசீர்வாதங்களை வாக்குத்தத்தமாக அறிவிக்கிறது:

    1. எல்லைகளில் சமாதானம்,

    2. உசிதமான கோதுமையால்

        திருப்தி,

    3. மனநிறைவு கொண்ட

        நிலையான வாழ்க்கை.

I. கடவுள் நம் எல்லைகளில் சமாதானத்தை நிறுவுகிறார்

“அவர் உன் எல்லைகளைச் சமாதானமுள்ளவைகளாக்கி”* (சங். 147:14a).

எல்லைகள் என்பது: குடும்பம், சமூகம், தேசம், நம் வாழ்வு அனைத்தையும் குறிக்கிறது.

சமாதானம் (Shalom) = முழுமையான நலனும், பாதுகாப்பும் (ஏசாயா 26:3).

 “அமைதியான மனம் உடம்புக்கு ஜீவம்” (நீதி 14:30).

இயேசு சொன்னார்:

சமாதானத்தை உங்களுக்கு வைத்துப்போகிறேன், என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன், உலகம் கொடுக்கிறபிரகாரம் நான் உங்களுக்குக் கொடுக்கிறதில்லை. உங்கள் இருதயம் கலங்காமலும் பயப்படாமலும் இருப்பதாக.

யோவான் 14:27

“அவர் எங்கள் சமாதானம்” (எபே. 2:14).

குடும்பங்களில் பிளவு, சண்டை, போர் – இதற்கு தீர்வு கிறிஸ்துவின் சமாதானம் மட்டுமே.

கிறிஸ்துவின் சீடர்களாகிய நாம் “சமாதானக்காரர்கள்” ஆக இருக்க அழைக்கப்பட்டிருக்கிறோம் (மத். 5:9).

II. கடவுள் நம்மை உசிதமான கோதுமையால் திருப்தி படுத்துகிறார்

உசிதமான கோதுமையினால் உன்னைத் திருப்தியாக்குகிறார்” (சங். 147:14b).

உயர்தர கோதுமை

உசிதமான கோதுமை என்றால் என்ன?

எபிரெயர் மூலத்தில் “Chelev Chittim” என்று உள்ளது; அதாவது சிறந்த தரமான கோதுமை, மிகச் சுத்தமானதும், மிகச் சிறந்ததும்.

தேவன் தனது ஜனங்களுக்கு மிகச் சிறந்ததைத் தருகிறார்; குறைவானதை அல்ல.

சங்கீதம் 81:16: “உச்சிதமான கோதுமையினால் அவர்களைப் போஷிப்பார், கன்மலையின் தேனினால் உன்னைத் திருப்தியாக்குவேன்.”

சங்கீதம் 81:16

சங்கீதம் 103:5: “அவர் உன்னை நன்மைகளினால் திருப்தி படுத்துகிறார்.”

மனிதனுக்கு வாழ்வதற்குத் தேவையான உணவு, உடை, குடியிருப்பு போன்ற அடிப்படை தேவைகளை கடவுள் நிறைவாக தருகிறார்.

மத்தேயு 6:11: “எங்கள் அன்றாட அப்பத்தை இன்றைக்கு எங்களுக்கு அருளும்.”

கானான் தேசத்தில் பால் தேன் ஓடும் வளம் கொடுக்கப்பட்டது (யாத்திரி 3:8).

உபாகமம் 8:7–9: “நீங்கள் குறைவற்ற தேசத்தில் அப்பம் உண்ணுவீர்கள்.”

கடவுள் தம் ஜனங்களைத் தவிர்க்காமல், வளமாய் கொடுப்பவர்.

“நானே ஜீவ அப்பம்; என்னிடத்தில் வருகிறவன் பசியடைய மாட்டான்” (யோவான் 6:35).

“நான் உயிரோடிருக்கும் அப்பமாகியிருக்கிறேன்; யாராவது இந்த அப்பத்தை உண்டு வாழ்ந்தால் அவன் என்றைக்கும் உயிரோடிருப்பான்” (யோவான் 6:51).

சங்கீதம் 103:5: “அவர் உன்னை நன்மைகளினால் திருப்தி படுத்துகிறார்.”

உலக ஆசைகள் நம்மை பசியோடு வைக்கின்றன; ஆனால் கிறிஸ்துவில் தான் உண்மையான திருப்தி/நிறைவு கிடைக்கிறது.

பொருள் செல்வம், புகழ், அதிகாரம் எதுவும் நம்மை நிறைவுறச் செய்ய முடியாது; கிறிஸ்து மட்டுமே நம் உள்ளத்தைக் நிறைவடைய செய்வார்.

III. கடவுள் நம்மை மனநிறைவுடன் நிலைத்தவர்களாக மாற்றுகிறார்

“மனநிறைவுடன் நிலைத்திரு.”

மனநிறைவு = கடவுளுடைய கிருபையில் நம்பிக்கை வைக்கும் நிலை.

பவுல் கூறுகிறார்: *“எனக்கு இருக்கிற நிலையிலே திருப்தியாயிருக்க கற்றுக்கொண்டேன்” (பிலி. 4:11).

கடவுளில் நிலைப்பவர்களை ஒருபோதும் அசைக்கமுடியாது கற்பாறை மீது கட்டின வீடை போல (மத். 7:24–25).

“போதுமென்கிற மனதுடனே கூடிய தேவபக்தியே மிகுந்த ஆதாயம்.

1 தீமோத்தேயு 6:6

 இன்றைய உலகம் எப்போதும் “மேலும், மேலும்” என்று குரல் கொடுக்கிறது.

ஆனால் கிறிஸ்துவில் உள்ளவர்:

“கிடைத்ததிலே திருப்தியாய்” வாழ்கிறார்

நீங்கள் பணஆசையில்லாதவர்களாய் நடந்து, உங்களுக்கு இருக்கிறவைகள் போதுமென்று எண்ணங்கள். நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை என்று அவர் சொல்லியிருக்கிறாரே.

எபிரேயர் 13:5

மனநிறைவு கொண்டவர்களுக்கு மன அமைதியும், ஆன்மீக நிலைத்தன்மையும் கிடைக்கிறது.

முடிவு

சங்கீதம் 147:14 நமக்குக் கொடுக்கும் மூன்று பெரிய வாக்குத்தத்தங்கள்:

 I.எல்லைகளில் சமாதானம் – குடும்பம், சமூகம், நாடு அனைத்திலும் கிறிஸ்துவின் சமாதானம் நம்மை காக்கிறது (யோவான் 14:27).

II. உசிதமான கோதுமையால் திருப்தி – கடவுள் நம்முடைய அடிப்படை தேவைகளையும் ஆன்மீக பசியையும் கிறிஸ்துவில் நிறைவாகத் தருகிறார் (யோவான் 6:35).

III. மனநிறைவுடன் நிலைத்திரு – எந்த நிலையிலும் தேவபக்தியோடும் திருப்தியோடும் நிலைத்து வாழும் வாழ்க்கை உண்மையான ஆசீர்வாதமாகும் (பிலி. 4:11; 1 தீமோ 6:6).

இவை அனைத்தும் கிறிஸ்துவில் நிறைவேறுகின்றன.

ஆகையால் நாம், மனநிறைவுடன் நிலைத்திரு; கிறிஸ்துவின் சமாதானத்தில் வாழ்ந்து, அவருடைய அப்பத்தில் திருப்தி பெற்று, அவரது கிருபையில் நிலைத்திருப்போம், ஆமென்.

Written by : Rev. Dr. William Charles

Tuesday, September 30, 2025

விழுப்புரம்

 விழுப்புரம் மாவட்டத்தின் வரலாறு, முன்னர் ஒருங்கிணைந்த தென்னாற்காடு மாவட்டத்தின் ஒருபகுதியாக இருந்ததில் தொடங்கி, 1993 ஆம் ஆண்டு செப்டம்பர் 30 அன்று தனி மாவட்டமாக உருவானதுடன் தொடங்குகிறது. இங்குள்ள செஞ்சிக் கோட்டை போன்ற வரலாற்று சிறப்புமிக்க இடங்கள் சோழர்கள் காலத்திலிருந்தே இந்த பகுதியின் முக்கியத்துவத்தை காட்டுகின்றன. 

ஆரம்பகால வரலாறு: விழுப்புரம் பகுதியின் வரலாறு சோழர்கள் காலத்திலிருந்து தொடங்குகிறது. 

தமிழ்நாட்டின் மிகப்பெரிய மாவட்டம் 

மாவட்ட உருவாக்கம்: விழுப்புரம், 1993 ஆம் ஆண்டில் தென்னாற்காடு மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டது

இது 1993 மாவட்டமாக பிரிக்கப்பட்டாலும் 100 ஆண்டுகளுக்கு முன்பே அதாவது 1919 அநேக தொழில் பட்டறைகள் பள்ளிக்கூடங்கள் நிறைந்த மாவட்டமாக குறிப்பாக விவசாயத்தில் முதன்மையான ஒரு மாவட்டமாக இருந்தது 

அநேக கோயில்கள் மசூதிகள் வீரமாமுனிவர் கட்டிய வரலாற்று சிறப்புமிக்க தேவ ஆலயங்கள் என பல இடங்கள் இதன் சிறப்பை கூறுகிறது

வந்தவரை விழாது காக்கும்‌ 

 விழுப்புரத்தினால் நன்மை பெற்றவன் என் முத்தரையர் அநேகர் நன்மை பெற்றார்கள் 

எனவே இன்று விழுப்புரத்தில் நினைவுகூறுவோம் 

Written by : J. Jino Curtis Joseph

Current Post

தீயோனிடமிருந்து என்னை விடுவியும்

தனக்குச் சிறிது காலமே எஞ்சியிருக்கிறது என்பதை அலகை அறிந்துள்ளது. அதனால் கடுஞ் சீற்றத்துடன் உங்களிடம் வந்துள்ளது. திருவெளிப்பாடு 12:12  பிசாச...