காத்திருக்குதல் தந்த மகத்துவம்
1.ஆபிரகாம் காத்திருந்தார் இதனால் அவர் விசுவாசத்தின் பலனாகிய ஈசாக்கைப் பெற்றுக் கொண்டார்
2.நோவா காத்திருந்தார் இதனால் இரட்சிப்பின் பேழையை பெற்றுக் கொண்டார்
3.அன்னாள் காத்திருந்தாள் இதனால் இஸ்ரவேலை நியாயந்தீர்க்கிற சாமுவேல் தீர்க்கதரிசியை பெற்றாள்
4.மோசே காத்திருந்தார் இதனால் மகிமையின் ஊழியத்தை பெற்றார்
5.தாவீது காத்திருந்தார் இதனால் கர்த்தருடைய இருதயத்தில் இடம் பெற்றார்
6.யோசபாத் காத்திருந்தார் இதனால் கர்த்தர் அவருக்காக யுத்தம் செய்தார்
7.யோசுவாவும் அவனுடைய கூட்டத்தாரும் காத்திருந்தார்கள் இதனால் அவர்கள் முன் நின்ற எரிகோ வீழ்ந்தது.
8.யோசேப்பு காத்திருந்தார் இதனால் அவருடைய குடும்பமும் எகிப்தும் பஞ்சத்தினால் சாகாமல் காப்பாற்றப்பட்டனர்.
9.யோபு காத்திருந்தார் இதனால் இரட்டிப்பான நன்மை கிடைத்தது
10.சீஷர்கள் காத்திருந்தனர் இதனால் பரிசுத்த ஆவியை பெற்றனர்
11.சகரியாவும் எலிசபெத்தும் காத்திருந்தனர் இதனால் யோவான்ஸ்நானன் என்கிற வெளிப்பாட்டை பெற்றுக் கொண்டார்கள்
12.அப்.பவுல் காத்திருந்தார் இதனால் பட்டணங்களை பிடித்து அடக்குகிற வலிமையை [ சுவிசேஷம் ] பெற்றுக் கொண்டார்
இதேபோல நீங்களும் நானும் காத்திருக்கும் போது என்றென்றைக்கும் நம்மோடு இருக்கிற
இம்மானுவேல் கிடைப்பார்.
ஜான்சன் பாண்டியன் இராமநாதபுரம்.
No comments:
Post a Comment