Monday, November 2, 2020

John Heady

 கல்லறை பேசுகிறது 


ஜான் ஹெடி ஸ்காட்லாந்து நாட்டைச் சேர்ந்தவர் . கொடிய அரக்கர்கள் வாழும் ஹைப்ரட்டீஸ் தீவுக்கூட்டத்தில் குடும்பமாகச் சென்று ஊழியம் செய்தார்கள் மூட நம்பிக்கைகளில் மூழ்கிக்கிடந்த மக்கள் மத்தியில் முழு அர்ப்பணிப்போடு தொண்டாற்றினர் . .



 மனுஷனாக வாழக் கற்றுக்கொடுப்பதே பெரும் ஊழியமாயிருந்தது . கொடிய வியாதி காரணமாக தாம் நேசித்த அன்புக்குழந்தை இறந்தது . தம் கரங்களாலே குழி தோண்டி அடக்கம் செய்தார் . மனைவி வியாதிப்பட்டு சில நாட்களில் மரித்தாள் . கதவைப் பூட்டிக்கொண்டு கதறி அழுதார் . - " ஹெடி , நீ என்னை நேசிக்கிறாயா ? ” என்று மூன்று முறை கடவுள் கேட்டார் . " ஆம் , ஆண்டவரே , நான் நேசிக்கிறேன் என்று சொல்லும்போது பேதுரு நினைவிற்கு வந்தார் .



 தன் நாட்டிற்கு திரும்பிச் செல்லும் எண்ணம் வந்துவிடக்கூடாது என்று கடற்கரையில் நிறுத்தி வைத்திருந்த படகை சுக்கு நூறாக உடைத்தெரிந்தார் . 24 ஆண்டுகள் அந்தத் தீவில் ஊழியம் செய்தார் . 14 . 12 . 1872ல் 57 வயதில் மரித்தார் . மக்கள் வெளிச்சத்தில் நடந்தனர் . 



" 1848ஆம் ஆண்டு ஹெடி இங்கு வரும்போது ஒரு கிறிஸ்தவர்கூட இங்கு இல்லை . 1872ஆம் ஆண்டு இவ்வுலகைவிட்டுப் பிரிந்தபோது இங்கு கிறிஸ்துவை அறியாதவர் ஒருவர் கூட இல்லை ” என்று அவருடைய கல்லறை வாசகக் கல்வெட்டு கூறுகிறது .



 அர்ப்பணிப்பு என்றால் என்ன என்று வாழ்ந்து காட்டிய அவரது கல்லறை இன்றும் பேசுகிறது .

No comments:

Post a Comment

Current Post

எதையும் கண்டுகொள்ளாமல் இருப்பது ஒரு கலை! அதை கற்க 5 சுலபமான வழிகள்!

 எதையும் கண்டுகொள்ளாமல் இருப்பது ஒரு கலை! அதை கற்க 5 சுலபமான வழிகள்! உங்க அமைதியை குலைக்காத/கெடுக்காத எண்ணங்களை மட்டும் தேர்ந்தெடுங்கள்...! ...