Saturday, August 30, 2025

சொர்கம்

 ஒரு பெரிய மனிதன். இந்த உலகத்தில் மிகவும் வசதியாக வாழ்ந்தான். ஒரு நாள் அவன் உலக வாழ்க்கையை முடித்துக் கொண்டு சொர்க்கத்துக்குப் போனான். அங்கே போன பிறகுதான் தெரிந்தது, சொர்க்கத்தின் வாசல் கதவு மூடி இருந்தது. மூடிய கதவின் முன்னால் போய் நின்றான். ‘‘இங்கே யாருமே இல்லையா?’’ என்று உரக்கக் கத்தினான். பதில் இல்லை.


‘‘நான் ஒரு பெரிய மனிதன் வந்திருக்கிறேன். கதவைத் திறந்து விடு’’.


சற்று நேரத்தில் சித்ரகுப்தன் அங்கே வந்தான். உடனே இந்தப் பெரிய மனிதன், தனது சட்டைப்பையிலிருந்து பத்து ரூபாய் நோட்டை எடுத்து அவன் கையில் திணித்தான். ‘‘இந்தா... இதை வெச்சுக்கோ, சீக்கிரம் கதவைத் திற... நான் உள்ளே போகணும்’’.


சித்ரகுப்தன் சிரித்தான்.

‘‘இதெல்லாம் உங்கள் பூலோக நடைமுறைகள், லஞ்சம் கொடுக்கறது, கதவைத் திறக்கச் சொல்றது... அதெல்லாம் இங்கே ஒண்ணும் எடுபடாது’’.


‘‘அப்படின்னா நான் எப்படி உள்ளே வர்றது?’’


‘‘சொர்க்கத்துலே நுழையறதுக்கான அனுமதிச் சீட்டு கொண்டு வந்திருக்கியா?’’


‘‘அனுமதிச் சீட்டா? அது எங்கே கிடைக்கும், சொல். எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை. வாங்கிக்கலாம்.’’


‘‘அதைக் காசு கொடுத்து வாங்க முடியாது’’.


‘‘வேறே எப்படி வாங்கறது?’’


‘‘அடுத்தவர்களுக்கு ஏதாவது உதவி செஞ்சாத்தான் அது கிடைக்கும்.’’


‘‘என்ன சொல்றே நீ?’’


‘‘பூலோகத்துலே நீ செய்யுற புண்ணிய காரியங்கள் தான் சொர்க்கத்துலே நுழையறதுக்கான அனுமதிச் சீட்டு’’.


‘‘இப்ப நான் உள்ளே வர என்ன வழி?’’


‘‘பூலோகத்துலே நீ யாருக்காவது... ஏதாவது உதவி செஞ்சிருக்கியா?’’


பெரிய மனிதன் ரொம்ப நேரம் யோசித்தான். பிறகு சொன்னான்: ‘‘ஒரு முறை ஒரு கிழவிக்கு 10 காசு தானம் கொடுத்திருக்கேன். அப்புறம் இன்னொரு நாள் ஓர் அநாதைப் பையனுக்கு ஐந்து காசு கொடுத்திருக்கேன்.’’


‘‘கொஞ்சம் பொறு’’ என்று சொல்லிவிட்டு சித்ரகுப்தன் உள்ளே போனான். கொஞ்ச நேரம் கழித்து வெளியே வந்தான். ‘‘உள்ளே போய் சொர்க்கத்தின் தலைவர்கிட்டே உனது கதையைச் சொன்னேன். அவர் உடனே உத்தரவு போட்டுட்டார்’’.


‘‘என்ன உத்தரவு?’’


‘‘அந்தப் பதினஞ்சு காசை உன்கிட்டே திருப்பிக் கொடுத்துடச் சொன்னார்’’.


‘‘அப்புறம்?’’


‘‘உன்னை நரகத்துக்கே அனுப்பி வச்சுடச் சொன்னார்’’. பெரிய மனிதன் மயங்கி விழுந்தான்.


ஆன்மிக உலகில் பயணம் செய்கிறவர்கள் புரிந்து கொள்ள வேண்டிய ஒரு முக்கியமான பாடம் இது . காசு கொடுத்து சொர்க்கத்தை வாங்க முடியாது. ஆனால், கருணையைக் கொடுத்து அதைச் சுலபமாக வாங்க முடியும்.


#நன்றி : தென்கச்சி கோ.சுவாமிநாதன்

Thursday, August 28, 2025

பணம்

 இந்த #பணத்தை கையில பிடிச்சி, கொஞ்சம் தள்ளி வெச்சி யோசிச்சு பாத்தா...


அடேங்கப்பா இந்த பணத்துக்குத் தான் எவ்வளவு #பெயர்கள்...?


கோயில் உண்டியலில் செலுத்தினால் #காணிக்கை என்றும்...


யாசிப்பவருக்குக் கொடுத்தால் #பிச்சை என்றும்...


அர்ச்சகருக்குக் கொடுத்தால் #தட்சணை என்றும்...

 

கல்விக் கூடங்களில் #கட்டணம் என்றும்...


திருமணத்தில் #வரதட்சணை என்றும்... 


திருமண விலக்கில் #ஜீவனாம்சம் என்றும்...


விபத்துகளில் இறந்தால் #நஷ்டஈடு என்றும்...


ஏழைகள் கேட்டுக் கொடுத்தால்

#தர்மம் என்றும்...


நாமாக விரும்பி ஏழைகளுக்குக் கொடுத்தால் #தானம் என்றும்...


திருமண வீடுகளில் பரிசாக #மொய் என்றும்...

     

திருப்பித் தர வேண்டும் என யாருக்காவது கொடுத்தால் அது #கடன் என்றும்...


திருப்பித் தர வேண்டாம் என இலவசமாகக் கொடுத்தால் அது #அன்பளிப்பு என்றும்...


விரும்பிக் கொடுத்தால் #நன்கொடை என்றும்...

     

நீதிமன்றத்தில் செலுத்தினால் #அபராதம் என்றும்...

      

அரசுக்குச் செலுத்தினால் #வரி என்றும்...


அரசுப் பொது தர்ம ஸ்பானங்களுக்கு கொடுத்தால் அது #நிதி என்றும்...

      

செய்த வேலைக்கு மாதந்தோறும் கிடைப்பது #சம்பளம் என்றும்...


தினமும் கிடைப்பது #கூலி என்றும்...

    

பணி ஓய்வுப் பெற்றால் கிடைப்பது #ஓய்வூதியம் என்றும்...


சட்டத்திற்கு விரோதமாக கையூட்டு வாங்குவதும் கொடுப்பதும் #லஞ்சம் என்றும்...

     

கடன் வாங்கினால் அத்தொகைக்கு

#அசல் என்றும்...


வாங்கியக் கடனுக்குக் கொடுக்கும் போது #வட்டி என்றும்...


தொழில் தொடங்கும் போது போடும் அதற்கு #முதலீடு என்றும்...


தொழிலில் கிடைக்கும் வருமானத்துக்கு #இலாபம் என்றும்...

     

குருவிற்குக் கொடுக்கும் போது #குருதட்சணை என்றும்...


ஹோட்டலில் நல்குவது #டிப்ஸ் என்றும்...


இவ்வாறு பல பெயர்களில் கைமாறும் இந்தப் #பணத்திற்கு மாற்றாக வேறொன்றும் இப்புவியில் இல்லை...


இந்தப் பணம் என்ற காகிதத்தைப் பெற...


சிலர் அன்பை இழக்கின்றனர்...


சிலர் பண்பை இழக்கின்றனர்...


சிலர் நட்புகளை இழக்கின்றனர்...


சிலர் உறவுகளை இழக்கின்றனர்...


சிலர் கற்பை இழக்கின்றனர்...


சிலர் கண்ணியத்தை இழக்கின்றனர்...


சிலர் மார்க்கத்தை இழக்கின்றனர்...


சிலர் மனித நேயத்தை இழக்கின்றனர்...


சிலர் வாலிபத்தை இழக்கின்றனர்...


சிலர் வாழ்க்கையையே இழக்கின்றனர்...


படித்ததில் மனதை பாதித்தது..

Current Post

தீயோனிடமிருந்து என்னை விடுவியும்

தனக்குச் சிறிது காலமே எஞ்சியிருக்கிறது என்பதை அலகை அறிந்துள்ளது. அதனால் கடுஞ் சீற்றத்துடன் உங்களிடம் வந்துள்ளது. திருவெளிப்பாடு 12:12  பிசாச...