Friday, March 26, 2021

Easter Egg

 கிறிஸ்து உயிர்த்தெழுந்த திருநாளும் " முட்டைகளும் முயல்களும் ".

Easter and the " Easter egg and Easter Bunny / Hare ".


அண்மையில் ஈஸ்டர் வாழ்த்துப் படம்  ஒன்று பார்த்தேன். அதில் ஈஸ்டர் வாழ்துக்காக ஈஸ்டர் முட்டைகள் அடங்கிய கூடைப் படம் அச்சிடப்பட்டிருந்தது.


எவ்வாறு கிறிஸ்மஸ் பண்டிகையை Santa Claus, Christmas tree, Star போன்றவை மனுக்குலத்தை மீட்பதற்காக மானிடரான கிறிஸ்து பிறப்பின் உன்னதமான நோக்கத்தை மறைத்துவிட்டனவோ, அவ்வாறு இன்று ஈஸ்டர் பண்டிகையின் " உயிர்தெழுதல் " என்ற சிறப்பான நோக்கத்தை " ஈஸ்டர் முட்டைகளும் ஈஸ்டர் முயல்களும் " மறைத்துவிட்டன. இந்த முயலை Bunny என்று செல்லப் பெயரிட்டு அழைக்கின்றனர்.


பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் ஆப்பிரிக்க நாடுகளில் தீக்கோழி முட்டைகளை வர்ணம் தீட்டி அலங்கரிப்பது வழக்கமாக இருந்தது. இப்பழக்கம் மேலை நாடுகளிலும் பரவியது. 20 ஆம் நூற்றாண்டில் அங்கு கோழி முட்டைகளையே அலங்கரித்தனர். இப்பழக்கம் சமயச் சார்புடையதாகத் திருச்சபையில் ஏற்க்கப்பட்டது. அதாவது " உயிர்த்தெழுதலுக்கு " அடையாளமாக கோழி முட்டை ஏற்க்கப்பட்டது. வெறும் உயிரற்ற திரவ நிலையிலுள்ள முட்டையிலிருந்து உயிருள்ள குஞ்சு வெளிவருவது உயிர்த்தெழுதலுக்கு அடையாளமாகியது. ஆகவே  ஈஸ்டர் அன்று அலங்கரிக்கப்பட்ட முட்டைகளைப் பரிமாறுவது வழக்கமாகியது.


அத்துடன் மேலை நாடுகளில் செழுமைக்கு அடையாளமாக ( பலுகிப் பெருகும் நிலை )முயல் ஏற்கப்பட்டிருந்தது. அதிலும் இவை நாட்டுப்புறக் கதைகளின் உறுவகமாகவே ( folkloric figure ) இவை உருவாக்கப்பட்டன. ஆனால் இந்த முயலையும் ஈஸ்டருக்கு அடையாளமாகத் திருச்சபை ஏற்றது. அது " ஈஸ்டர் முயல்"  ( Easter Rabbit / Hare ) எனப்பட்டது.


இவ்வாறு ஏற்கப்பட்ட பின் இந்த முயலே அலங்கரிக்கப்பட்ட முட்டைகளைக் கொண்டுவருவதுபோல் அலங்கரித்து மகிழ்கின்றனர்.


இன்று அலங்கரிக்கப்பட்ட கோழி முட்டைகளுக்குப் பதிலாக அலங்கரிக்கப்பட்ட சாக்கலேட்டுக்கள் செய்யப்படுகின்றன. மேலை நாடுகளில் ஈஸ்டர் பண்டிகைச் சமயம் இவை அதிகமாக விற்பனையாகுகின்றன. 


இன்று மேலை நாடுகளில் ஈஸ்டர் என்றால் " ஆண்டவர் இயேசுக் கிறிஸ்து மரணத்தை வென்று உயிர்த்தெழுந்தார் " என்கிற உண்மை மறைக்கப்பட்டு, ஈஸ்டர் என்றால் " முயலும் முட்டையும் " ( Bunny and egg ) என்கிற நிலை உருவாகிவிட்டது. 

இதை நமது திருச்சபைகளும் பின்பற்றுவது நல்லதல்ல.

+++++++++++++++++++++++

அருள்திரு. ஜே . அகஸ்டின் 

( Tamilnadu Theological Seminary )

Pasumalai 

+++++++++++++++++++++++++

Friday, March 19, 2021

How precious is our Body & soul

 1. The *STOMACH* is injured when you do not have breakfast in the morning.


2. The *KIDNEYS*  are injured when you do not even drink 10 glasses  of water in 24  hours.


3. *GALLBLADDR*  is injured when  you do not even sleep until 11 o'clock and do not wake up to the sunrise.


4.  The *SMALL* *INTESTINE* is injured when you eat cold and stale food.


5.  The *LARGE* *INTESTINES* are  injured when you eat more fried and spicy food.


6.  The *LUNGS* are injured when you breathe in smoke and stay in polluted environment of cigarettes.


7. The *LIVER* is  injured when you  eat heavy fried food, junk, and fast food.


8. The *HEART* is  injured when you eat your meal with  more salt and   cholesterol.


9. The *PANCREAS*  is injured when you eat sweet things because they are tasty and  freely available.


10. The *Eyes* are injured when you work in the light of mobile phone and computer  screen in the  dark.


11. The *Brain* is  injured when you start thinking negative thoughts.


12. The *SOUL* gets injured when you  don't have family  and friends to care and share with you in life their love, affection, happiness, sorrow and joy. 


     *All these body*

      *parts are NOT*

      *available in the*

      *market*. 


      So take good

      care and keep

      your body parts

      healthy.


     *Wish You all a*

      *very Happy &*

      *Healthy Life*

Tuesday, March 16, 2021

Barabas

 பரபாஸ்  -  Barabas

•••••••••••••••••••••••••••••••••••••••


இயேசுவின் காலத்தில் யூதர்கள் ரோம ஆட்சிக்குட்பட்ட  அடிமைகளாகவே இருந்தனர். சனெகரிம்  என்ற பெறு மன்றம் யூதர்களின் சமயக் காரியங்களில் மட்டும் மக்களை விசாரிக்கும் உரிமை பெற்றிருந்தது . மற்றப்படி யூதர்கள் வாழ்ந்த நாட்டிற்கு பிலாத்து என்பவர்தான் மாநில ஆட்சியாளராக இருந்தார்.


இக்காலத்தில் இயேசு கைது பண்ணப்பட்டு சனகெரிம் சங்கத்தின் முன் நிறுத்தப்பட்டார். அச்சங்கத்தினர் “ இயேசு தம்மைக் கடவுளின்  மகன் “ என்கிறார்.; இது “ இறை நிந்தை “ ! இதற்கு மரணதண்டனைதான் விதிக்கப்பட வேண்டும். ஆனால் தற்போதையச் சூழலில் நமக்கு அந்த அதிகாரமில்லை . ஆகவே இவரை ஆளுநர் பிலிப்புவிடம் கொண்டு போவோம் என்ற கூறி அவரைப் பிலிப்புவினிடம் கொண்டு வந்தார்கள்..


குற்றச்சாட்டைக் கூறினார்கள். பிலாத்து விசாரித்துப் பார்த்தார். இயேசுவோ ஒரு நீதிமானைப்போல் இருக்கிறார்,


மக்களிடம் வந்து நான் அவரிடம் ஒரு குற்றச் செயலையும் காணவில்லை என்றார். 


மக்களோ , இல்லை அவர் “ அரசருக்கு வரி கொடுக்க. வேண்டாம் “ என்கிறார். ஆகவே மரண தண்டனை விதிக்க வேண்டும் என்கிறார்கள் .


இந்நேரம் பிலாத்துவின் மனைவி “ நீர் அந்த நீதிமனை ஒன்றும் செய்யாதீர் “ என்று கடிதம் கொடுத்து அனுப்பினாள் .


அப்பொழுது பிலாத்து ஒரு தந்திரச் செயல்மூலம் இயேசுவை விடுவித்துவிடலாம் என்று எண்ணினார்.


பஸ்கா பண்டிகை தோறும் ஒரு யூதக் கைதியை விடுவிப்பது வழக்கம். அவ்வாறு செய்வதற்காக பரபாஸ் என்கிற ஒரு கலகக்காரனை அவர்கள் முன்நிறுத்தி “ நான் இன்று உங்களுக்கு “ ஒரு குற்றமுமில்லத இயேசுவை விடுவிக்கவா “ ? 

அல்லது “ கலக்க்காரனும் கொலைகரனுமாகிய பரபாசை விடுவிக்கவா ?” என்று கேட்டார்.


இந்த பரபாஸ் பிலிப்பு ஆளுநர் எருசலேம் திருக்கோவிலிலிருந்த பெரும் செல்வத்தை எடுத்து, நகரில் ஒரு தொட்டிப்பாலம் கட்ட விரும்பினார். இவர் இப்படித்தங்கள் கடவுளின் காணிக்கைகளைக் களவு செய்கிறார் என்று கூறி யூதர்கள் கலகம் செய்தனர். அந்தக் கலகத்தைப் பரபாஸ்தான் முன்னின்று நடத்தினார். இதில் சில கொலைகளும் விழுந்தன. அத்தனை குற்றங்களும் பரபாஸ்தான் காரணம் என்று கூறி அவரைச் சிறைப்பிடித்துக் காவலில் வைத்திருந்தார்கள்.


இத்தகைய கொலைகாரனை, கலகக்காரனை மக்கள் விரும்ப மாட்டார்கள் என்று அவ்வாறு கேட்டார்.


இக்கேள்வி மக்களுக்குள் எதிர்வினைச் செயலைச் செய்துவிட்டது ! இந்தப் பரபாஸ் நம் கோவில் பணத்தைக் கொள்ளையடித்துப் பாலம் கட்ட முனைந்த பிலாத்துவை - ரோமப் பேரரசை எதிர்த்துப் போராடிய மாவீரன் ! இவன்தான் நமக்கு வேண்டும். இந்தச் “ சாது “ இயேசு வேண்டாம் என்று தீர்மாணித்து , பிலத்துவிடம் “ பரபாஸை விடுதலை செய்யுங்கள் “ என்று கூறினார்கள்.


இந்தப் பரபாஸ் :


மத்:27:16 - பேர்போன கைதி

மாற்:15:7 - கலகத்தில் கொலை செய்தவன்

லூக்: 23:19 - நகரில் நடந்த கொலைக் குற்றவாளி

யோவா:18:50 - கள்ளன்

அப்:3:14 - கொலையாளி


பரபாஸ் என்ற அரமேயப் பெயருக்கு “ தந்தையின் மகன் - Son of the Father “ என்று பொருள் !


இயேசுவும் தந்தையாம் கடவுளின் மகன் ! பெயர்கள் பொருத்தமாகத்தான் உள்ளன.


மக்கள் விருப்பப்படி பிலாத்து பரபாஸை விடுதலை செய்து.  இயேசுவைச் சிலுவையில் அறைய ஒப்புக் கொடுத்தார்.


வெளியே வந்த பரபாஸ் இயேசுவைப் பற்றி அறிந்தான். அந்த நீதிமானால்தான்  மரணதண்டனையிலிருந்து விடுபட்டேன் என மனம் வருத்தித் தன் தீவிரவாதப் போக்கை விட்டுவிட்டு , இயேசுவை ஏற்றுக்கொண்டுக் , கிறிஸ்தவரானார். ரோமப் பேரரசு அவரையும்  சிலுவையில் அறைந்து. கொலை செய்தது.


எபி:6:6


இவர்கள் இறை மகனைத் தாங்களே சிலுவையில் அறைந்து, 

வெளிப்படையாக இழிவு படுத்துகிறார்கள் !


(  இன்று அந்த எபிரேய மடலின் ஆக்கியோர் நம்மைப் பார்த்துத்தான் இவ்வாறு கூறுகிறார் ) 


• யூதாஸ் : நான் அவரை விற்றுப்போடுவேன் !


• பேதுரு : நான் அவரை  மறுதலிப்பேன் !


• சனெகரீம் சங்கத்தார் : நாங்கள் அவரைப் புறக்கணிப்போம் ! 


• ஏரோது : நான் ஆர்வமாக மட்டும் இருப்பேன் !


• மக்கள் : நாங்கள் அவரைச் சிலுவையில் அறைவோம் !


• பிலாத்து : நான் நடுநிலையாய் இருப்பேன் !


* நாம் எப்படி இருக்கிறோம் ?


********************************

Rev. J. Augustine Jeevakani

( Tamilnadu Theological Seminary )

Pasumalai 

*********************************

Tuesday, March 9, 2021

Chennai

 #சென்னை


இன்று மிகப்பெரிய மாநகரமாக விளங்க காரணம், பல சிறு சிறு கிராமங்களின்  இணைவு தான். அப்படி இணைந்த கிராமங்களின் பெயர்கள் உருவானதின் பின்னணியை தெரிந்து கொள்ளுங்கள்.


Ø  108 சக்தி ஸ்தலங்களில் 51வது ஊர் ஆகையால் ‘ஐம்பத்து ஒன்றாம் ஊர்’ என்று அழைக்கப்பட்டு, பின்னாளில் இவ்வூர் #அம்பத்தூர் என மாறியது.


Ø  Armed Vehicles And Depot of India என்பதின் சுருக்கமே #ஆவடி (AVADI)


Ø  1912ம் ஆண்டில் 25 ஏக்கர் பரப்பளவில் ஒரு ஆங்கிலேயரால்  Chrome Leather Factory என்ற ஒரு தோல் பதனிடும் தொழிற்சாலையை தொடங்கியதால் அப்பகுதிக்கு #குரோம்பேட்டை என்ற பெயர் உருவானது


Ø 17,18 ம் நுற்றாண்டுகளில் நவாப் ஒருவரின் கட்டுப்பாட்டில் இருந்தது இப்பகுதி. அவருடைய குதிரைகளின் பசியை போக்கும் நந்தவனமாக இது விளங்கியதால், கோடா பக் (பொருள் - Garden of horses) என்று உருது மொழியில் பெயர் வைத்தார். பின்னாளில் அதுவே #கோடம்பாக்கம் ஆக மாறியது.


Ø  தென்னை மரங்கள் நிரம்பிய பகுதி ஆகையால் தென்னம்பேட்டை என பெயர் வைத்தார்கள். பிற்பாடு அது #தேனாம்பேட்டை ஆக மாறிப்போனது.


Ø  சையத்ஷா என்ற இஸ்லாமிய முக்கிய  பிரமுகர் வைத்திருந்த நிலப்பகுதியின் அடிப்படையில், சையத்ஷாபேட்டை என்றிருந்த பெயர், #சைதாப்பேட்டை என்றாகியது. 


Ø  உருது வார்த்தையான சே பேக் (பொருள்- Six gardens) என்பதிலிருந்து உருவானது தான் #சேப்பாக்கம்.


Ø  சௌந்தர பாண்டியன் பஜார் என்பதின் சுருக்கமே #பாண்டி_பஜார்


Ø  சிவபெருமானுக்கு உகந்த வில்வமரங்கள் அதிகம் இருந்ததால் மகாவில்வம் என அழைக்கப்பட்ட இப்பகுதி, பின்பு மாவில்வம் என்றாகி, காலப்போக்கில் எப்படியோ #மாம்பலம் ஆகி விட்டது.


Ø  பல்லவர்கள் ஆட்சி செய்ததால் பல்லவபுரம் என்றழைக்கப்பட்ட இடம் தான் #பல்லாவரம்.


Ø  சென்னை மாகாண முதல்வராக இருந்த பனகல் ராஜாவின் நினைவாக இவ்விடம் #பனகல்_பார்க் என அழைக்கப்படுகிறது.


Ø  நீதி கட்சி தலைவர் சர். பி.டி.தியாகராஜன் செட்டியின் பெயராலேயே இப்பகுதி தி.நகர் (#தியாகராய_நகர்) என அழைக்கபடுகிறது


Ø  கடற்கரைப்பகுதியான இங்கு புரசை மரங்கள் அதிகமாக இருந்ததால், இப்பகுதி #புரசைவாக்கம் ஆனது.


Ø  அதிக அளவில் மல்லிகை பூக்கள் பயிரிடப்பட்ட பகுதி இது. திருக்கச்சி நம்பி ஆழ்வார் தினமும் இங்கிருந்து பூக்களை பறித்துக்கொண்டு சென்று காஞ்சி வரதராஜபெருமாளை வழிபட்டுவந்தார். அதனால் இவ்விடம் சமஸ்கிருதத்தில் புஷ்பகவல்லி என்றும், தமிழில் #பூவிருந்தவல்லி என்றும்

அழைக்கப்படுகிறது. பின்னாளில் இது பூந்தமல்லி யாக மாறியது. வல்லி என்பது தெய்வத்தை குறிக்கும் ஒரு பெயர்.


Ø   17 ம் நூற்றாண்டில் இங்கு வாழ்ந்து வந்த ஒரு முஸ்லீம் துறவி ‘குணங்குடி மஸ்தான் சாகிப்’. இவரது சொந்த ஊர் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தொண்டி. ஆகையால் அப்பகுதி மக்கள் அவரை தொண்டியார் என அழைத்தனர். அந்த ஏரியா தான் தற்போதைய #தண்டயார்பேட்டை.


Ø  முன்பு இப்பகுதி ஆடு மாடுகள் மேயும் திறந்தவெளியாக இருந்துள்ளது. அதனாலேயே #மந்தைவெளி என்றழைக்கபடுகிறது.


Ø  மயில் ஆர்ப்பரிக்கும் ஊர் என்பதே #மயிலாப்பூர் என மாறிப்போனது.


Ø  பல்லவர்கள் காலத்தில் போர்கள் நடத்த இவ்விடத்தையே பயன்படுத்தியதால், இப்பகுதி #போரூர் எனப்படுகிறது.


Ø  சில நூறு வருடங்களுக்கு முன்பு இப்பகுதி முழுவதும் மூங்கில் மரங்கள் இருந்தது. அதனாலேயே #பெரம்பூர் எனப்படுகிறது.


Ø  திரிசூல நாதர் ஆலயம் இருப்பதால் இந்த ஏரியா #திரிசூலம் என்று அழைக்கப்படுகிறது.


Ø  பார்த்தசாரதி கோவிலின் எதிர்ப்புறம் இருக்கும் குளத்தில் (கேணி) நிறைய அல்லிகள் பூக்கும். அதன் காரணமாக இப்பகுதிக்கு திருஅல்லிக்கேணி என பெயர் உருவாக்கி, பின்பு #திருவல்லிக்கேணி யாகி, தற்போது Triplicane என மாற்றம் கண்டுள்ளது.

Current Post

தீயோனிடமிருந்து என்னை விடுவியும்

தனக்குச் சிறிது காலமே எஞ்சியிருக்கிறது என்பதை அலகை அறிந்துள்ளது. அதனால் கடுஞ் சீற்றத்துடன் உங்களிடம் வந்துள்ளது. திருவெளிப்பாடு 12:12  பிசாச...