Friday, April 30, 2021

A response from an atheist

 * நாத்திகர்களின் தெளிவான பார்வை!


கடவுளை மறுப்பவர்கள் வாழ்க்கை சிரமமானது. நாங்கள் தவறுதலாகக்கூட தவறு செய்ய முடியாது. ஆத்திகர்கள் ஏதாவது பூச்சியை வணங்கினாலும் அதனை தன் நம்பிக்கை என்று சொல்லிவிட்டால் போதும். ஆனால் அதனை மறுப்பவன் ஆதாரபூர்வமாகவும் அறிவியல்பூர்வமாகவும் அதை செய்தாகவேண்டும். ஆக நாத்திகன் நேர்மையாளனாகவும் நியாயவானாக இருந்தாக வேண்டியது கட்டாயம்.


நாத்திகர்களின் வாழ்க்கை சுவாரஸ்யமானது. ஏனெனில் எங்களை சந்திக்கும் அனேக பக்திமான்கள் எங்களை தோற்றுப்போனவர்கள் என்று நிரூபிக்க போராடுகிறார்கள். அறிவுடமையை அறியாமை வெற்றிகொள்ள போராடுவது ஒரு சுவாரசியமென்றால், சமயங்களில் அறியாமை வென்றுவிட்டதாக அவர்கள் சொல்வது இன்னுமொரு சுவாரஸ்யம். ஒரு முன்னாள் நாத்திகர் பட்டு வேட்டி சட்டை கட்டினால் அது நாத்திகத்தின் வீழ்ச்சியாகவே பார்க்கப்படும். ஆனால் எல்லா மடத்திலிருந்தும் கசமுசா சமாச்சாரங்கள் அம்பலமானாலும் மதம் புனிதமானதாகவே நீடிக்கும். இத்தகைய சவால்களே நாத்திகர்கள் வாழ்வை சுவாரசியமாக்குகின்றன. அதனால்தான் எம்.ஆர்.ராதா வசனத்தை நூறுமுறை கேட்டாலும் சலிக்காத வெகுஜனத்துக்கு ஒருமுறை சாமி படம் பார்ப்பதே எரிச்சலூட்டுவதாக இருக்கிறது.


நாத்திகர்கள் வாழ்வு பொறுப்புகள் நிறைந்தது. எந்த முட்டாள்தனத்தை ஒழிக்க விரும்புகிறார்களோ அந்த முட்டாள்தனத்தை பின்பற்றுபவர்களது உரிமைகளுக்கும் அவர்கள்தான் குரல்கொடுத்தாக வேண்டும். அதனால்தான் பெரியார் கடவுளை மற என்று சொன்னதோடு நில்லாமல் மனிதனை நினை என்றும் சொன்னார். இதன் இன்னொரு விளக்கம் கடவுளை மறந்தால்தான் மனிதனைப்பற்றி நினைக்கமுடியும். தஞ்சை பெரியகோயிலின் இடது பக்கம் பன்றியைப்போல உருவமுடைய ஒரு சிலையைக்கொண்ட சன்னதி உண்டு. அதை தோப்புப்கரணம் போட்டபடியே வணங்கிய ஒருவர் “யானை மாதிரியும் இருக்கு பன்னி மாதிரியும் இருக்கே.. என்ன சாமி இது??” என்ற சந்தேகத்தை வாய்விட்டு சொல்லிக்கொண்டிருந்தார். இந்த வாய்ப்பு கடவுளை நம்பாவதவனுக்கு கிடையாது. அவர்கள் பெரியாரையும் தெரிந்துகொண்டாக வேண்டும் மத புத்தகங்களையும் தெரிந்துகொண்டாக வேண்டும்.


நாத்திகம் சிக்கனமானது மற்றும் எளிமையானது. விபூதி குங்குமத்தில் தொடங்கி மாட்டுச்சாணி வரை எதுவும் வேண்டியதில்லை. வீடு கட்டினால் ஒரு கழிப்பறைக்கான இடம் கூடுதலாக கிடைக்கும் (பூஜை அறைக்கான குறைந்தபட்ச இடம் அத்தியாவசியமான ஒரு பயன்பாட்டு இடத்துடன் ஒப்பிடப்பட்டிருக்கிறது.. அவ்வளவுதான்). ஒரேயொரு நபர் திருப்பூரிலிருந்து திருப்பதி போய்வரும் செலவைவிட என் ஒருமாத வீட்டு வாடகை குறைவு. குலதெய்வத்துக்கான பூஜை தொடங்கி பேருந்தில் நீட்டப்படும் சாமி உண்டியல்வரையான எல்லா நன்கொடை வேண்டுகோள்களை நிர்தாட்சண்யமாக நிராகரிக்க முடியும். கடவுள் நம்பிக்கை இல்லாதவன் என்று நீங்கள் அறியப்பட்டுவிட்டால் சோதிடம், ஜாதகம், பரிகாரம் போன்ற தீயசக்திகள் பற்றி உங்களிடம் பிரச்சாரம் செய்யப்படமாட்டாது. மலச்சிக்கலுக்குக்கூட ஜாதகத்தை ஒருமுறை பார்த்துவிடலாம் என்று சொல்வது பேஷனாகிவிட்ட காலத்தில் இது எத்தனை பெரிய சவுரியம்?


“எல்லாம் சரி, இவ்வளவு பெருமை பேசினாலும் உங்க ஏரியா ஏன் வீக்காயிகிட்டே இருக்கு?” எனும் நக்கல் எனக்கு கேட்காமலில்லை. இதில் வெட்கப்பட ஒன்றுமில்லை, பெரியார் காலத்தைவிட இப்போது எங்கள் அணி பலவீனமான நிலையில்தான் இருக்கிறது. எண்ணிக்கை குறைந்துவிட்டது என்று சொல்ல முடியாவிட்டாலும் மதம் பிரச்சாரம் செய்யப்படுமளவுக்கு கடவுள் மறுப்பு பிரச்சாரம் செய்யப்படுவதில்லை. பத்து ஆண்டுகளுக்கு முன்னால் பிரதோஷம் என்றால் என்னவென்றே தெரியாத தஞ்சாவூரில் இன்று அந்த நாளில் பெரியகோயில் பக்கமே போக முடியவில்லை. டிவியை திறந்தால் லேகிய வியாபாரிகளைவிட தாயத்து வியாபாரிகளே அதிகம் ஆக்கிரமித்திருக்கிறார்கள். சம்சாரத்தோடு சண்டையிட்டவர்களும் வாழ்வு சலித்த வெளிநாட்டவர்களும் மட்டும் வந்துபோகும் இடமான திருவண்ணாமலையில் ரஜினிகாந்தின் அருணாசலம் படத்துக்குப் பிறகு கிரிவலத்தில் கூட்டம் கட்டுக்கடங்காமல் போய்விட்டது


ஆனால் இதுகுறித்தெல்லாம் நாம் கவலைகொள்ளத் தேவையில்லை. காரணம் கடவுள் மறுப்பு என்பது கொள்கையல்ல. அது ஒரு உண்மை அவ்வளவே. பூமி சூரியனை சுற்றுகிறது என்பதைப் போல, உலகம் உருண்டை என்பதைப் போல இதுவும் ஒரு கண்டுபிடிப்பு. என்ன, மனிதனால் உருவாக்கப்பட்ட ஒன்றை பொய்யென சொல்லும் கண்டுபிடிப்பு. ஐன்ஸ்டீன் ரிலேட்டிவிட்டி தியரிகூட பலருக்கு புரிவதில்லை, அதற்காக புரிந்தவர்கள் வருந்த முடியுமா? இல்லை பெரும்பான்மையோடு ஐக்கியமாவதற்காக புரிந்துகொண்டதை மறக்க முடியுமா? பல மேம்பட்ட மனிதப் பண்புகளுக்கு இது அடிப்படையானது என்பதால் நாத்திகம் எல்லோருக்கும் பரிந்துரைக்கப்படவேண்டியது என்பது மட்டும்தான் நாம் நினைவில் கொள்ளவேண்டிய செய்தி.


மேலும் மதம் பணக்காரனையே மதிக்கும் என்பதையும் மடங்கள் கிரிமினல்களின் கூடாரம் என்பதையும் நாத்திகர்களை மெனக்கெட வைக்காமல் அவர்களாகவே அம்பலமாக்கிக்கொள்கிறார்கள். மத பாரபட்சமில்லாமல் எல்லா கடவுளரின் ஏஜெண்ட்களும் இதில் அடக்கம். கேள்வி கேட்காத ஞானத்தைக் கொடு என்கிறது பைபிள். இது எல்லா மதங்களின் பொதுக்கருத்தாக இருப்பதால்தான் டி.ஜி.எஸ்.தினகரனும் மேல்மருவத்தூர் பங்காருவும் ஆயிரக்கணக்கான கோடிகளில் புரள்கிறார்கள். பர்தா பெண்ணுக்கு பாதுகாப்பு எனும் அராஜகமான வாதத்தை கைவிட இன்றுவரை மறுக்கிறது இசுலாம். நாய்கள்கூட உலவ முடியும் கோயிலில் மூன்றிலொரு பங்கு மக்களை அனுமதிக்க மறுக்கிறது இந்து மதம். வாழ்வில் உருப்படுவதற்கான மார்க்கமானது யாதொரு மார்கத்தையும் பின்பற்றாதிருப்பதுதான் என்பதை மார்கங்களே இப்போது ஓரளவுக்கு சொல்லித்தருகின்றன. ஆகவே நமக்கு பாதிவேலை மிச்சம்.


பெண்ணடிமைத்தனம், சாதிக்கொடுமை, மூடநம்பிக்கை என சமூகத்தின் சகல நோய்களுக்கும் வேராக கடவுள் நம்பிக்கையே இருந்திருக்கிறது என்ற காரணத்தால்தான் பெரியார் தன் கோடரியை அதன்மீது வீசினார். அதனால்தான் அவரது இயக்கம் மிகவேகமாகவும் மிக வீரியமாகவும் பரவிற்று. திராவிட இயக்கம் நாற்றம் பிடிக்கத்தொடங்கியது ஒன்றே குலம் ஒருவனே தேவன் எனும் சமரசத்துக்குப் பிறகுதான். நாமும் வேரை விட்டுவிட்டு சுலபமானவற்றை வெட்டுவதற்கு முயற்சி செய்கிறோம். சூத்திரன் என்றால் வேசிமகன் என்று பொருள், அந்த அடையாளத்தை துடைத்தெறிவது பெரியாரின் நோக்கமாக இருந்தது. இப்போது அந்த நோக்கத்தின் நிலை எப்படி இருக்கிறது? வேசிமகன் எனும் அடையாளம் பற்றிய கவலை போய் இப்போது பெரிய வேசிமகன் யார் எனும் போட்டியில் திருப்தியடைந்து நிற்கிறது சமூகம். ஆகவே நாத்திகம் தோற்றதாக என்றைக்குமே கருதமுடியாது, உண்மைக்கு போட்டியே கிடையாது எனும்போது தோல்வி எங்கேயிருந்து வரமுடியும்?. ஆனால் நாத்திகர்கள் கடமைதவறிவிட்டார்கள் (அல்லது தவறிவிட்டோம்) என்பதில் வேறு கருத்து இருக்க முடியாது.


பெருமையையும் ஆராய்ச்சியும் போதும். இறைமறுப்பாளர்கள் செய்வதற்கான குறைந்தபட்ச கடமை ஒன்றுண்டு அதுபற்றி பேசிவிடலாம். சென்ற தலைமுறை நாத்திகர்கள் பலர் தங்கள் வீட்டில் புதிய நாத்திகர்களை உருவாக்கத்தவறிவிட்டார்கள். குறைந்தபட்சம் நமது பிள்ளைகளை மட்டுமாவது கடவுளை மறுப்பவர்களாக தயாரிப்பது அவசியம். இதில் சுதந்திரம் பேசுவது பேராபத்தில் முடியும். சைவமா அசைவமா என்பதை வேண்டுமானால் அவர்களே தீர்மானிக்கட்டும் என்று விட்டுவிடலாம். ஆனால் அவர்களை ஆரோக்கியமாக வளர்க்க வேண்டியது நம் கடமை அதனை குழந்தையின் விருப்பத்துக்கு விட்டுவிடுவேம் என்று நியாயம் பேசக்கூடாது . அதுபோலவே இல்லாதவற்றை நம்புவோராக குழந்தைகள் வளர்வதும் ஒருவகையில் ஆரோக்யக்கேடானதுதான்.


#பகிருங்கள்

Wednesday, April 28, 2021

Corona and Siddha

 🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿

கொரனோவால் எந்த உயிரிழப்பும் இல்லாமல் சிறப்பாக கட்டுப்படுத்தி, குணப்படுத்தியதாக  சென்னை உயர்நீதிமன்றம் பாராட்டிய சித்த மருத்துவர் திரு.வீரபாபு அவர்கள் கொரோனாவைக் குணப்படுத்த கபசுரக் குடிநீருக்கு துணை மருந்தாக அவர் கண்டுபிடித்த மூலிகை தேநீரையும் சேர்த்துக் கொடுத்து தமிழக அரசின் ஒத்துழைப்புடன் ஆங்கில மருந்து இல்லாமல், முழுவதும் சித்தா மருந்துகளைக் கொண்டே #கொரோனாவை ஒரே வாரத்தில் குணப்படுத்தி வருகிறார்.


அவ்வாறு தாம் கொடுக்கும் மூலிகை தேநீரில் சேரும் பொருட்களை  மக்களுக்கு வெளிப்படையாகத் தெரிவித்து உள்ளார்.

அதன் விபரங்கள் 


#மூலிகை #தேநீர்:


சுக்கு - 100 கிராம்,

அதிமதுரம் - 100 கிராம்,

சித்தரத்தை - 30 கிராம்

கடுக்காய்த்தோல்- 30 கிராம்

மஞ்சள் - 10 கிராம்,

திப்பிலி - 5 கிராம்,

ஓமம் - 5 கிராம்

கிராம்பு- 5 கிராம்,

மிளகு - 5 கிராம்


மேற்குறிய அனைத்து பொருட்களும் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.


இவற்றை இடித்துப் பொடிசெய்து ஒரு டப்பாவில் பத்திரப்படுத்தவும். 

ஒரு பாத்திரத்தில் 400 மி.லி நீர் விட்டு அதில் இந்த பொடியை 10 கிராம் அளவு போட்டு நன்கு கொதிக்க விடவும். இக்கசாய நீர் 100 மி.லி அளவாக வற்றியதும் ஒரு தேக்கரண்டி நாட்டுச் சர்க்கரை அல்லது 10 மி.லி அளவு தேன் சேர்த்து கிளறி, இறக்கி ஆற வைக்கவும்.

இளம் சூடாக ஆறிய பின்பு இதை வடிகட்டி காலையில் உணவிற்கு பின்பு குடிக்கவும். இரவிலும் இதே போல் செய்து உணவிற்குப் பின்பு குடிக்கவும்.


பொதுவாக கொரோனா சிகிச்சையில் உள்ளவர்களுக்கு கபசுரக் குடிநீரை உணவிற்கு முன்பும், இந்த #மூலிகை #தேநீரை உணவிற்குப் பின்பும் கொடுக்கப் படுகிறது.


இந்த மூலிகை தேநீர் அடுப்பில் கொதிக்கும் போது 5 கற்பூரவள்ளி இலைகள், 10 புதினா இலைகளும் சேர்க்கலாம்.


இந்த மூலிகைத் தேநீரை பெரியவருக்கு ஒருவேளைக்கு 100 மி.லி அளவு கொடுக்க வேண்டும். 

சிறுவர்களுக்கு இதில் பாதி அளவு 50 மி.லி போதும்.

இதை கொரோனா அறிகுறிகள் குணமாகும் வரை கொடுக்க வேண்டும்.


கொரோனா இல்லாதவர்கள் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க இதை தினமும் ஒருவேளை வீதம் காலையில் குடித்து வரலாம்.!

பத்தியமில்லை.


உலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரசை  தமிழரின் மூலிகை மருந்து ஓட ஓட விரட்டுகிறது  என்பது வியப்பான நற்செய்தி.


 

வாழ்க சித்த மருத்துவம்.

வளர்க தமிழரின் புகழ்.

🍃🍃🍃🍃🍃🍃🍃

Covid-19 second wave

 *கரோனா இரண்டாம் அலையில் நாம் அடித்து செல்லப்பட்டு கொண்டு இருக்கும் நிலையில் கோவிட் 19 பற்றிய சந்தேகங்கள் பலருக்கு தீர்ந்தபாடில்லை.*


1. *நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருந்தால் கரோனா நம்மை தாக்காது என்று பலர் எண்ணுகிறார்களே உண்மையா ?* 


இல்லை. நீங்கள் எப்பேற்பட்ட அசகாய சூரர் என்றாலும் தகுந்த சுழ்நிலை *(Suitable Condition for Virus Exposure) அதாவது கரோனா வைரஸ் உங்கள் உடலுக்குள் செல்லும் தருணம் அமைந்தால் உங்களை அது தாக்கத்தான் செய்யும். அந்த தகுந்த சூழ்நிலை *அதாவது கரோனா பாதிக்கப்பட்ட நபர் தும்மிய இடத்துக்கு நீங்கள் சென்று இருந்தாலோ அவரின் எச்சின் திவலைகள் காற்றில் இருக்கும் போதோ)* க்கு நீங்கள் உட்படவில்லை என்று அர்த்தமே தவிர நீங்கள் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளவர் என்று அர்த்தம் இல்லை. 


2. *கரோனா வைரஸ் நம் உடலுக்குள் வந்து எத்தனை நாட்களில் முதல் அறிகுறி தெரியும் ?* 


இது வரை பாதிக்கப் பட்டவர்களின் தரவுகளின்படி சராசரியாக வைரஸ் உங்கள் உடலுக்குள் நுழைந்து 5-6 வது நாட்களில் காய்ச்சலோ உடல்வலியோ, தலைவலியோ வரும். அதே நேரத்தில் 14 நாட்கள் வரை Incubation Period இந்த வைரஸ்க்கு இருக்கிறது. 


3. *கரோனா வைரஸ் வந்து போனதே தெரியாமல் பலர் இருக்கலாம் என்று கூறுகிறார்களே உண்மையா ?* 


ஓரளவு உண்மை. ஆனால் ஏதாவது ஒரு அறிகுறியையாவது அவர்கள் அனுபவித்து இருப்பார்கள். அது காய்ச்சலாகவோ, லேசான சளியாகவோ, உடல்வலியாகவோ இருந்து இருக்கலாம். எந்த அறிகுறியும் தராமல் கரோனா வைரஸ் உங்கள் உடலை விட்டு நீங்கி இருக்காது. வெளிப்புற அறிகுறி உங்களுக்கு தெரியாவிட்டாலும் *CT Lungs* எடுத்து பார்த்தால் அதன் தாக்கம் இல்லாமல் இருக்காது. எனவே ஒரு அறிகுறியையாவது நீங்கள் அனுபவிப்பீர்கள்.


4. *எனக்கு இருமல் காய்ச்சல் இருக்கிறது. ஆனால் சோதனை செய்ய பயமாக இருக்கிறது. என்ன செய்ய வேண்டும் ?* 


உங்களுக்கு இருமல் காய்ச்சல் ஒரு நாள் இருந்தால் கூட யோசிக்காமல் உடனே அருகிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் *RT PCR* பரிசோதனைக்கு உங்கள் மாதிரியை கட்டாயம் கொடுங்கள். உயிர் காக்க முன்னரே நாம் நடவடிக்கைகள் எடுத்து கொள்ளலாம். பயந்து சோதனை செய்யாமல் இருந்தால் வைரஸ் பல்கி பெருகி உங்கள் உயிருக்கே உலை வைக்கலாம். அதே நேரத்தில் நீங்கள் முகக் கவசம் அணியாமல் வெளியே செல்லும்போது உங்களால் பலருக்கு பரவ வாய்ப்பும் இருக்கிறது. 


5. *கரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நபரிடம் பேசினாலே அல்லது அவர் சென்ற அறைக்கு சென்றாலே அவர் தொட்ட பொருளை தொட்டாலே நாம் தொற்றுக்கு உள்ளாகி விடுவோமா ?* 


அமெரிக்காவின் CDC வெளியிட்ட தரவுகளின் படியும் உலக சுகாதார நிறுவனத்தின் கடந்த ஒரு வருட ஆய்வறிக்கையின் படி *99 சதவீதம் மூக்கு வழியாக தான்* இந்த கரோனா வைரஸ் பரவுகிறது. அதே நேரத்தில் கரோனா பாதிக்கப்பட்ட நபர் தொட்ட பொருள் மூலமாக இன்னொருவருக்கு பரவுவது என்பது 0.001 வாய்ப்பு தான் என்று உலக சுகாதார நிறுவனமே கூறி இருக்கிறது. அப்படி பரவி இருந்தால் இதற்குள் உலக மக்கள் தொகை பாதி அழிந்து இருக்கும். கரோனா பாதிக்கப்பட்ட நபர் தும்முவதன் மூலமும் இருமுவதின் மூலமாக தான் அதிகம் பரவுகிறது. 


6. *பிறகு ஏன் கோலப்பொடி போல குளோரின் பொடியையும் மருந்தையும் கரோனா பாதிக்கப்பட்ட நபரின் வீட்டிலும் அலுவலகத்திலும் தெளித்து சுத்தம் செய்கிறார்கள்? அவ்வாறு செய்வதால் கரோனா அழிந்து விடுமா ?* 


கண்டிப்பாக இல்லை. கரோனா பரவிய நேரத்தில் அதாவது 2020 ஆம் ஆண்டு இந்த வைரஸ் பற்றிய தெளிவு உலக சுகாதார நிறுவனத்திடம் இல்லை.கடந்த ஆண்டே உலக சுகாதார நிறுவனம் கிருமிநாசினி வீட்டிலும் அலுவலகத்திலும் தெளிப்பதால் கரோனா வைரஸ் ஒழியாது என்று தெளிவாக  கூறிவிட்டது. இவ்வாறு தெளிப்பதால் பாக்டீரியா மற்றும் பிற கிருமிகள் சாகுமே தவிர கரோனா வைரஸ் அழியாது. 


7. *ஏன் சிலர் லேசான அறிகுறிகளாலும் சிலர் தீவிர அறிகுறிகளாலும் பாதிக்கப்படுகின்றனர் ?*


இதற்கு பல காரணங்கள் உள்ளன. வயது, ஏற்கனவே ஏதேனும் நோயால் பாதிக்கப்பட்டது என பல காரணங்கள் உள்ளன. ஆனாலும் முக்கிய காரணம் நீங்கள் எவ்வளவு அளவு வைரசால் (Viral Dose) பாதிக்கப் படுகிறீர்கள் என்பது முக்கிய பங்காற்றுகிறது. அதிக அளவு வைரஸ் க்கு நீங்கள் Expose ஆனால் தீவிர தொற்று ஏற்பட வாய்ப்புண்டு. குறைந்த அளவு Viral Dose க்கு நீங்கள் Expose ஆனால் குறைவான பாதிப்புக்கு உள்ளாகலாம். அதே நேரத்தில் உடலின் உச்ச பட்ச நோய் எதிர்ப்பு போராட்டமான *Cytokine Storm* அதாவது நம் உடல் சொந்த செல்லையே தாக்கி கொல்லும் நிலைக்கு உங்கள் உடல் சென்றாலும் உயிரிழப்பு ஏற்படும். 


8. *கரோனா Positive என்று அறிய வந்தால் என்ன செய்ய வேண்டும்* ? 


முதலில் பதறக் கூடாது. யாரிடமும் மறைக்க கூடாது. வீட்டில் உள்ளவரிடம் தெரியபடுத்தி 14 நாட்களுக்கு தனி அறையில் இருக்க வேண்டும். வெளியே வரவே கூடாது. முதல் நாளிலேயே உங்கள் நுரையீரலை CT Scan எடுத்து பார்த்து விடுவது நல்லது. தொடர்ந்து 5 நாட்கள் மேல் காய்ச்சல் இருக்கும் பட்சத்தில் உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டும். பெரும்பாலனோருக்கு காய்ச்சல் முதல் மூன்று நாட்களிலேயே குணமாகி மற்ற அறிகுறிகளான இருமல் உடல் வலி தொடர்கிறது.ஆனால் தொடர் காய்ச்சல் என்பது நாம் கவலை கொள்ள வேண்டிய விஷயமாக கருத வேண்டும். 


9. *என்னென்ன மாத்திரைகள் உட்கொள்ள வேண்டும்* ? 


Paracetamol காய்ச்சலை குறைப்பதற்கும் இருமல் என்பது பாக்டிரியாவல் ஏற்படுவது எனவே அதை குறைக்க Antibiotics ஆன Cefixime or Azithromycin or Amoxcyillin மாத்திரைகளை தவறமால் உட்கொள்ள வேண்டும். தொடர்ந்து காலை இரவு என உட்கொள்ளும் பட்சத்தில் ஐந்து நாட்களில் உங்களுக்கு உடல் முன்னேற்றம் தென்படும். 


10. *எப்போது நாம் அச்சம் கொள்ள வேண்டும்* ? 


கரோனா பாதித்து 5,6,7 ஆம் நாட்கள் மிக முக்கியமானது. அப்போது உங்களுக்கு நெஞ்சு வலி, மூச்சுத் திணறல் ஏற்பட வாய்ப்புண்டு. அப்படி அறிகுறி தென்பட்டால் உடனே மருத்துவமனையில் சிகிச்சை பெற சென்று விட வேண்டும் 


11. *என்ன சாப்பாடு சாப்பிட வேண்டும்* ? 


வழக்கமான சாப்பாடு சாப்பிட்டாலே போதுமானது. அதே நேரத்தில் அதிகமான நீர் குடிக்க வேண்டும். பழச்சாறு தவறாமல் பருக வேண்டும். புரதமே உடலின் கட்டுமான வீரர்கள். எனவே சைவம் என்றால் பருப்பு வகைகளையும் அசைவம் என்றால் சிக்கன் மீன் போன்றவற்றை எடுத்து கொள்ள வேண்டும். அதே நேரத்தில் உங்களுக்கு சுவை மணம் போன்ற உணர்வுகளை இழந்து இருப்பீர்கள். சாப்பிட முடியாது, ஆனால் சாப்பிட்டே ஆக வேண்டும் தவறாமல். ஒன்றே ஒன்று தான். உங்கள் உடல் ஆற்றலை இழக்க கூடாது. இழக்கும் பட்சத்தில் நோய் எதிர்ப்பு சக்தி இல்லாமல் அதிக தொற்றுக்கு அது வழி வகுக்கும். 


12. *Walking,Yoga போன்றவற்றை செய்யலாமா* ? 


தாராளமாக செய்யலாம். நீங்கள் அடைந்து இருக்கும் அறைக்குள் மட்டுமே. ஆனால் இதையெல்லாம் செய்ய உங்கள் மனம் ஒத்துழைக்காது என்பதே உண்மை. ஏனெனில் அதிக உளவியல் பாதிப்புக்கு உள்ளாகும் போது உங்களால் சகஜமாக இருக்க முடியாது. 


13. *ஏன் கரோனா வந்ததையே வெளியில் சொல்ல பலர் பயப்படுகின்றனர்* ? 


நோய் பற்றிய புரிதல் இல்லாததும் அறிவியல் விழிப்புணர்வும் இல்லாததுமே காரணம். இது ஒரு தொற்று. அதே நேரத்தில் அசிங்கப்பட கூடிய நோய் ஒன்றும் அல்ல. இது வல்லரசு நாடுகளின் அதிபர்கள் முதல் பாமர மக்கள் வரை யாரை வேண்டுமானாலும் பாதிக்க கூடிய தொற்று. எனவே பாதிப்பு வந்த உடன் நாம் சொல்லும் போது மட்டுமே மற்றவர்கள் நம்மிடம் வராமல் இருக்கவும் நம்மால் பிறருக்கு பரவாமல் இருக்கவும் நாம் செய்யும் சமூக கடமை. அதே நேரத்தில் உங்கள் அனுபவங்களை பகிர்வதன் மூலம் பலர் எச்சரிக்கையுடன் இருப்பர். வைரசின் சங்கிலியை அறுத்தாலே கரோனா பெருந்தொற்று விரைவில் முடிவுக்கு வந்துவிடும் 


14. *கரோனாவால் பாதிக்கபட்டால் நம் உடல் மீண்டும் தொற்றுக்கு உள்ளாக வாய்ப்புண்டா* ? 


இயற்கையாகவே நம் உடல் எல்லா விதமான வைரஸ் பாக்டீரியாவை எதிர்கொள்ளும் திறன் உடையது தான். ஒரு புதுவிதமான வைரஸ் உள்ளே வரும்போது தான் நம் உடல் திணறும். அந்த திணறலே காய்ச்சல் இருமல் உடல்வலியாக நமக்கு நம் உடல் நம்மிடம் தெரிவிக்கிறது. அதே நேரத்தில் வைரஸை முழுமையாக நம் உடல் போரிட்டு வென்ற உடன் நம் உடலில் Antibodiesஐ உற்பத்தி செய்துவிடும். இது அடுத்த நோய் தொற்றில் இருந்து நம்மை பாதுகாக்க உதவும். 

ஆனால் கரோனவை பொறுத்தவரை இயற்கையாகவே நம் உடலில் Antibodies உற்பத்தி ஆனாலும் சுமார் 6-9 மாதங்களே அந்த பாதுகாப்பு இருக்கும் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது. உங்கள் உடல் எந்த அளவிற்கு Antibodies உற்பத்தி செய்துள்ளது என்பதை கரோனா பாதித்த 21 நாட்களுக்கு பிறகு Covid Antibody Test எடுத்து பார்த்தால் நமக்கு தெரியவரும். அந்த சோதனையில் Antibodies கம்மியாக இருந்தால் நீங்கள் கரோனா தடுப்பூசி செலுத்தி அந்த Antibodies அளவை கூட்டிக் கொள்ளலாம். இது மீண்டும் தொற்றுக்கு உள்ளாவதில் இருந்து கூடுதல் பாதுகாப்பு தரும். 


15. *தொற்றில் இருந்து தப்பிக்க மிகச்சிறந்த வழி என்ன* ? 


Mask மட்டுமே. Mask ன் முன் பகுதியை நாம் தொடக்கூடாது. தொட்டுவிட்டு கழட்டி நம் முகத்தை துடைத்தால் தொற்றுக்கு உள்ளாக நேரிடும். அதே போல் கையுறை பயன்படுத்துவதால் எந்த பயனும் இல்லை. ஏற்கனவே சொன்னது போல மூக்கு தான் கரோனாவின் நுழைவு வாயில். 


16. *கரோனா தடுப்பூசி எடுத்துக் கொள்ள வேண்டுமா* ? 


கட்டாயம் எடுத்து கொள்வது நல்லது. இது தீவிர தொற்று நிலைக்கு கொண்டு செல்லாமல் உங்களை பாதுகாக்க உதவும். அதே நேரத்தில் தடுப்பூசி எடுத்து கொண்டாலே கரோனா தாக்காது என்று எண்ண கூடாது.




 *லாக் டவுன் 2 வது கட்டத்தை நாங்கள் எடுக்க  இயலாது* ... *


*COVID-19 முக்கியமான தகவல்*


 சுகாதார சீர்கேடு காரணமாக, சுகாதார நிபுணர்களான நாங்கள் இந்த செய்தியை மக்களுக்காக தயார் செய்துள்ளோம் என்று வலைதளத்தில் வந்த பதிவு இது...!


தேர்தல் நேரத்தில் எந்தவிதமான கட்டுப்பாடுகளும் இல்லாமல் இருந்த ஆட்சியாளர்கள்.. இன்று வரிந்து கட்டிக்கொண்டு அபராத வசூல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்....;




தடுப்பு முறைகள் ஒன்றும் அதிகம் இல்லை!


  15-20  நிமிடங்கள் வெயிலில் இருங்கள்

  

 குறைந்தது 7-8 மணி நேரம் ஓய்வெடுத்துத் தூங்குங்கள்.

  

ஒரு நாளைக்கு ஒன்றரை லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்

  

 அனைத்து உணவுகளும் சூடாக இருக்க வேண்டும் (குளிர்ச்சியாக அல்ல).

  

 கொரோனா வைரஸின் pH 5.5 முதல் 8.5 வரை இருக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

எனவே வைரஸை அகற்ற நாம் செய்ய வேண்டியதெல்லாம், வைரஸின் அமில அளவை விட அதிகமான கார உணவுகளை சாப்பிடுவதுதான்.

  வாழைப்பழங்கள், எலுமிச்சை → 9.9 pH

  மஞ்சள் எலுமிச்சை → 8.2 pH

  Avocada fruit - pH 15.6

  பூண்டு - pH 13.2

  மாம்பழம் - pH 8.7

  கமலா ஆரஞ்சு பழம் - pH 8.5

  அன்னாசிப்பழம் - 12.7 pH

  ◉ வல்லாரைக் கீரை - 22.7 pH


இந்த தகவலை உங்களுக்காக மட்டும் வைத்திருக்காமல் அதை உங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கு ம் தெரியப் படுத்துங்கள்.




 *அனைவருக்கும் முக்கியமான செய்தி*


நீங்கள் குடிக்கும் சூடான நீர் உங்கள் தொண்டைக்கு நல்லது. ஆனால் இந்த கொரோனா வைரஸ் உங்கள் மூக்கின் பரணசால் சைனஸின் பின்னால் 3 முதல் 4 நாட்கள் வரை மறைக்கப்படுகிறது. நாம் குடிக்கும் சுடு நீர் அங்கு செல்வதில்லை. 4 முதல் 5 நாட்களுக்குப் பிறகு, பரணசால் சைனஸின் பின்னால் மறைந்திருந்த இந்த வைரஸ் உங்கள் நுரையீரலை அடைகிறது. நீங்கள் சுவாசிப்பதில் சிக்கல் இருக்கும்.

அதனால்தான் நீராவி பிடிப்பது  மிகவும் முக்கியம், இது உங்கள் பரணசால் சைனஸின் பின்புறத்தை அடைகிறது. இந்த வைரஸை மூக்கில் இருக்கும்போதே  நீராவியால் கொல்லப் பட வேண்டும்.

50 ° C இல், இந்த வைரஸ் முடக்கப்பட்டுள்ளது, அதாவது முடங்கிப்போகிறது. 60 ° C வெப்பநிலையில் இந்த வைரஸ் மிகவும் பலவீனமாகி எந்த மனித நோய் எதிர்ப்பு சக்தியும் அதற்கு எதிராக போராட முடியும். 70 ° C க்கு இந்த வைரஸ் முற்றிலும் இறந்துவிடுகிறது.

நீராவி இதைத்தான் செய்கிறது.


வீட்டில் தங்கியிருப்பவர் ஒரு நாளைக்கு ஒரு முறை நீராவி பிடிக்க வேண்டும்.


 காய்கறிகளை வாங்க சந்தைக்குச் சென்றால், ஒரு நாளைக்கு இரண்டு முறை எடுத்துக் கொள்ளுங்கள். சிலரைச் சந்திக்கும் போதோ அல்லது அலுவலகத்திற்குச் செல்பவர்களோ ஒரு நாளைக்கு 3 முறை நீராவி எடுக்க வேண்டும்.


இதை உங்கள் அன்புக்குரிய அனைவருக்கும் அனுப்புங்கள்.



 *நீராவி வாரம்*


மருத்துவர்கள் கருத்துப்படி, கோவிட் -19 மூக்கு மற்றும் வாயிலிருந்து நீராவியை உள்ளிழுத்து கொரோனா வைரஸை நீக்குகிறது. * *மக்கள் அனைவரும் ஒரு வாரம் நீராவி இயக்கி பிரச்சாரத்தைத் தொடங்கினால்,  தொற்றுநோய் விரைவில் முடிவுக்கு வரும்*. 

எனவே இதோ  ஒரு பரிந்துரை :

*ஒவ்வொரு வாரமும் வெறும் 5 நிமிடங்கள் நீராவியை உள்ளிழுக்க, ஒரு வாரம் காலை மற்றும் மாலை செயல்முறையைத் தொடங்கவும்.        

அனைவரும் ஒரு வாரத்திற்கு இந்த நடைமுறையைப் பின்பற்றினால் கொடிய கோவிட் -19 அழிக்கப்படும்*.

இந்த நடைமுறைக்கு பக்க விளைவுகளும் இல்லை.

எனவே இந்த செய்தியை உங்கள் உறவினர்கள், நண்பர்கள் மற்றும்  அனைவருக்கும் அனுப்புங்கள், இதன் மூலம் நாம் அனைவரும் இந்த கொரோனா வைரஸைக் கொன்று இந்த அழகான உலகில் சுதந்திரமாக வாழ முடியும்...!

காரிருளில் நம் தீபம் இயேசு

 *காரிருளில் நம் தீபம் இயேசு* 

ஜான் ஹென்றி நியுமென் (Henry Newman) என்ற தேவ மனிதர் எழுதிய.. *காரிருளில் என் நேச தீபமே நடத்துமேன், வேறொளியில்லை, வீடும் தூரமே, நடத்துமேன்; நீர் தாங்கின், தூர காட்சி ஆசியேன்; ஓர் அடிமட்டும் என்முன் காட்டுமேன்..* என்ற  பாடலை எந்த சூழ்நிலையில் ஜான் ஹென்றி எழுதினார் என்று சுவாரசிய தகவலை காண்போம்.


1801-ல் பிறந்த இவர் தனது 15 ஆவது வயதில் கிறிஸ்துவை ஏற்று கொண்டு தன் வாழ்வை ஊழியத்திற்கு அர்ப்பணித்தார். சுமார் 10 ஆண்டுகள் தீவிரமாக ஊழியம் செய்தார். பின் ஓரு சரீர வியாதி அவரை தாக்கியது. இத்தாலியிலிருந்து தனது தாய்நாடான இங்கிலாந்தை நோக்கி கப்பலில் செல்ல வேண்டியதாயிற்று. அப்போது அவருக்கு இருந்த காய்ச்சலும் அதிகரித்தது. கடலில் மூடுபனி ஏற்பட்டு கப்பலில் இருள் சூழ்ந்தது. வெளிச்சமில்லாத அந்த குளிரில் மிகவும அவதிப்பட்டார். அப்பொழுதுதான் இந்த பாடலை இயற்றினார். அப்பாடலை பாடிக் கொண்டிருந்தபோதே பனி மூட்டம் குறைந்து வெளிச்சம் வர ஆரம்பித்தது, அந்த நாள் அவரது வாழ்வில் மறக்க முடியாத ஆவிக்குரிய அனுபவத்தை தந்தது.


அன்று அவர் எழுதிய இப்பாடல் இன்றுவரை அநேகருக்கு ஆசீர்வாதமாக உள்ளது. பின்பு 57 வருஷம் அவர் ஊழியம் செய்து தனது 89வது வயதில் கர்த்தருக்குள் நித்திரையானார். இப்பாமாலை பாடலின் மூலம் ஒவ்வொரு நாளும் இன்னுமதிகமாய் கர்த்தரை சார்ந்து கொள்ள நம்மை அர்ப்பணிப்போம். காரிருள்போல தோன்றும் வாழ்க்கiயின் பாதைகளிலே கர்த்தர் கூட இருக்கும்போது தூர காட்சி வேண்டாமென்றும், ஒரு அடி மட்டும் காண்பியும் என்றும் பக்தர் இங்கே பாடுகிறார். *தேவரீர் என் விளக்கை ஏற்றுவீர்; என் தேவனாகிய கர்த்தர் என் இருளை வெளிச்சமாக்குவார.(சங்கீதம் 18:28)* 


இந்த நாட்களிலும் கொரோனோ என்கிற பயங்கரமான ஒரு எதிரியை மேற்கொள்ள முடியாமல் இந்தியா மிகவும் தவிக்கிறது. இந்த இரண்டாவது அலை இந்தியாவை அப்படியே திருப்பிப் போட்டு விட்டது. மனிதன் சுவாசிக்கும் பிராண வாயு இல்லாமல் அல்லது ஆக்சிஜன் இல்லாமல் ஒரு நாளில் 26 பேர் மரித்திருக்கிறார்கள். நிலைமை கட்டுக்கடங்காமல் போய் கொண்டிருக்கும் இந்த நிலையிலும் நமக்கு வெளிச்சத்தை கொடுப்பவர் நம் இயேசு மாத்திரமே. அவரை நாம் சார்ந்து கொள்ளும்போதுஇ நம்மை சுற்றி இருள் இருந்தாலும் எல்லாம் வெளிச்சமாகும்..


கர்த்தரின் பாதுகாப்பு நம்மையும் நம்முடைய அன்பு உறவுகளையும் சுற்றி சூழ்ந்து பாதுகாத்துக் கொள்ளும். விக்கினங்கள் கடந்து போகுமட்டும் உமது செட்டைகளின் நிழலிலே வந்தடைவேன் என்று நாம் அவரையே சார்ந்து கொள்வோம். இந்த நிலைமையும் கடந்து போகும் ஆமென் அல்லேலூயா!

Monday, April 26, 2021

Oscar Nominations and Where to Watch

 Oscar Nominations and Where to Watch as on April 26


The Father - NA

Judas and the Black Messiah - ₹499 on BMS Rent, Buy 4k at ₹920 on gplay, Buy at ₹790 on Apple tv +

Mank - Netflix

Minari - NA

Nomadland - Hotstar FROM Apr 30

Promising Young Woman - NA

Sound of Metal - Prime

The Trial of the Chicago 7 - Netflix

Another Round - ₹149 BMS rent, ₹269 BMS Buy

Ma Rainey’s Black Bottom - Netflix

The United States vs. Billie Holiday - NA

Pieces of a Woman - Netflix

One Night in Miami - Prime

Borat Subsequent Movie film - Prime

Hillbilly Elegy - Netflix

The White Tiger - Netflix

Onward - Hotstar

Over the Moon - Netlfix

Shaun the Sheep Movie: Farmageddon - Rent at ₹89 on BMS, Buy at ₹449 on BMS

Soul - Hotstar

Wolfwalkers - Apple tv +

Better Days (Chinese) - NA

Collective (Romanian Documentary Thriller) - NA

The Man Who Sold His Skin - NA

Quo Vadis, Aida? - NA

News of the World - Netflix

Mulan - Hotstar

Pinocchio - NA

Emma - NA

Da 5 Bloods - Netflix

Tenet - Apple Tv +

Greyhound - Netflix

Love and Monsters - Netflix

The Midnight Sky - Netflix

The One and Only Ivan - Hotstar

Saturday, April 24, 2021

150 korean movies

 பார்க்க வேண்டிய 150 கொரியன் திரைப்படங்கள்


1.No Mercy

2.Bedevilled

3.Montage

4.Memories of Murder

5.Old Boy

6.The Client

7.The Terror Live

8.Spring Summer Fall Winter and Spring

9.The Suspect

10.The Bow

11.Isle

12.The Handmaiden

13.The Brotherhood of war

14.71.in to the Fire

15.My Way

16.The Tiger

17.JSA

18.Secretly, Greatly

19.Blind

20.Wind Struck

21.A Dirty Carnival

22.New world

23.Nameless Gangster

24.Always

25.The classic

26.Sex is Zero

27.Welcome to Dongmakgal

28.Mother

29.Chaser

30.I saw the devil

31.My Sassy Girl

32.A Hard Day

33.Cold Eyes

34.The Man From Nowhere

35.Ode to My Father

36.The Admiral Roaring Currents

37.Green Fish

38.Daisy

39.A Moment to Remember

40.The Yellow Sea

41.Poetry

42.Miracle in cell No.7

43.Bitter Sweet Life

44.Oasis

45.A Millionaire's First Love

46.My Girl & I

47.Unforgettable

48.The Way Home

49.Silenced

50.Sad Movie

51.Im A Cyborg But that's ok

52.A were wolf Boy

53.Christmas in August

54.Hello Ghost

55.Lovers Concerto

56.Ing

57.Once in a Summer

58.Failan

59.My wife is a Gangster

60.Train To Busan

61.Moebius

62.Address Unknown

63.The Throne

64.The House Maid

65.My Little Bride

66.Children

67.Midnight Fm

68.Sunny

69.The Flu

70.The Merciless

71.The Con artists

72.The Battleship Island

73.Innocent Thing

74.The Classified file

75.A Day

76.The Mayor

77.The Outlaws

78.V.I.P

79.New Trail

80.A taxi Driver

81.Blue Beard

82.The Prison

83.Real

84.The King

85.Confidential Assignment

86.The Villainess

87.Okja

88.Fabricated City

89.One Day

90.The Harmonium in My Memory

91.Spell Bound

92.The Truth Beneath

93.A Bloody Aria

94.The Great Battle

95.Human Space Time

96.Parasite

97.Burning

98.The Wailing

99.Extreme Job

100.My Dear Desperado

101.Steel Rain

102.Forgotten

103.Tune in for love

104.The Age of Shadows

105.Along with the Gods

106.The Host

107.Pandora

108.Secret Sunshine

109.The Thieves

110.Lady Vengeance

111.3.Iron

112.Peppermint Candy

113.Innocent Witness

114.The Witch

115.Thirst

116.The Spy Gone North

117.A Tale of Two Sisters

118.Ayla 

119.The good the bad the weird

120.1987 when the Day comes

121.Bad Guy

122.Be with You

123.Little Forest

124.Confession of Murder

125.The Dude in me

126.The Beauty Inside

127.No Tears for the Dead

128.On Your Wedding Day

129.Hope

130.Midnight Runners

131.200 Pounds Beauty

132.Miss Granny

133.The king and the Clown

134.Addicted

135.The face Reader

136.Inside men

137.Pieta

138.Painted Fire

139.On the Beach at Night Alone

140.The Table

141.ll.Mare

142.Castaway on the moon

143.The Front Line

144.War of the Arrows

145.Operation Chromite

146.Northern limit line

147.Masquerade

148.The Divine Move

149.Love Forecast

150.The Man Standing Next


*ரமேஷ் ராம்

Wednesday, April 14, 2021

Uses of Ginger

 *🩺நூறு டாக்டர்கள் இருக்காங்க  

கால் கிலோ இஞ்சில.


*🌵இஞ்சியை கறிக்கு டீக்கு

*🌵மட்டுமே யூஸ் பண்றோம்.


*🌵பாருங்க இஞ்சி இருந்தால்


*உங்களுக்கு எவ்வளவு


*வெட்டி


*செலவு மிச்சம் என்று!


*நோய்களை  நீக்குவதில்

*🌵இஞ்சி  சமையலறை மருத்துவர்!


*1. 🌵இஞ்சி சாறை பாலில் கலந்து சாப்பிட வயிறு நோய்கள் தீரும். உடம்பு இளைக்கும்.


*2. 🌵இஞ்சி துவையல், பச்சடி வைத்து சாப்பிட மலச்சிக்கல், களைப்பு, மார்பு வலி தீரும்.


*3. 🌵இஞ்சியை சுட்டு சிறிது உப்பில் தோய்த்து சாப்பிட பித்த, கப நோய்கள் தீரும்.


*4. 🌵இஞ்சி சாறில், வெல்லம் கலந்து சாப்பிட வாதக் கோளாறு நீங்கி பலம் ஏற்படும்.


*5. 🌵இஞ்சியை புதினாவோடு சேர்த்து துவையலாக்கி சாப்பிட பித்தம், அஜீர ணம், வாய் நாற்றம் தீரும். சுறு சுறுப்பு ஏற்படும்.


*6. 🌵இஞ்சியை, துவையலாக்கி சாப்பிட வயிற்று உப்புசம் இரைச்சல் தீரும்.


*7. 🌵காலையில் இஞ்சி சாறில், உப்பு கலந்து மூன்று நாட்கள் சாப்பிட பித்த தலைச்சுற்று, மலச்சிக்கல் தீரும். உடம்பு இளமை பெறும்.


*8. 🌵பத்துகிராம் இஞ்சி, பூண்டு இரண்டையும் அரைத்து, ஒருகப் வெந்நீரில் கலந்து காலை, மாலை இரண்டு நாட்கள் சாப்பிட மார்பு வலி தீரும்.


*9. 🌵இஞ்சி சாறோடு, தேன் கலந்து சூடாக்கி காலையில் வெறும் வயிற்றில் ஒரு கரண்டி வீதம் சாப்பிட்டு வெந்நீர் குடித்துவர தொந்தி கரைந்து விடும்.


*10. 🌵இஞ்சி சாறில், எலுமிச்சை சாறு கலந்து சாப்பிட நல்ல பசி ஏற்படும்.


*11. 🌵இஞ்சி, மிளகு, இரண்டையும் அரைத்து சாப்பிட ஜீரணம் ஏற்படும்.


*12. 🌵இஞ்சியை வதக்கி, தேன் விட்டு கிளறி, நீர் விட்டு, கொதிக்க வைத்து நீரை காலை, மாலை குடித்துவர வயிற்றுப் போக்கு தீரும்.


*13. 🌵இஞ்சியை அரைத்து நீரில் கலந்து தெளிந்தபின், நீரை எடுத்து, துளசி இலை சாறை சேர்த்து ஒரு கரண்டி வீதம் ஒரு வாரம் சாப்பிட வாய்வுத் தொல்லை நீங்கும்.


*14. 🌵இஞ்சி சாறில், தேன் கலந்து தினசரி காலை ஒரு கரண்டி சாப்பிட்டு வர நோய் தடுப்பு திறன் கூடும். உற்சாகம் ஏற்படும். இளமை பெருகும்.


*15. 🌵இஞ்சி சாறுடன், வெங்காய சாறு கலந்து ஒரு வாரம், காலையில் ஒரு கரண்டி வீதம் குடித்துவர நீரிழிவு குறையும்.


*16. 🌵இஞ்சி சாறு, எலுமிச்சை சாறு, வெங்காய சாறு மூன்றையும் கலந்து ஒருவேளை அரை அவுன்ஸ் வீதம் சாப்பிட்டுவர ஆரம்ப கால ஆஸ்துமா, இரைப்பு, இருமல் குணமாகும்.

Tuesday, April 13, 2021

How we have to speak ?!

 *நாம் பேசும் வார்த்தைகள் எப்படி பட்டதாக இருக்க வேண்டும்*

’''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''"'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

1) சுருக்கமான வார்த்தையாக இருக்க வேண்டும் (வளவள என்று பேச கூடாது) - பிரச 5:2


2) மற்றவர்களை பெலப்படுத்தும் வார்த்தைகளை பேச வேண்டும் - யோபு 4:4


3) நல்ல வார்த்தைகளை பேச வேண்டும் - எபேசி 4:29


4) மற்றவர்களுக்கு பிரயோஜனமான வார்த்தைகளை பேச வேண்டும் - எபேசி 4:29


5) ஜிவ  வார்த்தைகளை பேச வேண்டும் (மற்றவர்களுக்கு ஜிவனை (உயிரை) கொடுக்கும் வார்த்தை) - நீதி  10:11


6) இன்பமான வார்த்தைகளை பேச வேண்டும் (மற்றவர்களுக்கு இன்பத்தை தரக்கூடிய வார்த்தைகளை) - ஆதி 49:21


7) கிருபை உள்ள வார்த்தைகளை பேச வேண்டும் - கொ 4:6


8) உப்பால் சாரம் ஏறிய வார்த்தைகளை பேச வேண்டும் (மற்றவர்களுக்கு ருசி கொடுக்கும் வார்த்தை) - கொ 4:6


9) அறிவுள்ள வார்த்தைகளை பேச வேண்டும் - நீதி 15:2


10) மற்றவர்களுக்கு பக்தி விருத்தி உண்டாக்கும் வார்த்தைகளை பேச வேண்டும் - எபேசி 4:29


11) மற்றவர்கள் துக்கத்தை மாற்றும் வார்த்தைகளை பேச வேண்டும் - யோபு 16:5


12) மற்றவர்களை திடப்படுத்துகிற (தைரியப்படுத்துகிற)  வார்த்தைகளை பேச வேண்டும் - யோபு 16:5


13) செம்மையான வார்த்தைகளை பேச வேண்டும் - யோபு 6:25


14) தேவனுக்கு பிரியமானதை பேச வேண்டும் (நாம் பேசும் பேச்சு தேவனுக்கு பிரியமானதாக இருக்க வேண்டும்) - சங் 19:14


15) நலமானதை பேச வேண்டும் - மத் 12:34


16) ஆரோக்கியமான வார்த்தைகளை பேச வேண்டும் - நீதி 15:14


17) நன்மையே பேச வேண்டும் - ஆதி 31:24


18) மெதுவான பதில் - நீதி 15:1

Honour ur Father and Mother

 ஒரு மகன் ஒரு முறை தன் தாயிடம் கேட்டான். எங்களை வளர்ப்பதற்காக அதிகமாக கஷ்டப்பட்டு தியாகம் செய்தது நீங்களா...? அல்லது  அப்பாவா...?


அதற்குத் தாய் இந்தக் கேள்வியை நீ என்னிடம் கேட்டிருக்க கூடாது, குழந்தைகளை வளர்ப்பதில் ஒரு தாய்க்கும் தகப்பனுக்கும் எவ்வித கஷ்டமும் இல்லை. இருந்தாலும் சொல்கிறேன். உங்க அப்பா என்னை திருமணம் செய்துகொண்டபோது சொந்த விருப்பங்களுக்கும் நலன்களுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்தவர். நீ பிறந்த பின்னர் தன் விருப்பு வெறுப்புகளை மாற்றி உங்களுக்காக உங்கள் நலனுக்காக,  உணவு, உடை, மருந்து மற்றும் உங்கள் கல்விக்கு என பல தேவைகளுக்காக சம்பாதித்தார். நீங்களும் நானும் இந்த குடும்பமும் உன் தந்தையின் வியர்வை உருவானவர்கள்.

 ,

 மகன் இதே கேள்வியை தன் தந்தையிடம் கேட்டார்.


அவரின் பதில் வேறு மாதிரி இருந்தது. உங்கள் தாயார் எவ்வளவு தியாகம் செய்தார் என்று எனக்குத் தெரியவில்லை. உன்னை வளர்ப்பதற்காக அவள் எவ்வளவு கஷ்டப்பட்டாள் என்றுகூட எனக்குத் தெரியவில்லை. அவளுடைய பொறுமையும் விடாமுயற்சியும் தான் இந்த குடும்பத்தை இன்று இந்த நிலைக்கு கொண்டு வந்தது. என்னுடைய வருமானத்திற்கு ஏற்ப செலவுகளை செய்தாள். தனக்கு தேவையான எதையும் அவள் இதுவரை என்னிடம் கேட்டதில்லை. உங்களுக்காக தான் என்னுடன் சண்டையிட்டிருக்கிறாள். அவளது தியாகத்தை விட நான் ஒன்றும் பெரிதாக செய்யவில்லை என்றார்.


மகன் தனது சகோதரர்களிடம் சொன்னான்.  நம்மைவிட இந்த உலகில் அதிர்ஷ்டசாலிகள் யாரும் இருக்க முடியாது. தந்தையின் தியாகத்தைப் புரிந்துகொள்ளும் தாயும், தாயின் தியாகத்தைப் புரிந்துகொள்ளும் தந்தையும் இருக்கும் ஒவ்வொரு குடும்பமும் சொர்க்கம்தான்.


பெற்றோர்கள் இருவர் அல்ல, ஒரு கிரீடத்தில் இருக்கும் இரண்டு வைரக்கற்கள். அவர்களை நம்முடனேயே வைத்து அவர்களது ஆயுட்காலம் முழுவதும் காப்போம்.


உங்களில் ஒருவன்.....

  👍

Monday, April 12, 2021

இன்றைய சமூகத்தில் சாவித்ரிபாயின் பங்கு

 

இன்றைய சமூகத்தில் சாவித்ரிபாயின் பங்கு

 

“என் மேல் கற்களையும் மாட்டுச் சானத்தையும் வீசுகிறார்கள்.  அதையும் மீறி கல்வி கற்பிக்க செல்கிறேன்.  ஏனெனில், கல்வியின் மகத்துவம் எனக்குத் தெரியும்.”

“விஷப் பாம்புகளைத் தொடும் நமக்கு சக மனிதர்களிடம் மட்டும் தீண்டாமை ஏன்?”

“இச் சமூகத்தில் பெண்களுக்கான கல்வி மிகாவசியமானது. ஆனால், பெண்கள் கல்வி கற்பதையே பலர் பாவமாக கருதுகிறார்கள்.”

“கடவுளுக்குச் சேவகம் செய்வதைவிட, கடவுளைப் போன்ற மனிதர்களுக்கு சேவகம் செய்வது சிறந்தது; பிறருக்கு கல்வி கற்றுத் தருவது அப்படியானது.”

இவர்கள் ஜதிக்காக உயிரைக்  கொல்கிறார்கள். ஒரு மனிதனின் உயிரை விட ஜாதி பெரியதா?

“ கல்வி அறிவினால் மட்டுமே ஒருவர் தன் தாழ்ந்த நிலையை அழித்து உயர்ந்த நிலையை அடைகிறார் என்பதை நான் ஆழமாக நம்புகிறேன்”

“அறிவுடமை இல்லையேல் எதுவுமில்லை”

-        இவையெல்லாம் சாவித்ரிபாயின் சிந்தனைகள்.

இந்த சிந்தனைகள் உதித்த காலம் 19 ஆம் நூற்றாண்டு.   கிட்டத்தட்ட 150 ஆண்டுகளுக்கு முற்பட்ட காலத்திலேயே சாவித்ரிபாய் இவற்றையெல்லாம் சிந்தித்து இருக்கிறார். இவற்றில் ஒன்றைக் கூட நாம் இன்னும் கடந்து போனதாகத் தெரியவில்லை.

சாவித்ரியின் வாழ்க்கை ஏட்டினை சற்றே புரட்டிப் பார்த்தோமேயானால், டிஜிட்டல் உலகம் என மார்தட்டிக் கொள்ளும் நாம், சிந்தனையில் எவ்வளவு பின் தங்கி இருக்கிறோம் என்பதனை உணர முடியும்.

பெண்கள் மீதான அடக்கு முறையும், தீண்டாமைக் கொடுமையும், மூட நம்பிக்கைகளும் இந்த சமூகத்தில் புரையோடிப் போயிருந்த காலம்தான் சாவித்ரியின் காலம்.

பெண்கள் படித்தாலே பாவம் என்ற எண்ணம் கொண்ட மனிதர்கள் மத்தியிலே, பெண் சமுதாயத்திற்கே கல்வி விளக்கு ஏற்றிய கருணைக் கடல் சாவித்ரி.  கல்வியே ஒரு சமுதாயத்தை கரைசேர்க்கக் கூடிய கலம் என்று உறுதியாக நம்பிய சாவித்ரி எதிர் கொண்ட சோதனைகள் ஏராளம். 

ஆனால், இன்றைய சமுதாயத்திலே, சாவித்ரிபாய் இன்னும் அதிக உத்வேகத்துடன் செயல்பட வேண்டியுள்ளது.  ஏனென்றால் அன்று சாவித்ரி சந்தித்த அத்துனை பிரச்சனைகளும் இன்று நவீன வடிவத்திலே கண்ணுக்குப் புலப்படாத எதிரிகளாக உருவெடுத்துள்ளன.

ஸ்டேட் போர்ட், சிபிஎஸ்இ , இன்டெர்னேஷனல் என்று வெவ்வேறு கல்வி முறைகளில் இங்கே தீண்டாமை தலைவிரித்தாடிக் கொண்டு இருக்கிறது.  ஜதிக்கொரு கல்வி முறையாகிப் போய்விட்டது. அடித்தட்டு வர்க்கத்தினருக்கு ஒரு கல்வி முறை.  ஆதிக்க வர்க்கத்தினருக்கு ஒரு கல்வி முறை என்று இங்கே தீண்டாமை நவீனமயமாக்கப் பட்டுள்ளது.  இந்தச் சூழலில் சாவித்ரிபாய் இன்னும் வீறு கொண்டு எழ வேண்டியுள்ளது.

இத்தனையும் சமாளித்து ஒரு அடித்தட்டு வர்க்கத்து மாணவன் முனைவர் பட்டத்திற்கு முன்னேறி விட்டால், அங்கே அவனுக்கு காத்திருப்பதோ தூக்குக் கயிறுதான்.  ஆம், 2016, சனவரி 17,  ரோஹித் வெமுலாவின் தற்கொலையைத்தான் இங்கே குறிப்பிட விரும்புகின்றேன்.  சாவித்ரியின் அத்துனை போராட்டங்களும் தவிடுபொடியாகிவிட்டதே என்ற வலியும் வேதனையுமே மிச்சம் நமக்கு. இப்படிப்பட்ட நிறுவனக் கொலைகள் சமீபத்திய JNU இஸ்லாமிய மாணவி தற்கொலை வரை தொடர்ந்து கொண்டு தானே இருக்கிறது.

தாழ்த்தப்பட்டவர்களையோ அல்லது பெண்களை மட்டுமோ குறிவைப்பதில்லை இன்றைய அரசியல்.  ஏழைகள் ஏழைகளாகவே இருக்க வேண்டும்.  பொருளாதார ரீதியில் பின் தங்கிய, முதல் தலைமுறையாக கல்வி கற்க வரும் மாணவர்களுக்கு NEET என்ற பெயரிலே இங்கே கல்வி கேள்விக் குறியாகிவிட்டது.  அது புரியாமல், ஆதிக்க வர்க்கத்தினர் மட்டுமே வாழ வேண்டும் என்ற அடாங்காத வெறியினால் உருவாக்கப்பட்ட புதிய கல்விக் கொள்கையை நம்மில் சிலரே கையில் ஏந்திக் கொண்டு அலைந்து கொண்டு இருக்கிறோம். 

இது மட்டுமா? ஜாதியின் பெயரில் நடந்தேறும் ஆணவக் கொலைகளை எந்தக் கணக்கில் பட்டியலிடுவது?  அம்ருதாவின் காதல் கணவன் ப்ரணய் கொலை வழக்கு, உடுமலை சங்கர் கொலை வழக்கு, தர்மபுரி சம்பவம் என நாட்டை உலுக்கிய ஆணவக் கொலைகளுக்கு யார் நீதி கேட்பது?

உலக அரங்கிலே அறிவியல் தொழில் நுட்பத்தில், விண்வெளி விஞ்ஞானத்தில் இந்தியாவைக் கண்டு மிரளுகிறது நாசா.  அதே இந்தியாவில் தான் மேட்டுப் பாளையம், நடூரில் , தீண்டாமைச் சுவர் இடிந்து 17  பேர் உயிர் இழக்கின்றனர். இப்படி முரண்பாடுகளைக் கொண்ட நம் தேசத்தை எந்த இடத்தில் பொருத்துவது? முன்னேறிய நாடுகள் வரிசையிலா? பின் தங்கிய நாடுகள் வரிசையிலா?

இவற்றையெல்லாம் சீர்படுத்த சாவித்ரி சாதாரணமாக வந்து விடக் கூடாது.  விஸ்வரூபம் அல்லவா எடுக்க வேண்டியுள்ளது.

சாவித்ரியின் தைரியமும் மனவலிமையும் சமுதாயத்தின் மீது பற்று கொண்ட நம்மைப் போன்றவர்களுக்கு அருமருந்து.  நிகழ்கால சமுதாயத்தைப் புரட்டிப்போட முடியுமா? என்பது தெரியவில்லை.  ஆனால் எதிர்கால இந்தியாவின் தூண்களை உளி கொண்டு செதுக்க நம்மைப் போன்றவர்கள் முன்னெடுக்க வேண்டும் என்பதே என் தார்மீக எண்ணமாகும்.

சக மனிதர்களின் கேலிப் பேச்சுக்கும் , கல் எறிதலுக்கும் தலை வணங்காமல் இருந்ததால்தான் சாவித்ரியால் பெண் கல்வி சாத்தியமானது.  சமூகக் கொடுமைகளுக்கு சமாதி கட்ட முடிந்தது.

சாவித்ரியின் சாதனைகளில் முக்கியமாக நாம் எண்ணிப் பார்க்க வேண்டியது விதவைப் பெண்களின் நல்வாழ்விற்காக அவர் மேற்கொண்ட  பணிகள். 

1800 – களில் அவர் ஆரம்பித்த போராட்டம், விதவைகளின் வாழ்வில் விளக்கேற்றி இருக்கிறதா? என்றால் வெளிச்சத்தின் கதிர்கள் அவர்கள் வாழ்வில் பாய வேண்டிய தூரம் இன்னும் அதிகம் இருக்கிறது என்பதைத்தான் நமக்கு காட்டுகிறது.

இன்றளவும் விதவை மறுமணம் என்பது, பாதிக்கப்பட்ட பெண்களாலேயே ஏற்றுக் கொள்ள முடியாமல் இருக்கின்ற நிலைமைதான் நீடிக்கிறது.  குடும்ப கௌரவம் விதவைகளின் வாழ்க்கையைக் குட்டிச் சுவராக்குகிறது.  கற்பு என்ற பெயரில்   நேர்மையான திருமண வாழ்க்கையை வழங்க மறுக்கும் இந்த சமுதாயம் அவளின் தலைமறைவு வாழ்க்கையை, பவம் தனியாக இருப்பவள் தானே என தட்டிக் கொடுத்துச் செல்கிறது.  சில வெறி கொண்ட ஆண்களின் வசதிக்காக!  சுய கௌரவத்தை பெண் பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில்தான் நாம் இன்னமும் இருக்கிறோம் என்பதை மறந்துவிடக் கூடாது. முதலில் நாம் நம்மை மதிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.  எந்த இடத்திலும் பெண்மை தலை குனியக் கூடாது என்பதை பசு மரத்து ஆணி போல நம் பிள்ளைகளின் மனதில் பதிய வைக்க வேண்டியது நம் தலையாய  கடமையாகும்.

சமத்துவ சமுதாயம் படைக்க வேண்டும் என்பதிலே சாவித்ரியின் பங்கு அளவிட முடியாதது.  1890 – ல் மகாத்மா ஜோதிராவ் பூலே இறந்து விடுகிறார்.  அவர்களின் வளர்ப்பு மகன் யஷ்வந்த் ஈமச் சடங்கினைச் செய்வதற்கு பூலே உறவினர்கள் எதிர்ப்பு  தெரிவிக்கின்றனர்.  அந்த சமயத்தில் துணிச்சலாக முடிஉவெடுக்கின்றார் சாவித்ரி.  ஈமச் சடங்கினைத் தானே செய்து முடிக்கின்றார். தன் கணவரின் உடலுக்கு அவரே தீயும் வைக்கிறார்.

இந்த இடத்திலே இன்னொரு விஷயத்தை உங்களிடம் பகிர்ந்து கொள்ள விருப்பப் படுகிறேன்.  சமீபத்திலே நம் நாட்டின் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைந்தபோது அவரின் வளர்ப்பு மகள்தான் வாஜ்பாய் உடலுக்குத் தீ வைக்கிறார். இந்த சம்பவத்தை ஊடகங்கள் பெரிய அளவிலே பேசிற்று.

 

சற்றே சிந்தித்துப் பாருங்கள்.  கிட்டத்தட்ட 150 ஆண்டுகளுக்கு முன்னரே இது போன்ற துணிச்சல் ஒரு பெண்ணுக்கு வரவேண்டுமானால் எவ்வளவு மனவலிமை படைத்தவராக இருக்க வேண்டும்? 

இத்தனை கொடுமைகளையும் புறந்தள்ளி, புதியதொரு சமுதாயம் படைக்க, சமூகப் புரட்சி  செய்த சமூகப் போராளி , இந்தியாவின் முதல் பெண் ஆசிரியை சாவித்ரிபாய் பூலேவின்வழினின்று , அவரின் பங்காற்ற ஆயிரம் ஆயிரம் சாவித்ரிபாய்கள் ஒன்று திரள வேண்டும்.  ஒன்று படுவோம்!

 

விழித்திடு! எழுந்திடு! கற்பித்திடு!

பழமையை எதிர்த்திடு – விடுதலையடைந்திடு!

-        சாவித்ரிபாய் பூலே.

மகளிர் தினம் – 2021

 

மகளிர் தினம் – 2021

 

பெரும்பாலும் நாம் கொண்டாடுகின்ற தினங்கள் அனைத்துமே வெறும் சம்பிரதாயமாக  மாறிவிட்ட இன்றைய காலகட்டத்தில் , நூறு ஆண்டு கால போராட்ட வரலாற்றை தன்னகத்தே  கொண்ட இந்த மளிர் தினத்தின்  நிலைமையோ அதைவிட பரிதாபம். 

 கி.பி. 1800 களின் பிற்பகுதியில் தொடங்கி வளர்ச்சி அடைந்த நாடுகளில் உழைக்கும் வர்க்கத்தினரால் ஆங்காங்கே  போராட்டங்கள் நடந்து கொண்டிருந்த சூழ்நிலையில், 1908 இல் அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் 15000 பெண் தொழிலாளர்கள் குறைந்த வேலை நேரம், சரிவிகிதச் சம்பளம் மற்றும் ஓட்டுரிமை வேண்டி ஒரு மாபெரும் பேரணியை நடத்துகின்றனர்.

 அதனைத் தொடர்ந்து 1910 ஆம் ஆண்டு நடந்த உழைக்கும் மகளிரின் சர்வதேச மாநாட்டில் மிகச் சிறந்த சோஷலலிசப் பெண்மணியான கிளாரா சட்கின் இந்த நாளை சர்வதேச மகளிர் தினமாக கொண்டாடவேண்டும் என்ற கோரிக்கையை முன் வைக்கிறார். அதனை ஏற்று 1911 ஆம் ஆண்டு  முதல்  சர்வதேச பெண்கள் தினம் ஆஸ்த்ரியா, டென்மார்க், ஜெர்மனி மற்றும் சுவிசர்லாந்திலும் கொண்டாடப்பட்டது. 

இது ஒருபுறம் இருக்க, 1917 இல் ரஷ்யாவில் நடந்த வரலாற்றுப் புகழ் பெற்ற “Bread and Peace” போராட்டம் தான் மார்ச் 8 ஐ சர்வதேச மகளிர் தினமாக தீர்மானிப்பதற்கான காரணியாக அமைந்தது.

 உலக அமைதியைப் புரட்டிப் போட்ட முதல் உலகப் போர் முடியும் தருவாய் அது. ஏராளமான உயிர்ச் சேதங்களையும், பஞ்சம் பட்டினியையும் மட்டுமே மிச்சம் வைத்தது முதல் உலகப் போர்.  இதில் அளவிட முடியாத இழப்பை அடைந்தது ரஷ்யா.  இதற்கு மேலும் போரில் ஈடுபட முடியாது - ரஷ்யப் படைகள் திரும்பப் பெறப்பட வேண்டும் என்று  ரஷ்ய மக்கள் எழுப்பிய முழக்கங்கள் விண்ணைப் பிளந்தன.  ஆனால் மனாசாட்சியற்ற சார் (Tsar) மன்னனின் மனதை மட்டும் அவை ஏனோ தொடவே இல்லை.  

1917  -  மார்ச் 8  - மகளிர் தினத்திற்கான விதை  விதைக்கப்பட்ட திருநாள்.  பொறுத்தே பழகிய பெண்கள் கூட்டம் அன்று முதல் முறையாக மன்னன் சாரை (Tsaar) எதிர்த்து நின்றது .  அடக்க வந்த ராணுவமும் புரட்சி செய்த பெண்கள் பக்கம் நின்றுவிடுகின்றனர். இவர்களோடு போல்ஷ்விக்குகளும் இணைகின்றனர். இதில், பல உயிர்களைப் பலி வாங்கிய பிறகே சார் மன்னனின் முடியாட்சி முடிவிற்கு வந்தது. போராட்டம் வெற்றி பெற்றது.

இப்படிப் பல போராட்டங்களைப் பெண்கள் உலகெங்கிலும் முன்னெடுத்த நிலையில், 1975 ஆம் ஆண்டை ஐ நா சபை பெண்கள் ஆண்டாக அறிவித்தது. உலகெங்கிலும் பல்வேறு தினங்களில் மளிர் தினம் கொண்டாடப்பட்டு வந்த நிலையில் ஐ நா சபை ஏதாவது ஒரு நாளை சர்வதேச மகளிர் தினமாக தீர்மானிக்க உலக நாடுகளிடம் வேண்டுகோள் விடுத்தது. எல்லா நாடுகளாலும் ஒப்புக் கொள்ளப்பட்ட மார்ச் 8 ஆம் தேதியை சர்வதேச மகளிர் தினமாக அறிவித்து 1977 ஆம் ஆண்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  அன்றிலிருந்து இன்று வரை ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8 ஆம் தேதி சர்வதேச மகளிர் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த மாபெரும் வரலாறு புரியாமல், நாம், மகளிர் தினத்தை சமையல் போட்டிகளுக்கும் கோலப் போட்டிகளுக்குமான தினமாக மாற்றிவிட்டது தான் வேதனையின் உச்ச கட்டம்.  சமத்துவத்திற்கும் பெண் விடுதலைக்குமான இந்த நாளை நாம் மறுபடியும் நம் கொண்டாட்டங்களுக்கான திருநாளாக மாற்றி விட்டது நம் அறியாமையின் வெளிப்பாடு. பெண்களுக்கென்றே புனையப்பட்ட புனிதங்களில் இருந்து இம்மியளவு கூட நாம் பிசக விரும்பவில்லை என்பதுதான் கசப்பான உண்மை.

இதில் பெண்களை மட்டுமே குறைசாட்டுவதில் பயனில்லை.  தெய்வத் திருமறை என்று போற்றப்படும் திருக்குறள் முதற்கொண்டு சங்ககாலப் பாடல்கள் பல பெண்களைச் சிறப்பிப்பதாக நினைத்துக் கொண்டு சமத்துவத்திற்கும் பெண்களின் சுயமரியாதைக்கும் சமாதி கட்டிவிட்டன என்பது தான் என் தாழ்மையான கருத்து.

“தெய்வம் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள்

பெய்யெனப் பெய்யும் மழை.” - திருக்குறள்

ஆணும் பெண்ணும் சரிநிகர் சமானம் என்று திருவள்ளுவர் நினைக்கவில்லையோ என்று தோன்றுகிறது இத் திருக்குறளைப் படிக்கையில்.

“வானம் பொய்யாது வளம்பிழைப் பறியாது

நீணில வேந்தர் கொற்றஞ் சிதையாது

பத்தினிப்பெண்டிர் இருந்த நாடு”  - சிலப்பதிகாரம்

ஏன் கற்புடை ஆண்கள் இருந்த நாடு என்று இளங்கோவடிகள் பாடவில்லை என்ற ஐயம் எழத்தான் செய்கிறது.

“கற்பு நிலை என்று சொல்ல வந்தால் அதை ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவில் வைப்போம் “ – என்று சொன்ன பாரதி என் கண்முன் இங்கே விஸ்வரூபம் எடுத்து நிற்கிறான். அவனையே ஒட்டு மொத்த பெண்களின் பிரதிநிதியாகப் பார்க்கிறேன்.

 

இவ்வளவு இடர்பாடுகளையும் தாண்டி பெண் சமுதாயம் இன்று பல்வேறு துறைகளில் சாதனை படைப்பதற்கு பாரதியின் துணை தேவைத்தான் படுகிறது.

“பெண்கள் எல்லாவிதமான அடக்கு முறைகளில் இருந்தும் விடுதலை பெறாமல் சுதந்திரம் என்பது சாத்தியமில்லை” -   என்ற நெல்சன் மன்டேலாவின் வரிகளை நன்றியோடு நினவு கூற கடமைப்பட்டு இருக்கிறோம்.

எத்தனை கரங்கள் பெண் விடுதலைக்காக நீண்டாலும், பெண்கள் முன்வராமல் பெண் விடுதலை என்பது சாத்தியமில்லை என்பதே மறுக்கமுடியாத உண்மை.  பெண்கள் கால் பதிக்காத துறைகளே இல்லை என்று பெருமை பேசும் அதே வேளை பெண்களின் மனப்பாங்கு இன்னும் மாறவேண்டியது நிறையவே உள்ளது என்பதை நாம் ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்.

“Generation equality” –   இந்த தலைப்பைத் தான் இந்த வருட மகளிர் தினத்தின் கருப் பொருளாக ஐ நா சபை தேர்ந்தெடுத்து இருக்கிறது.  Equality – சமத்துவம் – இருக்கிறாதா நம் நாட்டில்?  கொடுத்தாலும் மறுக்கின்ற மகளிர் இருக்கின்ற நாடுதான் நம் தாய்த் திருநாடு.  தந்தை சுமக்க, உடன் பிறந்தவர்கள் சுமக்க, கட்டிய கணவன் சுமக்க இறுதியில் நான்கு பேர் சுமக்க என்று பெரும்பாலான பெண்களின் பயணம் இப்படியாகவே முடிந்து விடுகிறது. படித்த பெண்கள் கூட இந்த நிலையில் இருந்து வெளிவர விரும்புவதில்லை.

 இப்படிப் பட்ட பெண்கள் இருக்கும் இதே மண்ணில் தான் நாட்டிற்காகத் தன் இன்னுயிரையும் நீத்த கமலேஷ் குமாரியும் பிறந்தார் என்பதனை நாம் மறந்து விடக் கூடாது. 2001 டெல்லி பாராளுமன்ற தாக்குதலை யாரும் மறந்து இருக்க முடியாது.  தீவிரவாதிகளை முதலில் அடயாளம் கண்டு தன் உயிரை துச்சமென மதித்து நாட்டின் தன்மானத்தை நிலைநிறுத்திய சிங்கப் பெண். அசோக் சக்ரா விருதின் சொந்தக்காரி.  இறந்த பிறகு கிடைத்த விருது. தாயின் கையிலே ஒப்படைக்கப்படுகிறது.  கையில் விருதுடன் அந்தத் தாய் பேசியது இன்னமும் நம் காதுகளில் ஒலித்துக் கொண்டு இருக்கிறது.  தன்னுடைய இரண்டவது மகளையும் அதே பணியில் அமர்த்துவேன் என்ற அவருடைய தீரம் நமக்கெல்லாம் சிறந்ததொரு  பாடம்.

பெண்கள் கல்வி அறிவு பெற தன் மீது வீசப்பட்ட சாணங்களையும் கற்களையும் சாவித்ரி பாய் பொறுத்துக் கொள்ளாமல் இருந்து இருந்தால் இன்று பெண் கல்வி என்பது கானல் நீராகத்தான் இருந்திருக்கும். அவரின் தன்னம்பிக்கையும் துணிச்சலும்  நமக்கெல்லாம் வேண்டும்.

ஒவ்வொரு துறையிலும் முதலில் காலடி எடுத்து வைத்த முதல் பெண்களின் வீர வரலாற்றை நாம் தேடித் தேடிக் கற்க வேண்டும். இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் டாக்டர் முத்துலட்சுமி என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று.  ஆனால், அதற்காக அவர் பட்ட இன்னல்களை அறிந்தவர் வெகு சிலரே. அவர் கல்லூரியில் பயின்ற போது பெண் என்ற காரணத்தினால் அமர்ந்து படிக்க அனுமதி இல்லையாம். எந்த துறைத் தலைவர் தன்னை      நிற்க வைத்துப் பாடம் நடத்தினாரோ அவரே தன்னைப் பாராட்டும்படி தங்கப் பதக்கம் வென்றவர் டாக்டர் முத்துலட்சுமி அம்மையார். நின்றே படித்த அந்தப் பெருந்தகையால் தான் இன்று பெண் இனம் தலை நிமிர்ந்து நடந்து கொண்டு இருக்கிறது.

தேவதாசி ஒழிப்புச் சட்டம் தமிழகத்திலே   நிறைவேறியதும் அம்மையார் அவர்களால் தான் என்பதையும் நாம் மறந்து விடக் கூடாது. அதற்காக அவர் பட்ட இன்னல்கள் கொஞ்ச நஞ்சமல்ல.  இது தேவையில்லாத சட்டம் என்று மறுத்தவர் பலர் உண்டு. ஆனாலும் கலங்கவில்லை. அவரின் விடா முயற்சியே இன்றைய பெண் சமுதாயத்தின் மறுமலர்ச்சிக்குக் காரணம்.

இன்றைய பெண்களின் இத்துனை உயர்வுக்கும் யாரோ ஒரு சிலரின் தியாக வாழ்க்கையே அடித்தளமாக இருக்கிறது என்பதை நாம் கருத்தில் கொள்ளவேண்டும்.  இத்தகு மாற்றங்கள் ஓர் இரவில் ஏற்பட்டது அல்ல என்பதையும் கடந்து வந்த பாதையின் காய வடுக்களையும்  நம் அடுத்த தலைமுறையினருக்கு நாம் கடத்தியே ஆகவேண்டும். இறந்த காலத்தின் வலிகள் மறந்துவிட்டாலோ அல்லது மறைக்கப் பட்டு விட்டாலோ எதிர்காலம் என்பது இருண்டு விடும்.

அறியாமை என்னும் இருள் பெண் இனத்தை அழிக்காமல் இருக்க வேண்டுமானால் கல்வி என்ற தீபம் எப்போதும் அணையாமல் இருக்க வேண்டும்.

கல்வி, வேலைவாய்ப்பு, உடல் ஆரோக்கியம், உணவு, குடும்ப வேலை இப்படி அனைத்திலும் என்று சமத்துவம் வருகிறதோ அன்றே உண்மையான மகளிர் தினம் நம் வசப்படும்.

 

கு.பச்சையம்மாள்

அரசு பள்ளி ஆசிரியை

புதுச்சேரி.

 

Sunday, April 11, 2021

Three stages of COVID


    Covid Three stages:


1. Covid only in nose - recovery  time is half a day. (Steam inhaling), vitamin C. Usually no fever. Asymptomatic. 


2. Covid in throat - sore throat, recovery time 1 day (hot water gargle, warm water to drink, if temp then paracetamol. Vitamin C, Bcomplex. If severe than antibiotic. 


3. Covid in lungs- coughing and breathlessness 4 to 5 days. (Vitamin C, B complex, hot water gargle, oximeter, paracetamol, cylinder if severe, lot of liquid required, deep breathing exercise.


Stage when to approach hospital : 

Monitor the oxygen level. 

If it goes near 93 (normal 98-100) then you need oxygen cylinder. 

If available at home, then no hospital else admit.


*Stay healthy, Stay Safe!*


Tata Group has started good initiative, they are providing free doctors consultation online through chats. This facility is started for you so that you need not to go out for doctors and you will be safe at home.


Below is the link, I reqest everyone to take benefit of this facility.

https://www.tatahealth.com/online-doctor-consultation/general-physician

+91 74069 28123: 


Advice from inside isolation hospitals, we can do at home

Medicines that are taken in isolation hospitals ; 


1. Vitamin C-1000

2. Vitamin E

3. sitting in the sunshine for 15-20 minutes.

4. Egg meal once ..

5. take a rest / sleep a minimum of 7-8 hours

6. drink 1.5 liters of water daily

7. All meals should be warm (not cold).

And that's all we do in the hospital to strengthen the immune system


Note that the pH of coronavirus varies from 5.5 to 8.5


Therefore, all we have to do to eliminate the virus is to consume more alkaline foods above the acidity level of the virus.

Such as  ; 

Bananas 

Green lemon - 9.9 pH

Yellow Lemon - 8.2 pH

Avocado - 15.6 pH

* Garlic - 13.2 pH

* Mango - 8.7 pH

* Tangerine - 8.5 pH

* Pineapple - 12.7 pH

* Watercress - 22.7 pH

* Oranges - 9.2 pH


How to know that you are infected with corona virus ? 


1. Itchy throat

2. Dry throat

3. Dry cough

4. High temperature

5. Shortness of breath

6. Loss of smell ....

And lemon with warm water eliminates the virus at the beginning before reaching the lungs ...


Do not keep this information to yourself. Provide it to all. .

♦️

Friday, April 9, 2021

Junnaid


ஜீனாய்டு (junnaid) ஒரு சுபி ஞானி.

அவரிடம் ஒரு பெரிய பணக்காரட் வந்து மனிதனின் வாழ்க்கை அவன் தலைவிதிப்படித்தான் நடக்கும். அவன் சுகந்திரமானவன் இல்லை என்று கருதுகிறேன். இதை பற்றி நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?  என்று கேட்டான்!


அவனை பார்த்த சுபி ஞானி, உன்னுடைய ஒரு காலை தூக்கு என கத்தினார்!


அவனுக்கு ஒன்றுமே புரியவில்லை. நான் கேட்ட கேள்விக்கும் ஒரு காலை தூக்குவதற்கும் என்ன சம்பந்தம்?  என திகைத்தான்!  அவன் தயக்கத்தை பார்த்த ஞானி மீண்டும் ஒரு காலை தூக்கு என வேகமாக கத்தினார்!


 வேறு வழியில்லாமல் அவன் தன்  வலது காலை தூக்கினான். அதை பார்த்த அந்த ஞானி,  இது போதாது இப்போது அடுத்த காலையும் தூக்கு என்றார்.


அவன் கோபம் கொண்டு, இதென்ன முட்டாள்தனம்?  ஒரு காலை தூக்கிய பிறகு மறு காலையும் எப்படி தூக்குவது? விழுந்து விட மாட்டேனா? என கேட்டான்.


கலகலவென சிரித்த ஞானி, சரி இப்போது உட்கார் என்று கூறினார்.

இதில் இருந்து நீ என்ன புரிந்து கொண்டாய்? என அவனை கேட்டார்.


எனக்கு ஒன்றுமே புரியவில்லை என்றான் அவன்.


நான் உன்னிடம் உன் ஒரு காலை தூக்கு என்று சொன்னதும் நீ ஏன் உன் இடது காலை தூக்காமல் வலது காலை தூக்கினாய்?  ஏனெனில் எந்த காலை தூக்குவது என்பது உன்னுடைய சுகந்திரத்தில் இருந்தது. அதனால் நீ உன் வலது காலை தூக்கினாய்.


பிறகு நான் மற்றொரு காலையும் தூக்கும்படி கூறினேன். அது உன்னால் முடியவில்லை. ஏனென்றால் முதலில் நீ உன் சுகந்திரத்தில் செயல்புரிந்தாய். ஆனால் அடுத்த செயல் உன் கையில் இல்லை. நீ அப்பொழுது கட்டுப்பட்டு இருக்கிறாய். உன் சுகந்திரம் இப்பொழுது வேலை செய்யவில்லை.


ஆகவே மனிதன் பாதி சுகந்திரத்தில் இருக்கிறான். மறுபாதி அந்த சுகந்திரத்தால் கட்டுப்படுத்தப்பட்டு இருக்கிறான் என்றார் சுபி ஞானி. 


முதலில் மனிதன் தன் சுகந்திரத்தில் ஒரு செயலை செய்கிறான். அதன் பின்விளைவு அதுவாகவே நடக்கிறது.


இதுதான் செயலும் விளைவும் கோட்பாடு!



Current Post

தீயோனிடமிருந்து என்னை விடுவியும்

தனக்குச் சிறிது காலமே எஞ்சியிருக்கிறது என்பதை அலகை அறிந்துள்ளது. அதனால் கடுஞ் சீற்றத்துடன் உங்களிடம் வந்துள்ளது. திருவெளிப்பாடு 12:12  பிசாச...