Tuesday, March 28, 2023

குருக்கள் ஏன்? திருமணம் செய்ய கூடாது?

 குருக்கள் ஏன்? திருமணம் செய்ய கூடாது… 

அண்மையில் வெளிவந்த ஒரு செய்தியானது தமிழ்நாட்டில் வாழும் கத்தோலிக்க மதத்தினரை தலைகுனிய வைத்தது. 


கத்தோலிக்கர் அல்லாத தமிழர்கள் கத்தோலிக்க குருக்கள் குறித்தும் நம் மதத்தின் அருட்சாதனமான ஒப்புரவு (பாவசங்கீர்த்தனம்) குறித்து நக்கலாகவும் பேசுகின்றனர். 


ஏன் கத்தோலிக்கர்கள் பலருமே ஒப்புரவு அருட்சாதனம் குறித்து, ஐயப்பாடு கொண்டிருக்கலாம். அதிலும் குறிப்பாக கத்தோலிக்க குருக்கள் அனைவருமே தவறானவர்கள் என்பது போன்ற பொதுப்புத்தியும் கட்டமைக்கப்பட்டு வருகிறது.


இது குறித்து எனது கருத்தினைப் பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கிறேன்.


முதலில் ஒன்றைக் கூற விரும்புகிறேன். தவறிழைக்கும் குருக்கள் எண்ணிக்கையில் குறைவே. தமிழ்நாட்டில் உண்மையான ஆன்மீக உணர்வோடு, இறைப்பணி செய்யும் பல குருக்களும், கன்னியர்களும் உள்ளனர். அவர்களை தமிழ்நாட்டிற்கு எடுத்துரைப்போம். 


அவர்கள் செய்யும் பணிகளை ஊடகங்களில் வரச் செய்வோம். அவர்களால் பலனடைந்த மக்களை (ஏதிலிகள்/நோயாளிகள்/கைவிடப்பட்ட முதியவர்கள்/ஒடுக்கப்பட்டவர்கள்/பழங்குடியினர்) மக்களுக்கு காட்டுவோம். 


நல்ல குருக்களுக்கு‌ விருதுகள்‌, பாராட்டுகள் வழங்குவோம்.‌ அவர்களை உற்சாகப்படுத்துவோம். கடந்த 500 ஆண்டுகளாக கத்தோலிக்க குருக்கள் தமிழர்களுக்குச் செய்துள்ள தொண்டினை கட்டுரையாக எழுதுவோம்.‌


குறிப்பாக இயேசு சபைக் குருக்கள் உயிரைப் பணயம் வைத்து செய்துள்ள பணிகளை விவிரிப்போம். அவர்களால் இந்த உலகமே பயனடைந்துள்ளது என்றால் அது மிகையாகாது.‌ இது நாம் செய்ய‌ வேண்டிய முதல் பணி.


இரண்டாவதாக நான் கூறவிரும்புவது இதுவே.


முதலில் நமது மதம் கத்தோலிக்கம் என்பதை நாம் உணர வேண்டும். நாம் கத்தோலிக்க திருச்சபைக்கு கட்டுப்பட்டவர்கள். நமது கத்தோலிக்கத் திருச்சபையானது, விவிலியம் மற்றும் மரபு என்கிற இரு தூண்களில் நிற்கிறது. இதன் வயது ஈராயிரம் ஆண்டுகள்.


கத்தோலிக்க திருச்சபைக்கு வேறோரு பெயரும் உண்டு. அது "கிறிஸ்துவின் மறையுடல்" என்பதாகும்.


கத்தோலிக்க மதத்தின் கொடை என்னவென்றால், திருப்பலியே. இதனை ஒவ்வொரு கத்தோலிக்கர்களும் உணர வேண்டும்.


பாஸ்கா என்பது இயேசுவின் பாடுகள், இறப்பு, உயிர்ப்பு என்ற மூன்று நிகழ்வுகளையும் மீண்டும் மீண்டும் நினைவுபடுத்துவது. இந்த பாஸ்கா மறைபொருளின் கொண்டாட்டமே திருப்பலிக் கொண்டாட்டம் எனப்படும். 


ஒவ்வொரு திருப்பலியிலும் இயேசு வெறும் அப்பத்தை தனது உடலாகவும், வெறும் இரசத்தை தனது அரத்தமாகவும் மாற்றுகிறார். இது ஒரு அதிசய நிகழ்வு. இது ஒவ்வொரு நாளும் உலகில் உள்ள அனைத்து கத்தோலிக்க கோயில்களிலும் நடைபெற்றுக் கொண்டே இருக்கிறது.


திருப்பலி என்பது கிறிஸ்துவின் குருத்துவப்பணியின் தொடர்ச்சி. ஆகையால் ஒரு குருவின் தலையாயப் பணி என்பது தினமும் திருப்பலி நிறைவேற்றுவது ஆகும்.‌ அவரது இரண்டாவது பணியே மக்கள் தொண்டு ஆகும். 


அனைத்து நாள்களிலோ அல்லது ஞாயிற்றுக்கிழமையாவது திருப்பலியில் பங்கேற்பது ஒவ்வொரு கத்தோலிக்கரின் கடமை.


இது கிறித்துவின் இரண்டாம் வருகை வரையிலும் நடைபெற வேண்டும்.


இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த ஒரு திருப்பலியை தனது வாழ்நாள் முழுமையும் ஒப்புக்கொடுக்க ஒருவர் முன்வருகிறார் என்றால் அவர் இல்லற வாழ்வில் தன்னை இணைத்துக் கொள்ள இயலாது. ஒரு உறையில் இரு வாள்கள் வைக்க முடியாது.


அதிலும் ஒரு குருவானவர், தனது பங்கிலுள்ள மக்களையும் வழிநடத்திச் செல்லும் பொறுப்பினை ஏற்கிறார். 


அத்தகைய குரு திருமணம் செய்து குடும்பத்தைக் கொண்டிருந்தால், அவர் குடும்பத்தைப் பார்ப்பாரா? திருச்சபையைப் பார்ப்பாரா?


கண்டிப்பாக குடும்ப நலனே ஒங்கும். தனது குடும்பத்திற்கு பணம் சம்பாதிக்க, திருச்சபையில் பிரிவினைகளை ஏற்படுத்துவர். 


புதிய புதிய இறையியல் கோட்பாடுகளை உருவாக்குவர். ஈராயிரம் ஆண்டுகளாக நிலைத்து நிற்கும் கத்தோலிக்க மதம், சுக்கு நூறாக உடையும். 


இது ஏதோ எனது கற்பனை என்று கருத வேண்டாம். லூத்தரும், எட்டாம் ஹென்றியும் உருவாக்கிய மதங்கள் இன்று ஆயிரக்கணக்கில் உடைபட்டுக் கொண்டே போகிறதே? அதற்கு காரணம், அங்குள்ள போதகர்களுக்கு குடும்பம் என்பது இருப்பதாலேயே. (விவிலியம் மட்டுமே என்கிற அவர்களின் கோட்பாடும் ஒரு காரணம்).


அப்படி என்றால் கத்தோலிக்க மதம் நிலைத்து நிற்க வேண்டும் என்றால் துறவறம் என்கிற அமைப்பு வேண்டும். திருச்சபையின் அதிகாரங்கள் அவர்களிடமே இருக்க வேண்டும்.‌ 


அவர்களே நமது ஏழு அருட்சாதனங்களையும் நிறைவேற்ற வேண்டும். நமது ஞானத்தந்தையர்களுக்கு நம்மாலான உதவிகளைச் செய்ய வேண்டும். இதுவரையில் இந்நிலையே உள்ளது. இது இன்னும் தொடர வேண்டும்.


அப்படி என்றால் குருக்களில் சிலர் தவறு செய்கின்றனரே? அவர்களால் நமது கத்தோலிக்க மதம் இழிவுபடுத்தப்படுகிறதே என்று கேட்கலாம். 


குருக்களோ, கன்னியர்களோ வானத்தில் இருந்து குதித்தவர்கள் அல்லர். அவர்கள் நம்மிடமிருந்து சென்றவர்களே. அவர்கள் பாவ வாழ்க்கை வாழ்கிறார்கள் என்றால், அதற்கு நாமே பொறுப்பு. நாமே அவர்களை உருவாக்குகிறோம். அவர்களைக் குற்றச்சாட்டும் முன், நம்மை ஒரு முறை பார்ப்போம்.


நாம் பணத்தின் பின் அலைகிறோமோ? நாம் பிறர் மீது பொறாமை கொள்கிறோமா? நாம் சினிமா, நாடகம், கிரிக்கெட், மொபைல் என்று நேரத்தை வீணடிக்கிறோமோ? நாம் அடுத்த பெண்களை/ஆண்களை தவறான பார்வையில் பார்க்கிறோமா? 


நாம் தனியாக இருக்கும் போது, அசிங்கமான படங்களைப் பார்க்கிறோமா? நாம் பழி உணர்ச்சியில் வாழ்கிறோமா? நாம் மிதமிஞ்சிய அளவு உணவு உண்கிறோமா? நாக்கை கட்டுப்படுத்தி வாழ்கிறோமா? வீடு, கார், ஆடைகள், திருமணம் என்று அடுத்தவரோடு போட்டி போட்டு செலவு செய்கிறோமா? மொத்தத்தில் நமது ஊனியல்பின் நாட்டங்களுக்கு அடிமையாக வாழ்கிறோமா? 


இப்படி நாமே பெரும்பாவத்தில் வாழ்ந்து கொண்டு வருகிறோம்! அப்படி இருக்கையில் நம்மால் எப்படி துறவற சபையினரை நோக்கி குற்றம் சுமத்த முடியும்? நம்மைப் போல் தானே அவர்களும் இருப்பர்.


முன்பெல்லாம் சாமியார்கள் ஒழுக்கமான வாழ்வு வாழ்ந்தார்கள் என்றால், அன்றைய கத்தோலிக்கர்களும் ஒழுக்கமான வாழ்வு வாழ்ந்தனர். இன்று சாமியார்கள் ஒழுக்கமான வாழ்வு வாழவில்லை என்றால்,‌ நாம் ஒழுங்கான வாழ்வு வாழவில்லை என்பதுதானே காரணம்?


ஆகையால் குருக்களை குற்றஞ்சாட்டுவதை விடுத்து, நாம் திருந்தி வாழ முயல்வோம். இல்லறத்தில் துறவற வாழ்வை வாழ்வதே நமக்கான ஒரே வழி. அளவோடு உண்போம். எளிமையான‌ வாழ்வு வாழ்வோம். 


கற்போடு இல்லறத்தைப் பேணுவோம்.‌சினம் தவிர்ப்போம். பொறாமை, பாலியல் எண்ணங்கள், பழி உணர்வு தவிர்ப்போம். பணத்தின் பின் ஒட வேண்டாம். பிறரன்புப் பணிகள் செய்வோம்.  


கோயிலுக்குச் செல்லும் போது, கண்ணியமான ஆடைகளை அணிவோம். குருக்களோடு‌ பெண்கள் பேசும் போது, தேவையற்ற பேச்சுகளை தவிர்ப்போம். அவர்களை நாம் நமது தந்தையாகவே பார்க்கிறோம் என்பதை குருக்களுக்கு உணர்த்துவோம். குருக்களுக்கு தகுந்த மரியாதையை அளிப்போம். 


இதுவே நமது மதத்திற்கு நல்ல குருக்களையும், கன்னியர்களையும் பெற்றுத் தரும். ஒரு குருவோ, கன்னியரோ தவறு செய்தால், அவர்களுக்காக செபம் செய்வோம்.


இறை அழைத்தல் மிகவும் குறைந்து போய்விட்ட காலம் இது. இன்றையச் சூழலில் எந்த இளைஞரும் துறவற அழைப்பிற்கு செவி கொடுப்பதில்லை. குருக்களின் எண்ணிக்கை, ஒட்டுமொத்த கத்தோலிக்கர்களின் எண்ணிக்கையில் ஒரு விழுக்காட்டிற்கும் குறைவாகவே உள்ளது. இதுதான் இன்றைய நிலை.


இப்படயானச் சூழலில் இருக்கும் குருக்களையும் விரட்டி விட்டால், நமது கத்தோலிக்கச் சமையம் அழிந்து விடும். நமது கத்தோலிக்க மதத்தைத் தாங்குவது குருக்களே என்பதை‌ மனதில் நிறுத்துவோம். அவர்களுக்காகச் செபிப்போம்.

செபமாலை என்றுமே கத்தோலிக்க மதத்தைக் காத்து வந்துள்ளது.‌ ஆகையால் நாம் தினமும் செபமாலை செய்வோம். அதில் ஒரு பத்து மணியை துறவிகளுக்காக ஒப்புக் கொடுப்போம்.


இதுவே கத்தோலிக்க மதம் தழைத்தோங்க நமக்கு உள்ள ஒரே வழி...👌❤️


- Frantony David

Friday, March 24, 2023

Middle Class family

ஒரு நடுத்தர குடும்பத்து வீட்டில் நடக்கும் பதிவு,


 மகனுக்கு வீட்டில் இருக்கவே

பிடிக்கவில்லை.


‘பேஃனை ஆப் பண்ணாமல் வெளியே போகிறாய்,


 ஆளில்லாத ரூமில் டி.வி. ஓடுகிறது பார், அதை அணை,


 பேனாவை

ஸ்டாண்டில் வை, கீழே கிடக்குது பார்.


இப்படியே சின்னச்சின்ன விஷயத்திற்கு அப்பா அவனை நச்சரித்துக் கொண்டிருப்பது

அவனுக்குப் பிடிக்கவில்லை.


நேற்று வரை வீட்டில் இருந்ததால்

அதையெல்லாம் தாங்கிக் கொள்ள வேண்டி

இருந்தது. 


இன்று அவனுக்கு வேலைக்கான நேர்காணலுக்கு அழைப்பு வந்திருந்தது.


 ”வேலை கிடைத்ததும் வேறு எங்காவது வெளியூர் போய்விட வேண்டும். அப்பாவின் நச்சரிப்பு குறையும்” 


என்று எண்ணிக் கொண்டான்.


நேர்காணலுக்கு கிளம்பினான்.


 “கேட்கிற கேள்விக்கு தயங்காமல் தைரியமாக பதில் சொல்” தெரியவில்லை என்றாலும் தைரியமாக எதிர்கொள், என்று செலவுக்கு கூடுதலாக பணம் கொடுத்து வழியனுப்பி வைத்தார் அப்பா.


 நேர்காணலுக்கு அழைக்கப் பட்டிருந்த முகவரிக்கு வந்து சேர்ந்தான் மகன்.


கட்டிடத்தின் பெரிய கேட்டில் செக்யூரிட்டி இல்லை. 


கதவு சற்றே திறந்திருந்த தாலும் அதன் தாழ்ப்பாள் மட்டும் வெளியே நீட்டிக்

கொண்டு உள்ளே நுழைபவர் மேல் இடித்துவிடுவது போல் இருந்தது.


அதை சரி செய்து கதவை சரியாக சாத்திவிட்டு உள்ளே நுழைந்தான்.


 நடைபாதையின் இருபுறமும் அழகு மலர்ச்செடிகள் வரவேற்றன.


 தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்த காவலாளி மோட்டாரை அணைப்பதற் காக

குழாயை அப்படியே போட்டுவிட்டுப் போயிருந்தான். தண்ணீர் செடிகளுக்குப் பாயாமல் நடைபாதையை நனைத்துக்

கொண்டிருந்தது.


 குழாயை கையில்

எடுத்தவன் செடியின் அடியில் நீர்படும்படி போட்டுவிட்டு கடந்து சென்றான்.


வரவேற்பறை யில் யாரும் இல்லை. நேர்காணல் முதல் தளத்தில் நடைபெறுவதாக அறிவிப்பு வைத்திருந்தார் கள். மெதுவாக

மாடிப்படியில் ஏறினான்.


நேற்று இரவில் போடப்பட்ட

விளக்கு காலை பத்து மணியாகியும் எரிந்து கொண்டிருந்தது.


 “விளக்கை அணைக்காமல் செல்கிறாயே?” என்ற அப்பாவின் கண்டிப்பு காதுக்குள் ஒலிப்பதுபோல் தெரிய, எரிச்சல் வந்தாலும் படியின் அருகே இருந்த சுவிட்சை இயக்கி விளக்கை அணைத்தான். 


மாடியில் பெரிய ஹாலில், ஏராளமானவர் கள் இருக்கையில் அமர்ந்திருந்தார் கள். கூட்டத்தைப் பார்த்த மகனுக்கு ஒரே

திகைப்பு. 

“நமக்கு இங்கு வேலை

கிடைக்குமா?”

 என்று மனசாட்சி படபடக்க ஆரம்பித்தது.


 பதற்றத்துடன் அறைக்குள் நுழைய காலடி வைத்தவன், மிதியடியில் ’வெல்கம்’ என்ற எழுத்து தலைகீழாக இருந்ததை கவனித்தான்.


அதையும் வருத்தத் துடனேயே அதை காலால் சரி செய்துவிட்டு உள்ளே நுழைந்தான்.


 அறையின் முன்புறத்தில் நேர்காணலுக்கு நிறைய இளைஞர்கள் அமர்ந்திருக்க, பின்பக்கத்தில் பல மின்விசிறிகள் சும்மா சுற்றிக் கொண்டிருந்தன.


”யாருமே இல்லாமல் ஏன் அறையில் விசிறி

ஓடுகிறது?” என்ற அம்மாவின் கேள்வி காதிற்குள் ஒலிக்க, மின் விசிறிகளையும் அணைத்துவிட்டு, மற்ற இளைஞர் களுடன் சென்று அமர்ந்தான்.


இளைஞர்கள் ஒவ்வொருவராக உள்ளே அழைத்து மற்றொரு வழியாக வெளியே அனுப்பிவிட்டனர்.


 இதனால் என்ன கேள்வி கேட்பார்கள் என்பது மகனுக்கு தெரியவில்லை.


 கலக்கத்துடனே

நேர்காணல் அதிகாரி முன்புபோய் நின்றான்.


 சர்டிபிகேட்டுகளை வாங்கிப் பார்த்த அதிகாரி, அதைப் பிரித்து பார்க்காமலே


“நீங்கள் எப்போது வேலைக்கு

சேருகிறீர்கள்?” என்று கேட்டார்.


“இது நேர்காணலில் கேட்கப்படும் புத்திக் கூர்மை கேள்வியா, இல்லை

வேலை கிடைத்து விட்டதற்கான அறிகுறியா? என்று தெரியாமல்” குழம்பி நின்றான் மகன். 


”என்ன யோசிக்கிறீர்கள்? என்று பாஸ் கேட்டார், 


நாங்கள் இங்கே யாருக்கும் கேள்வி கேட்கவில்லை.


 கேள்வி பதிலில் ஒருவனின்

மேலாண்மையை தெரிந்து கொள்வது

கடினம்.


 அதனால் செயல்பாட்டின் அடிப்படையில் தேர்வு வைத்து விட்டு, கேமரா

மூலம் கண்காணித் தோம். 


இங்கு வந்த எந்த இளைஞனுமே

தேவையில்லா மல் வீணாகிய நீர், எரிந்த மின்விளக்கு, ஓடிய விசிறி எதையுமே சரி செய்யவில்லை. நீங்கள் ஒருவர் தான் அத்தனையும் சரி செய்துவிட்டு உள்ளே வந்தீர்கள்.


 நாங்கள் உங்களையே தேர்வு செய்திருக்கி றோம்” என்றார்.


அப்பாவின் கண்டிஷன்கள் எப்போதும் அவனுக்கு எரிச்சலையே தரும். அந்த ஒழுங்கு முறையே இன்று வேலை வாங்கித் தந்திருக்கிறது என்பதை அறிந்த போது நெகிழ்ச்சியாக இருந்தது. 


அப்பாவின் மீதுள்ள எரிச்சல் சுத்தமாக தணிந்தது.


 வேலைக்குச் செல்லும் இடத்திற்கு

அப்பாவையும் அழைத்துச் செல்லும் முடிவுடன் சந்தோஷமாக வீடு திரும்பினான்

மகன்.


அப்பா நமக்காக எது செய்தாலும்

சொன்னாலும் ஒரு சிறந்த எதிர்காலத்திறாக மட்டுமே இருக்கும் !!!


உளி விழுகையில் வலி என நினைக்கும் எந்த பாறையும் சிலையாவ தில்லை, 

வலி பொறுத்த சில பாறைகளே சிலையாகி ஒளி கூட்டுகின்றன.


நாம் அழகிய சிலையாக உருவாக நமக்குள் இருக்கும் வேண்டாத சில தீய குணங்களை கண்டிப்பால், தண்டிப்பால், சில நேரம் வில்லனாக நமக்கு தெரியும் தந்தை, உளி போன்று வார்த்தைகளால், 

கட்டுப்படுத்துவதால் தான்,


 நாம் காலரை தூக்கிக்கொண்டுகண்ணாடி முன் நின்று,


 அவர்கள் உருவாக்கிய சிலையாகிய நம்மை அழகனாக, அழகியாக பார்த்துக் கொள்வது அந்த தந்தை என்ற உளி செதுக்கிய கைங்கர்யமே. 


தாய் தன் குழந்தையை இடுப்பில் வைத்துக் கொண்டு தான் பாலூட்டுவாள், தாலாட்டுவாள், கதை சொல்லி தூங்க வைப்பாள்.


" ஆனால் தந்தை அப்படி அல்ல "


தான் காணாத உலகையும், தன் மகன் காணவேண்டும் என தோள் மீது அமரவைத்து தூக்கி காட்டிக் கொண்டு போவார்.


ஒரு சொல் கவிதை அம்மா !


அதே ஒரு சொல்

சரித்திரம் அப்பா !!


தாய் கஷ்டப்படுவதை கண்டுபிடித்து விடலாம். 


தந்தை கஷ்டபடுவதை பிறர் சொல்லி தான் கண்டுபிடிக்க முடியும்.


நமக்கு ஐந்து வயதில் ஆசானாகவும், இருபது வயதில் வில்லனாகவும், தெரியும் தந்தை இறந்தவுடன் மட்டுமே நல்ல நண்பனாக பாதுக்காவலராக தெரிகிறார்.


தாய் முதுமையில் மகனிடமோ, மகளிடமோ புகுந்து காலத்தை கடத்தி விடுவாள்.


அந்த வித்தை தந்தைக்கு தெரியாது. கடைசி வரை தனி மனிதன் தான்.


எனவே தாயோ, தந்தையோ உயிருடன் இருக்கும் போது உதாசினப்படுத்திவிட்டு, இறந்தபின் அழுவதால் அவர்களுக்கு எந்த பிரயோஜனமுமில்லை


பிடித்திருந்தால் பகிருங்கள்...🙏

Wednesday, March 22, 2023

NO STORM TOO STRONG

 


Mark 4:39 - Then He arose and rebuked the wind, and said to the sea, "Peace, be still!" And the wind ceased and there was a great calm.

 

In Mark 5, Jesus cast an impure spirit out of a deranged man who had been living among the tombs and cutting himself with stones. People had given up on him; he was beyond their helping or controlling, but God hadn't given up on him. Afterward, it says, "The people saw the man sitting, fully clothed and in his right mind." What's interesting is that on the previous night when Jesus was on the boat and headed toward that man, the huge storm that arose wasn't just a random act of nature. It was the enemy trying to stop Jesus. This man still had greatness in him, and Jesus was determined to restore him.


Remember that the storms the enemy sends to stop your future can't withstand God's rebuke and "Peace, be still!" The storm around you may be darker than ever, but there's no storm so strong that He can't calm. God is fighting for you, pushing through forces of darkness, calming the storms, and crossing lakes just to get to you, so you will fulfill your destiny.

Tuesday, March 21, 2023

Are you a Christian

 Professor : You are a Christian, aren’t you, son ?

Student : Yes, sir.

Professor: So, you believe in GOD ?

Student : Absolutely, sir.

Professor : Is GOD good ?

Student : Sure.

Professor: Is GOD all powerful ?

Student : Yes.

Professor: My brother died of cancer even though he prayed to GOD to heal him. Most of us would attempt to help others who are ill. But GOD didn’t. How is this GOD good then? Hmm?

(Student was silent.)

Professor: You can’t answer, can you ? Let’s start again, young fella. Is GOD good?

Student : Yes.

Professor: Is satan good ?

Student : No.

Professor: Where does satan come from ?

Student : From … GOD …

Professor: That’s right. Tell me son, is there evil in this world?

Student : Yes.

Professor: Evil is everywhere, isn’t it ? And GOD did make everything. Correct?

Student : Yes.

Professor: So who created evil ?

(Student did not answer.)

Professor: Is there sickness? Immorality? Hatred? Ugliness? All these terrible things exist in the world, don’t they?

Student : Yes, sir.

Professor: So, who created them ?

(Student had no answer.)

Professor: Science says you have 5 Senses you use to identify and observe the world around you. Tell me, son, have you ever seen GOD?

Student : No, sir.

Professor: Tell us if you have ever heard your GOD?

Student : No , sir.

Professor: Have you ever felt your GOD, tasted your GOD, smelt your GOD? Have you ever had any sensory perception of GOD for that matter?

Student : No, sir. I’m afraid I haven’t.

Professor: Yet you still believe in Him?

Student : Yes.

Professor : According to Empirical, Testable, Demonstrable Protocol, Science says your GOD doesn’t exist. What do you say to that, son?

Student : Nothing. I only have my faith.

Professor: Yes, faith. And that is the problem Science has.

Student : Professor, is there such a thing as heat?

Professor: Yes.

Student : And is there such a thing as cold?

Professor: Yes.

Student : No, sir. There isn’t.

(The lecture theater became very quiet with this turn of events.)

Student : Sir, you can have lots of heat, even more heat, superheat, mega heat, white heat, a little heat or no heat. But we don’t have anything called cold. We can hit 458 degrees below zero which is no heat, but we can’t go any further after that. There is no such thing as cold. Cold is only a word we use to describe the absence of heat. We cannot measure cold. Heat is energy. Cold is not the opposite of heat, sir, just the absence of it.

(There was pin-drop silence in the lecture theater.)

Student : What about darkness, Professor? Is there such a thing as darkness?

Professor: Yes. What is night if there isn’t darkness?

Student : You’re wrong again, sir. Darkness is the absence of something. You can have low light, normal light, bright light, flashing light. But if you have no light constantly, you have nothing and its called darkness, isn’t it? In reality, darkness isn’t. If it is, well you would be able to make darkness darker, wouldn’t you?

Professor: So what is the point you are making, young man ?

Student : Sir, my point is your philosophical premise is flawed.

Professor: Flawed ? Can you explain how?

Student : Sir, you are working on the premise of duality. You argue there is life and then there is death, a good GOD and a bad GOD. You are viewing the concept of GOD as something finite, something we can measure. Sir, Science can’t even explain a thought. It uses electricity and magnetism, but has never seen, much less fully understood either one. To view death as the opposite of life is to be ignorant of the fact that death cannot exist as a substantive thing.

Death is not the opposite of life: just the absence of it. Now tell me, Professor, do you teach your students that they evolved from a monkey?

Professor: If you are referring to the natural evolutionary process, yes, of course, I do.

Student : Have you ever observed evolution with your own eyes, sir?

(The Professor shook his head with a smile, beginning to realize where the argument was going.)

Student : Since no one has ever observed the process of evolution at work and cannot even prove that this process is an on-going endeavor. Are you not teaching your opinion, sir? Are you not a scientist but a preacher?

(The class was in uproar.)

Student : Is there anyone in the class who has ever seen the Professor’s brain?

(The class broke out into laughter. )

Student : Is there anyone here who has ever heard the Professor’s brain, felt it, touched or smelt it? No one appears to have done so. So, according to the established Rules of Empirical, Stable, Demonstrable Protocol, Science says that you have no brain, sir. With all due respect, sir, how do we then trust your lectures, sir?

(The room was silent. The Professor stared at the student, his face unfathomable.)

Professor: I guess you’ll have to take them on faith, son.

Student : That is it sir … Exactly ! The link between man & GOD is FAITH. That is all that keeps things alive and moving.

P.S.

I believe you have enjoyed the conversation. And if so, you’ll probably want your friends / colleagues to enjoy the same, won’t you?

Forward this to increase their knowledge … or FAITH.

By the way, that student was EINSTEIN.

Sunday, March 19, 2023

Useful Tips

 இறையின் கொடையான நமது உடல் ஒரு முறை கெட்டுவிட்டால் சீர்செய்யவே இயலாது. உடலை கெடாமல் பாதுகாப்பது ஒன்றே மிகவும் எளிய வழியாகும்.*


1. The *STOMACH*

     is injured when

     you do not have

     breakfast in the

     morning.


காலைச் சிற்றுண்டி உண்ணாவிட்டால் நமது இரைப்பை பாதிப்புறும்.


2. The *KIDNEYS*

     are injured when

     you do not even

     drink 10 glasses

     of water in 24

     hours.


தினசரி 2 லிட்டர் தண்ணீர் பருகாவிட்டால் நமது சிறுநீரகங்கள் பாதிக்கப்படும்.


3. *GALLBLADDR* 

    is injured when

    you do not even

    sleep until 11

    o'clock and do not

    wake up to the

    sunrise.


இரவு 11 மணிக்குமேல் விழித்திருந்தாலும் காலை சூரிய உதயத்திற்குள் விழிக்காவிட்டாலும் நமது பித்தப்பை பாதிப்புறும்.


4. The *SMALL*

     *INTESTINE* is

      injured when you

      eat cold and stale

      food.


மிகவும் குளிர்ந்த மற்றும் பழைய கெட்டுப்போகும் தருவாயில் இருக்கும் உணவை உண்பது நமது சிறுகுடலுக்குத் தீங்கு.


5. The *LARGE*

     *INTESTINES* are

      injured when you

      eat more fried

      and spicy food.


அதிக அளவில் பொரித்த உணவு மற்றும் அதிக காரம் நமது பெருங்குடலுக்குக் கேடு.


6. The *LUNGS* are

      injured when you

      breathe in smoke

      and stay in

      polluted

      environment of

      cigarettes.


புகை மற்றும் சிகரெட் புகை சூழ்ந்துள்ள இடத்தில் சுவாசிப்பது நமது நுரையீரல்களைக் கெடுக்கும். 


7. The *LIVER* is

     injured when you

     eat heavy fried

     food, junk, and

     fast food.


துரித உணவு, அதிகநேரம் எண்ணெயில் வறுக்கப்பட்ட உணவு முதலியன நமது கல்லீரலுக்குக் கேடு. 


8. The *HEART* is

     injured when you

     eat your meal with

     more salt and

     cholesterol.


அதிக உப்பும் அதிக கொழுப்பும் இதயத்தை வெகுவாகப் பாதிக்கும். 


9. The *PANCREAS*

     is injured when

     you eat sweet

     things because

     they are tasty and

     freely available.


அதிக இனிப்பு நமது கணையத்தைச் சேதப்படுத்தும். 


10. The *Eyes* are

       injured when you

      work in the light

      of mobile phone

      and computer

      screen in the

      dark.


இருளில் செல்போன் மற்றும் கணிணியில் வேலை செய்வது கண்களுக்குக் கெடுதல் விளைவிக்கும். 


11. The *Brain* is

       injured when you

       start thinking

       negative

       thoughts.


எதிர்மறை எண்ணங்கள் நமது மூளையைப் பாதிக்கும். 


12. The *SOUL* gets

       injured when you

       don't have family

       and friends to

       care and share

       with you in life

       their love,

       affection,

       happiness,

       sorrow and joy. 


நமது குடும்பம், நட்பு, உற்றார், உறவினர்களின் அன்பும் அனுசரணையும், பராமரிப்பும் இல்லையெனில் நமது உயிருக்கு நன்றன்று.


     *All these body parts are NOT available in the market.*


*நமது எந்த உள்ளுறுப்பும் சந்தையில் கிடைக்காது.*


 So take good care and keep your body parts healthy. எனவே நல்ல கவனத்துடன் உடற்பயிற்சியையும் நாள்தோறும் தவறாது செய்து நமது உள்ளுறுப்புகளைப் பாதுகாப்போம்.


EFFECTS OF WATER      

தண்ணீரின் அவசியம்.             

💐 We Know Water is 

       important but never 

       knew about the 

       Special Times one 

       has to drink it.. !!


தண்ணீரின் முக்கியத்துவம் நமக்குத் தெரிந்திருப்பினும் எப்போது எவ்வளவு தண்ணீர் அருந்த வேண்டும் என்ற விபரங்கள் தெரியாமல்தான் இருக்கின்றோம். 


       Did you??? உங்களுக்குத் தெரியுமா???


 💦 Drinking Water at the 

       Right Time ⏰ 

       Maximizes its 

       effectiveness on the 

       Human Body;


சரியான நேரத்தில் தண்ணீர் அருந்துவது நமது உடலின் பல பாகங்களையும் செவ்வனே செயல்பட வைக்கிறது.


       1⃣ 1 Glass of Water 

              after waking up -

             🕕⛅ helps to 

              activate internal 

              organs..


காலை எழுந்தவுடன் 350 மிலி தண்ணீர் அருந்துவது நமது உள்ளுறுப்புகள் அனைத்தையும் ஊக்குவிக்கும். 


       2⃣ 1 Glass of Water 

              30 Minutes 🕧 

              before a Meal - 

              helps digestion..


உணவுக்கு 30 நிமிடம் முன்பு 300 மிலி தண்ணீர் பருகுவது செரிமானத்துக்கு நல்லது. 


       3⃣ 1 Glass of Water 

              before taking a 

              Bath 🚿 - helps 

              lower your blood 

              pressure.


குளிப்பதற்கு முன்னர் ஒஒரு டம்ளர் தண்ணீர் குடிப்பது இரத்த அழுத்தத்தைக் குறைக்கும். 


       4⃣ 1 Glass of Water 

              before going to 

              Bed - 🕙 avoids 

              Stroke or Heart 

              Attack.


இரவு படுக்கும் முன்னர் ஒரு டம்ளர் தண்ணீர் பருகுவது மாரடைப்பு, பக்கவாதம் இவற்றிலிருந்து பாதுகாக்கும்.


      'When someone 

       shares something of 

       value with you and 

       you benefit from it, 

       You have a moral 

       obligation to share it 

       with others too.'

So..., DO yours!..


யாராவது நமக்கு ஏதாவது நன்மை தரும் செய்தியை பகிர்ந்து, அதனால் நாம் பலனடைந்தால் அத் தகவலை மற்றவர்களுக்கும் பகிருவது நமது தார்மீகப் பொறுப்பாகும். எனவே நீங்களும் உங்களது பங்கைச் செய்ய வேண்டுகிறேன்....

Thursday, March 16, 2023

மறைத்திரு. அறிவர். அற்புதராஜ்

கிறிஸ்துவுக்குள் அன்பார்ந்தவர்களே உங்கள் யாவருக்கும் தோத்திரங்களை கூறிக் கொள்கின்றேன் அறிவர் மறைத்திரு அற்புதராஜ் ஐயா அவர்கள் மறைவை கேள்விப்பட்டு மிகுந்த வருத்தப்பட்டேன் ஆனாலும் கர்த்தர் அவரை 90 ஆண்டுகள் வரை நமக்கு ஆசீர்வாதமாக வைத்திருந்தார் அதற்காக கர்த்தருக்கு நன்றி செலுத்துகின்றேன் அற்புதராஜ் அண்ணன் அவர்கள் எங்கள் குடும்பத்திற்கு வேண்டியவர் என்னுடைய பெற்றோரையும் நன்றாக அறிந்தவர் என் உடன் பிறந்தவர்களை அறிந்தவர் என்னுடைய மாமனார் விவரங்கள் ஆல்பர்ட் ஜோயல் அவர்களையும் அவருடைய பிள்ளைகளையும் குடும்பத்தாரையும் நன்றாக அறிந்தவர் அனைத்து பேராயர்களோடும் நன்றாக தொடர்பு உடையவர் குறிப்பாக இவர் அரசு வேளையில் பணிபுரிந்தாலும் இறையலை கற்றறிந்து அவர் கவர்வ சபை குருவாக நம்முடைய பேராயர் மா மறைத்திரு ஜேக்கப் ஜெயசீலன் ஐயா அவர்களால் அபிஷேகம் பண்ணப்பட்டார் இந்த நாளிலும் அவர் ஒரு நல்ல சிறந்த பிரசங்கியார் உண்மையான கடவுளின் பணியாளர் ஊழியர்களை பயிற்றுவிக்கும் ஆசான் குறிப்பாக குருகுலம் கல்லூரியில் மாணவர்களை சிறப்பு பயிற்சியில் குறிப்பாக தொழில்துறையில் பயிற்சி அளித்தார் மேலும் நற்செய்தி பணி செய்திட நிறைய பேரை வைத்துவிட்டார் எப்படி கிறிஸ்துவ அறியாதவர்கள் மத்தியில் ஊழியம் செய்ய வேண்டும் என்பதை அவர்களுக்கு பயிற்றுவித்து அவர்களை ஊக்குவித்தார் இவர் மூலம் அநேக கிராமங்களில் சபையும் பெருக செய்தது உருவாகவும் உதவியாக இருந்தது இவருக்கு மிக சிறப்பான தன்னை தலைமைத்துவத்தை உருவாக்குகின்ற பயிற்சி அளிப்பது இவரை அனைத்து திருச்சபைகளும் பயன்படுத்தினார்கள் திருச்சபை அல்லாத மற்ற நிறுவனங்களும் இவர்களை பயன்படுத்தினார்கள் அதோடு கணக்கு வைத்துக் கொள்வதில் சிஎஸ்ஐ ஈசியை சி எல் எஸ் நிறுவனங்களுக்கும் சம்பள நிர்வகிப்பது குறித்து உதவி செய்திருக்கிறார் எப்படி வருமானத்தை பெருக்க வேண்டும் என்பதையும் ஆலோசனைகள் கொடுத்திருக்கின்றார் அது மட்டுமல்ல எல்லோரும் நன்றாக பழக்க கூடியவர் எல்லாருக்காக ஜெபிக்கக் கூடியவர் அன்புள்ளவர் பண்புள்ளவர் பாசம் உள்ளவர் எல்லாருக்கும் உதவி செய்யக் கூடியவர் ஏழை மாணவர்களை படிப்பதற்கு உதவி செய்யக்கூடியவர் நல்ல ஒரு தலைவராக இருந்து வழிநடத்தக் கூடியவர் இவர் ஆரம்பித்த மிக மிக முக்கியமானது லுத்தரன் உபவாச கூட்டம் ஒவ்வொரு மாதமும் முதல் சனிக்கிழமை நடைபெறும் இவரும் ஐசக் அதிசயம் அய்யாவும் சேர்ந்து ஆரம்பித்தது இன்றும் தொடர்ந்து அது நடந்து கொண்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சி இதனால் அநேக பயனடைகிறார்கள் இப்படி இவரைப் பற்றி நிறைய சொல்லிக் கொண்டே போகலாம் எல்லாருக்கும் ஒரு முன்மாதிரியாக வாழ்ந்தவர் முன்மாதிரி ஆனவர் மரணம் என்பது புரிந்து கொள்ள முடியாத தீர்க்கப்பட முடியாத மறைபொருள் காரணம் மரணத்தைப் பற்றியும் அதற்குப்பின் உள்ள மனித நிலைமை பற்றியும் தெளிவான பார்வை நம்மிடம் கிடையாது மரணத்தை வென்றவர் நம்முடைய ஆண்டவர் அண்ணன் அவர்கள் அவருடைய நண்பர் திருவாளர் கிளைமேட் அவருடைய மரணத்தின் பொழுது மிக அருமையான செய்தியை கொடுத்தார் நான் இயேசுவோடு இருப்பேன் என்ற செய்தியை வாழ்வு கொடுத்தால் ஊழியம் செய்வேன் மறுத்தால் ஆண்டவரோடு வாழ்வேன் சந்திப்பேன் என்ற ஒரு செய்தியை அவர் கொடுத்தார் சாவு என்பது நம்முடைய வாழ்வின் ஒரு அங்கம் என் பிறக்கின்ற எல்லா மனிதர்களுமே மரித்து தான் ஆக வேண்டும் அதை நாம ஏற்றுக்கொள்ள வேண்டும் என் வார்த்தையை கடைபிடிப்போம் என்றுமே சாக மாட்டார் என்று கூறுவதின் பொருள் சரீரம் அடைந்தாலும் அவருடைய வாழ்க்கையில் பேசின காரியங்கள் போதித்த காரியங்கள் அவருடைய நல்ல சிந்தனைகள் எல்லாம் என்றும் வாழ்ந்து கொண்டிருக்கின்றன அற்புதராஜ் அண்ணன் மரித்தார் என்றாலும் அவர் இன்னும் அவருடைய பிரசங்கங்கள் அவருடைய செயல்பாடுகள் அவரை அன்பான பேச்சுகள் அவருடைய தலைமைத்துவ பயிற்சிகள் எல்லாம் என்றும் வாழ்ந்து கொண்டிருக்கின்றன இப்படிப்பட்டவர் இந்த உலகத்தில் வாழ்ந்தார் என்பது மகிழ்ச்சி ஆண்டவரோடு அவர் வாழ சென்றிருக்கிறார் என்பதும் மகிழ்ச்சி ஆனாலும் இது பெரிய இழப்பு நம்முடைய திருச்சபைக்கும் குடும்பத்திற்கும் ஒன்று மட்டும் நான் சொல்லிக் கொண்டு விரும்புகிறேன் உலகத்தில் எத்தனை பேர் வாழ்ந்தாலும் அந்த உலகத்துல ஏதாவது ஒரு நல்ல காரியம் செய்ய வில்லை என்றால் நல்லவர்களாக வாழ வில்லை என்றால் பயணம் ஒன்றுமே இல்லை இதை நாம் புரிந்து கொள்ள வேண்டும் இதைத்தான் ஒரு அன்பான ஒரு மனிதன் சொல்லும் பொழுது அழகாக சொல்கின்றார் இந்த பூமியை சற்று அழகாகவும் நல்லதாகவும் மாற்றுவதற்கு உன்னால் இயன்றதை செய் ஏனெனில் நீ இந்த பூமியில் வாழ்ந்து இருக்கிறாய் என்று எழுத சொன்னார் எட்வர்ட் பேக் என்ற டென்மார்க் அறிஞர் எவ்வளவோ உண்மையானது நம்முடைய அண்ணன் அவர்களும் அற்புதமாகவே வாழ்ந்து ஆண்டவருடைய அழைப்பை ஏற்று கிறிஸ்து எனக்கு ஜீவன் சாவு எனக்கு ஆதாயம் என்று சொல்லி ஆண்டவரிடம் சென்றிருக்கின்றார் அது மட்டுமல்ல லூக்கா எழுதின சுவிசேஷம் 17 ஆம் அதிகாரம் 10 ஆம் வசனம் நான் பிரயோஜனமற்ற அடிமைகள் செய்ய கடமைப்பட்டிருந்ததையே செய்தோம் என்று சொல்வதைப் போல அவரும் செய்ய கடமைப்பட்டதே செய்து முடித்தார் ஆண்டவருக்கு ஸ்தோத்திரம் குடும்பத்தாருக்கு என்னுடைய ஆழ்ந்த வருத்தம் விலை தெரிவித்துக் கொள்கின்றேன் உங்களுக்கு மட்டும் இழப்பல்ல இது திருச்சபைக்கும் மாபெரும் இழப்பு ஜெபிக்கின்றேன் நேரடியாக வர முடியாமைக்கு வருந்துகின்றேன் வரவேண்டும் என்று ஆசை நான் நேசித்த அன்பு கூர்ந்த நெருங்கிய அண்ணன் அவர்கள் ஆண்டவருடைய வருகை உண்டு அதற்காக காத்திருப்போம் இறை ஆசை உங்கள் அனைவரோடும் இருப்பதாக இறைபணியில் உங்கள் ஊழியன் தானியேல் ஜெயராஜ் 13 ஆம் தரங்கை பேராயர்.

Friday, March 10, 2023

Politician

 யார் யார் எப்படி பேசுவார்கள்👇

.............................................................


🌲கிரிக்கெட் வீரர் - "ஓவரா" பேசுவார்


🌲போட்டோகிராபர் - "டெவலப் பண்ணி" பேசுவார்


🌲ரவுடி - "அடிச்சுப்" பேசுவார்


🌲ஹோட்டல் சர்வர் - "சூப்"பரா பேசுவார்


🌲வக்கீல் - "பீஸ்புல்லா" பேசுவார்


🌲ஃபாஸ்ட் ஃபுட் ஓனர் – "காரசாரமா" பேசுவார்


🌲ஐஸ் விக்கிறவர் – "குளிரக் குளிரப்" பேசுவார்


🌲டெய்லர் – "கட் பண்ணிப்" பேசுவார்


🌲பூக்கடைக்காரர் - வார்த்தையை "அளந்து" பேசுவார்


🌲டயட்டீஷியன் - "உப்பு சப்பில்லாமல்" பேசுவார்


🌲பேங்க் மேனேஜர் – "இண்ட்ரஸ்டா" பேசுவார்


🌲பியூட்டீஷியன் – "அழகாப்" பேசுவார்


🌲எலக்ட்ரீசியன் "ஷாக்" அடிச்சமாதிரி பேசுவார்.


🌲கசாப்புக் கடைக்காரர் – "வெட்டு ஒண்ணு, துண்டு ரெண்டுன்னு" பேசுவார்


🌲ஸ்வீட் கடைக்காரர் – "இனிக்க இனிக்கப்" பேசுவார்


🌲மீன் வியாபாரி -"நாறடித்து" பேசுவார்


🌲கண்டக்டர் _ "நடந்து நடந்து" பேசுவார்.


🌲டிரைவர்_ "நிறுத்தி நிறுத்தி" பேசுவார்.


🌲பால் வியாபாரி _ பழம் நழுவி "பாலில்"விழுவதுபோல் பேசுவார்.


🌲பெர்ஃயூம் கடைக்காரர்* -"மணக்க மணக்க" பேசுவார்.


🌲டீ மாஸ்டர் - "சூடா"க பேசுவார்.


🌲கணக்கு வாத்தியார - "கூட்டி குறைத்து" பேசுவார்.


👉மேலே சொன்ன அத்தனையும் ஒருத்தன் பேசுவார் .... 

அவர் தான் " அரசியல்வாதி🌲🌲🌲


🌼😂🤣😂🌼

Aamai

 ஆமை ஒன்று ஆற்றைக் கடப்பதற்காக ஆற்றில் இறங்கியது. அப்போது ஒரு தேள் ஓடிவந்து, " ஆமை அண்ணா, ஆமை அண்ணா! நான் அவசரமா அக்கரைக்குப் போக வேண்டி இருக்குது. உன் முதுகில் ஒரு ஓரமா இடம் கொடுத்தீன்னா நான் பாட்டுக்கு அமைதியா அக்கரை போய் சேர்ந்துடுவேன் " என்றது. ஆமைக்குப் பாவமாக இருந்தது. இருந்தாலும் ஒரு எச்சரிக்கைக்காக , " ஒன்னப் பாத்தா எனக்கும் பாவமாதான் இருக்குது. முதுகுல ஏத்திக்கிட்டுப் போறேன் . ஆனா வழியில எதாச்சும் சேட்டை கீட்டை பண்ணினேன்னு வச்சுக்கோ , உரிச்சுப் புடுவேன் . ஆமா" முதுகில் ஏற்றிக்கொண்டது. தேளும் சந்தோஷமாய் ஏறிக்கொண்டது. சிறிது தூரம் போனதும் தேளுக்கு ஒரு சந்தேகம் ,"பாறை மாதிரி இருக்குதே இந்த ஓடு! இதுல நம்மால கொட்ட முடியுமா? சரி. லேசா கொட்டித்தான் பாப்போமே" மெல்ல ஒரு கொட்டு கொட்டியது. ஆமை கேட்டது " ஏய் என்ன பண்ற ? " இல்லண்ணே. தெரியாம கொடுக்கு பட்டுடிச்சு. மன்னிச்சுடுங்க" இது தேள். ஆமை அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. கரையை அடைய இன்னும் பாதி தூரம் இருந்தது. தேளுக்கு மீண்டும் ஒரு எண்ணம், " லேசாகக் கொட்டியதால்தான் ஓடு கொஞ்சம் கூட அசையவில்லையோ! கொஞ்சம் அழுத்தமாகக் கொட்டினால்? சற்று அழுத்தமாகவே கொட்டியது. ஆனாலும் ஓடு கொஞ்சம் கூட அசையவில்லை. " என்னடா தம்பி, புத்தியக்காட்டுறியா? " என்றது ஆமை . " அட இல்லண்ணே. கொஞ்சம் வழுக்குற மாதிரி இருந்தது. கொஞ்சம் கொடுக்கால அழுத்திப் பிடிச்சிக்கிட்டேன். அதுக்குப் போயி பெருசா பேசுறியே! " என்றது தேள். ஆமை தலையை அசைத்துக் கொண்டே ஏதோ முணுமுணுத்துக் கொண்டே நீந்தியது. கொஞ்சம் நேரம் சென்றது. இப்போது கரைக்கு இன்னும் சில அடி தூரம்தான். இப்போது தேளுக்கு தைரியத்துடன் கொஞ்சம் அகங்காரமும் வந்துவிட்டது. "நான் கொட்டுனா எவ்வளவு பெரிய யானையெல்லாம் அலறி ஓடும்! சின்ன மிருகமா இருந்தா வாயில் நுரை தள்ளி செத்தே போகும். இந்த தம்மாத்தூண்டு ஆமைப்பயல் அசையக்கூட மாட்டுறானே. இதோ கரையும் நெருங்கிடுச்சு. கடைசியாக ஒரு தடவை கொட்டிப் பாக்கலாம் " பலத்தையெல்லாம் திரட்டி அழுத்தமாக ஒரு போடு போட்டது. ஆமைக்கு இப்போது கோபம் வந்தது. "நீ சரியா வரமாட்டே போலிருக்கே" என்றது. தேளுக்கு கரையை நெருங்கிவிட்ட தைரியம். " பிறந்த நாள் முதலாவே கொட்டிக் கொட்டிப் பழகிட்டேன். இந்தப் பத்து நிமிஷம் பயணத்துக்காகல்லாம் பழக்கத்தை மாத்திக்க முடியாது. இது பழக்கதோஷம். நீதாம்ப்பா கொஞ்சம் அனுசரிச்சிப் போகணும்" என்றது. ஆமை சிரித்தபடியே சொன்னது , " உனக்கு இருக்கும் பழக்கதோஷம் மாதிரியே எனக்கும் ஒன்னு உண்டு. அது இதுதான் " என்றபடியே நீருக்குள் மூழ்கி எழுந்தது. எழுந்து பார்த்தால் தேள் ஆமையின் முதுகில் இல்லை. அது ஆமை நீருக்குள் முழுகும்போதே வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு செத்துப் போய்விட்டது. இப்படித்தான் பலர் தேவனுடைய பிள்ளைகளிடம் இந்தத் தேளைப் போலக் கொட்டி விளையாடிப் பார்ப்பதுண்டு. ஆனால் பாவம் அவர்கள் ஒரு முறை ஆவியில் மூழ்கி ஜெபித்து எழுந்தாலே போதும். கொட்டிய தேளெல்லாம் வெள்ளத்தால் அடித்து செல்லப்பட்டு இருந்த இடம் தெரியாமல் காணாமல் போகும் என்பது பல விசுவாசிகளின் அனுபவம்.

Tuesday, March 7, 2023

12 காய்கறிகளை கொண்டு அனைத்து நோய்களையும் குணப்படுத்தமுடியும்

 *12 காய்கறிகளை* கொண்டு அனைத்து நோய்களையும் குணப்படுத்தமுடியும்

Kidney Failure : *கத்திரிக்காய்*

Paralysis : *கொத்தவரங்காய்*

Insomnia : *புடலங்காய்*

Hernia : *அரசாணிக்காய்*

Cholesterol : *கோவைக்காய்*

Asthma : *முருங்கைக்காய்* 

Diabetes : *பீர்கங்காய்*

Arthritis : *தேங்காய்*

Thyroid : *எலுமிச்சை*

High BP : *வெண்டைக்காய்*

Heart Failure : *வாழைக்காய்*

Cancer : *வெண்பூசணிக்காய்*


உணவு பழக்கம்" பழமொழி வடிவில்🎀*


*💎காட்டுலே புலியும் , வீட்டுலே புளியும் ஆளைக் கொல்லும்.*

*💎போன ஜுரத்தை புளி இட்டு அழைக்காதே*💚

*💎பொங்குற காலத்தில் புளி.. மங்குற காலம் மாங்கா*💚

*💎சீரகம் இல்லா உணவும் , சிறு குழந்தைகள் இல்லா வீடும் சிறக்காது.*💚

*💎 எண்னை குடத்தை சுற்றிய எறும்பு போல*💚

*💎 தன் காயம் காக்க வெங்காயம் போதும்*💚

*💎வாழை வாழ வைக்கும்*💚

*💎அவசர சோறு ஆபத்து*💚

*💎ஆறிய உணவு மூட்டு வலி உண்டாக்கும்*💚

*💎இரைப்பை புண்ணுக்கு எலுமிச்சை சாறு*💚

*💎ரத்த கொதிப்புக்கு அகத்திக் கீரை*💚

*💎இருமலை போக்கும் வெந்தயக் கீரை*💚

*💎உஷ்ணம் தவிர்க்க கம்பங் களி*💚

*💎கல்லீரல் பலம் பெற கொய்யாப் பழம்*💚

*💎குடல் புண் நலம் பெற அகத்திக்கீரை*💚

*💎கொலஸ்ட்ரால் குறைக்க பன்னீர் திராச்சை*💚

*💎சித்தம் தெளிய வில்வம்*💚

*💎 சிறுநீர் கடுப்புக்கு அன்னாசி*💚

*💎சூட்டை தணிக்க கருணை கிழங்கு*💚

*💎ஜீரண சக்திக்கு சுண்டக்காய்*💚

*💎தலை வலி நீங்க முள்ளங்கி சாறு*💚

*💎தேனுடன் இஞ்சி ரத்தத் தூய்மை*💚

*💎பூண்டில் இருக்கு பென்சிலின் சக்தி*💚

*💎மூல நோய் தீர வாழைப்பூ கூட்டு*💚

*💎வாந்திக்கு மருந்து மணத்தக்காளி*💚

*💎வாத நோய் தடுக்க அரைக் கீரை*💚

*💎வாய் துர்நாற்றம் தீர்க்க ஏலக்காய்*💚

*💎பருமன் குறைய முட்டைக்கோஸ்*💚

*💎பித்தம் தணிக்க நெல்லிக்காய்*💚


*உணவு மருந்தாக இருக்க வேண்டும் இல்லாவிட்டால் மருந்தே நமக்கு உணவாகும் நிலைமை உருவாகும்”

🚩🚩🚩🚩🚩🚩🚩

Wednesday, March 1, 2023

John Wesley

 JOHN WESLEY

"Whereby are given unto us exceeding great and precious promises: that by these ye might be partakers of the divine nature, having escaped the corruption that is in the world through lust." 2 Peter 1:4

In 1703, John Wesley was born into the “family business.” Rev. Samuel Wesley was the rector (administrator) of the Anglican church in Epworth, England. John and his younger brother Charles were raised to go into the ministry just as their father had. For John, that career path almost didn’t happen. In 1709, when John was still five years old, the rectory where his family lived caught fire and the lad was trapped in an upper bedroom. A parishioner, standing on another man’s shoulders, rescued John from the fire. Later, Wesley would refer to himself as “a brand plucked out of the fire,” quoting Zechariah 3:2.

In 1720, Wesley became a student at Christ Church college in Oxford, graduating in 1724. He was ordained the following year and eventually served as a parish priest in London. He went to America in 1735, along with Charles, to serve the new settlement in what is today’s state of Georgia, returning two years later. Throughout this period, Wesley often just went through the motions of his religion. He saw the Moravians, German pietists, during his voyage to America and marveled at their faith and dedication. He could preach and see people come to faith in Christ, but he lacked assurance of his own salvation.

On the evening of May 24, 1738, John Wesley’s life was to change forever. That morning, he’d read the words in 2 Peter 1:4 and noticed similar phrases elsewhere in Scripture. That evening, Wesley attended a meeting in the Aldersgate. At about 8:45 p.m., as the speaker read from Luther’s treatise on the book of Romans, God’s love broke through: “While he was describing the change which God works in the heart through faith in Christ, I felt my heart strangely warmed. I felt I did trust in Christ, Christ alone for salvation; and an assurance was given me that He had taken away my sins, even mine, and saved me from the law of sin and death.”

Wesley’s pastoral career took a different direction after Aldersgate. He preached personal holiness, brought forward the Arminian teaching that a saved person could be lost, and attracted followers who in turn preached the Wesleyan message throughout England and beyond. The lad literally “plucked out of the fire” lived a life that God used to change the world.

Current Post

எதையும் கண்டுகொள்ளாமல் இருப்பது ஒரு கலை! அதை கற்க 5 சுலபமான வழிகள்!

 எதையும் கண்டுகொள்ளாமல் இருப்பது ஒரு கலை! அதை கற்க 5 சுலபமான வழிகள்! உங்க அமைதியை குலைக்காத/கெடுக்காத எண்ணங்களை மட்டும் தேர்ந்தெடுங்கள்...! ...