Tuesday, November 11, 2025

தூய மார்ட்டின் திருநாள்


நவம்பர் 11ஆம் நாள் பல கிறிஸ்தவர்கள் தூய மார்ட்டின் திருநாளைக் கொண்டாடுகின்றனர். நவம்பர் 10ஆம் நாள் பிறந்த மார்ட்டின் லுத்தர் அடுத்த நாள் திருமுழுக்குப் பெற்றார். பல குழந்தைகள் வெகு சீக்கிரத்திலேயே மரித்துப் போனதால் பெற்றோர்கள் தங்களுடைய சிறு குழந்தைகள் விரைவிலேயே திருமுழுக்கு ஆசியைப் பெற்றுக் கொள்ள விரும்பினர். 11ஆம் நாள் தூய மார்ட்டினுக்கு அர்ப்பணிக்கப்பட்ட நாளாக இருந்ததால், லுத்தருக்கு மார்ட்டின் என்ற பெயர் கொடுக்கப்பட்டது.    


               மார்ட்டின் யார்? கி.பி. 316 இல் ஹங்கேரியில் புற சமயத்தைச் சேர்ந்த ஒரு உரோமானிய அதிகாரிக்கு மகனாகப் பிறந்தார். அவர் உரோம படையில் சேர்ந்து ஒரு படை வீரரானார். குளிர்காலம் ஒன்றில் அவர் ஏமியன்ஸ் (பிரான்சு) நகருக்கு வெளியே குதிரையில் சவாரி செய்து கொண்டிருந்த போது, ஓர் ஏழை பிச்சைக்காரர் மேலங்கி இல்லாமல் நடுங்கி கொண்டிருப்பதைப் பார்த்தார். அவர் தன்னுடைய வாளை உருவி, தன்னுடைய மேலங்கியை இரண்டு துண்டுகளாகப் பிரித்து, ஒரு பாதியை பிச்சைக்காரரிடம் கொடுத்தார். மறுநாள் இரவில் கிறிஸ்து மார்ட்டினுடைய மேலங்கியை அணிந்து அவருக்கு தரிசனத்தில் தோன்றி கூறினார்: "இன்னும் திருமுழுக்குப் பெறாத மார்ட்டின் அவருடைய மேலங்கியின் ஒரு பகுதியை எனக்குக் கொடுத்துள்ளார்." விரைவில் மார்ட்டின் இராணுவத்தை விட்டு விலகினார். திருமுழுக்குப் பெற்றார். அவர் ஆயராகவும் பின்னர் தூர் (Tours) நகரத்தின் பேராயராகவும் ஆனார். அவரைப் பற்றிய பல வியத்தகு செயல்கள் பதிவாகி, அவர் புனிதர் பட்டம் பெற்றார். அவருடைய பல செயல்கள் மறந்து விட்டன. ஆனால் அவரது மேலங்கியைப் பிரித்து பிச்சைக்காரருடன் பகிர்ந்து கொண்ட இரக்கச் செயல் மறக்க முடியாத ஒரு கருணை செயலாகிவிட்டது. அவர் கிறிஸ்துவின் கட்டளையை நிறைவேற்றினார். "நான் ஆடையின்றி இருந்தேன், நீங்கள் எனக்கு ஆடை அணிவித்தீர்கள்." அன்பிற்கு ஓர் எடுத்துக்காட்டாக கலைஞர்கள் அந்தக் காட்சியை ஓவியமாக வரைவதும், சிற்பமாக செதுக்கியும் உள்ளனர். கிழக்கு ஜெர்மனியில் பல நகரங்களில் சிறு பிள்ளைகள் மாலையில் தாங்களே சுயமாக உருவாக்கிய விளக்குகளுடன் பாடல்களைப் பாடி சுற்றி வருவார்கள்.  


லுத்தர் மடலாயத்திற்குள் நுழைந்த எர்பர்ட் (Erfurt) என்ற இடத்தில் சிறு பிள்ளைகள் சந்தை கூடும் இடத்தில் கூடினர்.


அக்கூட்டத்தில் உரோமக் கத்தோலிக்கப் பேராயர் புனித மார்ட்டினைப் பற்றியும், லுத்தரன் பேராயர் மார்ட்டின் லுத்தரைப் பற்றியும், மாநகராட்சி மன்ற தலைவர் மார்ட்டின் லுத்தர் கிங்கைப் பற்றியும் பேசினார்கள் என்று உள்ளூர் ஆயர் என்னிடம் கூறினார். 


புனித மார்ட்டின்,மார்ட்டின் லுத்தர், மார்ட்டின் லுத்தர் கிங் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றிய மூவர். புனித மார்ட்டின் திருநாளன்று அவர்களை நினைவு கூருவது தகுதியானது. 


மறைதிரு.அறிவர்.சீபெர்ட் ஜான்சன்

No comments:

Post a Comment

Current Post

எதையும் கண்டுகொள்ளாமல் இருப்பது ஒரு கலை! அதை கற்க 5 சுலபமான வழிகள்!

 எதையும் கண்டுகொள்ளாமல் இருப்பது ஒரு கலை! அதை கற்க 5 சுலபமான வழிகள்! உங்க அமைதியை குலைக்காத/கெடுக்காத எண்ணங்களை மட்டும் தேர்ந்தெடுங்கள்...! ...