Monday, November 2, 2020

What is the Protestant view on All Souls Day?

 What is the Protestant view on All Souls Day?


1) We don't pray for the departed as the Roman Catholic and some Anglo Catholic believers do.


2) The departed are in God's hand and they don't need our prayers

(Heb 9:27).


3) We don't believe in Purgatory, the place of purging. (There are differing interpretations for 1 Pet 3:19).

However, the idea of Purgatory helps to avoid eternal damnation which is against God's eternal loving nature.

It's a question of debate.

 


4) We are thankful to God for those who departed and we remember their life and witness.


5) We can have a prayer at the grave or at home and it could be a 'Thanksgiving Prayer' as a family.


6) We don't worship the monument grave. It's only a place of remembrance.


7) It's good to renovate it once a year as a place to remember.


8) Heb 13:7: Remember, Consider and Follow.


Gnanavaram Masilamani

Sunday, November 1, 2020

STRONG WORDS .... FOR ALL SOFT EGGS

 STRONG WORDS .... FOR ALL SOFT EGGS.....


A poem by Martin Niemoller (1892-1984).

He was a German Lutheran Pastor and anti - Nazi Theologian. He was famous for the following poem translated differently in  paraphrase.


" First they came for the communists                                                        

And I did not speak out                                                    

Because I was not a communist                                          

Then they came for the socialists                                              

And I  did not speak out                                                            

Because I was not a socialist                                   

Then they came for the trade unionists                         

And I did not speak out                                              

Because I was not a trade unionist                                   


Then they came for the Jews                                                

And I did not speak out                                                                 

Because I was not a Jew                                    

Then they came for me                                                 

And there was no one left                                        

To speak out for me" 




"When the Nazis brought the Communists 

I kept quiet; I wasn't  a communist. 

When you captured the Social Democrats, 

I was silent ; I was not a Social Democrat. 

When they took the trade unionists, 

I did not protest ; I was not a trade unionist. 

When they brought the Jews, 

I did not protest ; 

I wasn't a Jew. 

When they took me, 

There was no one else who protested... "

The Reformation Day Memorial Seminar


The Reformation Day Memorial Seminar

The synopsis of what Rev.Dr. Eva Maria spoke on The Reformation Day Memorial Seminar is given below for the benefit of those who were not able  to attend the seminar.


At the outset, she pointed out that a number of theologians in the Holy Roan Empire, among them was Rev. Christoph Schappeler, preached reformation ideas in the 1510s. They were brutally killed by consigning them to fire and their supporters were persecuted after their death.


Martin Luther came after them and he was repugnant of several teachings and practices of the RC church. In particular, he disputed the view on indulgence.

Indulgence is an act of giving way to one's desires, something granted as a privilege or something that is enjoyed out of gratification.

An indulgence is a way to reduce the amount of punishment one has to undergo for sins. It may reduce the temporal punishment for sin after death, in the state or process of purification called Purgatory. In other words, it was to minimise the sins of the people.


It was a payment to the Catholic Church that purchased an exemption from punishment for two types of sins - partial and plenary. Partial punishment removes part of one's punishment or suffering, plenary punishment removes all of one's punishment or suffering. The amount was collected to raise funds for the construction of St. Peter's Basilica in Rome.

The Catholic church holds that all who die in God's grace and friendship but still imperfectly purified undergo the process of purification which the church calls purgatory so as to achieve the holiness necessary to enter the joy of heaven.

Then she spoke at length Luther's nailing of the 95 theses to the door of the Castle's church in Wittenberg, Germany.

In his theses, he condemned the excesses and corruption of the RC church, especially the papal practice of asking payment - called indulgences - for the forgiveness of sins.

Lutherans believe that human beings are saved from their sins by God's grace alone, through faith alone, on the basis of scripture alone.

Luther believed that Christians are saved through faith and not through their own efforts.

He dispatched a copy of the 95 theses to Archbishop Albert of Mainz, along with a request that Albert put a stop to this extravagant preaching.

After publishing his 95 theses, he was called to Rome for his heresy. When he did not comply, he was excommunicated.

Luther's understanding came to him while meditating on the letter of Paul to the Romans. Romans 1:17 says : He who through faith is righteous shall live.

He believed that it was the Bible alone, not priests or the church, which had legitimacy for interpreting the word of Christ. Salvation comes only of faith in Christ, who by His blood alone, and not by any works of ours, has put away sin and destroyed the power of death.

He translated the Bible into German, making it more accessible to the general public. That was the fruit of reformation. People read the Bible in their own language. It could be the later fruit of reformation.

Luther liked to read the Gospel of John, the Epistles to Romans and Galatians. He was very much attracted by the Seven 'I am's in the John's gospel. Christ is the mediator, is a gift of God and an example to follow.

In Acts 4:12, it is said that there is salvation in no one else, for there is no other name under heaven given among mortals by which we must be saved. 

The good works, as emphasized by her, are: We should keep the commandments. We should not do evil.

She quoted Ephesians 2:8,9: For by grace, you have been saved through faith, and this is not your own doing, it is the gift of God, not the result of works, so that one may boast.

Her speech also made the participants to think of the everyday reformation in the life of the people and of the church today. It also made the participants feel the inner spiritual dryness in them, their failings and their sinful nature. 

All Saints Day

 சகல பரிசுத்தவான்களின் திருநாள் 

All Saints Day , November 1.


திருச்சபை ஆண்டின்படி( as per Church Year /Church Calendar /Liturgical Year ) இன்றைய நாள்  நவம்பர் 1 , சகல பரிசுத்தவான்களின் திருநாள் என்று அழைக்கப்படுகிறது. இரத்த சாட்சிகள் மரித்த தினத்தில் அவர்களை நினைவு கூறும் பழக்கம் தொன்றுதொட்டு இருந்து வருகிறது. இரத்த சாட்சிகள் மரித்த இடங்களில் அல்லது அவர்களை அடக்கம் செய்த  இடங்களில் அவர்களுக்கு நினைவிடங்கள் /சிற்றாலயங்கள் கட்டப்பட்டு (Chapels) அவைகளில் அவர்கள் பயன்படுத்தின பொருட்கள் , அவர்களின் எஞ்சிய  எலும்புகள் அவர்களை நினைவுகூறும் பொருட்கள்  (relics) வைக்கப்பட்டன. திருச்சபையில் மொத்த  இரத்தசாட்சிகளுடைய எண்ணிக்கை ஒரு வருடத்தில் வரும் 365  நாட்களை விட அதிகமாக இருந்தபடியால் இரத்தசாட்சிகளை அவர்கள் மரித்த நாளில் ( heavenly birthday) மக்கள் அவர்களின் நினைவிடங்களுக்கு  சென்று  அவர்களை நினைவு கூறுதலுக்குப் பதிலாக ஒரு பொதுவான நாளில் நினைவுகூற தீர்மானிக் கப்பட்டது. கி.பி.609/610 ஆம் ஆண்டில் மே 13 அன்று முதல் சகல புனிதர்களின்/ பரிசுத்தவான்களின் திருநாள்  நினைவு கூறப்பட்டது. அதற்கு பிறகு பிற்காலத்தில்  அந்நாள்  நவம்பர் 1 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டது. கிழக்கத்திய வைதீக சபைகள் (Greek  /Eastern Orthodox Churches ) பெந்தேகொஸ்தே பண்டிகைக்குப் பின் வரும் முதல் ஞாயிற்றுக் கிழமையை  இரத்த சாட்சிகளின் நினைவு நாளாக /புனிதர்களின் அனுசரித்தனர். கத்தோலிக்க திருச்சபையும் வைதீக திருச்சபைகளும் இயேசுவின் தாயாகிய  மரியாளையும் மற்றும் இயேசுவுக்காக வாழ்ந்து இயற்கை யாக மரித்த புனிதர்களையும் இரத்த சாட்சிகளாக மரித்தவர்களையும்  "புனிதர்கள்" ( Saints) என்று அழைக்கின்றனர். புனிதர்கள் பட்டியலில்  முதலாமவர் இயேசுவின் தாயாகிய மரியாள் ஆவார். மரியாளை தொடர்ந்து  திருத்தூதர்கள் ( அப்போஸ்தலர்கள் ) இரத்தசாட்சிகளாய் மரித்தவர்கள்,  இயேசுவுக்காக வாழ்ந்து இயற்கையாக மரித்தவர்கள் மற்றும்  சில தேவதூதர்களும் புனிதர்களாகக்  கருதப்படுகின்றனர். புனிதர்கள் தற்போது பரலோகத்தில் இருப்பதால்( பிலிப்பியர் 1:23 ; திருவெளிப்பாடு 6:10)  அவர்களிடம் வேண்டுதல் செய்யும்  பழக்கம் தற்போது ரோமன் கத்தோலிக்க திருச்சபையிலும் வைதீக திருச்சபையிலும் உள்ளது.ஆனால்  புரோட்டஸ்டண்டு திருச்சபைகளில் திருச்சபை சீர்திருத்தத்தின் விளைவாக  இயேசுவின் தாயாகிய மரியாளிடமும்  புனிதர்களிடமும் அதிதூதர்களிடமும்-பிரதான தூதர்களிடம் -வேண்டுதல் செய்யும் பழக்கம் இல்லை ! அதனால் புரோட்டஸ்டண்டு திருச்சபைகளில் சகல பரிசுத்தவான்களின் திருநாள் என்ற பெயரில் இறைவழிபாடு நடத்தும் பழக்கம் இல்லை என்பதும்  உண்மையாகும் ! 

Pr.S.ஜான் மதியழகன்.

Saturday, October 31, 2020

Do penance

 லுத்தர் திருச்சபையில் சீர்திருத்தம்

ஏற்படுத்த உண்மையான  காரணமாக எது  இருந்தது  ? What was the real driving force behind Luther's Reformation ? It is the Greek  word " metanoia "

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

Key word - Gk. metanoia - do penance Vs change of mind 

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

16 -ஆம் நூற்றாண்டில் லத்தீன் மொழியிலிருந்து ஆங்கிலத்தில் 1582 ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டில் ரீம்ஸ் நகரில் ( Rheims ) புதிய ஏற்பாடு மொழி பெயர்க்கப்பட்டது. 


பிறகு 1609-1610 ஆம் ஆண்டில் டூயை நகரில் பழைய ஏற்பாடு மொழி பெயர்க்கப்பட்டது .


 இந்த மொழி பெயர்ப்பு   Douay - Rheims  Bible  என்றழைக்கப்படுகிறது. இதன் உச்சரிப்பு  du: ei - ri:mz ஆகும். இந்த மொழி பெயர்ப்பு சுருக்கமாக DRB என்று அழைக்கப்பட்டது. சில சமயம் இது DRA என்றும் அழைக்கப்பட்டது. A - என்பது Academic என்று பொருளாகும். 


இந்த DRB மொழி பெயர்ப்பு லத்தீன் வல்கேட் பைபிளின் சரியான ஆங்கில மொழிபெயர்ப்பு என்று கருதப்பட்டது. தமிழில் "மனந்திரும்புதல்" ஆங்கிலத்தில் " repentance" என்ற கிரேக்க மூல மொழியின் " மெட்டனோயா " - metanoia -  என்ற வார்த்தை இந்த DRB மொழிபெயர்ப்பில் do penance என்று மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. 


இந்த "பெனன்ஸ்" என்ற ஆங்கில வார்த்தை "பெனிடென்டிஷியா" - paenitentia என்ற லத்தீன் வார்த்தையிலிருந்து வந்ததாகும்.  பெனன்ஸ் -penance - என்ற வார்த்தை தவம் , நோன்புகள் ஆகியவைகளைக் குறிக்கும். எனவே மனந்திரும்பு என்பது தவம் செய் , நோன்புகளை கடைபிடி , போய் குருவானவரிடம் பாவ அறிக்கையை செய், தான தருமம் செய், உன்னை வருத்திக்கொள் என்ற பொருளில் வருவதாக do penance என்ற வார்த்தை யின் பொருளை கவனிக்கலாம். 


16 ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் வாழ்ந்த மக்கள் தாங்கள் செய்த பாவங்களுக்காக தங்களுக்குத் தாங்களே தண்டனையைக் கொடுத்துக் கொள்ளுவார்கள். தங்களை சாட்டையால் அடித்துக் கொள்ளுவார்கள். பனியில் மழையில் குளிரில் போய் நிற்பார்கள். தங்களுடைய இல்லங்களிலிருந்து முழங்கால்/முட்டிக்கால் போட்டுக்கொண்டு அவர்கள் ஊரிலுள்ள ஆலயத்திற்கு முட்டிக்கால் மூலமாகவே  தவழ்ந்து அல்லது ஊர்ந்து செல்லுவார்கள். பல நாட்கள் சாப்பிடாமல் பட்டினி கிடந்து தங்களைத்தாங்களே வருத்திக் கொள்வார்கள். புனித யாத்திரை சென்று புனித இடங்களை தரிசித்து வந்தார்கள். மற்றும் தான தர்மங்களையும் செய்வார்கள். 


மார்ட்டின் லுத்தரும் தனது பாவங்களுக்காக தன்னை தானே  இவ்வாறு வருத்திக்கொள்ளும் பழக்கத்தை யுடையவராகயிருந்தார்.


 ஒரு நாள் மார்ட்டின் லுத்தர் அப்போஸ்தலனாகிய பவுல் ரோமருக்கு எழுதிய நிருபத்தை இறையியல் மாணவர்களுக்கு போதிக்கும் போது, " மனிதன் தான் செய்யும் நற்கிரியைகளினால் நீதிமானாகிறது இல்லை. கடவுள் , கிறிஸ்துவை விசுவாசிக்கும் ஒரு மனிதனுடைய இதயத்திலே தனது நீதியை தந்து அவனை நீதிமானாக்குகிறார்.  மனிதர்களின் நற்கிரியைகளை கண்டு கடவுள் அவ்வாறு செய்வது  இல்லை. ஒருவன் நீதிமானாக கிறிஸ்துவை விசுவாசித்தாலே போதும். கிறிஸ்துவை விசுவாசிப்பதன் மூலமாகவே கடவுளுடைய நீதி ஒரு மனிதனுடைய இருதயத்திற்குள் கடவுளால் அருளப்பட்டு அவனை நீதிமானாக்குகிறது . அதற்காக அவன் வேறு எந்த நற்செயல்களையும் செய்ய தேவை இல்லை  என்பதுவே லுத்தரின் கண்டுபிடிப்பு ஆகும். இது லுத்தரின் வாழ்க்கையில் நடைபெற்ற "லுத்தரின்  கோபுர அனுபவம் ( Tower Experience of Luther )" என்றழைக்கப்படுகிறது. 


லுத்தர் ரோமர் நிருபத்தையும்  கலாத்தியர் நிருபத்தையும் ஆய்வு செய்து தியானிக்கும் போது அவர் கண்டறிந்தது "மனந்திரும்புதல் " அல்லது "மனமாற்றம்" என்பது "தவமோ அல்லது நோன்போ அல்லது தன்னைத்தானே வருத்திக் கொள்ளும் ஒரு செயலோ அல்ல. அது சிந்தையில் ஏற்படும் மாற்றமே " என்று கண்டறிந்தார். எனவே மனந்திரும்புதல் என்பதற்கு do penance - தவம் செய் , நோன்பு யிரு , உன்னை நீயே வருத்திக்கொள் என்பதல்ல change of mind -மன மாற்றமே - சரியான கிரேக்க மொழியின் பொருள்  என்று கூறி அவர் காலத்திலிருந்த "நற்கிரியைகள் " மனிதனுக்கு இரட்சிப்பை தராது என்று அறிவித்தார்.  மனிதன் கிரியைகளினால் அல்ல இயேசு கிறிஸ்துவின் மீது வைக்கும் விசுவாசத்தின் மூலமே நீதிமானாக்கப்படுகிறான் என்று  லுத்தர் போதிக்க ஆரம்பித்தார். 


 Man is justified by faith alone not by works . திருச்சபை சீர்திருத்த வாசகங்களில் (Slogans of Reformation) முக்கியமான ஒரு வாசகத்திற்கு அடிப்படையான ஒரு வசனம் ரோமர் 1:17 . "விசுவாசத்தினால் நீதிமான் பிழைப்பான் " என்பதாகும்.   Sola Fide - சோலா ஃபிடே (லத்தீன் )- Faith Alone - விசுவாசம் மாத்திரமே ! (கிரியைகள் அல்ல ) . சமீபத்தில்  மொழி பெயர்க்கப்பட்ட   -New Revised Standard Version (NRSV)/ New Jerusalem Bible (NJB)  / New American Bible (NAB) பொது மொழிபெயர்ப்பு  (CB) மற்றும் கத்தோலிக்க பைபிள்களின் மொழிபெயர்ப்பில்   பெனன்ஸ் ( penance )என்ற வார்த்தையை நீக்கி மனந்திரும்புதல் /மன மாற்றம் என்பதற்கான சரியான ஆங்கில வார்த்தையை repentance யை  பயன் படுத்தியுள்ளனர். 


நாம் இரட்சிக்கப்படுவதும்  நாம்  நீதிமானாக்கப்படுவதும் நாம் கடவுளிடம் பாவமன்னிப்பை பெறுவதும் நாம் செய்யும் நல்ல செயல்களால் அல்ல-  நமது நற்கிரியைகளால் அல்ல. மாறாக கிறிஸ்துவை விசுவாசிப்பதன் மூலமாகவே நாம் இரட்சிக்கப் படுகிறோம்.  நீதிமான்களாக்கப் படுகிறோம். கிறிஸ்துவின் மீது நாம் விசுவாசத்தை வைக்கும் போது கடவுள் தனது நீதியை கிறிஸ்துவின் வழியாகத்தந்து நம்மை நீதிமானாக்குகிறார்.


 " நாம் செய்த நீதியின் கிரியைகளினிமித்தம் அவர் நம்மை இரட்சியாமல், தமது இரக்கத்தின்படியே, மறுஜென்ம முழுக்கினாலும், பரிசுத்த ஆவியினுடைய புதிதாக்குதலினாலும் நம்மை இரட்சித்தார்." தீத்து 3:5


DRB மொழிபெயர்ப்பில் மனந்திரும்புதல் /மன மாற்றம் என்பதற்கு தவம் /நோன்பு (do penance )என்று மொழி 

பெயர்க்கப்பட்ட சில இடங்கள் 

கீழே கொடுக்கப்பட்டுள்ளன. 


மனந்திரும்புதல் என்பது சிந்தையில் வரும் மாற்றம். அதை do penance என்று மொழிபெயர்க்கக்கூடாது. do penance என்பது இரட்சிப்புக்கு  நற்கிரியைகளை செய்ய மக்களை ஊக்குவித்தலாகும். லுத்தர் இதை தவறு என்றார்.


மார்ட்டின் லுத்தரின் சிந்தனையை மாற்றிய ஒரு சில திருமறை சொற்களில் ஒன்று இந்த "do penance " ஆகும். மனந்திரும்புதல் என்பது சிந்தையை மாற்றுதல் ஆகும் ( change of mind - metanoia ) . ஆனால் அது மார்ட்டின் லுத்தர் காலத்தில் தவம் செய் , நோன்பு யிரு , உன்னை நீயே வருத்திக்கொள் என்ற பொருளில் போதிக்கப்பட்டது. மார்ட்டின் லுத்தர் கிரேக்க மொழியின் அர்த்தத்தை உணர்ந்து கொண்டதால் மனந்திரும்புதல் ஒரு செயல் அல்ல அது மாறாக சிந்தையின் மாற்றம் என்று அவர் புரிந்து கொண்டு அவர் தனது  மனதில் மாற்றம் பெற்றார். திருச்சபையில் அவ்வாறே அதை போதித்தார். 


 do penance வரும் சில இடங்கள்( DRB மொழிபெயர்ப்பு): 


Matthew 3:2 " And saying: Do penance: for the kingdom of heaven is at hand."


 Mt. 3:11- I indeed baptize you in the water unto penance


Lk 24 :47 - And that penance and remission of sins should be preached in his name, unto all nations, beginning at Jerusalem.


Acts 2 :38 - But Peter said to them: Do penance, and be baptized every one of you in the name of Jesus Christ, for the remission of your sins: and you shall receive the gift of the Holy Ghost.


Acts 8 : 22 - Do penance therefore for this thy wickedness;


Rev.2:16 - In like manner do penance; 


Rev.2:21 - And I gave her a time that she might do penance


do penance என்பது லுத்தர் கால ஐரோப்பா வை நமக்கு நினைவுக்கு கொண்டுவருகிறது. do penance கு பதிலாக repentance என்று மொழி பெயர்ப்பது மிகவும் சரியான மொழிபெயர்ப்பாகும். லுத்தர் மூலமாக கர்த்தர் திருச்சபைக்குக்  கொடுத்த இந்த வசன வெளிச்சத்திற்காகவும் திருச்சபை சீர்திருத்தத்திற்காகவும்  கர்த்தருக்கு ஸ்தோத்திரம் செலுத்துவோம் ! ஆமென் !!

- பாஸ்டர் S. ஜான் மதியழகன்.

சென்னை -600076.

Wednesday, October 28, 2020

Cycle

 சைக்கிள்.........!


1985க்கு முன்பு முன்னூறு வீடுகள் உள்ள கிராமம் ஒன்று இருந்தால் சுமார் ஐம்பது வீடுகளில்தான் சைக்கிள்கள் இருக்கும். மோட்டார் பைக்குளைப் பார்ப்பதே மிக மிக அரிது.


கிராமங்களில் யாரோ ஒருவர் SWEGA வண்டி வைத்திருப்பார். HERO MAJESTIC, TVS மொபெட்டுகளுக்கு முந்தினது SWEGA.....! அது மணிக்கு இருபது அல்லது முப்பது கிலோ மீட்டர் வேகத்தில்தான் போகும். 


இப்போது கார், மோட்டார் பைக் வாங்குவதற்கு கூட அவ்வளவு விசாரிப்பதில்லை. ஆனால், அப்போது பழைய சைக்கிள் (SECOND HAND) வாங்குவது என்றால் கூட அவ்வளவு எச்சரிக்கையோடு விசாரிப்பார்கள்.


ராலி, ஹெர்குலஸ், அட்லாஸ், ஹீரோ போன்ற கம்பெனிகளின் தயாரிப்புகள் இருந்தாலும் ராலி சைக்கிள் வைத்திருப்பவர்கள் தான் "கெத்து" .


அடுத்து...... அதிக எடை ஏற்றிச் செல்ல வேண்டுமானால் ஹெர்குலஸ் சைக்கிள் வைத்திருப்பார்கள். குறைந்த பட்ஜெட்காரர்கள் ஹீரோ அல்லது அட்லஸ் சைக்கிள்களைத் தேர்ந்தெடுப்பார்கள்.


ஒவ்வொரு ஊரிலும் சைக்கிள் பழுது பார்க்கும் கடையும் வாடகை சைக்கிள் கடைகளும் இருக்கும். வாடகை சைக்கிள்களில் பெரும்பாலும் கேரியர் இருக்காது. கேரியர் உள்ள சைக்கிள்களுக்கு கொஞ்சம் வாடகை அதிகம். சிறுவர்கள் சைக்கிள் பழக சிறிய சைஸ் சைக்கிள்களும் கிடைத்தது. விடுமுறை நாட்களில் இது மட்டுமே பொழுதுபோக்கு.


இப்போது கார்கள் , மோட்டார் பைக்குகளை "சர்வீஸுக்கு"விடுவது போல அப்போது சைக்கிள்களை ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் சர்வீஸுக்கு சைக்கிள் பழுது பார்க்கும் கடைகளில் விடுவார்கள். அதற்கு "ஓவராயில் " செய்வது என்பார்கள்.


அன்று சைக்கிள் ரிப்பேர் பார்ப்பவர்கள் பலர் கண்ணுக்கு ஹிரோவாக தெரிந்தார்கள்,, 


இப்போது கார்களுக்கு "WHEEL. ALIGNMENT, WHEEL BALANCING " செய்வதுபோல சைக்கிள்களுக்கும் செய்வார்கள். அதற்கு " வீல் கோட்டம் எடுப்பது" என்பார்கள்.


1979க்கு முன்பு சைக்கிள்களுக்கு பஞ்சாயத்து அல்லது நகராட்சிகளில் கட்டாயம் கட்டணம் செலுத்தி LICENSE எடுக்க வேண்டும். ஒரு வட்ட வடிவ தகரத்தில் முத்திரையிட்டுத் தருவார்கள். அதை சைக்கிளின் முன்புறம் HANDLE BAR க்கு கீழை நிரந்தரமாக இணைத்து வைத்துக் கொள்வார்கள். இது இல்லாவிட்டால் அபராதம் செலுத்த வேண்டும்.


சைக்கிளில் டைனமோ இருக்கும். இரவு நேரங்களில் சைக்கிள் ஓட்டும்போது டைனமோ இல்லாவிட்டால் காவல்துறையினர் பிடித்து அபராதம் விதிப்பார்கள்.


சைக்கிளில் ஒருவர் செல்ல மட்டுமே அனுமதி இருந்தது. இருவர் சென்றால் அபராதம். எம்ஜிஆர் முதல்வராக இருந்த போது தான் இருவர் செல்ல அனுமதி கொடுக்கப் பட்டது. அந்த லைசென்ஸும் ஒழிக்கப் பட்டது.


அந்த சைக்கிள்களின் கைப்பிடிகளுக்கு பல நிறங்களில் கவர்கள் போட்டும், இரண்டு வீல்களிலும் தேங்காய் நார்களில் செய்யப்பட்ட பலவித நிறங்களில் அலங்காரப் பொருட்களை வாங்கிக் கட்டி "கெத்து" காட்டுவதுமே பெருமையாக இருந்தது.


இந்த தலைமுறையினர் சிறு சைக்கிள்களை வீட்டுக்குள் ஓட்டுவதோடு சரி..... இன்னும் ..... அது கூட இல்லாமல் சிறிய சைஸ் மோட்டார் பைக்குகள், கார்களை வாங்கிக் கொடுத்து வீட்டுக்குள்ளேயே ஓட்டச் செய்கிறோம்.


எப்படி ஆயினும் ......

 பழைய நினைவுகள் ஆனந்தத்தையும் வைராக்கியங்களையும் தான் தருகின்றன.

Monday, October 26, 2020

உக்கார்ந்து சாப்பிட

 ஊர் முழுவதும் ஓர் அறிவிப்பு!


400 ரூபாய் இருந்தால் காலம் முழுவதும் உட்கார்ந்து சாப்பிடலாம்.


இதைக் கண்டுப் பலர் வியந்தனர். 

இதைப்பற்றி மேலும் விசாரித்தபோது, 400 ரூபாய் பணத்துடன் வந்து சந்திக்க வேண்டிய இடத்தின் முகவரி கிடைத்தது.


ஊரே திரண்டு அந்த இடத்திற்கு வந்தது.

வெறும் 400 ரூபாயில் வாழ்நாள் முழுவதும் தின்பதென்றால் சும்மாவா.


இடத்தை அடைந்த ஒருவன் சக நபரிடம் 400 ரூபாயா? அல்லது 4000, 40,000 ... அப்படி ஏதாவதா? என்று...


400 ரூபாய் மட்டுமே என்றான்.


வரிசையில் உள்ள ஒவ்வொருவரும் உள்ளே சென்றனர்.

.

.

.சார் நீங்க, 


நானும் காலம் புரா உக்கார்ந்து சாப்பிட போரேன். 

.

.நானும் வரேன். 

.

.

.சார் நானும் 

.

.

.ஐயா வாங்க 

.

.

.அம்மா வாங்க 

.

.

.

.அக்கா நீயுமா 

.

'

'வா வா, உக்கார்ந்து. 

..400, ரூவா, 

.

.

.வாவா 

.

.

.

.


அங்கே ஒருவன் நாற்காலி விற்றுக் கொண்டு இருந்தான்.


"வாங்க சார்... வாங்க சார்...

ஸ்டராங்கான நாற்காலி சார்...

இது சீக்கிரத்துல உடையாது சார்...


400 ரூபாய் கொடுத்து வாங்கிட்டு போய் காலம் முழுவதும் இதில் உட்கார்ந்து சாப்பிடலாம் சார்" என்று கூவினான்.


நீதி :

வாக்குறுதிகளை உடனே நம்பிவிடக் கூடாது. 


நல்லா யோசிக்கணும்.


சாத்தியமான்னு பார்க்கணும்.


ரொம்ப அநியாயத்துக்கு ஆசைப்படக் கூடாது.


 இது தேர்தல் காலம் 


 தேர்தல் அறிக்கைகள் இவ்வாறுதான் இருக்கும்


 நாம தான் சிந்தித்து செயல்படணும் 👍🙏


 படித்ததில் ரசித்தது..

Current Post

எதையும் கண்டுகொள்ளாமல் இருப்பது ஒரு கலை! அதை கற்க 5 சுலபமான வழிகள்!

 எதையும் கண்டுகொள்ளாமல் இருப்பது ஒரு கலை! அதை கற்க 5 சுலபமான வழிகள்! உங்க அமைதியை குலைக்காத/கெடுக்காத எண்ணங்களை மட்டும் தேர்ந்தெடுங்கள்...! ...