Monday, January 3, 2022

Savithribaai Phule

 படித்ததில் பிடித்தது :

,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

ஜனவரி - 3 அன்னை சாவித்திரி பூலே பிறந்த தினம்! புகழ் வணக்கம்!


இவருடைய பிறந்த தினமே இந்தியாவில் ஆசிரியர் தினமாக கொண்டாட பட வேண்டும் ஏன்?..

------------------------------------

“பள்ளிக்கூடத்திற்குச் செல்கையில் நாம் பள்ளிக்கூடம் நடத்துவதை எதிர்ப்பவர்கள் என் மீது கற்கள், சாணி மற்றும் சேற்றை வீசுகிறார்கள். சேலை பாழாகி விடுகிறது. அந்த சேலையோடு மாணவிகள் முன்னால் சென்று நிற்பதற்கு ஒருமாதிரியாக இருக்கிறது” என்று தனது கணவருக்கு கடிதம் எழுதுகிறார். 

பதில் கடிதம் வருகிறது. “காலையில் பள்ளிக்குச் செல்லும்போது ஒரு பழைய சேலையைக் கட்டிக்கொள். பள்ளிக்குச் சென்றவுடன் நல்ல சேலையைக் கட்டிக் கொண்டுவிடு. மாலையில் மீண்டும் பழைய சேலையையே கட்டிக் கொண்டு வீட்டுக்குச் செல்”


இப்படிப் பதில் எழுதுகிறார் கணவர். கடிதம் எழுதியவர் நாட்டின் முதல் பெண் ஆசிரியை அன்னை சாவித்திரி பூலே. பதில் எழுதியவர் ஜோதிராவ் பூலே. ஒரு கட்டத்தில் தொல்லை தாங்காததால் எதிர்ப்பு தெரிவிப்பவர்களில் ஒருவரை நடுரோட்டில் வைத்து அறைகிறார் சாவித்திரி. அதற்குப்பிறகுதான் கற்களை எறிவதும், சாணியை வீசுவதும் அடங்கியது. ஒரு பெண் கல்வி கற்றால், அவரது கணவரின் உணவு புழுக்களாக மாறிவிடும் என்று பயமுறுத்தி வந்த காலத்தில் தனது மனைவியைக் கற்றுக் கொள்ள வைத்ததோடு, ஆசிரியைக்கான பயிற்சியும் பெற வைக்கிறார் ஜோதிராவ் பூலே. இருவரும் இணைந்து பெண்களுக்காக தனியாக ஒரு பள்ளிக்கூடத்தை 1848இல் திறக்கிறார்கள். ஆசிரியைப் பணியைத்தானே ஏற்றுக் கொள்கிறார் சாவித்திரி. அப்போதுதான் அவருக்கு மேற்கண்ட அனுபவம் ஏற்பட்டது. சாவித்திரியோடு இணைந்து ஆசிரியைப் பணியை மேற்கொள்கிறார் பாத்திமா ஷேக் என்கிற இஸ்லாமியப் பெண். இந்தியாவின் முதல் பெண் ஆசிரியை சாவித்திரி பூலேதான்.


கணவருக்குத் துணையாக…! பள்ளிக்கூடத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் அடங்கவில்லை. பூலேயின் தந்தை கோவிந்தராவை நிர்ப்பந்திக்கிறார்கள். அவரும், எதிர்ப்புக்குள்ளாகும் நடவடிக்கைகளை நிறுத்தாவிட்டால் வீட்டை விட்டு வெளியேறுமாறு பூலேயிடம் சொல்கிறார். அந்தச் சிரமமான நிலையில், எதிர்ப்புகளைத் தாண்டி நாம் நமது பணிகளைத் தொடர வேண்டும் என்று கூறி கணவர் பூலேயை உற்சாகப்படுத்துகிறார் சாவித்திரி. மராட்டியத்தின் மேற்குப் பகுதியில் உள்ள நய்காவ்ன் என்ற ஊரில் விவசாயக் குடும்பமொன்றில் ஜனவரி 3, 1830 அன்று சாவித்திரி பிறந்தார். அப்போதெல்லாம் இளம் வயதிலேயே திருமணம் செய்து வைத்து விடுவார்கள். அப்படித்தான் ஒன்பது வயதிலேயே ஜோதிராவ் பூலேவுக்கு சாவித்திரியைத் திருமணம் செய்து வைத்தனர். பெண் கல்வி மறுக்கப்பட்ட அந்தக் காலத்தில் ஜோதிராவ், தனது மனைவியைப் கல்வி கற்குமாறு ஊக்குவித்தார். இது கடுமையான எதிர்ப்பை உருவாக்கியது. அப்போது சாவித்திரிக்கும் இருந்த மனோபலம் ஜோதிராவின் உறுதிக்கு வலிமை சேர்த்தது.


ஆபத்தான கட்டத்திலும் தனது உறுதியைத் தளர விடாதவராக இருந்தவர் சாவித்திரி. ஒருமுறை, அவர்கள் வீட்டிற்குள் வாடகைக் கொலைகாரர்கள் ஏறிக் குதிக்கிறார்கள். சத்தம் கேட்டு பூலேயும், சாவித்திரியும் எழுகிறார்கள். நிதானமாக வெளிச்சத்தை அதிகரிக்கும் வகையில் விளக்கை ஏற்றி வைக்கிறார் சாவித்திரி. அவரது நிதானம் ஜோதிராவ் பூலேயின் தைரியத்தை அதிகரிக்கச் செய்கிறது. இறுதியில் கொலைகாரர்கள் மன்னிப்புக் கேட்டுவிட்டு நகர்கிறார்கள். முடிவெட்ட மாட்டோம்!அவர் வாழ்ந்த காலத்தில் கணவனை இழந்த பெண்கள் மொட்டை அடித்துக் கொள்ள வேண்டும் என்பது எழுதப்படாத சட்டமாக இருந்தது. கணவனை இழந்து விட்டால் உலகில் கவுரமான வாழ்க்கை இல்லை என்பதால் தற்கொலை செய்து கொண்ட பெண்கள் ஏராளம். மறுமணம் என்பதை நினைத்துப் பார்த்தாலே சமூக விரோதம் என்று முத்திரை குத்தப்படும் காலமது. 1860 ஆம் ஆண்டில் விதவைகளுக்கு மொட்டை அடிப்பதற்கு எதிராக ஒரு வித்தியாசமான போராட்டத்தைத் தொடுக்கிறார் சாவித்திரி. விதவைகளுக்கு மொட்டை அடிக்க மாட்டோம் என்ற போர்க்குரலுடன் முடிதிருத்துபவர்களை அணி திரட்டுகிறார் அவர். அவருடன் பெரும் எண்ணிக்கையில் முடி திருத்துபவர்கள் அணி திரண்டதைப் பார்த்து மிரள்கிறது ஆதிக்க சக்திகள்.சமூகப் பிரச்சனைகளில் உறுதியான நிலை எடுத்த சாவித்திரி, சாமான்யனின் பொருளாதார அவலத்தையும் அம்பலப்படுத்துகிறார். “கடன்“ என்கிற தலைப்பில் அவர் எழுதிய கட்டுரையில், கடன் வாங்கிப் பண்டிகை கொண்டாடும் பழக்கத்தைக் கடுமையாகச் சாடுகிறார்.


இதனால் கடன் சுமை கடுமையாக ஏறிவிடுகிறது. தனிமைப்படுத்தப்பட்டு துன்பத்தில் உழல்கிறார்கள். ஒரு கட்டத்தில் இது இப்படித்தான் இருக்கும். இதை மாற்ற முடியாது என்று சொல்லிவிட்டு துயரத்திலேயே தங்கள் வாழ்க்கையைத் தொடர்கிறார்கள் என்று எழுதுகிறார். சாவித்திரியின் கவிதைகள் இரண்டு தொகுப்புகளாக வெளி வந்துள்ளன.புரோகிதர் இல்லா திருமணம்சத்யசோதக் சமாஜ் என்ற சமூக-ஆன்மீக அமைப்பொன்றை செப்டம்பர் 24, 1873 அன்று பூலே நிறுவினார். இந்துமதத்தை சீர்திருத்துவதாகச் சொன்ன பிரம்ம சமாஜம், பிரார்த்தன சமாஜம் மற்றும் ஆரிய சமாஜம் ஆகிய அமைப்புகள் பிராமணியம் மற்றும் சடங்குகளைத் தொடர்ந்து பாதுகாக்கவே முயல்கின்றன என்று பூலே உறுதியாகக் கருதினார். முதல் அமைப்பு பிரம்மாவையும், இரண்டாவது பிரார்த்தனையையும் மற்றும் மூன்றாவது ஆரிய அடையாளத்தையும் முன்னிறுத்தின. பூலேயைப் பொறுத்தவரை, உண்மையில் கவனம் செலுத்தினார். இந்த அமைப்பின் மகளிர் பிரிவுத் தலைவராக சாவித்திரி பணியாற்றினார்.அந்த அமைப்பின் தலைவராகப் பணியாற்றும் காலத்தில் புரோகிதர் இல்லாமல் திருமணம் செய்து வைக்கும் ஒரு புரட்சிகர முயற்சியில் சாவித்திரி இறங்கினார். டிசம்பர் 25, 1873 அன்று அந்தத் திருமணம் நடந்தது. சிறிய அளவில் எதிர்ப்பு அதற்கு இருந்தது. அதேபோன்ற திருமணம் ஒன்றை மீண்டும் செய்ய முயன்றபோது, புரோகிதர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், பூலே சரியான சமயத்தில் தலையிட்டு காவல்துறையின் உதவி மூலம் அந்தத் திருமணத்தை நடத்தி வைத்தார்.


அந்தக் காலகட்டத்தில் புரோகிதர் இல்லாமல் திருமணம் என்பது கற்பனை செய்துகூடப் பார்க்க முடியாததாக இருந்தது குறிப்பிடத்தக்கது. கர்ப்பமாக இருந்த நேரத்தில் கணவனை இழந்ததால் தற்கொலை செய்து கொள்ள முயன்ற பிராமணப் பெண் ஒருவரைக் காப்பாற்றிய சாவித்திரி, அவருக்குப் பிறக்கும் குழந்தையைத் தானே தத்து எடுத்துக் கொள்கிறார். யஷ்வந்த் என்று பெயரிட்டு அந்தப் பையனை அவரே வளர்த்து எடுக்கிறார். கைவிடப்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்காக பூலே தம்பதியினர் ஒரு இல்லத்தைத் திறந்து அவர்களைப் பாதுகாத்தனர். இதுவும் ஆதிக்க சக்திகளின் கடும் எதிர்ப்புக்குள்ளாகிறது. தங்கள் இல்லக் குழந்தைகளுக்குத் தானே தாயாக இருந்து வளர்க்கிறார் சாவித்திரி.கணவரின் உடலுக்குக் கொள்ளி1870களில் மகாராஷ்டிராவின் பல பகுதிகளில் கடுமையான பஞ்சம் நிலவியது. இந்தப் பஞ்சத்தில் ஏராளமான குழந்தைகள் அநாதைகளாகினர். அந்தக் குழந்தைகளுக்கு 52 உறைவிடப் பள்ளிகளைத் துவக்குவதில் பூலே தம்பதியினர் குறிப்பிடத்தக்க பங்காற்றினர். குறிப்பாகப் பெண் குழந்தைகளின் கல்வி மற்றும் பாதுகாப்பில் சாவித்திரி பெரும் கவனம் செலுத்தினார். தனது கணவர் ஜோதிராவ் பூலே 1890ல் இறந்தபோது பெண்களுக்கு இருந்த கட்டுப்பாடுகளை உடைக்கும் வகையில், அவரே கணவரின் உடலுக்குத் தீ மூட்டினார்.


இடுகாட்டிற்குப் பெண்கள் வருவதே அபூர்வம் என்ற நிலையில், கணவரின் இறுதிச்சடங்கில் மனைவியே கொள்ளி வைத்தது மகாராஷ்டிர சமூகத்தில் பெரும் தாக்கத்தையே ஏற்படுத்தியது. கணவரின் மறைவுக்குப் பிறகு சத்யசோதக் சமாஜத்தின் தலைமைப் பொறுப்பை சாவித்திரியே ஏற்றுக் கொண்டார். 1893 ஆம் ஆண்டில் சாஸ்வத் என்ற இடத்தில் அந்த அமைப்பின் கூட்டம் நடந்தது. அப்போது தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொண்ட சாவித்திரி 1896 ஆம் ஆண்டில் ஏற்பட்ட பஞ்சத்திற்கான நிவாரணப் பணிகளை அரசே முறையாக ஏற்று நடத்த வேண்டும் என்று வற்புறுத்தி வெற்றி கண்டார். அடுத்த ஆண்டில் பெரும் கொடிய பிளேக் நோய் புனே நகரைத் தாக்கியது. பாதிக்கப்பட்டவர்களைக் காப்பாற்ற சாவித்திரியே நேரடி நிவாரண நடவடிக்கைகளில் இறங்கினார். அப்போது அவரையும் பிளேக் நோய் தாக்கியது. மார்ச் 10, 1897 அன்று நோயின் பாதிப்பால் சாவித்திரி மரணமடைந்தார். அவர் மறைந்து 100 ஆண்டுகள் தாண்டிய பிறகும் பெண் குழந்தைகளின் கல்வி என்பது சமூகப் பிரச்சனையாகவே நீடிக்கிறது.


நாடு முழுவதும் நீடிக்கும் தீண்டாமை வன்கொடுமைக்கு, பெண்ணிய ஒடுக்குமுறைக்கு எதிராக அவர் ஏற்றிய புரட்சி விளக்கை அணைய விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயமே...


கருத்துப் பகிர்வு :

உரைவாள்".எ.கொ. அம்பேத்கார்.

அரூர் .தருமபுரி (மா).

9487343262

Friday, December 24, 2021

Christmas Thoughts

 கிறிஸ்துமஸ் செய்தி - ஓர் ஆய்வு.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

 *கிறிஸ்துவின் மானிட அவதாரம்.* 

 *The Incarnation of Christ* . 

 *எழுதியவர்  - பாஸ்டர் S.ஜான் மதியழகன்.* 

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

 *திருமறை பகுதிகள்/* Bible Passages : 

யோவான் 1:1-2 ; 

யோவான் 1:14 ; 

பிலிப்பியர் 2:5- 11 ;

திருவெளிப்பாடு 13:8. 

தொடக்க நூல் 3:15 

யோவான் 3:16 


 *I* . கிறிஸ்து உலகில் பிறக்கும் முன்பாகவே இருந்தார் - The Pre-Existence of Christ before the  creation of the world . 

யோவான் 8:58; 10:30; 14:9 ; 17:5 . 


 *II* . கிறிஸ்து உலகில் பிறக்கும் முன்பதாக வார்த்தையாக இருந்தார். கடவுளிடம் இருந்தார். கடவுளாக இருந்தார் . 

வார்த்தையை " வாக்கு " ( Word, Greek. Logos ) என்று அழைக்கலாம். 


 *III* . வாக்கு மனிதர் ஆனார்- வார்த்தை மாம்சமாகி - வார்த்தையானவர் மாம்சமாகி - திருவாக்கு மானிடனாகிவிட்டார். 

 word  was made flesh - வாக்கு சதையானது. சதை என்பது 'சார்க்ஸ்'  ( sarx ) என்னும் கிரேக்கச் சொல்லின் நேரடி மொழிபெயர்ப்பு. 


(i) ' சார்க்ஸ்' என்பது எபிரேயச் சிந்தனைப் பின்னணியில் ,கடந்து போகக்கூடிய , இறந்து போகக்கூடிய, மண்ணுலகு சார்ந்த, குறையற்ற , நிலையற்ற , அழிவுக்குரிய ஒன்றைக் குறிக்கும். 


(ii) கிரேக்கச் சிந்தனையில் இது (மாம்சம் /சதை ) தீயது , பருப்பொருள் சார்ந்தது , மனிதரை சிறைப்பிடித்து வைத்திருப்பது எனப் பொருள்படும். 


(iii) திருத்தூதர் தூய பவுலின் பார்வையில் இது பாவ நாட்டமுடையது, பாவத்தின் கருவி ஆகும். 


(iv) ஏசாயா 40:6,7 - இல் இது நிறைவற்ற ,வலுவற்ற மனித இயல்பைக் குறிக்கிறது. 


எபிரேயச் சிந்தனையின் பின்னணியிலேயே யோவான் 'சார்க்ஸ்' என்னும் சொல்லைக் கையாள்கிறார். 

எனவே இங்கு வாக்கு குறையுள்ள, நிலையற்ற, அழிவுக்குரிய மனித இயல்பை , மனித உடலை ஏற்றுக் கொண்டார் என்று பொருள் கொள்ள வேண்டும். 


வார்த்தை மாம்சமானது , வாக்கு சதையானது என்பதை வாக்கு குறையுள்ள, நிலையற்ற, அழிவுக்குரிய மனிதரானார் என்று பொருள் கொள்ள வேண்டும். 


 *IV* . வார்த்தை மாம்சமானதை -வாக்கு மனிதனானார் என்பதை "கிறிஸ்துவின் மானிட அவதாரம் " என்கிறோம்.


அவதாரம்- Incarnation- மனித உருவேற்பு - ஊனுடலேற்பு (in-Fleshment) என்ற வார்த்தையால் விளக்குகிறோம்.

Incarnation = in-flesh-ment =ஊனுடலேற்பு. 


கடவுள் விண்ணுலகிலிருந்து மண்ணுலகுக்கு இறங்கி வந்தது  அவதாரம் ஆகும். 


அவதாரம் என்ற வடமொழிச்சொல்லின்/சமஸ்கிருதச்சொல்லின் பொருள் 'கீழ் இறக்கம்' /'கீழிறங்குதல்' ஆகும். 


The 'coming down' of God is 'avatara ' which literally means 'one who descends' - from the abode of gods to this earth. 


 *V* . கிறிஸ்துவின் மானிட அவதாரம் கிறிஸ்துவின் பிறப்புடன் மட்டும் முடிந்து விடவில்லை . அது அவரின் சிலுவை மரணம்,  உயிர்த்தெழுதல், பரத்துக்கேறுதல் மற்றும் கடவுளின் வலப்பக்கத்தில் அமர்தல் வரை தொடர்கிறது. பிற மதங்களில் வரும் அவதாரங்கள் கடவுள் தீமையை அழிக்க மனிதனாக வருவதையும் பிறகு வந்த வேலை முடிந்த பிறகு மனித உருவத்தை விட்டு விட்டு பழைய கடவுள் நிலைக்கே திரும்புவதையும் காட்டுகின்றன. ஆனால் கிறிஸ்துவின் மானிட அவதாரத்தில் கிறிஸ்து தான் மனிதனாக பிறந்த அந்த மனித உருவேற்பை /ஊனுடலேற்பை விட்டு விடாமல் இன்றும் கடவுளாக -மனிதனாக (God-Man ) கடவுளின் வலப்பக்கத்தில் வீற்றிருக்கிறார் என்று வேதத்தில் வாசிக்கிறோம். 


 *VI* . கிறிஸ்து விண்ணிலிருந்து மண்ணுலகுக்கு " கீழிறங்கி " வந்ததை திருத்தூதர் பவுல் எபேசியர் 4:9 யில் குறிப்பிட்டுள்ளதை வாசிக்கிறோம். 

"ஏறிச்சென்றார் என்பதனால் அவர் முன்பு மண்ணுலகில் கீழான பகுதிகளுக்கு இறங்கி வந்தார் என்பது விளங்குகிறதல்லவா ? " 


 *VII* . நிசேயா விசுவாசப்பிரமாணமும் (Nicene Creed ) அதநாஷியஸ் என்பவரின் விசுவாசப்பிரமாணமும் (The Athanasian Creed) கிறிஸ்துவை குறித்து கூறும்போது ' இறங்கினார்' என்ற வார்த்தையை குறிப்பிடுகின்றன.


(i) மனிதராகிய நமக்காகவும் , நமக்கு இரட்சிப்பு உண்டாகவும், பரமண்டலத்திலிருந்து இறங்கிப் பரிசுத்த ஆவியினாலே , கன்னி மரியாளிடத்தில் அவதரித்து , மனிதனானார். " - Nicene Creed. 


(ii) அவர்  நமக்கு இரட்சிப்புண்டாகப் பாடுபட்டு : பாதாளத்தில் இறங்கி ,மூன்றாம் நாள் மரித்தோரிடத்திலிருந்து எழுந்தருளினார் -The Athanasian Creed. 


 *VIII* .  உலகத்தோற்றத்து முன்னிருந்த கிறிஸ்து தன்னை எவ்வாறு தாழ்த்தினார் என்று கூறும் பிலிப்பியர் 2 : (5 ) ,  6- 11 கிறிஸ்தியல் பாடல் ( *Early Christian Hymn / Christological Hymn)* இதை விளக்குகிறது. 


மூன்று வரிகளைக் கொண்ட ஆறு சரணங்களைக் கொண்ட இப்பாடலில் (1) கிறிஸ்து பிறப்பதற்கு முன்பு ஆதியில்  எவ்வாறு இருந்தார் ( *beginning* ) , 

(2) தன்னை வெறுமையாக்குதல் ( *emptying* ), 

(3)மரித்தல் ( *dying* ) , (4)உயர்த்தப்பட்டிருத்தல்  ( *being exalted* ) ,(5) தந்தையாம் கடவுள் 

எப்பெயருக்கும் மேலான பெயரை  அவருக்கு அருளியது   ( *being named* ), (6)இயேசுவின் பெயருக்கு விண்ணவர், மண்ணவர் , கீழுலகோர் அனைவரும் மண்டியிட்டு 'இயேசு கிறிஸ்து ஆண்டவர்'  என எல்லா நாவும் அறிக்கை செய்யும் படி  மாட்சிமையை அருளியது  ( *being glorified* ) ஆகியவைகளைக் காணலாம். 


இப்பாடலில் கிறிஸ்து தன்னை வெறுமையாக்கியதை 'கெனாசிஸ் கொள்கை '  ( *Kenosis/Kenotic Christology* ) மூலமாக விளக்கலாம். 


கெனாசிஸ் என்ற கிரேக்க வார்த்தை கெணு  ( *kenoo* , Gk.)என்ற வார்த்தை யிலிருந்து வந்ததாகும். 'கெணு' என்றால் 'வெறுமையாக்குதல்' , 'வெளியேற்றுதல்' ( *to empty out , drain* ) என்ற பொருள் படும். கெனாசிஸ் ( *Kenosis* ) என்பதை வெறுமைக் கொள்கை , வெறுமையாக்கும் கொள்கை என்று அழைக்கிறோம். 


இயேசு பூமியில் பிறந்த போதும் பூமியில் வாழ்ந்த போதும் சிலுவையில் மரித்த போதும் முழுமையான கடவுளாகவும் முழுமையான மனிதனாகவும் , நூறு சதவீதம்  கடவுள்-மனிதனாகவே ( *God-Man* ) இருந்தார். 


இயேசு மனிதனாக பிறந்த போது தனது மகிமையை /மாட்சிமையை அவர் துறந்தார். தன்னை அவர் வெறுமையாக்கினார் என்று கூறும் போது தனது இறையாற்றலையும் எல்லாம் அறியுந்தன்னமையையும் வெறுமையாக்கினார். அவர் தன்னை வெறுமையாக்கின போது ஆண்டவரின் ஆவி / தூய ஆவியார் அவரை நிரப்பினார்.


 *IX* . கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் கிறிஸ்துமஸ் குடிலுடன்( *Crib* ) முடிவடைவது இல்லை. அது கல்வாரி சிலுவையில் முடிவடைகிறது. கிறிஸ்து பிறப்பின் நற்செய்தியை முதலாவது அறிவித்தவர் கடவுளே ( ஆதி. /தொ.நூ. 3:15) அது முதலாவது அறிவிக்கப்பட்ட நற்செய்தி ( *Proto Evanvelium* ) என்று அழைக்கப் படுகிறது. அது இயேசுவின் பிறப்பை பற்றிய முதலில் அறிவிக்கப்பட்ட  நற்செய்தியாக /இறைவாக்காக (first proclaimed good news & first prophecy about Christ's birth into this world )  இருந்தாலும் கல்வாரி சிலுவையில் சாத்தானின் தலையை -அதிகாரத்தை -வல்லமையை

பெண்ணின் வித்தாகிய/ *ஸ்திரியின் வித்தாகிய* ( *Seed of the Woman) /* 

 *இயேசு நசுக்குவார்* *என்கிற நற்செய்தியாக அது இருக்கிறது.* 


 " *உலகத்தோற்றமுதல்* *அடிக்கப்பட்ட* (slaughtered) *ஆட்டுக்குட்டி* " என்று கிறிஸ்து திருவெளிப்பாடு 13:8 யில் அழைக்கப்படுகிறார். ஆதாம் முதல் உலகின் கடைசி மனிதனின் பாவம் வரை இயேசு சிலுவையில் சிந்தின இரத்தத்தின் மூலமாக மன்னித்தார். இயேசு பிறப்பதற்கு முன்பு பழைய ஏற்பாட்டு காலத்தில் வாழ்ந்தவர்களின் பாவங்களையும் இயேசுவின் காலத்தில் வாழ்ந்தவர்களின் பாவங்களையும் இயேசு பரத்துக்கேறி பிதாவின் வலப்பக்கத்தில் அமர்ந்த பிறகு உலகின் கடைசி நபர் ஆணோ /பெண்ணோ அவர் செய்யப் போகும் பாவங்களையும் இயேசு சிலுவையில் சிந்தின தமது இரத்தத்தின் மூலமாக மன்னித்தார். "இயேசு எனது பாவங்களுக்காக சிலுவையில் மரித்தார் என்று நான் விசுவாசிக்கிறேன். நான் இயேசுவை என்  ஆண்டவராகவும் இரட்சகராகவும் ஏற்றுக் கொள்ளுகிறேன் என்று எவர்கள்  விசுவாசித்து இயேசுவை ஏற்றுக் கொள்ளுகிறார்களோ அவர்கள் பாவங்கள் அனைத்தையும் இயேசு சிலுவையில்  மன்னித்து விட்டார்.  அவ்வாறு அறிக்கை செய்து இயேசுவை ஏற்றுக் கொள்ளுபவர்களை இயேசு  கடவுளுடைய மக்களாக ஏற்றுக்கொள்ளுகிறார். இதற்கு ' *மறைமுக ஒப்பந்தம்,'*  *மௌனமான* , *கூறாது உணர்த்தும்* *ஒப்பந்தம்* ( *TACIT CONTRACT* ) என்று பேராயர் டாக்டர் ஞானாபரணம் ஜான்சன் கூறியுள்ளார். 


கடவுளுடைய ஒரேபேறான மகனிடம் (இயேசுவிடம்) நம்பிக்கை கொள்ளும்  அனைவருக்கும் கடவுள் என்றுமுள்ள மெய்வாழ்வை /நிலைவாழ்வை தருகிறார். யோவான் 3:16 .


 *துணை நின்ற நூல்கள்* 

Bibliography

~~~~~~~~~~~~~~~~~

Khristadvaita:A Theology for India- R.H.S.BOYD.


The Birth of the Messiah- Raymond E.Brown.


 Dake's Annotated Reference Bible.


New Revised Standard Version  Bible. 


The New Jerome Biblical Commentary-Raymond E.Brown et.al.,


The New Collegeville Bible Commentary- Series Editor : Daniel Durken.


New Bible Commentary- Edited by G.J.Wenham et.al.,


வாழ்வு பெற : யோவான் நற்செய்திச் சிந்தனைகள்- கு.எரோணிமுசு.


கிறிஸ்தத்வைதம்: இந்தியாவுக்கு ஓர் இறையியல்- ஆர்.எச்.எஸ்.போய்ட். தமிழாக்கம்: அருள்திரு. டி.ஆர். அம்பலவாணர்.


பேராயர் ஞானாபரணம் ஜான்சன் வாழ்க்கை வரலாறு - மறைதிரு அறிவர். ஈவா மரியா சீபர்ட் ஜான்சன். 


அவதாரங்களா ? அவதாரமா ? - பேராசிரியர் முனைவர்  பாசுகரதாசு.


திருமறை விளக்கவுரை- ஞானா இராபின்சன் & தி.தயானந்தன் பிரான்சிஸ். 


திருவிவிலியம் பொது மொழிபெயர்ப்பு .


பரிசுத்த வேதாகமம் O.V. (பவர் )


பரிசுத்த வேதாகமம் R.V. (மோணகன்)


புதிய ஏற்பாடும் சங்கீதங்களும்- தே.இராஜரீகம் மொழிபெயர்ப்பு.


தென்னிந்திய திருச்சபை இறை வழிபாட்டு நூல். 


ஐ.எஸ்.பி.சி.கே.  ஜெப புத்தகம்.


 *குறிப்பு* :தங்களது மேலான கருத்துக்களை வாட்ஸ்ஆப் மூலமாக தெரிவியுங்கள் .நன்றி.


 *எழுதியவர்* :  *Pr.S.ஜான் Madiyazhagan

Sunday, December 19, 2021

The Christian Life is not a process of " Getting from God "

 *The Christian Life is not a proess of " Getting from God ", it is a process of renewing your mind and learning to release what you have already received*


if you dont understand that you have already received all that you  will ever need at salvation

(in your spirit ) , there will always be an element of doubt. You may know its possible or even promised in the word, but you'll be trying to perceive it in the mental, emotional, or physical realm, and that's a formula for failure.


that erroneous concept can also result in a performance -based relationship with God, ie, if you are good enough , if you read the Bible enough, if you pay your tithe, and on it goes, in an attempt to motivate God to give you what you need. its the misconception that God hasn't  already given you everything , and somehow you have to make yourself worthy enough to get it. You are already worthy because of Jesus Christ and His Sacrifice. *He paid the price for everything you will ever need*. In fact, you have already got it. It's  a matter of *Understanding the relationship of the Spirit to Soul and Body.*


*Understanding Spirit , Soul, and Body  is Critically important to every believer. It's like the key that opens the treasure chest of God's grace.* It could be a matter of life and death, and it's the foundation to understanding the rest of Scripture

By

Gary

Monday, November 15, 2021

FAMILY, PLACE OF FORGIVENESS ...



FAMILY, PLACE OF FORGIVENESS ...


©️  There is no perfect family.

©️  We do not have perfect parents,

- you are not perfect yourself.

We do not marry a perfect person or we do not have perfect children.


©️  We have complaints from each other. We can not live together without offending one another.


©️  We are constantly disappointed. Yes for so many reasons at different times we are disappointed by one another.


©️  There is no healthy marriage or healthy family without the exercise of forgiveness. Forgiveness is the medicine of family joy and happiness


©️  Forgiveness is vital to our emotional health and spiritual survival. No matter the offence or who is the offender. Without forgiveness, the family becomes an arena of conflict and a fortress of evil.


©️  Without forgiveness, the family becomes sick and unhealthy.


©️  Forgiveness is the asepsis of the soul, the purification of the spirit and the liberation of the heart. No sin is too big to be forgiven.

 He who does not forgive does not have peace in his soul  and can not have communion with God.


©️  Unforgiving is Evil and a poison that intoxicates and kills the one who refuses to forgive


©️  Keeping heartache of unforgiving  in your heart is a self-destructive gesture. It's autophagy.


©️  Those who do not forgive are physically, emotionally and spiritually ill. And they will suffer in two ways


For this reason, the family must be a place of life and not a place of death; a place of forgiveness,

 a place of paradise and not a place of hell; A healing territory and not a disease;

 an internship of forgiveness and not guilt.

 Forgiveness brings joy where sorrow has brought sadness; of

Healing where sorrow has caused  disease.


A family is a place of support and not of gossip and slander of one another. It must be a place of welcome not a place of rejection. Shame to those who plant evil about others. We are family and not enemies.


When anyone is going through a challenge all they need is support.


¤ By Pope Francisco



Wednesday, June 30, 2021

எண்ணங்கள்

 *எண்ணங்கள்*

******************


ஒருவன் மனநிலை பாதிக்கப்பட்டு, 

தன்னை ஒரு பூனை என்று எண்ண ஆரம்பித்தான்.


தான் ஒரு பூனை என்று கூறி பூனையைப் போலே செயல்பட ஆரம்பித்தான். 


பாத்திரத்தில் உள்ள பாலை,நக்கி நக்கிச் சாப்பிட ஆரம்பித்தான்.


மனோ தத்துவ மருத்துவர் அவனைப் பரிசோதித்து அவனுக்கு சிகிச்சை அளித்தார்.


அவருடைய சிகிச்சையில் முன்னேற்றம் தெரிந்தது. 

மருத்துவருக்கு அவனுடைய வீட்டார் போன் செய்து நன்றி தெரிவித்தார்கள்.


மருத்துவர் அந்த நோயாளியிடம் போனைக் கொடுக்கச் சொல்லி பேசினார்.


அவனும் போனைவாங்கி,

தான் சரியாகி விட்டதாகவும், 

தன்னை மனிதன் என்று புரிந்து விட்டதாகவும், 

மனிதர்களைப் போல் நடப்பதாகவும் கூறினான்.


ஆனால் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியவில்லை என்ற ஒரே ஒரு குறையை மற்றும் கூறினான்.


ஏன் வெளியே போகமுடியவில்லை?என்று மருத்துவர் கேட்டார்.


நான் பூனையல்ல, 

மனிதன் தான் என்பது எனக்கு எந்த சந்தேகமும் இல்லாமல் தெள்ளத் தெளிவாக புரிந்து விட்டது.


ஆனால் வீட்டுக்கு வெளியே தெருவெல்லாம் நிறைய நாய்கள் இருக்கின்றன.


அவைகளுக்கு நான் பூனையல்ல என்பது புரிந்து விட்டதா இல்லையா என்பது தான் எனக்கு தெரியவில்லை டாக்டர்! என்று அவன் பதில் கூறினான்.


நமது வெளி உலகுக்கு சரியானவனாக தெரிந்தாலும்  உள் மனதின் எண்ணங்களும், 

திட்டங்களும் வெளியுலகிற்கு தெரிவதில்லை. 

நமது வார்த்தைகளே அவைகளை வெளிபடுத்தும்.  


ஆம்! வார்த்தைகளை கவனியுங்கள்! எண்ணங்கள் வெளிப்படும்.

Tuesday, June 29, 2021

600th Year of Grace


 600th Year of Grace

Genre : Fiction

Category: Short Story

 

Grace - (in Christian belief) the free and unmerited favour of God.

 

The entrance of Chennai metro Egmore station is as bright as a LED. Aaron (19), tall-slim-little fair-dressed formal and David (20), medium-inbetween brown- dressed casual. They were moving towards platform no 7 for their metro train. As the train came on time they settled inside it within couple of minutes. As the electronic voice started to wish everyone inside the train. As the time and date were floating sideways, OCTOBER 31st 2117, 8:21 A.M. Is it possible to make it on time, asked Aaron . This is not like other cities. This is Chennai and that too its 22nd century, David consoled him. As Aaron came for his uncle’s house for a semester vacation. Aaron usually won’t go to big church thus excited to visit a big church where a special speaker is speaking today.

David cleared his throat by saying here we go. As the Anna Salai Metro station reached within 3 minutes.  “oh my God!” exclaimed Aaron. Is this the place which you go to church often.

Yes said David.  I usually come here to have a peaceful atmosphere. Just look around. You can feel the presence of God, Dude.  Yes, offcourse bro, confirmed Aaron.

Do you think there will be a great crowd. Huge, dude. Just look around. Its like a big deal when special preacher comes to this big church, people excited to see this type of occasions. 

As they entered that great big church on time, i.e 8:29 A.M. and the service began with a traditional hymn and went on smoothly.

As Rev. Sam Anbu (senior pastor) announced and introduced the special speaker.  The speciality of this geust speaker will be highlighted at the end cleared Reverend Sam Anbu.

The special speaker, attracted everyone’s attention by starting with Martin Luther’s quote and highlighting the 95 theses, precisely.  The sermon is short and direct towards the point, somehow highlighting Sola Scriptura, Sola Fide and Sola Gratia.

Somehow the speaker was tuned to highlight Martin Luthers 600th year of Reformation by entitling sermon as 600th Year of Grace.

This is a prime time for me to stand here and preach in this holistic, historic church. People came all over Chennai to witness my presence. In fact people from Germany also here as I scan they are happily sitting here in this auspicious occasion.  As we are in Chennai today, long ago, Martin Luther a very brave man did a very brave work which changed the whole history of Christianity.  

As I would like to say the meaning of Grace in your dictionary Grace - (in Christian belief) the free and unmerited favour of God. Whatever comes out of free is not valuable which people think but see today, Free of caste.

As the word caste was heard, Aaron  and David was blinking and seeing each other, as if they saw an alien in their hostel room.

As this word “caste” was said by me, many of the youngsters here were seeing each other as they were confused, Infact you people were unaware of this caste because 50 years back there was a great war in India where thousands of people including young students died because of the annihilation of caste system in India. In fact they itself never believed that caste will be annihilated in India. But at the end of the war, very strange instrument was found in order to delete the information of caste from People mind, Neuro Eraser was found out.  Neuro Eraser completely erased the details and emotions of caste from people’s mind and blood which automatically erased from their hearts. This was really an amazing moment for India as it was recorded by many People.  Even in this same Chennai 240 years back there was a great famine.  At that time Chennai is called as Madras Pattinam.  The so called caste drunk the People’s blood through the caste atrocities.  The humanity was tampered and off course they are none other than your ancestors, fore fathers and fore mothers.  But look today, in this super sonic, ultra fast world.  As a matter of fact, from Egmore to Anna salai, the time travel is 3 minutes but exactly 100 years back it was 30 minutes.  By that time Aaron and David smiled a little bit as they can never agitate a fact like that. Even they think that 30 to 3 as a myth.  Off course technology made this possible but do not forget his is received free from God.  Do not forget God’s presence.  I am not saying this blindly but life in Christianity is to be tasted rather than to be wasted.  In fact at a point where caste was made waste when technology hits the maximum level. You are tasting the equality today because of the Grace of God, so I name this year as 600th Year of Grace which wholly includes even the struggle made by people in Martin Luther’s time.

Let you all decide now that share your love with others by the way give importance to your scripture, faith and Grace as Luther highlighted.  Before reading your scripture wear lens for your clarity like equality and rationality with the same space not to destroy your faith root.  This showers you Grace of God through the rain of love.

Let us rethink in 600th year of Reformation what is to be Re formed in society today by meditating 600th year of Grace and do not forget to erase your bad thoughts like Neuro Eraser. Think.. Act… All the best, God bless you all ! signed off the Special speaker. 

As all stunned with this short and sweet preaching, Rev. Sam Anbu stepped in and introduced he special speaker.  As I am pleased and Glad to introduce the world’s first Robotic Preacher, Rev. Rob. Robert Sandler.  As Rob scans your faith level and gives sermon based on your level of spirituality.  We are all glad to receive his ideas which highlighted grace.  As he was saying I have few books and souvenirs about Grace, out of that one special book is “Sola Gratia” – a Souvenir released 100 years back by one of the greatest Theological college today in Chennai. It will be very useful for youths concluded Rev. Sam.

After service got over Aaron and David took a super selfi with Rev. Rob, uploaded in Internet as it is 100 G net speed.  Thanked and got blessing from Rev. Rob, Feeling blessed with Rev. Rob uploaded Aaron.

As they reach back to home, Aaron and David is carrying Sola Gratia, a Souvenir in their hand as Pastor insisted.  This day is very effective said Aaron happily.  Off course Dude (thumps up), Aaron.  As they came across clean, neat, wonderful, traffic less and zero polluted Smart Chennai.  They finally reached home.  Knock, Knock, Knock…

***

Knock… dad, wake up! Its Sunday, you are the pastor of this church, Remember ! said David.  Rev. Sam Anbu now only realized everything and said Oh my sweet God!

Don’t worry uncle! Early morning Dream will surely happen! Encouraged Aaron, who came for semester vacation. 

As they all left for Sunday church service the wall Post was bravely saying

I HAVE A DREAM by Martin Luther King Jr.

 

Isaac. H

BD IV

தந்திர நரி

 *தந்திர நரி*

******************


ஒரு காட்டில் பல ஆடுகளும்  சில கொடூர நரிகளும் வாழ்ந்து வந்தன.


ஆடுகளை கொடூர நரிகள் வேட்டையாடி உண்டு வந்தன. 


இதனால் பயந்தபோன ஆடுகள் எல்லாம் ஒன்று சேர்ந்து "இனி நாம் ஜாக்கிரதயாக இருக்கவேண்டும். யாரும் தனித்து உணவு தேட போக கூடாது. ஒற்றுமையாக இருக்கவேண்டும்". என்று தீர்மானம் போட்டது. 


அப்படியே அவைகள் வாழ்ந்ததால் நரிகளால் அவைகளை உண்ண முடியவில்லை.


இதனால் ஆத்திரம் அடைந்த நரி கூட்டத்தின் தலைவன் தன் குள்ள நரி ஒற்றனை அனுப்பி "எப்படியாவது அந்த கூட்டத்தை கலைத்துவிட்டு ஒரு ஆட்டையாவது உண்ணவேண்டும். அதனால் கொழுத்த ஆடு ஒன்றையாவது கொண்டுவா" என உத்தரவு போட்டது.


ஒற்றன் குள்ளநரி தனது உடல் முழுவதும்  ஆடுபோல வேஷம் போட்டு சில ஆடுகளிடம் நடித்து நட்பு கொண்டது.


இதை தெரிந்து கொண்ட தலைவன் ஆடு அந்த ஏமாந்த ஆடுகளை எச்சரித்தன.


ஒருநாள் அந்த காட்டில் இடியும் மழையும் பெய்தது. அப்போது  நரியிடம் ஏமாந்த ஆடுகள் மழையில் ஆனந்த குளியல் போட்டன. 

அப்போது அவைகள் ஆடு வேஷம் போட்ட குள்ள நரியைிடம், "மழையில் நனைந்தால் சுகமாக இருக்கும் வா" என்று அழைத்தன.  

ஆனால் குள்ள நரியோ,  "ஐயயோ,  நனையாதே! உடம்பு சரியில்லாமல் போய்விடும். 

உங்களுக்கு உடம்பு சரியில்லாமல் போனால் என்னால் தாங்கமுடியாது." என்று கதறியது.


ஆனால் அந்த ஆடுகளோ வலுகட்டாயமாக ஆடு வேசம் போட்ட குள்ளநரியை மழையில் நனைய வைத்தன. 

மழையில் நனைந்ததால் குள்ள நரியின் சாயம் சுத்தமாக வெளுத்துபோனது. 

தன் வேசம் கலைந்துபோனதை அறியாத குள்ளநரி ஆடுகளுக்காக கவலைபட்டது.


வேசம் கலைந்த நரியை கண்ட முரட்டு ஆடுகள் நரியை முட்டி கொன்றதாம்.


இப்படிதான் நண்பர்களே! நம் அருகிலேயே  தந்திரமான குணம் கொண்டவர்கள் இருக்கலாம். 

நம்மை காத்துக்கொள்ள நாம்தான் பகுத்தறிவோடு இருக்கவேண்டும். 

இறைவன் ஏற்றநேரத்தில் அவர்களை வெளிகொண்டு வருவார்.

Current Post

எதையும் கண்டுகொள்ளாமல் இருப்பது ஒரு கலை! அதை கற்க 5 சுலபமான வழிகள்!

 எதையும் கண்டுகொள்ளாமல் இருப்பது ஒரு கலை! அதை கற்க 5 சுலபமான வழிகள்! உங்க அமைதியை குலைக்காத/கெடுக்காத எண்ணங்களை மட்டும் தேர்ந்தெடுங்கள்...! ...