Monday, October 26, 2020

Aalavandhan

Why #Aalavandhan movie was special..!


ஒரு அறிவியல் பார்வை🔥🔥🔥


ஆளவந்தான் படம் பிடிக்காதவர்கள் பொதுவாக சொல்லும் காரணம். அந்த நந்து கேரக்டர் செய்யும் சில அல்லது பல செயல்கள் கோர்வையாக இல்லை. புரியும்படி இல்லை. மனிஷா கேரக்டர் தேவை இல்லை. என்பது போல பதில்கள் வரும்.


ஆனால் ஆளவந்தான் அப்படி ஏனோ தானோ என்று எழுதப்பட்ட படம் என்று நினைப்பது நம் அறியாமையைத்தான் குறிக்கும். அதில் உள்ள நுட்பங்களைக் கொஞ்சம் பேசலாம் என்பதே இக்கட்டுரையின் நோக்கம்.


நந்து schizophrenia என்ற நோயினால் தாக்கப்பட்டவன். இந்த நோய் மன நோய்களில் மிகக் கொடூரமானதும், மிக அதிக ஆராய்ச்சி செய்யப்படுவதுமாகும். இந்த நோயை முதலில் புரிந்து கொள்வதே நந்துவின் செயல்களை புரிந்து கொள்ள உதவும். 


Schizophrenia என்ற சொல்லின் மொழியாக்கம் `இரட்டை மனம்` Split mind' என்பதாகும். இவர்களுக்கு அடிக்கடி நிஜத்தோடு தொடர்பு அறுந்துபோகும். Hallucinations என்ற நிஜத்திற்கு சம்பந்தமில்லாத காட்சிகளைப் பார்ப்பதும், Delusion என்ற பொய் யோசனைகளும் இவர்களை ஆட்சி செய்யும்.(இது ஒரு நோயளிக்கு வரும் ப்ரச்சனையை அவர் வரைந்தது http://upload.wikimedia.org/wikipedia/commons/2/2f/Artistic_view_of_how_the_world_feels_like_with_schizophrenia_-_journal.pmed.0020146.g001.jpg)


நந்து அடிக்கடி கார்டூன் உலகிற்குச் செல்ல இதுவே காரணமாகும். அவன் ஒரு காட்சியில் தன் டாக்டரின் பிம்பத்திடம் சொல்வான் `எல்லா குழந்தங்களையும் மாறி கார்டூன்லேர்ந்துதான் (வன்முறையை) கத்துக்கிட்டேன்` என்று. எனவே அவனது Hallucination என்னும் மாய உலகில் கார்டூன்களுக்கு முக்கியத்தும் அதிகமாகிறது. அதை கமல்ஹாசன் வன்முறைக் காட்சிகளுக்கு சென்சார் போலவும் பயன்படுத்தித் தன் ஆளுமையை உணர்த்தியுள்ளார்.

இந்த காட்சிகளைத் kill bill voi I ல் டராண்டினோ பயன்படுத்தியது ஒரு தனிச்செய்தி.


ஒரு பஜார் காட்சியில் மட்டும் அவர் எல்லை தாண்டி நடந்து கொள்வார். பையை எட்டி உதைப்பார். பச்சையாக தெரிவார். கடிகாரத்தின் உள்ளிருந்து வருவார். கம்பத்தில் முட்டிக்கொள்வார்.அது பார்வையாளர்களுக்கு பெரும் குழப்பம் தரும். 


ஆனால் கூர்ந்து கவனித்தால் அவர் சொல்வார். டாக்டர் தப்பு மருந்து ஏத்திட்டாங்க. அதாவது அவர் வழக்கமாக எடுக்கும் மருந்துக்கு பதிலாக அவரது நோயைத் தீவிரப்படுத்தும் வஸ்துக்களைத் தவறாக ஒருவன் ஊசியிடுவான். அதனால் வந்த வினை தான் அந்த காட்சி.


அந்த தொடர்ச்சியில் நான் மிகவும் ரசித்தது. ஒரு உயரமான ஆள் பொம்மையினைப் பார்த்து சிர்ப்பான் நந்து. 

அந்த ஆள்-:`டைம் என்ன ஆச்சி?

நந்து : நான் ஒரு கேள்வி கேக்கவா?

அந்த ஆள் : ம்

நந்து : டைமுக்கு என்ன ஆச்சி?


ஒரு குழந்தையின் கேள்வி மாடர்ன் ஆர்டைப் போல என்பதற்கு இதுவே உதாரணம்.


க்ளைமேக்ஸில் விஜய் நந்து கேரக்டர்களுக்கு நடுவே ஒரு ஸ்டண்ட் சீன். அதில் சம்பந்தமில்லாமல் கால்களை ஆட்டி நந்து டான்ஸ் ஆடுவார். இது கேடடோனியா catatonia என்ற ப்ரச்சனை. இது Schizophrenic களுக்கு வரும் ஒரு ப்ரச்சனை ஆகும். 


இதை எல்லாம் தாண்டி மாத்திரைகளால் குறைக்க வேண்டிய ஒரு நோயை தானே சொந்த முயற்சியால் குறைக்க நினைத்து அதில் தோற்று தனக்குத் தானே தீமை செய்து கொள்வதுதான் நந்து அல்லது எந்த Schizophrenic களின் நிலை.


இப்போது உணர்ந்து கேளுங்கள் இந்த விளக்கத்தை....


கடவுள் (குழந்தை) பாதி மிருகம் (நோயாளி) பாதி 

கலந்து செய்த கலவை நான்

வெளியே (நோயாளி) மிருகம் உள்ளே கடவுள் (குழந்தை) 

விளங்க முடியா கவிதை நான்.


மிருகம் (நோய்) கொன்று மிருகம் (நோய்) கொன்று

கடவுள் (குழந்தை) வளர்க்கப் பார்க்கின்றேன்

கடவுள்(குழந்தை) கொன்று உணவாய்த் தின்று

மிருகம் (நோய்) மட்டும் வளர்கிறதே.


நந்த குமாரா நந்த குமாரா

நாளை மிருகம் ( நோயைக்) கொல்வாயா

மிருகம் ( நோயைக்) கொன்ற எச்சம்(அனுபவம்) கொண்டு

மீண்டும் கடவுள் (குழந்தை) செய்வாயா?


இந்த கட்டூரையை நான் எழுதியதற்குக் காரணம் Psychiatric Disorders ஐத் தெரிந்தவனாக கமல்ஹாசனது எழுத்து மிக ஆழமானது. மேம் போக்காக மீன் பிடிப்பவர்களுக்கு உள்ளிருக்கும் முத்துக்கள் தெரியாது. அந்த உலகிற்கு அவர்களை அழைத்துச் செல்வதே நோக்கம்....💯🙏🏻

----தொடரும்💥


Credits :Kamalakannan

No comments:

Post a Comment

Current Post

எதையும் கண்டுகொள்ளாமல் இருப்பது ஒரு கலை! அதை கற்க 5 சுலபமான வழிகள்!

 எதையும் கண்டுகொள்ளாமல் இருப்பது ஒரு கலை! அதை கற்க 5 சுலபமான வழிகள்! உங்க அமைதியை குலைக்காத/கெடுக்காத எண்ணங்களை மட்டும் தேர்ந்தெடுங்கள்...! ...