Tuesday, June 30, 2020

கோரானா வெல்லமுடியாத ஒரு நோயல்ல

கோரானா வெல்லமுடியாத ஒரு நோயல்ல..

இது ஒரு நண்பரின்  பதிவு.  இந்த வைரஸ் என்னையும் தாக்கும் என நான் நினைத்துக்கூட பார்த்ததில்லை. மிக எச்சரிக்கையாய் இருந்தேன். கைகளில் கையுறை அணிந்து இருந்தேன், முக கவசத்தோடு தான் வெளியில் செல்வேன்.

08.06.2020 அன்று காலையில் ஒருவிதமான சோர்வு இருந்தது சரி இரவு தூக்கம் சரியில்லை போல என என்னை நானே தேற்றிக் கொண்டு அன்றாட அலுவல்களை கவனிக்க சென்றேன். நேரம் செல்லச் செல்ல ஒருவிதமான குளிர் ஊடுருவ தொடங்கியதையும், உடல் அடிக்கடி பதட்ட படுவதையும் என்னால் உணர முடிந்தது. மதியம் மூன்று மணிக்குள்ளாக அனைத்து வேலைகளையும் முடித்துவிட்டு வீட்டிற்குள் அடைந்துவிட்டேன். சுரம்:99°

09.06.2020. லேசான ஜுரம் இருந்தது தொண்டையில் ஒருவிதமான கரகரப்பும், வயிற்றில் உணவு செரிக்காத ஒருவித உணர்வும் இருந்தது. உடல் லேசாக நடுங்குவதை உணர முடிந்தது. என் வீடு பதட்டம் அடைவதை பார்க்க முடிந்தது. எனக்கு கழிவறையுடன் கூடிய தனி அறை ஒதுக்கி தரப்பட்டது. நான் என்னைத் தனிமைப் படுத்திக் கொண்டேன். சுரம்:99°

10.06.2020. சுவாசம் வேகமாக நடைபெற்றது. முழு சுவாசம் நடைபெறவில்லை முழு சுவாசத்திற்கு முயற்சி செய்தால் இரும்பல் வந்தது. கிட்டத்தட்ட உறுதி செய்து விட்டேன் நான் பிரச்சினையில் இருக்கிறேன் என்று. மிக நெருங்கிய நல்ல நண்பர்களுக்கு என் நிலையை விளக்கினேன். யாரும் என்னை பயப்படுத்தவில்லை மாறாக உற்சாகப்படுத்தினார்கள் பயப்பட வேண்டாம் என்றார்கள் மருந்துகளை பரிந்துரைத்தார்கள். எனக்காக அக்கறை எடுத்துக் கொண்டார்கள். சுரம்:99°.

11.06.2020:  தொண்டையில் அடிக்கடி யாரோ துளையிடுவது போன்று ஒரு வலி. ஒட்டுமொத்த உடலிலும் வலி. அந்த நேரத்தில் என்னுடைய மிகக் கடினமான செயல் என்னவென்றால் எழுந்து நீர், உணவு எடுத்துக்கொள்வது சிறுநீர் கழிக்க செல்வது. சுரம்:99°.

12.06.2020: உடல் சோர்வடைய தொடங்கிவிட்டது படுக்கையில் திரும்பிப் படுப்பது என்பது ஒரு மிகப்பெரிய சவாலான காரியமாக மாறிப்போனது. உடலின் ஒவ்வொரு செல்களிலும் வலி மட்டுமே பிரதானமாக இருந்தது. சுரம்:99°

13.06.2020 to 15.06.2020: படுக்கையிலிருந்து எழ மிகவும் சிரமப்பட்டேன். உணவருந்துவது குறித்த உணர்வே இல்லாமலிருந்தது. எனது உடல் தன்னுடைய தேவையான பசி,தாகம்,குளிர் வெப்பம் இது குறித்து எனக்கு தகவல் தெரிவிக்கவில்லை. நானே மிகவும் சிரமப்பட்டு ஒவ்வொன்றாக புரிந்துகொண்டேன். எனது சகோதரன் ஆக்சி மீட்டர் என்ற கருவியை வாங்கி வந்து கொடுத்தான். அதில் ஆக்ஸிஜன் அளவு 94 என்றால் உடனே மருத்துவமனைக்கு செல்லும்படி கூறினான். நல்ல வேலை எனக்கு 98,  99 என ஆக்சிஜன் அளவு இருந்தது. சுரம்:99.4°

16.06.2020: உடல்வலி குறைய தொடங்கியது. ஆனால் உடல் பதட்டப் படுவது நிற்கவில்லை. உள்ளே குளிரும் வெளியே வேர்வையும் ஒருவிதமான புதிய உணர்வை ஏற்படுத்தியது. பின் என் மருத்துவ நண்பர் அதை என் பயம் என்றார். நான் மருத்துவ பரிசோதனை செய்து கொள்வது என முடிவெடுத்து பரிசோதனை செய்துகொண்டேன். சுரம்:99.3°

17.06.2020: காலை 11 மணி, மருத்துவ பரிசோதனை அறிக்கை வந்துவிட்டது ஆம் நான் ஒரு கோரானா நோயாளி. இப்போது என் குடும்பம் மிகவும் பதட்டம் ஆகிவிட்டது. என் மனைவி அரசாங்கம் வந்து என்னை ஆம்புலன்சில் அழைத்துச் சென்றுவிடுவார்கள் என மிகவும் பயந்து தன் தம்பியை, என் மச்சினனை உடனே உதவிக்கு அழைத்தாள். சென்னையின் மிகப்பிரபலமான கோவிட் மருத்துவமனையில் அடுத்த அரை மணி நேரத்தில் எனக்கு அப்பாயின்மென்ட் வழங்கப்பட்டது உபயம் என் மைத்துனன்.

என்னை பல பரிசோதனைகள் மேற்கொண்ட பின் அந்த மருத்துவர் என் மனைவியிடம் மிக உறுதியான ஒரு வார்த்தை சொன்னார் "உங்கள் கணவர் அபாய கட்டத்தை தாண்டி விட்டார் இனி அவருக்கு எந்த மருத்துவ உதவியும் தேவையில்லை."  தனிமைப்படுத்திக் கொண்டதை மேலும் பத்து நாட்களுக்கு தொடர சொன்னார். என்னை அவர் பரிசோதித்ததை அறிக்கையாக தயார் செய்து கொடுத்தனர். அரசாங்கத்திடமிருந்து ஆள் வரும்போது அதை காட்டச் சொன்னார்கள்.

அந்த மருத்துவர் என் மனைவியின் அனைத்து கேள்விகளுக்கும் பொறுமையாக பதிலளித்தார். என் மனைவி அந்த மருத்துவரிடம் என்னை அரசாங்கம் கூட்டி செல்ல மாட்டார்கள் என்ற உறுதியை பெற்றுக்கொண்டு விடைபெற்றோம். சுரம் இல்லை.

18.06.2020: உடல் வலி சுத்தமாக இல்லை. பசி இல்லை தாகம் இல்லை. நானாகவே உணவும் தண்ணீரும் எடுத்துக்கொள்ளகிறேன். உடல் தன்னுடைய அனைத்து சக்திகளையும் இழந்து விட்டிருக்கிறது. இந்த சுய சிறைக்குள் எட்டு நாட்களை ஓட்டவேண்டும்.

இயற்கைக்கு என் இருப்பு தேவைப்படுகிறது.

நான் விடாமல் மூன்று விஷயத்தை செய்து வந்தேன். 1. எலுமிச்சம் பழச்சாற்றில் தேன் கலந்து பருகுவது. 2. ஆவி பிடிப்பது. 3. சூடான ஏதாவது ஒரு பானத்தை அரை மணி நேரத்திற்கு ஒரு முறை உட்கொள்வது, இவையே என்னை காத்தது என நான் நினைக்கிறேன்.

என் குடும்பம், என் நண்பர்கள் மற்றும் என்னை பார்க்காமலே எனக்காக சிபாரிசு செய்த என் மைத்துனனின் நண்பர்கள் என அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியை உரித்தாக்குகிறேன்.

கோரானா வெல்லமுடியாத ஒரு நோயல்ல.

G #ஜெயப்பிரகாஷ், M.L.,
 வழக்கறிஞர், ஈரோடு...

Abdul Kalaam stopped a marriage

"அப்துல் கலாம் ஒரு பெண்ணோட கல்யாணத்தை தடுத்து நிறுத்தினாரா ?
என்ன ஜான் சொல்றே ?"

"ஆமா. அந்தப் பெண்ணின் பெயர் சரஸ்வதி."

"எப்போ நடந்தது இது ?
எதுக்காக அந்த கல்யாணத்தை நிறுத்தினார் அப்துல் கலாம் ?"

நண்பரிடம் விளக்கமாக நான் அதை சொன்னேன்.

ஆம்.

அது அப்துல் கலாம் ஜனாதிபதியாக இருந்த காலம்.

அப்போதுதான் திருச்சியில் இருந்த உயர் அதிகாரி கலியமூர்த்தி ஐ.பி.எஸ்.க்கு ஃபோன் வந்தது அப்துல் கலாமிடமிருந்து.

"சொல்லுங்க சார்" என்று பணிவுடன் சொன்னார் கலியமூர்த்தி.

கலாம் சொன்னார்
அடுத்த நாள் நடக்க இருக்கும் ஒரு பெண்ணின் கல்யாணத்தை எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டும் என.

காரணம் அந்த பெண்ணின் வயது 16. பிளஸ் டூ படித்துக் கொண்டிருக்கிறாள்.
மாப்பிள்ளைக்கு 47.
இரண்டாவது கல்யாணம். சொந்த மாமன்.

கலாம் தொடர்ந்தார் :
"கட்டாய கல்யாணம். அந்தப் பெண்ணுக்கு அதில இஷ்டம் இல்ல. அதை எப்படியாவது தடுத்து நிறுத்திடுங்க. அப்புறம்
அந்தப் பொண்ணு மேலே படிக்கணும்னு ஆசைப்படுது.
அதுக்கு வேண்டிய ஏற்பாடுகளை..."

"அதை நாங்க பாத்துக்கிறோம் சார்" என்றார் கலியபெருமாள்.
"பொண்ணுக்கு எந்த ஊர் சார் ?"

ஊர் பெயரை சொன்னார் கலாம். துறையூருக்கு பக்கத்தில் ஒரு கிராமம் அது.

அடுத்த நிமிடமே கலியமூர்த்தி தனது காரில் துறையூரை நோக்கி விரைந்தார்.
ஏற்கனவே முசிறி காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு ஃபோன் செய்து ஸ்பாட்டுக்கு வரச் சொல்லி விட்டார்.

கலாம் சொன்னபடியே அந்த கல்யாணம் தடுத்து நிறுத்தப்பட்டது.
அழுதழுது வீங்கிய முகத்தோடு இருந்த பிளஸ் டூ சரஸ்வதி நன்றி சொன்னாள்.
"சரியான நேரத்தில வந்து கல்யாணத்தை நிறுத்தினதுக்கு ரொம்ப தாங்க்ஸ் சார்."

"நல்லதும்மா, தொடர்ந்து என்ன படிக்கணும்னு ஆசைப்படறேன்னு சொல்லு. எல்லாத்துக்கும் ஏற்பாடு பண்றோம்."

சொன்னாள். கவனமாக
குறித்துக் கொண்டார் கலியமூர்த்தி.

"ஓகே, நாங்க புறப்படறோம்.
அதுக்கு முன்னால ஒரு சந்தேகம்."

"என்ன சார் ?"

"உனக்காக இவ்வளவு தூரம் அக்கறை எடுத்து நம்ம ஜனாதிபதியே எங்கிட்டே பேசினாரே.
அவருக்கு யாரும்மா இந்த தகவலை சொன்னது ?"

"நான்தான் சார்."

ஷாக் ஆகிப் போனார் கலியமூர்த்தி.
 "எப்படீம்மா ?"

ஒரு சில ஆண்டுகளுக்கு முன் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஒரு கருத்தரங்கம். அதற்கு அப்துல் கலாம் வந்திருந்தார். அப்போது அவர் ஜனாதிபதி ஆகவில்லை.
அதற்கு இந்தப் பெண் சரஸ்வதியும் போயிருந்தாள்.

பேசி முடித்து விட்டு கலாம் சொன்னார் : "உங்களில் யாராவது ஏதாவது கேள்விகள் கேட்க விரும்பினால் கேட்கலாம்.
Only four students..."

கேள்வி கேட்ட நான்கு பேரில் ஒருவர் இந்தப் பெண்.

கூட்டம் முடிந்து புறப்படும்போது கேள்வி கேட்ட நால்வரையும் தனியாக அழைத்து பாராட்டினார் கலாம்.
"இந்தாங்க என்னோட விசிட்டிங் கார்டு. அவசியம் ஏற்பட்டால் தொடர்பு கொள்ளலாம்."

அந்த கார்டில் அப்துல் கலாமின் மெயில் ஐடி, ஃபோன் நம்பர் இருந்தன.

எப்படியோ அதை பத்திரமாக பாதுகாத்து வைத்திருந்தாள் இந்தப் பெண். அதுதான் இந்த ஆபத்துக் காலத்தில் அவளுக்கு உதவியிருக்கிறது.

இதைக் கேட்ட கலியமூர்த்தி ஆச்சரியப்பட்டு போகிறார்.
அந்தப் பெண்ணின் மேற்படிப்புக்கு தேவையான எல்லா உதவிகளையும் செய்து கொடுத்திருக்கிறார்.
அத்துடன் அந்த விஷயத்தை மறந்தும் விட்டார்.

காலம்தான் எவ்வளவு விரைவாக ஓடுகிறது ?

சமீபத்தில் இரு ஆண்டுகளுக்கு முன் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அமெரிக்காவுக்கு போயிருந்தாராம் கலியமூர்த்தி.

அவர் மேடையேறி பேசி முடித்த பின் ஒரு இளம் பெண் அவசரம் அவசரமாக மேடைக்கு ஓடி வந்து மைக்கை பிடித்தாளாம்.

யார் இந்தப் பெண் ?
எங்கோ பார்த்தது போல இருக்கிறதே !

மேடையில் நின்ற அந்தப் பெண்
மூச்சு வாங்க சொன்னாளாம். "நல்ல வேளை. எனக்கு இங்கே பேச வாய்ப்பு கிடைத்தது. இல்லாவிட்டால் இத்தனை பேர் மத்தியில் நன்றி சொல்லும் ஒரு நல்ல வாய்ப்பை நான் இழந்திருப்பேன்."

யாருக்கு நன்றி சொல்ல போகிறாள் இந்தப் பெண்?
எதுவும் புரியாமல் அமர்ந்திருக்கிறார் கலியமூர்த்தி ஐ.பி.எஸ்.

"கலியமூர்த்தி சார். நான் இங்கே அமெரிக்காவில் ஸாஃப்ட்வேர் கம்பெனியில் வேலையில் இருக்கிறேன்.
மூன்றரை லட்சம் ரூபாய் சம்பளம். என் கணவருக்கு நான்கு லட்சம். சந்தோஷமாக இருக்கிறோம்.
நான் யார் என்று உங்களுக்கு தெரிகிறதா ?"

"தெரியவில்லை" என்று சொல்லியிருக்கிறார் கலியமூர்த்தி.

அந்தப் பெண் கண்களில் நீரோடு தழுதழுத்த குரலில் சொல்கிறாள் :
"ஒரு காலத்தில் பால்ய விவாகத்திலிருந்து உங்களால் காப்பாற்றப்பட்டவள்.
படிக்க வைக்கப்பட்டவள்.
நான்தான் துறையூர் சரஸ்வதி."

இதை சற்றும் எதிர்பாராத கலியமூர்த்தி சந்தோஷத்தில் கண் கலங்கி போகிறார்.

"உங்களுக்கும் நன்றி.
உங்களுக்கு தூண்டுகோலாக இருந்து என் வாழ்வில் ஒளியேற்றிய அப்துல் கலாம் ஐயாவுக்கும் நன்றி."

சொல்ல வந்ததை சொல்லி முடித்து விட்ட நிறைவோடு, மேடையை விட்டு இறங்கி போகிறாள் அந்தப் பெண்.

ஆச்சரியம்தான்.
அப்படியும் ஒரு காலம் இருந்திருக்கிறது.

தமிழ்நாட்டில் ஒரு சாதாரண குக்கிராமத்தில் உள்ள ஒரு சாமானிய பெண் ஜனாதிபதியோடு சகஜமாக பேச முடிந்திருக்கிறது.
தான் நினைத்ததை சாதிக்க முடிந்திருக்கிறது.

ஆம்.
அது ஒரு அழகிய கலாம் காலம்.

*பகிர்வு*

Saturday, June 27, 2020

During Chaotic times what we have to do ???

*உபத்திரவத்தில் நாம் என்ன செய்ய வேண்டும் →*

1) ஜெபம் செய்ய வேண்டும் - யாக் 5:13

2) இயேசுவை நினைக்க வேண்டும் - எபி 12:3

3) மனமுறிவு அடைய கூடாது - 2 கொரி 4:8

4) மேன்மை பாராட்ட வேண்டும் - ரோ 5:4

5) சந்தோஷமாக இருக்க வேண்டும் - 1 தெச 1:6

6) வசனத்தை காத்து கொள்ள வேண்டும் - வெளி 3:10

7)  உண்மையுள்ளவர்களாக இருக்க வேண்டும் - வெளி 2:10

8) வேதத்தில் மனமகிழ்ச்சியாக இருக்க வேண்டும் - சங் 119:143,92

9) சகலமும் நன்மைக்கு என்று விசுவாசிக்க வேண்டும் -ரோ 8:28

10) கர்த்தருக்குள் நம்மை திடப்படுத்தி கொள்ள வேண்டும் - 1 சாமு 30:6

11) பொறுமையாக இருக்க வேண்டும் - ரோ 12:12

12) சோர்ந்து போக கூடாது - எபேசி 3:13

13) திடன் கொள்ள வேண்டும் - யோ 16:33

14) கர்த்தருக்குள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் - ஆபகூக் 3:17,18

15) மெளனமாக இருக்க வேண்டும் - புலம் 3:28

16) பின் வாங்கி போய் விடக்கூடாது - லூக் 8:13

17)  துதிக்க வேண்டும், பாட வேண்டும் - அப்போ 16:25

18) பயப்படக்கூடாது - வெளி 2:10

19) தேவனை மகிமை படுத்த வேண்டும் - 1பேது 4:16

20) அசைக்க படக் கூடாது - 1 தெச 3:2

Friday, June 26, 2020

Truthful Fisherman



எழுதியவருக்கு நன்றி.
👏👏👏👏👏👏👏👏
✳️எங்கே_நாணயம்?

எங்கள் வீட்டுக்கு ஒரு மீன்காரர் வந்து வாரம் ஒருமுறை மீன் கொடுத்து விட்டு போவார். அவரிடம் பேரம் பேசமாட்டேன் என்பதால் அவரும் பெரிதாக ஆசைப்படமாட்டார். நியாயமான விலைக்கு கொடுப்பார். எனக்கு என்ன மீன் பிடிக்கும் என்று அவருக்கு தெரியும்.
ஒவ்வொரு வாரமும் புதன் கிழமைகளில் மீன் வாங்குவதை வழக்கமாக வைத்திருக்கிறோம்.

நல்ல மீன்களை விற்கும் முன் எங்க வீட்டுக்கு வந்து விட்டு பிறகுதான் வேறு இடங்களுக்கு செல்வார். திடீரென்று ஒருநாள் எனக்கு ஒரு உதவி செய்ய முடியுமா? என்று கேட்டார்.
ஏன் தயங்குறீங்க சும்மா சொல்லுங்கன்னு சொன்னேன். ரெண்டு மூணு நாளா வியாபாரமே இல்ல கொஞ்சம் நெருக்கடி... கொஞ்சம் பணம் வேணும்... உங்களுக்கு ஒரு வாரத்துல திருப்பி தாரேன்னு கேட்டார்.

இப்படியான எளிய மனிதர்களின் உறவுகள் கெட்டு இருக்கிறது... இப்படி பணம் கொடுத்து.
அவர்களை குற்றம் சொல்ல வில்லை... அவர்களுக்கு வரவுக்கும் செலவுக்கும் இடையவே நிறைய வாழ்க்கை போராட்டம்... இதில் வாங்கும் கடனை திருப்பி கொடுக்க வாய்ப்பே இருக்காது. பிறகு நம் முகத்தில் எப்படி முழிப்பது என்று அச்சத்தில் நம்மை பார்க்கவே வர மாட்டார்கள்.

இப்படி ஏற்கனவே நிறைய பேரை இழந்து இருக்கிறேன். அதற்காக அவர்கள் மீது வருத்தமெல்லாம் இல்லை. அப்படியான எளிய மனிதர்களுக்கு கடன் கொடுத்து அவர்களை கடனாளி ஆக்கி விட்டோமே என்ற கவலை எனக்கு.

நான் அவரிடம் சொன்னேன்... எனக்கு நீங்க கேட்ட பணம் தருவதில் ஆட்சேபனை இல்லை... ஆனால் ஒரு கண்டிசன் இந்த பணம் உங்களுக்கு தீபாவளிக்கு நான் கொடுக்கும் பரிசா வச்சுக்கோங்க. அதை திருப்பி எல்லாம் தர வேண்டாம்னு சொன்னேன். அன்று அவருக்கு இருந்த பிரச்சினை அவ்வளவு போல... சரி என்று சற்று தயக்கத்துடனேயே வாங்கிட்டு போனார்.

பிறகு ஒருவாரம் கழித்து அண்ணே நல்ல வஞ்சிரம் மீன் இருக்கு சும்மா ஸ்லைஸ் போட்டா பட்டாசா இருக்கும் வெட்டவான்னு கேட்டார். வஞ்சிரம் பொரிக்க... கொஞ்சம் சாளை மீன் குழம்புக்கு... என்று வாங்கி எவ்வளவு என்று கேட்டேன் 650 ரூவா ஆச்சுண்ணே. என்ன வஞ்சிரம் இவ்வளவு குறைவா இருக்குன்னு கேட்டதுக்கு கேரளாவுல ஈஸ்டர் அதுனால அங்கே போனா தான் வில கூடும் இல்லன்னா பொதுவா இந்த விலைதான் என்று சொல்லிட்டு போனார்.

இது போக அவர் மீனை சுத்தம் செய்து வெட்டி முடிப்பதற்குள் நிறைய விஷயங்கள் பேசி விடுவோம்.
அவர் மகன் ஒரு மரைன் எஞ்சினியர். ஆறுமாதம் கப்பலில் பணி மீதம் ஆறுமாதம் வீட்டில் இருப்பார்.
அவனுக்கு பொண்ணு பார்த்திருக்கேன்...
இந்த வேலை செட்டாவாது...நீ வரும் போது வேலையை விட்டுட்டு வந்துடுன்னு சொல்லிட்டேன்... அப்படின்னு நிறைய பகிர்ந்துக்குவார். அவனை படிக்க வைக்க நிறைய கடன் பட்டிருக்கார்.

அண்ணன் வீடு பக்கத்து தெருதான் அங்கேயும் மறக்காம கொண்டு போய் குடுத்துட்டு போங்கன்னு சொன்னேன்... சரி என்று சென்று விட்டார். ஆபீஸ் கிளம்பும் போது எங்க வீட்டில் கேட்டாங்க...
வஞ்சிரம் என்ன விலை கொடுத்து வாங்கினீங்கன்னு. கிலோ ஐநூறுண்ணு வாங்கினேன்னு சொன்னேன். அண்ணன் வீட்டில்
Rs 850- ரூபாய்க்கு கொடுத்துட்டு போயிருக்கார்... ஏன்? இப்படி செஞ்சார்னு... அடுத்த வாரம் வந்தா கேளுங்கன்னு சொன்னாங்க.

அப்போது தான்
எனக்கு உரைத்தது.
 மனிதர் எந்த அளவுக்கு நேர்மையாக இருக்கிறார் என்று. அவசரத்துக்கு என்னிடம் வாங்கிய காசை எனக்கே தெரியாமல் திருப்பி கொடுத்துட்டு போயிருக்கார். இப்படியான எளிய மனிதர்களிடம் தான் வாங்கிய காசை திருப்பி கொடுக்க வேண்டும் என்ற அந்த உன்னதமான எண்ணம் இருக்கிறது.
இது ஒருமுறை இரண்டு முறை அல்ல பலமுறை நடந்திருக்கு... பல்வேறு மனிதர்களால்...!!!

ஒருமுறை சென்னைக்கு பகல் பயணம் செல்லும் போது சேலத்தில் ஒரு வயதான பாட்டி எங்கள் ரயில் பெட்டியில் ஏறிச்சு. மாம்பழம் ஒவ்வொன்றும் மெகா சைசில் இருந்தது. என்ன விலை என்று கேட்ட போது ஒரு பழம் 80 ரூவா கண்ணு என்று சொன்னது... குறைந்தது ஒன்றரை கிலோவாவது இருக்க வேண்டும் ஒரு பழம். சரி பாட்டி ரெண்டு பழம் கொடுங்கன்னு காசு கொடுத்து வாங்கிக்கொண்டேன்.

என்னிடம் வியாபாரத்தை முடித்து கொண்டு பாட்டி பக்கத்து பெட்டிக்கு போய் விட்டது.வண்டி ஜோலார்பேட்டை நெருங்கும் போது அந்த பாட்டியை பார்த்தேன் எல்லா பழங்களும் விற்று தீர்ந்திருந்தது. மெல்ல நடந்து வந்து என் அருகில் வந்தவுடன் பாட்டி மடியில் ஒரு பெரிய மாம்பழத்தை கட்டி வச்சிருந்தாங்க. எடுத்து என்கிட்டே கொடுத்தாங்க.

“பாட்டி ஏற்கனவே ரெண்டு பழம் வாங்கிட்டோம்ல போதும் எங்களுக்கு எங்க வீட்டில் மொத்தமே நாலு பேர்தான் இதுவே ரொம்ப அதிகம்” னு சொன்னதுக்கு
அந்த பாட்டி
“இல்ல கண்ணு அந்த கோச்சுல எல்லாம் அம்பது ரூவாய்க்கு கொடு கொடுன்னு கேட்டு வாங்கிட்டாங்க. நீ என்கிட்டே பேரம் பேசல எனக்கு மனசே கேக்கல ராத்திரி தொண்ட குழில சோறு இறங்காது... இந்த பழத்துக்கு நீ ஏற்கனவே காசு கொடுத்தாச்சு வாங்கிக்க கண்ணுன்னு சொல்லிச்சி”
அந்த பாட்டியின் நேர்மையை பார்த்து கண்களில் மெல்லிய நீர் படலம் படர்ந்து கண் ஓரங்களில் கண்ணீர் ஒதுங்கியது.

இப்படியான நேர்மையான மனிதர்களால்....
எளிமையானவர்களால்
 அழகான இந்த உலகம் பேரழகாகி விடுகிறது.

✳️பணத்திற்கு மதிப்பில்லை... இப்படியான மனிதர்களுக்கு
அன்பை விதைப்போம்... வாழ்வியல் தத்துவங்களை நமக்கு எளிமையாக உணர்த்திவிட்டு போய் விடுகிறார்கள்✳️

✳️மனிதர்கள்
எவ்வளவு அன்பை விதைக்கிறார்கள் சக மனிதர்களிடத்தில்✳️

என நினைக்கும் போது எனது வாழ்வில் நான் சந்தித்த அன்பான மனிதர்கள் நினைவுக்கு வந்தார்கள்...!!!

பதிவில் பிடித்தது!
படித்தேன்!! பகிர்ந்தேன்!!! 🙏
🙏🙏🙏🙏🙏🙏🙏

Mosquito Thoughts



'Mosquito Thoughts'

Lion easily deals with animals of the land. But small birds and flying insects pose a great challenge to the lion! Notably with mosquitoes, the lion gets really frustrated! Though mosquito is a small insect, the lion has no control over it as it simply flies around!

 *Lesson: Our real challenge lies with the flying "mosquito thoughts'! Such negative thoughts overpower and frustrate us! To get rid of 'mosquito thoughts' we need to replace them with 'God thoughts'.'Ask God to take control of our mind.*
*Have a blessed day!*

Fear of corona - a kutti story

🏮அருமையான கதை தற்போதுள்ள சூழலுக்கு மிகவும் பொருந்தும்*👇🏻👇🏻

ஒரு ஊரில் குத்துச் சண்டை வீரர் ஒருவர் இருந்தார்.

அந்தப் பகுதியில் அவரை வெல்ல யாருமே இல்லை.

சில குத்துக்களிலேயே எதிரியை வீழ்த்திவிடும் வலிமை அவருக்கு இருந்தது. தோல்வி என்பதையே அறியாமல் வாழ்ந்து வந்தார்.

இப்போதெல்லாம் *அவருடன் போட்டியிட யாருமே முன்வருவதில்லை !*

*அவருடைய எதிரிகள் எவ்வளவோ விதங்களில் முயற்சி செய்தும் கூட அவரை வீழ்த்த முடியவில்லை !*

நல்ல உடற்பயிற்சி , சத்தான உணவு , தேவையான அளவு உறக்கம் என்று தன்னுடைய உடலை நன்றாகப் பேணி வந்ததால், எதிரிகள் அவரை வீழ்த்த வேறு ஏதாவது வகையில் திட்டம் வகுக்க ஒன்று கூடினார்கள்.

பல விதமான ஆலோசனைகளை அவர்கள் கூடிப் பேசினார்கள்.

ஏதாவது செய்து அவரைக் கொன்றுவிட்டாலும் அவர் வீரர்களுக்கெல்லாம் முன்மாதிரி என்று பேசப்பட்டு அழியாத புகழைப் பெற்று விடுவார்.

எனவே அந்த யோசனை கைவிடப்பட்டது.

குடிப்பழக்கம் போன்ற கெட்ட பழக்கங்களை அவருக்கு அறிமுகப்படுத்தலாம் என்று முயற்சி செய்து அயல் நாட்டு போதை வஸ்துக்களை அவருக்குப் பரிசளிக்க முயன்ற போது அவர்களுக்கு முன்பாகவே அவர் அதை உடைத்து நொறுக்கி அவர்களை அவமானப்படுத்தி அனுப்பினார்.

உருப்படியாக எந்த ஒரு யோசனையும் கிடைக்காத நிலையில் அவர்களுக்குள் ஒரு முடிவெடுத்தார்கள்.

எதையாவது செய்து அவரைப் போட்டியில் வீழ்த்த வேண்டும்.

*எனவே அவரை வீழ்த்துபவருக்க 10லட்சம் பரிசு கொடுப்பதாக வாக்களித்தார்கள்!*

*பெரிய தொகைதான்,

இருந்தாலும் அவரை வீழ்த்த இதைவிட அதிகமாக செலவு செய்யவும் அவர்கள் தயாராக இருந்தார்கள்.

இந்தச் செய்தி காட்டுத்தீ போலப் பரவியது.*

இது புதிதாய் சண்டைப் பயிற்சி செய்து வரும் ஒரு இளைஞனின் காதிலும் விழுந்தது.

10 லட்சம் பரிசுத் தொகையாக அறிவிக்கப்பட்டாலும் அந்த வீரரின் வலிமை தெரிந்திருந்ததால் போட்டிக்கு வர யாருமே முன்வரவில்லை.

இந்த நிலையில் அந்தப் புதிய இளைஞன் , தான் போட்டிக்கு வருவதாக முன்வந்தான்.

பலரும் அவனை பயமுறுத்தி அவரிடம் மோத வேண்டாம் என்று அறிவுரை கூறினார்கள்.

அவனோ தன் முடிவில் உறுதியாக இருந்தான்.
வீரரும் அவனுடன் சண்டையிட சம்மதித்து விட்டார்.

போட்டியின் நாள் அறிவிக்கப் பட்டது.

*புதிய இளைஞன் தன்னுடைய நெருக்கமான நண்பர்களை வரவழைத்தான்* .

*அவர்களிடம் தனக்காக உதவிச் செய்யும்படி சில விஷயங்களைக் கூறினான்.*

அவன் எதற்காக அப்படிச் சொன்னான் என்று அவர்களுக்குப் புரியவில்லையென்றாலும் நண்பனின் வெற்றிக்காக எதையும் செய்யத் தயாராக இருந்ததால் அவன் சொன்னதை அப்படியே செய்தார்கள்.

*அதில் ஒருவன் , வீரரின் வீட்டுக்குப் பழங்களுடன் போய் அவர் போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள் சொன்னான்*.

அவரும் சந்தோஷமாக அவற்றைப் பெற்றுக் கொண்டு நன்றி சொன்னார்.

வந்தவன் திடீரென்று ,  *"என்னய்யா ஆச்சு உங்களுக்கு ?*
*பேசும் போதே இப்படி மூச்சு வாங்குதே*.

*கல்லு மாதிரி இருந்தீங்களே !*
*உடம்பைப் பாத்துக்குங்க " என்று சொல்லிக் கிளம்பினான்.*

"எனக்கு மூச்சு வாங்குதா ? நான் நல்லா தானே பேசுறேன் ? " .

*அவருக்குக் குழப்பம் வந்துவிட்டது.*

மறுநாள் அதிகாலை, அவர் வீதியில் ஓட்டப் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது திட்டப்படி இன்னொரு இளைஞன் அவருக்கு எதிர்ப்பட்டு வணங்கினான்.

*" ஐயா , போட்டியில கலந்துக்கப் போறதா கேள்விப்பட்டேன் .

நான் உங்க தீவிர ரசிகன்.

இப்பவும் நீங்கதான் ஜெயிக்கப் போறிங்க.

அதுல சந்தேகமே இல்லை.

*ஆனாலும் முன்னால உங்க ஓட்டத்துல இருந்த வேகமும் , வலிமையும் இப்ப இல்லையே ? உடம்பு சரியில்லையா ? "* என்று கேட்டுவிட்டு நகர்ந்தான்.

*'என்ன எல்லாரும் இப்படி கேக்குறாங்க?' இப்போது சிறிதாய் பயம் துளிர்விட்டது.*

போட்டி துவங்கும் நேரம் வந்தது.

பலரும் வந்து அவருக்கு வாழ்த்து சொல்லி உற்சாகப் படுத்தினர்.

அவர் மேடையேறப் போகும் போது எதிராளியான இளைஞனின் நண்பனான மற்றொரு இளைஞன் கையில் பூங்கொத்துடன் வந்து அவரை வாழ்த்திக் கைகுலுக்கினான்.

*" என்னய்யா , எப்பவும் உங்க பிடி இரும்பு மாதிரி இருக்கும் இப்ப ரொம்பவும் தளர்ந்து போச்சே  என்னாச்சு உங்களுக்கு ? "* என்று கேட்டுவிட்டு விடைபெற்றான் .

அவ்வளவுதான்  வீரர் முற்றிலுமாக சோர்ந்து போனார்.

போட்டி துவங்கியது .

அவர் வேகமாய்த் தாக்குதலை ஆரம்பித்தாலும்
*இனம் புரியாத சோர்வு அவரை மேற்கொண்டது.*

இளைஞனின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் பலவீனமாய் சரிந்தார்.

எல்லாரும் ஓடி வந்து இளைஞனின் சாதனையையும் , வீரத்தையும் பாராட்டினார்கள் .

*அவனோ நன்றிப் புன்னகையோடு தன் நண்பர்களின் முகத்தை ஏறிட்டான்.*

*பலருடைய வாழ்வில் , வந்துவிட்ட வியாதியைவிட , வந்துவிடுமோ என்று எண்ணி பயப்படுகிற வியாதியே பலரை கீழேதள்ளி வீழ்த்திவிடுகிறது*.

*பலப்படுவோம் எண்ணங்களால், நம்பிக்கைகளால் !*

உடல் அளவில் பலவீனப்பட்டாலும் மனதளவில்
மிருகபலத்தோடு இருப்போம்.

*பிறரின் வார்த்தைகளால்*
*பயப்படவும் வேண்டாம்*
*பலவீனப்படவேண்டாம்*
*கொரான வந்து விடும்*
*நமது வாழ்வு முடிந்து விடும் என்ற எண்ணமே நம்மை கொன்று விடும்*.. அந்த கெட்ட எண்ணங்களை தூக்கி வீசிவிட்டு நமது எதிர்கால திட்டங்கள் நோக்கி பயணம் செய்வோம்..  ஒரு நல்ல கருத்தை விதைத்து உள்ளேன் அதை மனதில் கொள்க.

Ways

*வேதத்தில் உள்ள நல்ல வழிகள்→*
1) இயேசுவே வழி - யோ 14:6
2) நீதிமான்களின் வழி - சங் 1:6
3) கர்த்தருடைய வழி - சங் 37:34
4) கற்பனைகளின் வழி - சங் 119:32
5) மெய் வழி - சங் 119:30
6) உத்தமமான வழி - சங் 101:2
7) செவ்வையான வழி - சங் 107:7
8) சாட்சிகளின் வழி - சங் 119:14
9) கர்த்தருக்கு பிரியமான வழி - நீதி 16:7
10) எறும்பின் வழி - நீதி 6:6
11) விவேகத்தின் வழி - நீதி 21:16
12) நீதியின் வழி - நீதி 8:21
13) இடுக்கமான வாசல் வழி - மத் 7:13
14) உபத்திரவங்களின் வழி - அப்போ 14:22
15) சியோனுக்கு போகிற வழி - ஏரே 50:5

Thursday, June 25, 2020

What is Maturity of Mind ?

*மன முதிர்ச்சி என்றால் என்ன?*

 *What is Maturity of Mind ? *

1. மற்றவர்களை திருத்துவதை விட்டுவிட்டு
    நம்மை திருத்திக்கொள்வது.
1. Correcting ourselves without trying to correct others.

2. அனைவரையும் அப்படியே (குறைகளுடன்)
    ஏற்றுக்கொள்வது.
2. Accepting others with their short comings.

3. மற்றவர்களின் கருத்துக்களை அவர்கள்
கோணத்திலிருந்து புரிந்துகொள்ளுதல்.
3. Understanding the opinions of others from their perspectives.

4. எதை விட வேண்டுமோ அதை விட பழகிகொள்தல்.
4. Learning to leave what are to be avoided.

5. மற்றவர்களிடமிருந்து எதிர்பார்ப்பதை விடுதல்.
5. Leaving the expectations from others.

6. செய்வதை மன அமைதியுடன் செய்வது.
6. Doing whatever we do with peace of mind.

7. நம் புத்திசாலித்தனத்தை மற்றவர்களிடம்
    நிரூபிப்பதை விடுவது.
7. Avoiding to prove our intelligence on others.

8. நம் செயல்களை மற்றவர் ஏற்க வேண்டும்
என்ற நிலையை விடுதல்.
8. Avoiding the status that others should accept our actions.

9. மற்றவர்களுடன் நம்மை ஒப்பிடுவதை விடுதல்.
9. Avoiding the comparisons of ourselves with others.

10. எதற்குமே சஞ்சலப்படாமல் மனதை அமைதியாக வைத்துக்கொள்ள முயற்சித்தல்..
10. Trying to keep our peace in our mind
      without worrying for anything.

11. நம் அடிப்படை தேவைக்கும், நாம் அடைய
    விரும்புவற்றிற்கும் உள்ள வேறுபாட்டினை உணர்தல்.
11. Understanding the difference between the basic needs
      and what we want.

12. சந்தோசம் என்பது பொருள் சம்பந்தப்பட்டது அல்ல
     என்ற நிலையை அடைதல்.
12. Reaching the status that happiness is not connected
      with material things.

*இந்த 12 ல் குறைந்தது ஒரு ஏழெட்டையாவது கடைபிடிக்க முயற்சித்தால் வாழ்க்கை எளிதாகிவிடும்*
*Our life will be simple if only we practice 7 or 8 of the above 12*

Live your Life & Love your Life.

Lion's Success Story

Lion's Success Story

Being the king of the jungle does not mean a lion never fails. In hunting for its prey, it fails eight out of ten times. But the lion never becomes depressed and looses hope. Have you ever heard of a lion committing suicide for not getting it's prey? No. Instead, it changes its approach towards making a better hunt every time.
Lesson: Learn through the setbacks and without loosing hope evolve strategies for the next attempt. 

Focus

Focus

When a lion hunts, it keeps its focus on the prey making less noise. The raid becomes successful only when it gets to the prey without giving any signs of attack. When it comes to your struggles for achieving goals, less noise means less talking and less distractions. Instead of telling everyone what you want to achieve, keep it low and focus on the goal. With God's help you can do it! 

"Pride" - The 'WE' Mentality

"Pride" - The 'WE' Mentality

The lion is the most social of all wild species living in groups with their offspring. Such a group is called a "pride".The survival of the lion depends on the trust of its "pride" in good and bad times. Because of teamwork, the entire "pride" is strong enough to kill much bigger prey and enjoy life together. *Lesson: Teamwork is best exhibited when we support eachother in hard times with our wisdom and encouragement apart from physical help! Teamwork is more of 'we' and less of 'me'!*
*Have a blessed day!*

The Lion Attitude


The Lion Attitude

Lion has an attitude of leadership. The lion is not the tallest animal in the jungle.The eliphant is bigger and stronger. The cheetah is faster. Lion doesn't care. Lion's sound could be heard from 5 miles. It doesn't turn around when a dog barks. Or it doesn't concern with the opinions of sheep! The attitude of lion is so majestic and kingly! Attitude matters! 

Wednesday, June 24, 2020

#சென்னை #Madras

#சென்னை  #Madras
ஆங்கிலேயர்களின் நகரம்
-------------------------

சென்னை ஆங்கிலேயர்கள்  பார்த்து பார்த்து செதுக்கிய நகரம்  -  லண்டனின் டிவின் சிட்டி

*முதல் பொது மருத்துவமனை - சென்னை பெரியாஸ்பத்திரி 1664 ம் ஆண்டு ஆங்கிலேயர்களால் தொடங்கப்பட்டது . அதுவும் 3000 பேர் தங்கி சிகிச்சை பெறுகிற அளவிற்கு. 

*மருத்துவகல்லூரி - Madras medical college - 1835 ம் ஆண்டு இந்தியாவிலேயே முதன்முறையாக தொடங்கப்படுகிறது .

* உலகத்தின் முதல் கண் மருத்துவமனை லண்டன் கண் மருத்துவமனை . அது தொடங்கப்பட்டு பதினைந்து வருடங்களிலேயே உலகத்தின் இரண்டாவது கண் மருத்துவமனை தொடங்கப்படுகிறது.  எங்கு தெரியுமா?  சென்னை எழும்பூரில் 1819 ம் ஆண்டு. 

*ராண்டஜன் என்ற ஜெர்மனி அறிவியலாளர் 1895 ம் ஆண்டு X கதிர்களை கண்டுபிடிக்கிறார்.  ஆனால் அவரால் மருத்துவத்துறையில் அதை பயன்படுத்தமுடியவில்லை.  சென்னை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஐந்து வருடங்கள் கழித்து  1900ம் ஆண்டு  X ray machine வாங்கப்பட்டு நோயாளிகள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டு ரான்ட்ஜனின் கண்டுபிடிப்புக்கு நியாயம் சேர்க்கப்பட்டது.  1900 ம் ஆண்டு மெட்ராஸ் நகரத்தில் மின்சாரம் இல்லை . ஆனால் சென்னை பெரியாஸ்பத்திரியில் X Ray கருவி இருந்தது .

* லண்டனுக்கு அடுத்து இந்தியாவின் முதல் பொறியியல் கல்லூரி சென்னையில் தான் அமைக்கப்பட்டது .

* இந்திய ராணுவத்துக்கு தாய்க்கழகமான Madras regiment 1750 ம் ஆண்டு 20 பட்டாலியன் வீரர்களோடு  சென்னையில் தான்  ஆரம்பிக்கப்பட்டது.

இது எல்லாவற்றையும் விட என்னை அடிக்கடி பிரமிப்பில் ஆழ்த்தும் விஷயம்

உலகின் முதல் கார்ப்பரேஷன் - லண்டன்
இரண்டம் கார்பரஷன் - பிரிட்டனின் ஏதோ நகர் அல்ல
அது #மெட்ராஸ் ..!

சென்னை ஆங்கிலேயர்கள்  பார்த்து பார்த்து செதுக்கிய நகரம் . உணர்வுப்பூர்வமாக ஆங்கிலேயர்கள் லண்டனுக்கு அடுத்தபடியாக சென்னையைத்தான் நேசித்தார்கள். வந்தாரை வாழவைக்கும் அந்த சென்னை தான் இன்று கொரோனா தொற்று எனும் புதிய சிக்கலில் சிக்குண்டு திணறுகிறது. சென்னை இதிலிருந்து மீளும் என நம்புகிறேன்.

50 REASONS TO READ BOOKS

50 REASONS TO READ BOOKS

1. Books help to feel more confident.
2. Books help to travel around the world in the cheapest way.
3. Books develop your personality.
4. Books provide food for thought.
5. Books make you laugh and think.
6. Books draw you towards perfection.
7. Books stimulate creativity.
8. Books bring out writing talent.
9. Books help in communicating.
10. Books clear your vision.
11. Books satisfy your curiosity.
12. Books help you make more choices.
13. Books help you build literary talent.
14. Books do not require any special device to teach.
15. Books increase your attention span.
16. Books are fruitful pastime.
17. Books can be used anytime, anywhere.
18. Books provide entertainment, when others fail.
19. Books make you powerful.
20. Books help you know the 'Whys' and 'Hows' of everything.
21. Books help you to create and spread fun.
22. Books help you travel across time intelligently.
23. Books keep you updated with facts and figures.
24. Books spread love, affection and knowledge.
25. Books make the best of friends.
26. Books take you to intellectual environment.
27. Books help you feel the world around you.
28. Books entertain your mind.
29. Books broaden your horizon.
30. Books bring Nature to your doorstep.
31. Books bring about a 'personality change'.
32. Books increase comprehension.
33. Books do not require company.
34. Books are stress-busters.
35. Books develop a sense of belonging to people around you.
36. Books provide mental and physical relaxation.
37. Books act as a communication tool.
38. Books are intellectually satisfying activity.
39. Books provide spiritual experience.
40. Books provide emotional strength.
41. Books build your self-esteem.
42. Books help and encourage your imagination to soar.
43. Books make you smarter and wiser.
44. Books help you grow.
45. Books take you to a 'world of dreams'.
46. Books can change your life and vision.
47. Books help in achieving 'life goals'.
48. Books develop wonderful experience.
49. Books transform lives.
50. Books inspire, books motivate, books build nations

Wednesday, June 17, 2020

Ravi Zacharias son

*Nathan Zacharias* , is the youngest of the Ravi Zacharias' three children. He currently works as senior writer and video producer in the Media Department at RZIM answers a question on

*What is the most important lesson you have learned from your dad?*

You don't draw your strength from those with whom you serve; you draw it from the One you serve. There is a reason people who grow up in ministry joke about the scars that come from it… ministry can be a very painful profession, as some of the _greatest wounds come at the hands of those who claim to love Christ._ *I've seen my dad endure a lot of hits in his time,* and he would be the first to tell you *that they have hurt.* But he has *never lashed out and never wavered in his commitment to Christ. His example impacts me every day.*

Tuesday, June 16, 2020

Atheist to Almighty

*Atheist Affirms Almighty*

John Newton was a militant atheist, bully and blasphemer. He was selected to Navy at 18 where he broke the rules so recklessly that he was publicly flogged. At the age of 23, Newton’s ship almost sank in a severe storm off the coast of Donegal. He called out to God from that sinking ship on 10/3/1748, God rescued him. He began a new life. He started praying to God. Eventually he joined William Wilberforce in the campaign against slave trade and became a leader.He wrote the song "Amazing grace! How sweet the sound;That saved a wretch like me!" *Yes.God can transform people and their plans!! Let's commit to God!*
 *Have a blessed day!*

Monday, June 15, 2020

அறநீர்

*அறநீர் - சிறுகதை*

அப்பாவிற்கு ஆரம்பத்தில் இருந்தே இந்த வேலை பிடிக்கவில்லை. பன்னிரெண்டாம் வகுப்பு முடித்த போது நான் நர்ஸிங்கில் சேருகின்றேன் என்ற போது கடுமையாக எதிர்த்தார். எனக்கு அந்த சேவை மீது அளப்பறிய ஆவல் இருந்தது. அதே போல, கிட்டத்தட்ட அதே போல இப்போது இந்த வேலை. சைக்காலஜியில் முதுகலை பெற்றிருந்தேன் அந்த சமயம் தான் இந்த நிறுவனத்தில் இருந்து பணிக்கு அழைத்தார்கள். பணி என்றாலும் இது ஒரு சமூகத்திற்கான சேவை தான்.

“தி சர்வீஸ்” என்ற நிறுவனம் அது. முழுக்க முழுக்க சேவை மனப்பான்மை கொண்ட நிறுவனமா அல்லது லாப நோக்கத்தில் செயல்படும் நிறுவனமா என்று என்னால் கணிக்க இயலவில்லை. பீடிகை இல்லாமல் அது என்ன நிறுவனம் எனச் சொல்லிவிடுகிறேன். வயதானவர்களை இந்தியாவில் விட்டுவிட்டு அயல்நாடுகளுக்கு செல்பவர்கள் பயன்படுத்தும் சேவை இது. எங்கள் நிறுவனத்தில் வயதானவர்களுக்கான சகல சேவைகளும் உண்டு. ஈமெயிலில் தங்கள் தந்தை/தாயின் தகவல்கள், வீட்டு முகவரி ஆகியவற்றை கொடுத்துவிடுவார்கள். நாங்கள் தினமும் அவர்களை கவனித்துக்கொள்ள வேண்டும். தினசரிகளை அவர்களே கவனித்துக்கொள்வார்கள். அவர்களுக்கான Emotional Balanceஐ கொடுக்கும் பணியில் தான் நான் அமர்த்தப்பட்டேன். இறுக்கமாக இருக்கும் அவர்களிடம் பேச வேண்டும். ஒவ்வொரு வீட்டிலும் சுமார் ஒரு மணி நேரம் இருந்தால் போதும். மாலை அலுவலகம் திரும்பி அன்று சந்தித்த நபர்கள், அவர்களின் நிலை பற்றி சின்ன அறிக்கையை அலுவலகத்தில் கொடுத்துவிட வேண்டும். இந்த சேவை என்று மட்டுமல்ல அவர்களுக்கு உடல்நல கவனிப்புகள், இதர சேவைகள் (வெளியே சென்று பில் கட்டுதல்) ஆகியவையும் எங்கள் நிறுவனத்தில் உண்டு. வாரத்தில் ஒருமுறை அவர்களின் பிள்ளைகளுக்கு பெற்றோர்களின் நிலை அனுப்பப்படும். எந்தெந்த சேவை தேவையோ அதற்கு ஏற்றார்போல பணம்.

ஆரம்ப நாட்களில் மிகவும் செயற்கைத்தனமாக இருந்தது. அவர்களிடம் செயற்கையாக நலம் விசாரிப்புகள். ஆனால் ஒரு வாரத்திலேயே ஒருவித நெருக்கம் எல்லா பெரியோர்களிடமும் ஏற்பட்டுவிட்டது. ஒதுக்கப்பட்டது என்னவோ ஒரு மணி நேரம் தான் ஆனாலும் கணக்கு வழக்கில்லாமல் அவர்களிடன் செலவழிக்க ஆரம்பித்தேன். அவர்களின் விருப்பங்கள் விசித்திரமாகவே இருக்கும் ஆனால் மிக மிக எளிதானவை தான். தாமோதரன் சாருக்கு அவருடன் வாக்கிங் போக வேண்டும். சரஸ்வதி அம்மாவிற்கு அவர்களுடன் சில நிமிடங்களாவது தாயம் ஆட வேண்டும். மோசஸ் தம்பதிக்கு அன்றைய அரசியல் செய்திகளைப்பற்றி பேசிவிடவேண்டும். சின்னச்சின்ன ஆசைகள் தான். சைக்காலஜி படித்திருந்ததால் பேசியே அவர்களின் ஆசைகளை கேட்டுவிடுவேன். ஆனால் சாயர் சார் மட்டும் இதுவரைக்கும் எதுவே கேட்டதில்லை. கேட்ட கேள்விக்கு கூட பதில் சொல்லமாட்டார். எங்களுக்கு ஏற்கனவே பயிற்சி கொடுத்திருந்தார்கள். பெரியவர்கள் காட்டமாக நடந்துகொள்வார்கள் ஆனாலும் பொறுமையாக இருக்க வேண்டும் என்று. சாயரின் மனநிலையை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. வழக்கமாக செல்லும் நேரத்தில் எனக்காக டீ மட்டும் போட்டுவைத்து மேஜையில் எனக்காக அமர்ந்திருப்பார். பெரும்பாலான நேரங்கள் தன் மனைவியின் புகைப்படத்தின் முன்னர் அமர்ந்து இருப்பார். எனக்கு இது வேண்டும் அது வேண்டும் என்று கேட்டதில்லை. அவர் பேசினால் அது அனேகமாக கொஞ்சம் மலையாளம் கலந்த தமிழில் தான் இருக்கும் என்பது என் யூகம்.

அவர்கள் முன் மகிழ்வாக இருந்தாலும், அலுவலகம் திரும்பி ஒவ்வொருத்தர் பற்றிய குறிப்புகள் எழுதும்போது கண்ணீரும் கோபமும் நிச்சயம் வந்துவிடும். ஆயிரம் ஆயிரம் கேள்விகள் அவர்கள் பிள்ளைகள் மீது எழும். ஆனால் அவர்கள் தங்கள் குழந்தைகளை குற்றவாளி கூண்டில் நிறுத்துவதே இல்லை. “அவர்கள் வாழ்கையை அவர்கள் வாழ்கின்றார்கள்” என்ற தொனியிலேயே அவர்கள் பேசுகிறார்கள். அதுவும் சரி தான் என்றும் தோன்றும். சாந்தா என்னுடைய ஜூனியர். நானும் அவளும் வாரத்திற்கு மூன்று முறையேனும் யாராவது கதையைச் சொல்லி அழுதுவிடுவோம். மெல்ல மெல்ல எனக்கு வெளிநாடு மீது வெறுப்பும் வராமல் இருக்கவில்லை.

அப்பா தீவிரமாக வரன்களை தேடிக்கொண்டு இருந்தார். அவருக்கு மிகுந்த கோபம் என்மீது. கைகூடிவந்த ஒரு வரனை நான் நிராகரித்துவிட்டேன். காரணம் மாப்பிள்ளை போனில் சொன்ன தகவல் தான். “ரெண்டு பேரும் பாரின் போய் செட்டிலாகிடலாம். நிம்மதியா காசு பார்க்கலாம்” என்பதுதான்.

வாழ்க்கை கவிதைப்போல ஓடிக்கொண்டிருந்தது, ஒரு நாள் மொத்த உலகமும் ஸ்தம்பிக்கும்படியான செய்தி வந்தது. சைக்கிளில் சென்ற அப்பா விபத்தினை சந்தித்தார். ICUவில் சேர்த்துவிட்டார்கள். டாக்டர்கள் எங்கே அடி என்ன ஆனது என்றும் சொல்லவில்லை. யாரையும் பார்க்கவும் அனுமதிக்கவில்லை. வரன் பார்க்கத்தான் எங்கோ போயிருக்கார். அவர் பையில் இருந்த மாப்பிள்ளை போட்டோகள் அதையே காட்டியது. அலுவலகத்திற்கு தகவல் சொல்லிவிட்டேன். கையில் இருந்த மொத்த காசும் கட்டிவிட்டேன்.

மருத்துவமனையில் சேர்த்த இரண்டு மணி நேரத்தில் நான் கவனித்துக்கொள்ளும் பெரியவர்கள் எல்லோருமே மருத்துவமனைக்கு வந்துவிட்டர்கள். இதனை நான் எதிர்பார்க்கவேயில்லை. அலுவலகத்திற்கு செய்தி சொன்னதும் அவர்கள் இன்று நான் வீட்டிற்கு நேரடியாக வர இயலாது என தகவல் சொல்லி இருக்கின்றார்கள். எல்லோரும் மருத்துவமனை விலாசம் கேட்டுவிட்டு வந்துவிட்டார்கள். ஒரு சுவாரஸ்யம் என்னவெனில் வந்திருந்தவர்கள் ஒவ்வொருவரும் மற்றவர்களுக்கு அறிமுகம் இல்லாதவர்கள் தான். அவர்களை இணைக்கும் இரண்டு புள்ளிகள். ஒன்று முதுமை மற்றொன்று நான். ICU வாசலில் ஒருத்தருக்கு இவ்வளவு பேரா என விரட்டிவிட்டார்கள். எல்லோரையும் எல்லோருக்கும் அறிமுகம் செய்துவைத்தேன்.

சரஸ்வதி அம்மா ஒரு ப்ளாஸ்கில் டீ எடுத்து வந்திருந்தார். ஆனால் அவர் இத்தனைப்பேரை எதிர்பார்க்கவில்லை. அவர்கள் எல்லோரும் எளிதில் நண்பர்களாகிவிட்டார்கள். தங்கள் கதைகளையும் மருத்துவமனை அனுபவங்களையும் பேச ஆரம்பித்துவிட்டார்கள். தோள் மீது கைப்போட்டு கல்லூரி நண்பர்களைப்போல தாமோதரன் சாரும் மோசஸ் சாரும் பேசுவதை பார்த்ததே மனதிற்கு இதமாக இருந்தது. மருந்து மாத்திரைகள் பழக்கப்பட்டு இருந்தாலும் இந்த ஆஸ்பிட்டல் வாசம் ஏனோ பிடிக்கவே இல்லை.

மாலையில் தான் சாயர் சார் வந்தார். என்னிடம் என்ன விபத்து என்றெல்லாம் விசாரிக்கவில்லை. நேராக முதன்மை டாக்டர் அறைக்குச் சென்றார். அன்று தான் சாயர் ஒரு டாக்டர் என்ற விஷயம் தெரியும். ரிப்போர்ட்டுகளை பலவந்தமாக பேசி வாங்கி எல்லா டாக்டர்களுக்கு டோஸ்விட்டார். ஏதோ சொதப்பி இருக்கின்றார்கள். உடனே ICU பரபரப்பானது. என்னிடம் வந்து “ஆப்பரேஷன் உடனடியா செய்யனும் ஐம்பதாயிரம் கட்டுங்க” என்று சொல்லிவிட்டனர். கையிருப்பு தீர்ந்துவிட்டது. அலுவலகத்தில் கேட்டதற்கு பெரிய ப்ராசஸஸ், இன்று கிடைக்காது என சொல்லிவிட்டார்கள். தோழிகளுக்கு ஃபோன் அடிப்பதற்குள் சரஸ்வதி அம்மா பில்லை பிடிங்கி பணம்கட்டச்சென்றார்.
“நாளைக்கு பணம் வந்ததும் கொடுத்திட்றேம்மா”
“நான் கேட்டேனா?” என்றார் புன்னகைத்தபடியே.

அந்த நொடி தான் உடைந்து போனேன். ஆஸ்பிட்டலில் மனங்களின் மனதினை கமழ்வதை நுகர்ந்தேன். எதற்காக இந்த வேகமான ஓட்டம் என்றே புரியவில்லை. எதனை எதிர்பார்க்கின்றது மனது? இன்னொரு அதிர்ச்சி காத்துக்கொண்டிருந்தது. உடனடி ஆப்பரேஷன் என்பதால் உடனடியாக ரத்தம் தேவை என்று சொல்லிவிட்டார்கள். ரத்தம் கொடுத்தது சாயர் சார் தான். ரத்தம் கொடுத்தவர் மெல்ல நிதானமாக வெளியே வந்தார். காபி வாங்கிச்சென்றேன். வராண்டாவில் அமர்ந்தார். அருகினில் அமர்ந்தேன்.

அவர் என் கைகளைப் பற்றி
“காலையிலயே, இந்த அப்பாகிட்ட ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாமில்ல”

வழிந்தோடியது அறநீர்..

- விழியன்

The Rich Beggar

The Rich Beggar

A woman lived on the streets. She was begging for money aggressively. When she died, people found that she had lakhs of rupees. She had acquired a luxurious flat but chose to live on the streets with her plastic bags full of rubbish. She never enjoyed her inheritance because she didn't want to change her lifestyle. Some people are afraid of change, while others believe change is impossible. Yet the wonderful news is that with God’s help we can change.We all need to change! Let's submit to God for a change of heart!

Sunday, June 14, 2020

PEACE AND CONFLICT RESOLUTION

PEACE AND CONFLICT RESOLUTION.
(Samaathaanamum Sikkaluku Theervukaanuthalum)

1) GEN 13:2-12
Abraham - Lot Model
(Aabirahaam Lotthu Maathiri)

First preference to the less privileged.

Abraham who was more powerful than Lot gives the first choice to Lot.
Abraham becomes a great model in conflict resolution.

This is a great model for our community, institutions and church to resolve conflicts.

2) ACTS 6:1-6
The Early Church Model
(Thodakkakaala Thiruchabai Maathiri)

Taking sincere initiative to take care of the less cared for.

Gentile widows were less cared for.
There was a real complaint.
The church took the complaint seriously and appointed appropriate people to take care of the situation.

This is also a great model for our community, institutions and church.

3) MAT 20:1-16
The Jesus Model
(Yesuvin Maathiri)

Peace with Equality.
The late comers were denied of participation from morning and it was not their fault.
The problem of unemployment.
Equality brings murmuring.
No peace without equality in India.
Social justice brings murmuring from the right wing groups.
God's grace is equal to everyone, especially to the less privileged.

There is a great model for our church and society especially to our nation in the caste-ridden context.

Conc.
Negotiation becomes a mandate in all the above mentioned resolutions.
Let the Holy Spirit of God help in this process of conflict resolutions.

Gnanavaram Masilamani
Church of the Divine Patience
Madurai 16

மனைவி போன பின் கணவன் படும் துயர்

மனைவி போன பின் கணவன் படும் துயர் !!!

கணவன் இறந்த பின் பெண்கள் எப்படியோ தான் பெற்ற மக்களை அனுசரித்து வாழ்ந்து விடுகின்றனர்.

ஆனால் மனைவி போன பின் கணவன் படும் துயர் இருக்கிறதே,கொடுமை�😴😴

*தானாகவே காப்பி கூட போடத் தெரியாத கணவன்,*

*தண்ணீரைக் கூடத் தானே மொண்டு குடிக்காத கணவன்*

*மனைவியின் மறைவுக்குப் பின் ஏனென்று கேட்க ஆளில்லால் போகிறான்.*

*ஒரு ஆணுக்கு நன்றாகவே சமைக்கத் தெரிந்தாலும் கூட மருமகளோ, மகளோ சமைலறையில் ஆளும் போது அங்கே இந்த ஆணால் தன்னிச்சையாக நுழைய முடியாது.*

*வேண்டுவனவற்றை தானே சமைத்துக் கொள்ளவோ எடுத்துக் கொள்ளவோ கூசுகிறார்கள்.*

*என்ன கொடுத்தார்களோ எப்போது கொடுத்தார்களோ*
*கொடுத்ததை கொடுத்த போது சாப்பிட்டுக் கொள்ளணும்.*

*ரெண்டாவது காபி கூட கேட்க முடியாது.*

*தலைவலியில் ஆரம்பித்து எப்பேர்ப்ட்ட சுகக்கேடு வந்தாலும் ஆதரவாகப் பேசக் கூட ஆளிருக்காது.*

*இதெல்லாம் என் உறவுக்குள்ளே,*
*நட்பு வட்டத்திற்குள்ளே கண்ட உண்மை.*
*துளியும் அதிகப்படியில்லை.*

*என் கணவர் காலை எட்டரை மணிப் போல*
*சும்மா கிச்சனில் வந்து எதானும் பேச ஆரம்பித்தால் காபி வேணும்னு அர்த்தம்.*

*காபி குடித்தால் காலை உணவின் அளவு அவருக்குக் குறைவதால் கொடுக்க யோசிப்பார்கள்.*

*இப்போதெல்லாம் காலையில் என் கணவர் கேட்காலேயே ரெண்டாவது காபி கொடுத்துடுவேன்.*

*எனக்குப் பின் அவருக்கு யார் கொடுப்பாங்க?*

*இந்த நினைவு வந்தால் மனசு ரொம்ப பாரமாகிடுது.*

*மனைவி இல்லாத கணவன் உயிரற்ற உடல் போலே!!*
*சகோதரிகளே!!*

*யாருக்கு விதி எப்போன்னு தெரியாது!*

*உங்கள் கணவர் உங்களுக்குப் பின் வாயில்லாப் பூச்சிதான்!*

*முடிந்தவரை கணவனிடம் அனுசரணையாக இருங்கள்!!
ஒரு தடவ தான வாழப்போறீங்க...

கணவனை கடவுளாக பாக்க வேண்டாம்...
மனுசனா பாருங்க...

நன்றி :- வாட்ஸ் அப்

முளையிலேயே கிள்ளவேண்டிய பிடிவாதம்

முளையிலேயே கிள்ளவேண்டிய பிடிவாதம்!...

குழந்தையை பிடிவாத குணமில்லாமல் வளர்ப்பதற்கு டாக்டர் ஜெயந்தினி கொடுத்த ‘பிராக்டிகல் டிப்ஸ்’..

குழந்தைக்கு சாப்பிட, நடக்க கற்றுத் தருவதைப் போலவே, தோல்விகளை சந்திக்கவும் கற்றுக் கொடுங்கள். உதா ரணமாக, குழந்தை சாக்லெட் கேட்டால், அன்பாக, ‘நாளைக்கு வாங்கித் தர்றேன்..’ என்று சொல்லுங்கள். குழந்தை ‘இப்பவே வேணும்..’ என்று அழுதாலும், ‘நாளைதான்’ என்று தெளிவாகச் சொல்லுங்கள். உங்களிடம் உறுதியில்லாவிட்டால், அதன் பிடிவாதம் அதிகரிக்கவே செய்யும்.

குழந்தை கேட்பதற்கு, வீட்டில் உள்ள அனைவருமே ஒரே பதிலை சொல்ல வேண்டும். ‘அப்பா தர மாட்டேங்கறாரா? நான் வாங்கித் தர்றேன்டீ என் செல்லம்’ என்று சொன்னால், குழந்தைக்குக் குளிர் விட்டு விடும்.

குழந்தை அழுது, புரண்டு, ஆர்ப் பாட்டம் செய்தால், எரிச்சலோ கோபமோ கொள்ளக் கூடாது. பரிதாபப்படவும் கூடாது. அதை கண்டுகொள்ளாமல் இருக்க வேண்டும். தன்னை யாரும் கவனிக்க வில்லை என்பது தெரிந்ததும், குழந்தை அழுகையை நிறுத்திவிட்டு, இயல்பாகி விடும்.

குழந்தை உங்களிடம் கேட்கிற பொருள் அதற்குத் தேவையா.. இல்லையா.. என்பதை முடிவு செய்யவேண்டியது குழந்தை அல்ல.. நீங்கள்தான்!

சேட்டை செய்கிற உங்கள் குழந்தையை, இதே விஷமத்தை பக்கத்து வீட்டுக் குழந்தை செய்தால், எப்படி உணர்வீர்களோ, அதே கண்ணோட்டத்தோடு ji பாருங்கள். அப்போதுதான் உங்களால் சரியான முடிவை எடுக்க முடியும்.

‘பிடிவாதம், குழந்தைகளின் இயல்பான குணம்தான்!’ என்று நினைக்கிற எவரையுமே உலுக்கிப் போட்டுவிடக் கூடியது, நம் வாசகி ஒருவர் எழுதியிருந்த இந்த சம்பவம்..

‘எங்கள் பக்கத்து வீட்டுக்காரருக்கு ஒரே பையன் என்பதால், அவன் என்ன கேட்டாலும் உடனடியாக வாங்கிக் கொடுத்து விடுவார்கள். அவன் பிடிவாதமும் வீம்பும் தெரு முழுக்க பிரசித்தம்.

இரண்டு வருடங்களுக்கு முன்பு ஒருநாள்.. அப்போது அவன் ஏழாவது படித்துக் கொண்டிருந்தான். பள்ளியிலிருந்து வந்தவன், அவன் அப்பாவிடம் நண்பர்களுடன் சினிமாவுக்குப் போக காசு கேட்டான். ‘இது என்ன புதுப் பழக்கம்?’ என்று முதன்முறையாகக் கண்டித்தவர், பணம் தர மறுத்து விட்டு வெளியில் சென்றுவிட, ஒரு கெரசின் டின்னுடன் அழுது கொண்டே தடதடவென மொட்டை மாடிக்குப் போன அந்தப் பாவிப் பையன்.. தனக்குத் தானே தீ வைத்து.. ப்ச்.. பரிதாபம்!

தங்கள் அருமை புத்திரன், ‘ஐயோ.. எரியுதே..’ என்று அலறி அலறி, செத்துப்போன துக்கத்தைத் தாள முடியாமல், இன்றளவும் நடை பிணமாகவே வாழ்கிறார்கள் அந்தப் பெற்றவர்கள்..’

- என்று அந்தக் கடிதம் சொன்ன விஷயத்தின் உக்கிரத்தை நம்மால் தாளவே முடியவில்லை.

‘இந்தக் காலத்து குழந்தைகள் ‘சென்ஸிடிவ்’ ஆக இருக்கிறார்களா? அல்லது பெற்றவர்களுக்கு பிள்ளைகளை வளர்க்கத் தெரியவில்லையா?’ என்கிற அந்த வாசகியின் கேள்வியுடன், சென்னையைச் சேர்ந்த பிரபல குழந் தைகள் மனநல நிபுணர் ஜெயந்தினியை சந்தித்தோம்.

‘‘குழந்தைகள் பிடிவாதம் பிடிக்கிற விஷயத்தில், பெற்றவர்கள்தான் முதல் குற்றவாளிகள்!’’ என்றவர், பெற்றோர் செய்கிற தவறுகளை சுட்டிக் காட்டினார்.

‘‘நான் சில அம்மாக்களை சந்தித்திருக்கிறேன். ‘இவன் ஒரு விஷயத்தை நினைச் சுட்டான்னா, அழுது, அடம் பிடிச்சாவது சாதிச்சிடுவான்.. அப்பிடியே எங்கப்பா மாதிரி..’ என்றும், ‘நான் பசங்களுக்கு எதையுமே இல்லைனு சொல்றதில்லை. அந்தக் காலத்துல நாமதான் கஷ்டப்பட்டு வளர்ந்தோம். பசங்களுக்குக் கஷ்டம் தெரியக் கூடாது..’ என்றும் பெருமையுடன் சொல்வார்கள். இப்படி.. வெற்றுத் தாள் போல எதையும் ஏற்கத் தயாராக இருக்கிற குழந்தையின் மனதில், தான் நினைத்தது எல்லாம் நடக்கும் என்கிற எண்ணத்தை விதைத்து, அவர்கள் மனம் முழுக்க பிடிவாதத்தை இறைக்கிற தவறைச் செய்கிறவர்கள் பெற்றவர்கள் தான்! பெற்றோர் தங்கள் குழந்தையின் மீது உள்ள பாசத்தை வெளிப்படுத்தத்தான், இப்படி அவர்கள் கேட்பதையெல்லாம் வாங்கிக் கொடுக்கிறார்கள். உண்மையில், குழந்தையின் மீது பாசமும் அக்கறையும் இருக்கிறவர்கள், இப்படி நடந்து கொள்ளக் கூடாது..’’ என்றவர், அது ஏன் என்பதையும் விவரித்தார்.

‘‘குழந்தைக்கு ‘நோ’ என்கிற வார்த்தையை அழுத்தம் திருத்தமாகச் சொல்லாத வரையில், பெற்றோரின் எந்தக் கஷ்டமுமே குழந்தைக்குத் தெரியாது. அதோடு, ‘நமக்குச் செய்யவேண்டியது பெற்றவர்களான இவர்களின் கடமை.. செய்கிறார்கள்’ என்று ‘டேக்கன் ஃபார் கிரான்டட்’ ஆக.. அதாவது.. தனக்கு சாதகமாகத்தான் குழந்தை எடுத்துக் கொள்ளுமே தவிர, ‘நம் மேல் எத்தனை பிரியம் இவர்களுக்கு’ என்றெல்லாம் நினைக்கவே நினைக்காது.

மாறாக, ‘இந்தப் பொருளோட விலை ரொம்ப ஜாஸ்தி. அம்மா கிட்ட அவ்வளவு பணம் இல்ல..’ என்பது போன்ற உண்மையான காரணங்களை எடுத்துச் சொல்லவேண்டும். அப்போதுதான், குழந்தைக்கு பணத்தின் அருமையும், பெற்றோரின் அருமையும் தெரியும்.

எந்தக் குழந்தைக்கு கேட்டதெல்லாம் மிக எளிதாகக் கிடைத்து விடுகிறதோ.. அந்தக் குழந்தை, மனதைரியம் குறைந்ததாகவும், தோல்வியை தாங்கிக் கொள்கிற சக்தி இல்லாததாகவும்தான் வளருகிறது. இப்படிப்பட்ட குழந்தைகள்தான், தான் நினைத்த ஏதோ சிறு ஒரு விஷயத்தை அடைய முடியாவிட்டால்கூட மனம் உடைந்துபோய் வாழ்வில் நிம்மதியையும் சந்தோஷத்தையும் இழக்கத் தொடங்கி விடுகிறார்கள்’’ என்றவர், குழந்தைகளின் பிடிவாதம் எந்தக் கட்டத்தில் ஆபத்தானது என்பது பற்றியும் தெளிவுபடுத்தினார்.

‘‘பொதுவாக, பிடிவாதம் பிடிப்பது குழந்தை யின் இயல்புதான். ஏதோ ஒரு பொருளுக் காகவோ, என்றைக்கோ ஒருநாளோ பிடிவாதம் பிடிக்கிற குழந்தையை நினைத்து, பெற்றோர் பயப்படத் தேவையில்லை. அந்தப் பழக்கம் குழந்தை வளர வளர சரியாகிவிடும். ஆனால், குழந்தை எதற்கெடுத்தாலும் பிடிவாதம் பிடிக்கும்போதுதான் அது திருத்தப்பட வேண்டிய பிரச்னையாகிறது.

சின்ன விஷயத்துக்கெல்லாம் அழுது அடம்பிடிப்பது, கீழே விழுந்து புரள்வது, கையில் கிடைப்பதை எடுத்து வீசுவது.. என்று அதகளம் செய்து வளரும் குழந்தைகள், விளையாட்டில் சிறு தோல்வி யைக் கூடத் தாங்க முடியாமல், உடன் விளையாடும் குழந்தைகளை அடிப்பது, கிள்ளுவது, கடிப்பது போன்ற செயல்களில் ஈடுபடு வார்கள். காலப்போக்கில் தனக்கு ஒன்று கிடைக்கவில்லை என்றால் பெற்றோரைக்கூட மதிக்க மாட்டார்கள்!’’ என்றவர், முடிவாக சொன்னது ஒவ்வொரு பெற்றோருக்குமான எச்சரிக்கை..

‘‘பொதுவாகவே, வாழ்வில் தவறான முடிவு எடுக்கும் பெரும் பான்மையானவர்கள், அதிக பிடிவாத குணமுடையவர்கள்தான். அனுசரித்துப் போகாமல், தான் நினைத்ததுதான் நடக்க வேண்டும் என்று பிடிவாதம் பிடிக்கிறவர்கள், தொழிலில் மட்டுமல்ல.. திருமண வாழ்க்கையிலும் தோல்வியையே அடைகிறார்கள். தானும் வாழாமல், தன்னைச் சார்ந்தவர்களையும் வாழவிடாமல், பிரச்னைக் குரிய நபர்களாகவே மாறிப் போகிறார்கள்’’.

Saturday, June 13, 2020

Padithathil Pidithathu #9

ஒரு காலத்தில் மன்னன் ஒருவன் இருந்தான்..

ஒரு நாள் இரவு...  மன்னனின் காதில் ஒரு பூச்சி நுழைந்து விட்டது .

காதில் இருந்த பூச்சியை எடுக்கமன்னனைச் சேர்ந்தவர்கள் படாத பாடுபட்டார்கள்

அவர்கள் முயற்சி எதுவும் பலிக்கவில்லை.

ராஜவைத்தியரிடம் பிரச்னையைச் சொன்னான் .

அவரும் எவ்வளவோ பாடுபட்டார் .

தொலைதூரத்தில் இருந்து மூலிகைகள் வரவழைக்கப் பட்டன

 மூலிகையைப் பிழிந்து சாறு எடுத்து மன்னனின் காதிற்குள் விட்டார்கள்.

எதற்கும் பலன் இல்லை .

மன்னனின் காதில் உள்ள பூச்சி பிரச்னையைத் தீர்த்து வைப்பவர்களுக்கு பிரமாண்டமான பரிசுகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

எங்கிருந்தெல்லாமோ வைத்தியர்கள் வந்தார்கள் ,யாராலும் அந்தப் பூச்சியை வெளியே எடுக்க முடியவில்லை .

மன்னனின் காதிற்குள் அந்தப் பூச்சி அங்கும் இங்கும் பறந்துகொண்டிருந்ததால்,அவனால் நிம்மதியாக தூங்க முடியவில்லை

உணவு சாப்பிடுவது  குறைந்து 
மன்னன் தன் பொலிவு இழந்தான் .

ராஜ கம்பீரமாக உலா வந்து கொண்டிருந்தவன் ,
இப்போது பஞ்சத்தில் அடிபட்டவனைப்போல் காணப்பட்டான்

எந்த நேரமும் படுக்கையிலேயே இருந்தான் .

தன்னுடைய முடிவு நெருங்கிவிட்டது என்பதாக உணர்ந்தான்.

இந்த நேரத்தில் இமயமலையிலிருந்து ஒரு துறவி சீடர்கள் புடை சூழ நாட்டிற்கு வந்திருப்பதாக செய்திகள் வந்தன .

அரண்மனைக்கு வந்து சேர்ந்த துறவி
மன்னனின் காதை நன்றாகப் பரிசோதித்தார் .

பின் சிறிதுநேரம் தியானத்தில் ஆழ்ந்தார்.

"இது மிகவும் அபூர்வ வகை பூச்சி அரசே!

நம் பக்கத்து மூலிகைகளுக்கு இது கட்டுப்படாது .

இங்கிருந்து நூறு யோஜனை தூரத்தில் உள்ள ஒரு காட்டில் விளையும் அபூர்வமான ஒரு மூலிகைக்குத்தான் இந்தப் பூச்சி கட்டுப்படும் .

இன்றே என் சீடர்களை அனுப்பி அந்த மூலிகையை கொண்டு வர செய்கிறேன்,அதன்பின் உங்கள் பிரச்னை முற்றிலுமாகத் தீர்ந்துவிடும்." என்றார்.

அந்த மூலிகையை எப்படி இனம் கண்டுகொள்ள வேண்டும் என்று விளக்கிச் சொல்லி,தன் சீடர்களில் சிறந்தவர்கள் இருவரை அனுப்பி வைத்தார் துறவி

மூன்றே வாரங்களில் சீடர்கள் மூலிகையுடன் வந்தார்கள்.

அது 'ராஜ மூலிகை' என்பதால்
அதை வைத்து ஒரு நாள் முழுவதும் பூஜை செய்யவேண்டும் என்று துறவி சொல்லி விட்டார் .

மறுநாள் காலை விடிவதற்கு முன்னால் ,பிரம்ம முகூர்த்த நேரத்தில் மன்னனின் காதில் அந்த மூலிகைச் சாறு அரைத்து ஊற்றப்பட்டது

அடுத்த சில நொடிகளில் செத்த பூச்சி வெளியில் வந்து விழுந்தது .

மன்னனிடம் அந்தப் பூச்சியைக் காட்டினார் துறவி .

துறவியின் கால்களில் விழுந்து வணங்கினான் மன்னன்.
 மன்னன்இப்போது நிம்மதியாகத் தூங்கினான் .

நன்றாக உண்டான்,பழைய பொலிவு திரும்பி விட்டது

துறவி விடை பெற்றுக்கொண்டார் .

அவர்கள் நாட்டு எல்லையைத் தாண்டியதும் ,துறவியின் சீடர்களில் ஒருவன் கேட்டான்

""குருதேவா...!!! அந்த அற்புதமான மூலிகை பற்றிக் கொஞ்சம் சொல்லுங்களேன்...!!!'

துறவி புன்னகை பூத்தார் !

"பூச்சி அத்தனை நாள் எங்கே இருந்தது என்று நினைக்கிறீர்கள்?

மன்னனின் செவிக்குள் .

அதுதான் இல்லை

மன்னனின் காதிற்குள் பூச்சி போனது உண்மையாக இருந்திருக்கலாம் .

போன சிறிது நேரத்திலேயே அது செத்திருக்கும் ,இல்லை வெளியே வந்திருக்கும்

அந்தச் சிறிது நேரத்தில்
அது மன்னனின் செவிகளுக்குள் ஒரு குறுகுறுப்பு உணர்வை ஏற்படுத்திவிட்டது .

அது மன்னனின் மனதில் அது  குறுகுறுப்பு உணர்வை ஆழமாகப் பதிந்துவிட்டது

எனவே அந்தப் பூச்சிகாதுக்குள் உயிருடன் இருப்பதாகவே மன்னன் நினைத்துக் கொண்டிருந்தான்

"குருதேவா அதை விளக்கிச் சொல்லி மன்னனை குணப்படுத்தியிருக்கலாமே...???''

மனோவியாதியை அப்படி எளிதாகக்குணப்படுத்திவிட முடியாது அப்பனே....!!!

பிரச்னை தீவிரமானது என்று மன்னன் நினைத்துக்  கொண்டிருந்தான் .

அதனால் தான் நானும் சிகிச்சை தீவிரமானது என்று பாசாங்கு செய்தேன் .

தொலைதூரத்தில் இருந்து மூலிகை வர வேண்டும் என்று பொய் சொன்னேன் .

அந்த மூலிகை நம் ஊரில் சாதாரணமாக விளையும் திருநீற்று பச்சிலைதான் .

ஆனால் அதை யாரும் கவனிக்காமல் பார்த்துக் கொண்டேன்

பின் ஒருநாள் பூஜை செய்து
காலை இருட்டு நேரத்தில் மூலிகைச் சாற்றை மன்னனின் காதில் விட்டு
ஏற்கனவே பிடித்து வைத்திருந்த ஒரு செத்த பூச்சியைக்காட்டினேன் .

மன்னன் நம்பி விட்டான்

அவன் நோயும் தீர்ந்தது.

சீடர்கள் வியப்புத் தாளாமல் தங்கள் குருவைப் பார்த்தார்கள்.

இன்று மனித இனத்தைப் பீடித்திருக்கும் நோய்களில் பெரும்பான்மையானவை
நம் மனங்களில் தான் இருக்கின்றன.

காதில் நுழைந்த பூச்சி செத்துவிட்டாலும், மனதில் நுழைந்தபூச்சிதான் நம்மைச் சாகடித்துக் கொண்டிருக்கிறது

பூச்சி காதில் இல்லை ,மனதில் இருக்கிறது

.''இது நகைச்சுவை அல்ல;

இது வாழ்வியல் கருத்தை நச்சென்று சொல்லும்  விளக்கம் .

காதில் இல்லாத பூச்சிக்காகத் தன் உடல்நலத்தைக் கெடுத்துக் கொண்ட மன்னன் போல

இல்லாத பிரச்னையை, இருப்பதாக நினைத்துக்கொண்டு,நம்மில் பலபேர் தவித்துக் கொண்டிருக்கிறோம்!

("கொரோனா, இல்லவே யில்லை", என்று சொல்லவில்லை. அது கொடுக்கும் தொல்லையை விட,

"அதைப் பற்றி ஏற்படுத்தப்  பட்டிருக்கிற பயமே", அதிக தொல்லை கொடுக்கிது!

அவரவர்கள் " கொரோனா தொற்றை" -   "கொரோனாவை" அல்ல!
"தொற்றை"-
கட்டுப்படுத்துவதிலேயே "போட்டி போட்டுக் கொண்டு" - பந்தயத்தில் ஓடுவது போல், ஓடிக்கொண் டிருக்கிறார்கள்! ஆச்சர்யமாக இருக் கிறது!

 இத்தனைக்கும் -

இது , "கொல்லும் நோய் அல்ல"! இதனால் பாதிக்கப் பட்டவர்களில் 80 சதவிகிதம் பேர் சாதாரண சிகிச்சையில் குணம் அடைகிறார்கள். 15 சதவீதம் பேருக்கு ஆக்ஸிஜன் தேவைப் படுகிறது, மற்றவர்களுக்கு தான் பிளாஸ்மா தெரபி முதலியவை செய்யவேண்டி வரும்!", என்றெல்லாம் சொல்லப் பட்டிருக்கிறது!

"தொற்றை கண்டுபிடிப்பதில் காட்டும் .
முயற்சியை" விட

"எல்லோருக்கும்,நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கான முயற்சி", அதிகமாக இருக்க வேண்டியது அவசியம் இல்லையா?

Immunity to be increased - நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டும்.

ஏழு கோடி பேருக்கு, பதினாலு கோடி மாஸ்க் கொடுப்பதை விட,

ஏழு கோடி பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரைகளும் கப சுர சூரணமும் கொடுப்பது சிறந்தது!

மாஸ்க் கொடுப்து - நோய்க்கு பயப்படுவது - பயந்துகொண்டே இருக்க வேண்டியது தான்!

நோய் எதிர்ப்பு மருந்தைக் கொடுப்பது - நோயை (நம்மிடம்  வருவதற்கு) - அஞ்சும்படி செய்வது!

இதில் எது சரி? நாம் , கொரோனாவிற்கு அஞ்சிக் கொண்டே யிருப்பதா?

அல்லது

கொரோனாவை, நம்மிடம் வருவதற்கு, அஞ்சும்படி செய்வதா? எது சரி என்று நீங்களே முடிவு செய்து கொள்ளலாம்
💐💐💐💐💐💐💐💐💐💐

Friday, June 12, 2020

Padithathil Pidithathu #8

*திருத்தப்பட்டது*


இந்த முழு உலகமும் பாவத்துடன் போராடுகிறது.
நினைவில் கொள்ளுங்கள் நீங்கள் போராட வேண்டியது பாவிகளோடு அல்ல பாவத்துடன்.
அவர்களுக்கு எதிராக பாகுபாடு காட்டாதீர்கள்.
அவர்களை பத்திரமாக பார்த்துக்கொள்ளுங்கள்.
இந்த பாவிகளை காப்பாற்ற பாடுபடும் ஊழியர்கள், சுவிஷேசகர்கள், போதகர்கள் மற்றும் ஆராதனை வீரர்களை மதிப்புடன் நடத்துங்கள் முழு ஒத்துழைப்பு தாருங்கள்.
இந்த பாவிகளை இரட்சிப்பிற்குள் நடத்துவோம்  அதனால் இந்த உலகத்தை  வெற்றிகொள்வோம்.🤩

Thursday, June 11, 2020

Inner Beauty

Inner Beauty

Being beautiful on the outside doesn’t make us beautiful on the inside! People spend hours in gyms, hairdressers, parlours and working on their outer appearance. What really matters is what’s going on inside. We need to work harder on our inner beauty. Can we spend 7 minutes everyday introspecting our inner beauty spots:
1.Affability
2.Gentility
3.Modesty
4.Purity
5.Generosity
6.Humility
7.Honesty

Wednesday, June 10, 2020

Biblical characters and their victory

தன்னில் சந்ததி பிறக்கும் என்று
காத்திருந்த வயதான ஆபிரகாம் !

பறிபோன துரவில் பரிதபிக்காமல் 
இடம் பெயர்ந்த ஈசாக்கு !

கொஞ்சம் பெலன் இருந்தும்
தூதனோடு போராடிய யாக்கோபு !

தவறான குற்றச்சாட்டில் சிறையில்
சிக்கிய யோசேப்பு !

வனாந்திரத்தில் எதுவுமறியா நிற்கதியாக
 நின்று தவித்த மோசே !

தேவன் என்னோடில்லை என
போரடித்த கிதியோன் !

பிள்ளை இல்லையென ஆலயத்தின்
முன் அழுத அன்னாள் !

சவுலுக்கு பயந்து காடுகாடாக
சுற்றித்திரிந்த தாவீது !

நானுற்றைம்பது தீர்க்கதரிசிகளுக்கு
முன்னே நின்ற ஒரே எலியா !

முற்றிலும் எதிர்எதிரான சூழலில்
அழுதுபுலம்பிய எரேமியா !

சாகவேண்டிய நிலையில் தேவனை
பார்ப்பேன் என ஏங்கிய யோபு !

வாழ்க்கையே பாழானாலும்
ஏழ்மையில் பின்வந்த ரூத் !

மீன் இல்லாத வலைகளோடு
வெறுமையாய் நின்ற பேதுரு !

வைத்தியர்களால் கைவிடப்பட்ட
பெரும்பாடுள்ள ஸ்தீரி !

சாகப்போகிறோம் என முடிவில்
இயேசுவின் முன் நின்ற வேசி !

அவர்களுடைய அன்றைய நிலைமையை மாற்றி உயர்த்தியவர். கலங்காதே, இன்றும் உன் நிலைமை எதுவாயிருந்தாலும்
கர்த்தர் மாற்றுவார், அவர் தான் உன்னை
அழைத்தார், அவரே நடத்துவார்.

வெற்றி நிச்சயம்!
விடுதலை சத்தியம்!!உன்னை
அழைத்தார், அவரே நடத்துவார்.

வெற்றி நிச்சயம்!
விடுதலை சத்தியம்!!

HEAL MY SOUL, LORD!

HEAL MY SOUL, LORD!

 “ I said, “Lord, be merciful to me; heal my soul, for I have sinned against you” (Psalm 41:4).

 The sickness afflicting the soul is severe than the sickness affecting the body. The sinful habits which are admitted into the souls bring sickness to the mind and make one dead even while being alive. The sickness in the soul is the cause of many physical illnesses. 

 A hen which had been brought up well at a home fell ill all of a sudden. The hen which was hale and healthy suddenly became immobile. The people at home took all measures to bring it back to normalcy. They gave it onion and grains to eat and water to drink. But it refused to take anything.

 In the end, they decided to carry out a gastrointestinal surgery on it. During the surgery they found a pin piercing inside. The people removed the pin and completed the surgery with the required stitches. The hen became fully healed. Its movements and feeding habits became normal from then on.

 Similar to this, certain worries prick the souls as pins and make some people sick. Such people stumble after becoming devoid of peace and unrest ruling their souls. Some of them slowly slide towards death, being unable to tolerate the treacheries committed against them. If it is going to be a physical illness, a doctor could be approached for remedy. But, if the problem is in the soul where could one go? Yes. Jesus Christ who is the heavenly doctor alone could heal the souls.

 Is your soul afflicted with illness? How to identify the sickness in the soul? If the soul is afflicted with illness, one cannot read the Bible joyfully and praise God, getting filled with the Spirit. One’s mind will induce him to ignore the church service. Ultimately this will cause one to lose all his Spiritual happiness.
 
 Once, a rich man requested a servant of God to pray for his vision which had been impaired. The servant of God told him, Sir, this not a problem related to your eye but your soul. First of all, I would like to pray for your Salvation. Will you confess your sins? Will you allow the blood of Jesus Christ to wash your soul? If you do this, both your soul and eyes will get healed. The rich man submitted himself with tears and as said, both his soul and eyes were healed.

 Dear children of God, will you cry out saying, “Lord, be merciful to me; heal my soul” (Psalm 41:4).

 To meditate: “Who forgives all your iniquities, who heals all your diseases” (Psalm 103:3). 

படித்ததில் பிடித்தது #7

நிதானம் இருந்தால் படியுங்கள்

பிரதமர்                                     - குஜராத்தி..

உள்துறை அமைச்சர்           - குஜராத்தி..

தேர்தல் கமிஷன் ஆணையர் குஜராத்தி

ஆர.பி.ஐ கவர்னர்.                ...குஜராத்தி

அனில் அம்பானி                  - குஜராத்தி

முகேஷ் அம்பானி                 - குஜராத்தி

கௌதம் அதானி                  - குஜராத்தி

லலித் மோடி                            - குஜராத்தி

நீரவ் மோடி                              - குஜராத்தி

மெஹுல் பாய்                        - குஜராத்தி

அரசு நிறுவனம் தவிர்த்து,
EVM கள் தயாரித்து ,         
இதுவரைஅளித்தது           

   - குஜராத்தி

வங்கிக் கடன் அதிகம் 
பெற்றுள்ளது               

       -  குஜராத்திகள்

இராணுவத்தில் ....                 

    - 😄😄😄..!

ஒரு மாநிலத்தரே நாட்டை ஆள்வதுடன் நாடும் கொள்ளை அடிக்கபடுகிறது

 இந்தியாவே சுரண்டப்பட்டு கொண்டு இருக்கிறது"

நாட்டின் பொருளாதாரம் தவறான பொருளாதார கொள்கைகளாலும், சுரண்டல் களாலும், அதலபாதாளத்திற்கு சென்று கொண்டு உள்ளது !

நாட்டின் நிதிநிலைமை சுத்தமாக சரியில்லை, GST - பணமதிப்பிழப்பு போன்றவற்றால்

 ஏராளமானோர் நாளுக்கு நாள் வேலை இழந்து கொண்டு இருக்கிறார்கள் -

எண்ணற்ற பெருநிறுவனங்கள் இழுத்து மூடப்பட்டு கொண்டே இருக்கின்றன ...!

ஆளும் அரசின் நிர்வாகத்திறன் இன்மையும் தவறான பொருளாதாரக் கொள்கையும்,

 கார்ப்பரேட்டுகளுக்கு பல லட்சம் கோடிகளுக்கு மக்கள் வரிப்பணங்களை அள்ளி கொடுத்ததும் தான்  இந்த நிலைமைக்கு காரணம் என்று மிகப்பெரிய பொருளாதார நிபுணர்கள் குற்றம் சாட்டுகிறார்கள் !

இந்த நிலையில் தேவையில்லாமல் நிலவுக்கு எதற்கு ராக்கெட் என கேள்வி எழுப்பும் சமூக ஆர்வலர்கள்

தன் மீது வைக்கப்படும் விமர்சனங்களில் இருந்து மக்களை திசை திருப்புவதற்காக

நூதன முறையில் பல நாடகங்களை அரங்கேற்றுவது இந்த அரசுக்கு ஒன்றும் புதிதல்ல என்று குற்றம் சுமத்துகின்றனர் !

மோடி இஸ்ரோவில் கால் வைக்காமல் இருந்திருந்தாலே நிச்சயமாக விண்கலம் ஒழுங்காக தரையிறங்கி இருக்கும் என்று ஒரு புறம் நெட்டிசன்கள் கலாய்த்து தள்ளும் வேலையில்.....!

பல ஆயிரம் கோடி செலவு செய்து மக்களின் வரிப்பணத்தை வீணடித்து தேவையில்லாமல் சிலை வைப்பதும், பைசாவுக்கு பிரயோஜனம் இல்லாமல் ராக்கெட் விடுவதும்  கேவலத்திலும் கேவலம் என்று பொருளாதார நிபுணர்கள் சாடுகிறார்கள் !

இங்கு எண்ணற்றோர் பசிக்கு உணவில்லாமல்
சாகின்றார்கள்,

இன்னும் எத்தனை எத்தனையோ கிராமங்களுக்கு ஒழுங்காக சாலை வசதியோ மின்சார வசதியோ, நல்ல சுத்தமான குடிநீர் மற்றும் மருத்துவமனை உள்ளிட்ட அடிப்படை வசதிகளே கிடைக்கவில்லை,

 தேவையில்லாமல் வீணடிக்கப்படும் இது மாதிரியான பல ஆயிரம் கோடிகளை கொண்டு
 கொண்டு

மழைநீர் சேகரிப்பு,
புதிய தடுப்பு அணைகள் கட்டுதல்,
விவசாய நிலங்களை அதிகப்படுத்துதல்,
நதிகளை இணைத்தல்,
 புதிய வேலை வாய்ப்புகளை உண்டாக்குதல்,
நாட்டில் ஏழ்மையிலும் பஞ்சத்திலும் இருப்போருக்கு உதவி செய்தல்,
புதிய காடுகளை உருவாக்குதல் ! குக்கிராமங்களில் பள்ளிக்கூடங்கள் மற்றும் மருத்துவமனைகள் அமைத்தல் !

 போன்ற எண்ணற்ற பல பல நல்ல திட்டங்களை செய்யலாமே !

அதைவிடுத்து தவறான பொருளாதாரக் கொள்கைகளாலும்,
நாட்டில் கடவுள் பெயரில் பிரிவினைவாதத்தை உருவாக்கியும்,
போலி தேசபக்த கதைகளை கூறியும் - ஒன்றுக்கும் உதவாத தேவையற்ற திட்டங்களை வகுத்தும் ....!

நீதித்துறை , நிதித்துறை, என்று ஒவ்வொன்றாக சீரழித்து அவற்றைக் கெடுத்தும்,  மீடியாக்களை தொடர்ந்து தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டும் - போலிச் செய்திகள் மூலம் மக்களை திசைதிருப்பி எப்போதும் அவர்களை பரபரப்பாக வைத்துக்கொண்டும் ஏமாற்று நாடகங்கள் தொடர்ந்து நிகழ்த்தி நாட்டை நாசப்படுத்தி கொண்டு இருக்கிறார்கள் !

தேசபக்தி என்ற பெயரில் ராணுவ வீரர்களே பலிகடா களாக ஆக்கப்படும் நாட்டில் ,

 ஏழை மக்களும் விவசாயிகளும், நடுத்தர மக்களும் எப்படி நிம்மதியாக வாழ முடியும் !

சரியாக தெளிவாக கேமராவின் முன் நின்று நடிக்கும் தலைவரைத் தான் இந்த உலகமும், நாடும் நம்புகின்றன

நம்மில் பலருக்கும் கெட்டால் தான் புத்தி வரும் என்ற பழமொழிக்கு  பொறுமையாகவே பொருள்  புரிகிறது,

ஆனால் பலபேருக்கு பட்டாலும், கெட்டாலும் புத்தி வருவதே இல்லை

வாழ்க பாரதம் ஜெய் ஹிந்த் !

படித்ததில் பிடித்தது 

Wisdom in Bible - வேதத்தில் உள்ள ஞானம்

வேதத்தில் உள்ள ஞானம்→

1) உலக ஞானம் - 1 கொரி 3:19

2) ஏழையின் ஞானம் - பிரச 9:16

3) பரத்திலிருந்து வரும் ஞானம் - யாக் 3:17

4) இரட்சிப்புக்கேற்ற ஞானம் - 2 தீமோ 3:15

5) லெளகிக ஞானம் - கொலோ 2:8

6) மாம்சத்திற்கேற்ற ஞானம் - 2 கொரி 1:12

7) மனுஷ ஞானம் - 1 கொரி 2:5,4

I AM THIRSTY!

I AM THIRSTY!

 “ As the deer pants for the water brooks, so pants my soul for you, O God” (Psalm 42:1).

 David compares his love and desire over God with that of the deer and says “My soul thirsts for God, for the living God” (Psalm 42:2).

 Of all the animals, the deer has a special characteristic of finding the water brooks. The deer finds the location where water is available through sniffing and will run in that direction. While running so, all the way it will be expressing its desire by bellowing. No water other than the water brooks will quest the thirst of the deer. 

 See! When a lion or a bear feels thirsty, they will hunt another animal, drink its blood and quench their thirst. But the deer do not fall in this category and they do not even drink stagnated dirty water. What they desire to have is the running pure water of the brooks only.

 The people of the world try to quench their thirst through money, wealth, fellowship of the worldly friends, alcohol, gambling, cinemas and plays. But the fact is that these factors will only increase the thirst and not decrease. 

 But, Jesus Christ alone is the one who could quench your thirst. David says, “My soul thirsts for God, for the living God.” Yes. He alone is one to quench the thirst. When you say “God, you are enough for me, you are my part. What I need is your presence alone. It is you who has to fill my heart and comfort me” with thirst and desire, He will definitely quench your desire and thirst. 

 Find in the book of Psalms, in how many ways David reveals his thirst over God. He says, “One thing I have desired of the Lord, that will I seek: That I may dwell in the house of the Lord all the days of my life, to behold the beauty of the Lord and to inquire in His temple” (Psalm 27:4). Yes. This reveals David’s thirst over the glory of God and the temple of God.

 David not only had thirst over God but also over God’s words. He writes, “I opened my mouth and panted, for I longed for your commandments” (Psalm 119:131).

 To meditate: “With my soul I have desired you in the night, yes; by my spirit within me I will seek you early” (Isaiah 26:9). 

Corona Awareness

📣📣📣மருத்துவமனையில் இருந்து மீண்டு வரும் நோயாளிகளிடமிருந்து வந்த தகவல்கள் ...!!!

ஒவ்வொரு நாளும்,

1. Vit C-1000 எடுத்துக் கொள்ளுங்கள்
2. வைட்டமின் ஈ
3. 10:00 - 11:00 சூரிய ஒளி 15-20 நிமிடங்கள் அல்லது வைட்டமின் டி 3
4. முட்டை ஒன்று
5. தூக்கம் -7-8 மணி neram
6. தினமும் 1.5 lit சூடான நீரை குடிக்கவும்
7. ஒவ்வொரு உணவும் சூடாக இருக்க வேண்டும் (குளிர்ச்சியாக இருக்க கூடாது ).

இதைத்தான் நாங்கள் மருத்துவமனையில் செய்கிறோம்.

கொரோனா வைரஸிற்கான PH அளவு 5.5 முதல் 8.5 வரை மாறுபடும்.

வைரஸைத் தோற்கடிக்க நாம் செய்ய வேண்டியது என்னவென்றால், வைரஸின் PH அளவை விட அதிகமான கார உணவுகளை உட்கொள்வதுதான்.

அவற்றில் சில:
* எலுமிச்சை - 9.9 பி.எச்
* சுண்ணாம்பு - 8.2 பி.எச்
* வெண்ணெய் - 15.6 பி.எச்
* பூண்டு - 13.2 பி.எச்*
* மா - 8.7 பி.எச்
* டேன்ஜரின் - 8.5 பி.எச்
* அன்னாசிப்பழம் - 12.7 பி.எச்
* டேன்டேலியன் - 22.7 பி.எச்
* ஆரஞ்சு - 9.2 பி.எச்

📣உங்களுக்கு கொரோனா வைரஸ் இருப்பது எப்படி தெரியும்?

1. தொண்டையில் அரிப்பு
2. உலர் தொண்டை
3. உலர் இருமல்
4. அதிக வெப்பநிலை
5. மூச்சுத் திணறல்
6. வாசனை மற்றும் சுவை இழப்பு✨

எனவே இந்த அறிகுறிகளில் கவனம் செலுத்துங்கள், எலுமிச்சை மற்றும் பானத்துடன் வெதுவெதுப்பான நீரை விரைவாக எடுத்துக் கொள்ளுங்கள்.

📣இந்த தகவலை உங்களிடம் வைத்திருக்க வேண்டாம். உங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் கொடுங்கள். பத்திரமாக இருக்கவும்...,

Padithathil pidithathu #6

விரும்பிய உறவுகள்  வெறுக்கும் முன்பே
விலகி நிற்க கற்றுக்கொள்ள வேண்டும், இல்லை என்றால்
சில காயங்களுக்கு நியாயம் கேட்டு போராட வேண்டி இருக்கும் உயிர் உள்ளவரை!

இரண்டு பக்கமும் கூர்மையுள்ள கத்தியை ஜாக்கிரதையாக கையாள வேண்டும், அது போல
எந்த பக்கமும் சேரக்கூடிய மனிதர்களோடு ஜாக்கிரதையாகப் பழகவேண்டும்!!

நம்மளோட மதிப்பு என்னன்னு மத்தவங்களுக்கு தெரியறத விட நமக்கு தெரிஞ்சாலே போதும்,
நம்மள மதிக்காதவங்க பின்னாடி போகமாட்டோம்!!

Saturday, June 6, 2020

Trinitatis

Trinitatis
~~~~~~
On the Sunday after Pentecost we celebrate Trinitatis, the festival of the Holy Trinity. This feast goes back to the middle age and Martin Luther kept it. We are calling the following Sundays as Sundays after Trinity. When in the ancient church the Christian Creeds were formulated many theological disputes took place how to express the one God as Father, Son and Holy Spirit. How was the relationship between them? The Bible does not formulate a dogma of the  Holy Trinity. Yet in the Old Testament prefiguration could be found and the New Testament witnesses the three persons of God. The Jews and the Muslims who reject Jesus as Saviour cannot understand the Holy Trinity and accuse the Christians sometimes as believers in three gods. The Holy Trinity is a mystery but the activities of the three fold God are very clear : God the Father is the Creator, Jesus Christ the Son is the Saviour, the Holy Spirit is the Sanctifier. The selected Psalm for this Sunday is Ps.99 where we read the three fold Holy like the Trishagion of the Seraphim in Isaiah 6:3.
Let us pray with Bishop Johnson: 
O Triune God, I surrender my reasoning power that you have given me, so that it may be purified to grasp Your presence in my life. Amen.
- E.M. Siebert Johnson,
w/o. Rt.Rev.Dr.Gnanabaranam Johnson,
IX Bishop of Tranquebar.

Trinity Sunday - 4

Trinity Sunday - 4
-----------------------------
June 7 ,  2020  is called as the Trinity Sunday. Tertullian invented the word " Trinity "( Latin : "Trinitas"). Tertullian used the Latin term" Persona " to translate the Greek word " hypostasis " which is translated into English as " person." The term persona literally means " a mask, " such as that worn by an actor in a Roman drama. At the time of Tertullian,  actors wore masks to allow the audiences to understand which of the different characters in the drama they were playing. The term persona thus came to have a developed meaning, along the lines of " the role that someone is playing." It is quite possible that Tertullian wanted his readers to understand the idea of " one substance,  three persons" to mean that the one God played three distinct yet related roles in the great drama of human redemption. Here "Substance" is what three persons of the Trinity have in common. Six models were used to explain the Trinity : The Cappadocians, Augustine of Hippo, Karl Barth, Karl Rahner, Robert Jenson and John Macquarrie. The two heresies of Trinity are Modalism and Tritheism. According to Modalism one God is the Father who became the Son and later who became the Holy Spirit. In Tritheism there are three gods in the Trinity. Both Modalism and Tritheism are wrong teachings.
Reference :
  "The Doctrine of the Trinity" pp 319-344 in Christian Theology : An Introduction ,3rd edition by Alister E. McGrath, Blackwell Publishers, Oxford, 2001.
- Pr.S.John Madhiyazhagan

Monday, June 1, 2020

Sermon Websites for Reference

Sri Lankan blast - Beautifully written by an Indian convert sister.


Beautifully written by an Indian convert sister. (It is written to the killer who attacked Christians in SL)
(I) Appreciate that you made the effort to find out the timing of our  mass.  Appreciate that you learnt more about our religion to know that Sundays are the days we go to Church for the congregational prayers and Mass. But I guess there were some things you, rather unfortunately, didn’t get to learn. Perhaps you didn’t know that what you did made them Martyrs. And how you have single-handedly raised the statuses of our brothers and sisters in the eyes of their beloved Jesus with your actions. And how, through your actions, they will be raised as the most righteous and pious of  Christian's. Perhaps you didn’t know that doing what you did, at the time and place you chose, it actually meant that the last words that escaped their lips were probably words of remembrance and praise of Jesus. Which is a noble end many Christians could only dream of.   And perhaps you didn’t know, but what you did would almost guarantee them paradise.  Appreciate that you showed the world how Christi and welcome, with open arms, even people like yourself into our Church, which is our second home.  Appreciate you for showing that our Church have no locks or gates, and are unguarded because everyone and anyone is welcome to be with us.  Appreciate you for allowing the world to see the powerful image of men you injured, lying on back on the stretcher with his index finger raised high, as a declaration of his faith and complete trust in Jesus.  Appreciate how you brought the Churches, Government and communities together to stand with us. Appreciate that you made countless Srilankans come out of their homes to visit the Church nearest to them with flowers with beautiful messages of peace and love. You have broken many hearts and you have made the world weep. You have left a huge void.  But what you also have done have brought us closer together. And it has strengthened our faith and resolve. In the coming weeks, more people will turn up in the Church, a place you hate so much, fortified by the strength in our faith, and inspired by our fallen brothers and sisters. In the coming weeks, more non Christians will turn up at the gates of Churches with fresh flowers and beautifully handwritten notes. They may not have known where the Church in their area was. But now, they do. All because of you.  You may have achieved your aim of intended destruction, but I guess you failed to incite hatred, fear and despair in all of us.
And while I understand that it may have been your objective, I hate to say that after all of that elaborate planning, and the perverse and wretched efforts on your part, you still failed to drive a divide among the the Catholics and non-Christians in the world.
For that, I can’t say that I’m sorry.

THE PERILS OF PRAYERLESSNESS.

THE PERILS OF PRAYERLESSNESS.
 (1) Prayerlessness is: a sin (1Samuel 12:23).
 (2) Prayerlessness is: the fastest and surest way to become a sinner.
 (3) Prayerlessness is an outright/direct rebellion against God.
 (4) Prayerlessness is the fastest way to cooperate with the devil.
 (5) Prayerlessness is telling God to stop what He has started.
 (6) Prayerlessness is continuing in the flesh what began in the spirit.
 (7) Prayerlessness is asking God to do His worst. (Ezekiel 22:30,31)
 (8) Prayerlessness is taking over from God (John 15:14)
 (9) Prayerlessness is a symptom of backsliding
 (10) Prayerlessness withdraw the presence of God.
 (11) Prayerlessness limit the manifestation of the sons of God on earth (Matthew 18:18; 17:21)
 (12) Prayerlessness is conspiring to reduce the kingdom of God on earth (Matthew 9:37,38).
 (13) A Prayerless Christian will replace prayer with; Church attendance, giving to the poor, visitations, observance of rules and regulations, dos and don'ts.
 (14) The quickest way for a Christian to die is through Prayerlessness.
 (15) Talkativeness is a symptom of Prayerlessness.
 (16) Offerings tithing, giving to the poor, visitations, helping the poor; are all good Christian virtue but is not a substitute for Prayer.
 (17) A Prayerless Christian is not a holy Christian ( Luke 22:40)
 (18) To be Prayerless is to become sinful ( Matthew 26:41 Mark 14:38)
 (19) To be Prayerless is to become unworthy ( Luke 21:36)
 (20) To be Prayerless is to be unprepared for the rapture ( Mark 13:33)
 (21) Praying unscriptural prayers is  Prayerlessness ( 1John 5:14)
 (22) Praying without faith is Prayerlessness ( James 1:6-8)
 (23) Praying without concentration is Prayerlessness (Matthew 15:8)
 (24) Praying selfish prayers is Prayerlessness (James 4:3)
 (25) Prayer in sin is Prayerlessness (Psalm 66:18)
 (26) Failure to improve in your prayer life for years is Prayerlessness (Matthew 26:40-41)
 (27) The word of God is dull in the ears of a Prayerless Christian (Hebrews 4:2)
 Note: A day without prayer is a minus in your life. Therefore, Pray without ceasing”

Padithathil pidithathu #5

உலகில் உள்ள பெரிய பெரிய நாடுகள் எல்லாம் தங்கள் நாட்டுக்கு அருகில் உள்ள குட்டி குட்டி தீவுகள் மீது போர்தொடுத்து அவற்றை ஆக்கிரமிக்க தொடங்கிய காலகட்டம்!

ஒரு கப்பலில் 500 வீரர்களை அனுப்பி 500 பேர் மக்கள்தொகை கொண்ட ஆதிவாசிகள் வாழ்கின்ற ஒரு தீவை கைப்பற்ற அனுப்பினார்கள் கப்பல் தீவை சென்றடைந்தது, சிலநாட்களில் திரும்பிவந்தது, 500 வீரர்களும் கைகால் உடைந்த நிலையில் தொற்றுபோய் திரும்பிவந்தார்கள், ஆதிவாசிகள் பின்னி எடுத்துவிட்டார்கள்,

அடுத்த நாள் 1000 வீரர்களை கப்பலில் அனுப்பினார்கள் 1000 வீரர்களும் கைகால் இழந்த நிலையில் பயந்து ஓடிவந்தார்கள், மீண்டும் 2000 பேரை அனுப்பினார்கள் அவர்களுக்கும் அதே கதிதான், பின் 5000 பேர்! அவர்களுக்கும் அதே கதி!

இவர்களுக்கு ஒன்றுமே புரியவில்லை வெறும் 500 ஆதிவாசிகள் ஆயுதங்களுடன் சென்ற 5000 பேரையும் தோற்கடித்து கைகால்களை உடைத்து திருப்பி அனுப்பிவிட்டார்களே எப்படி முடிந்தது என்று தீவிரமாக யோசித்தார்கள். பின் ஒரு முடிவுக்கு வந்தார்கள்,

இந்த முறை வெறும் 500 பேரை மட்டுமே கப்பலில் அனுப்பினார்கள் இரண்டு நாள் நடந்த தீவிர சண்டையில் ஆதிவாசிகளை தோற்கடித்துவிட்டார்கள் !

5000 பேர் சென்று தோற்ற இடத்தில் வெறும் 500 பேர் சென்று எப்படி ஜெயித்தார்கள்?!?!

இந்த முறை ஒரே ஒரு மாற்றத்தைதான் செய்திருந்தார்கள்,
500 பேரை தீவில் இறக்கியதும் கப்பல் திரும்பிவிட்டது. இனிமேல் இந்த தீவில் இருந்து திரும்பி செல்ல முடியாது, உயிருடன் வாழவேண்டும் என்றால் தீவை கைப்பற்றியே ஆகவேண்டும்! இந்த நெருக்கடிதான் அவர்களை ஜெயிக்கவைத்தது!

லட்சியத்தில் உறுதியாக இருப்பதைவிட அதை அடைவதற்கான முயற்சியில் மிகவும் உறுதியாக இருந்தால் மட்டுமே வெற்றிபெற முடியும் படிக்கட்டில் இறங்கி நீச்சல் கற்றுக்கொள்பவனை விட மேலிருந்து குதிப்பவனே எளிதில் நீந்துகிறான்!

Padithathil Pidithathu #4

ஒரு காட்டில் சிங்க ராஜாவின் பிறந்த நாள் . காடே அல்லோல கல்லோலப் பட்டது . எங்கும் அலங்காரங்கள் , விழாக்கோலமாய் அமர்க்களப் பட்டது .
                ஆடல் , பாடல் , கலை நிகழ்ச்சிகள் என்று எங்கு பார்த்தாலும் கேளிக்கைகள் . அதிகாலை முதலே விருந்து துவங்கி விட்டது . காட்டு மிருகங்கள் எல்லாமே குதூகலமாகத் திரிந்தன .
               வழக்கமாய் சிங்க ராஜாவின் பிறந்த நாளில் இவையெல்லாம் நடப்பது வழக்கந்தான் என்றாலும் , சிங்க ராஜா அதிகமாய் விரும்புவது அந்த நாளில் நடக்கும் ஓட்டப் பந்தயத்தைத்தான் . ஓட்டப் பந்தயம் என்றால் ராஜாவுக்குக் கொள்ளைப் பிரியம் . ஒவ்வொரு மிருகத்துக்குமே ஓடுகிற திறன் அவசியம் என்று சிங்க ராஜா வலியுறுத்தியது .
                 ஒவ்வொரு ஆண்டிலும் பல மிருகங்கள் கலந்து கொண்டாலும் , வழக்கமாய் முதல் பரிசு பெறுவது மான்தான் . மிகுந்த கவனத்துடன் புயல் காற்றைப் போல ஓடி முதல் பரிசை வென்றுவிடும் .
                 இந்த முறை போட்டியை இன்னும் சுவாரஸ்யமாக்க ராஜா ஒரு சிறப்புப் பரிசை அறிவித்தது . முதல் பரிசு பெறுகிற மிருகத்துக்கு ' ஓட்டத்தின் ராஜா ' என்ற சிறப்புப் பெயரும் சூட்டி ஒரு கிரீடத்தையும் அணிவிக்கப் போவதாக அறிவித்தது .
                இந்த அறிவிப்பைக் கேட்டதும் எல்லா மிருகங்களுக்குமே ஆசை வந்துவிட்டது . பின்னே ராஜாவால் சிறப்புப் பெயர் சூட்டப்பட்டு , முடிசூட்டப்பட வாய்ப்புக் கிடைப்பது எத்தனை பெரிய பாக்கியம் ?
               வருடா வருடம் மான் மட்டுமே ஜெயித்துக் கொண்டிருப்பதைக் கண்டு நரிக்கு வயிறெல்லாம் எரிந்தது . இந்த வருடமும் மான் ஜெயித்தால் கிரீடம் , பட்டம் எல்லாம் அதற்கே சொந்தமாகிவிடும் .
" நான் ஜெயிக்கிறோனோ இல்லையோ , மான் தோற்க வேண்டும் . அதற்கு இந்த ஆண்டில் ராஜா கொடுக்கும் பரிசு கிடைக்கவே கூடாது . ஏதாவது செய்து இம்முறை மானுக்கு வெற்றி கிடைக்காதபடி செய்துவிடவேண்டும் " என்று சதித்திட்டம் ஒன்றைத் தீட்டியது .
                 கடந்த ஆண்டில் மானைத் தோற்கடிக்க அதன் ஓடுபாதையில் முள்ளைப் போட்டு வைத்துப் பார்த்தது . ஆனால் மானின் உறுதியான குளம்புகள் முட்களையெல்லாம் நொறுக்கி விட்டன. ஒருமுறை கல்லை வீசி வைத்துப்பார்த்தது . மான் துள்ளி ஓடியதில் கல் எதுவும் அதன் கால்களில் கூடப் படவில்லை . ஒரு முறை ஒரு தேளை வழியில் காத்திருந்து கொட்டச் சொன்னது . மானின் கால் பட்டு அதுவும் கூழாகி விட்டது .
                 இப்படி எத்தனையோ சூழ்ச்சிகள் செய்தும் மானிடம் எடுபடவில்லை . ஒரு அளவுக்கு மேல் ஏதாவது செய்யப் போய் , மானுக்கு சந்தேகம் வந்து , அது ராஜாவிடம் புகார் சொல்லிப் பிடிபட்டு விட்டால் அவ்வளவுதான் . நரியின் கதை முடிந்து விடும் . எனவே இம்முறை வேறொரு வகையில் யோகித்தது .
                 போட்டிக்கான நேரம் நெருங்கிக் கொண்டு இருந்தது . திடீரென்று நரிக்கு ஒரு யோசனை பளிச்சிட்டது . உடனே ஓடிப்போய்த் தன் நண்பன் பாம்பை சந்தித்தது . பாம்பும் நரியைப் போலவே வஞ்சக புத்தி கொண்டதுதான் . நரி , பாம்பிடம் தனது திட்டத்தை விவரித்தது . பாம்பும் சந்தோஷமாக ஒப்புக் கொண்டது .
                மான் போட்டிக்கு ஆயத்தமாகிக் கொண்டிருக்கும் இடத்துக்குப் பாம்பு சென்று மானிடம் பேச்சுக் கொடுத்தது .
" நண்பா .வழக்கம் போல  இந்த வருஷமும் நீதான் ஜெயிக்கப் போற . ராஜா கொடுக்கப் போற பரிசு இந்த வருஷமும் உனக்குத்தான் " என்றது தொடர்ச்சி நாளை

Padithathil Pidithathu #3

உலகப் புகழ்பெற்ற கால்பந்து வீரரான 28 வயதான சாடியோ மானே செனகல் (மேற்கு ஆப்பிரிக்கா), இந்திய ரூபாயில் வாரத்திற்கு ரூ. 14 கோடி சம்பாதிப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

அவ்வளவு சம்பாதிக்கும் அவர் டிஸ்பிளே  உடைந்த மொபைலுடன்   பல இடங்களில் காணப்பட்டார்.

ஒரு நேர்காணலில், அதைப் பற்றி கேட்கப்பட்டபோது..

"நான் அதை சரிசெய்வேன், டிஸ்பிளே மாற்றிவிடுவேன்" என்றார்.

நீங்கள் ஏன் டிஸ்பிளே மாற்றவேண்டும்..? பல கோடிகள் சம்பாதிக்கும் நீங்கள் புதிய மொபைலே வாங்கலாமே என்று கேட்கப்பட்டது.

"என்னால் ஆயிரம் மொபைல்கள், 10 ஃபெராரிஸ், 2 ஜெட் விமானங்கள், டயமண்ட் கடிகாரங்களை வாங்கமுடியும்.  ஆனால், இதையெல்லாம் நான் ஏன் வாங்கணும்..?

நான் வறுமையைப் பார்த்திருக்கிறேன், சாப்பாட்டிற்கு கஷ்டப்பட்டுள்ளேன். என்னால் படிக்க முடியவில்லை.

எனக்கு காலணிகள் இல்லை. காலணிகள் இல்லாமல் விளையாடினேன், நல்ல உடைகள் இல்லை, சாப்பிடவில்லை.

ஆனால், இன்று நான் நிறைய பணத்தை சம்பாதிக்கிறேன். அதனால்தான் சம்பாதித்த பணத்தில் மக்கள் படிக்கும்படி பள்ளிகளை உருவாக்கியுள்ளேன்.. என் நாட்டில் உள்ள ஏழை  குழந்தைகளுக்கு புதிய காலணிகளும், உடைகளும்,  உணவும் கொடுக்கிறேன்.

வசதியாக வாழ்வதற்கு பதிலாக  அதை என் மக்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்"
என்றார் அந்த அற்புத மனிதன்..!

Padithathil Pidithathu #2

கொஞ்சம், சாமர்த்தியம், கொஞ்சம் நடிப்பு, கொஞ்சம் பொய், கொஞ்சம் உண்மை இருந்தாதான் இந்த உலகத்துல வாழமுடியும். முழுக்க முழுக்க
நேர்மை எல்லாம் ஒரு பைசாவுக்கும் உதவாது!

சில மனிதர்கள் பொறுமையை முட்டாள்தனமாக கருதுகிறார்கள்,
ஆனால் காத்த பொறுமைக்கான வெகுமதியை புத்திசாலிகள் மட்டுமே உணர முடியும், முட்டாள்களால் முடியாது !!

உங்களை புரிந்தவர்களுக்கு மட்டும் நல்ல புத்தகமாக இருந்தால் போதும்,
புரியாதவர்களுக்கு புதிராகவே இருந்து விடுங்கள்!!!

Padithathi Pidithathu #1

"ஐயோ அக்கிரமம் செய்தவன் நன்றாக இருக்கிறானே" என்று ஆண்டவன் மேல் நம்பிக்கை இழக்காதீர்கள்

இதோ அதற்கு ஓர் உதாரணம்:

அந்த நாட்டு அரசன் தன் மக்கள் நலப் பணிகளைச் செயல்படுத்த மூன்று அதிகாரிகளை நியமித்து, அவர்களுக்கு வானளாவிய அதிகாரங்களையும் கொடுத்தான்.

ஒவ்வொரு அமைச்சருக்கும் சமமான ஊதியத்தையும் அந்தஸ்தையும் வழங்கினான்.

மக்கள் நலப் பணிகளில் ஊழல் நடப்பதாகப் புகார்கள் குவிந்தன. அதிகாரிகளைக் கூப்பிட்டு விசாரித்தான் மன்னன்.

""ஐயோ நாங்கள் உத்தமர்கள் மன்னா! மக்களுக்காகவே தியாக வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறோம்'' என்று சிந்து பாடினார்கள் அதிகாரிகள்.

"செய்யும் ஊழலை மிகவும் திறமையாகச் செய்திருக்கிறார்கள்.

இந்த மூவருமே ஊழல் பெருச்சாளிகளா? அல்லது விதிவிலக்குகள் ஏதாவது இருக்கிறதா? என்பதை அறிய வேண்டும்'' என்று நினைத்தான் மன்னன்.

அவர்களை அனுப்பிவிட்டு யோசனையில் ஆழ்ந்தான்.

இரண்டு நாட்கள் கழித்து அதிகாரிகள் மீண்டும் அழைக்கப்பட்டார்கள்.

""மக்கள் பணியில் இருக்கும் உங்களுக்கு களப்பயிற்சி தரப் போகிறேன்.

உங்களிடம் ஒரு பெரிய சாக்கு தரப்படும். அதை எடுத்துக்கொண்டு நம் நாட்டின் எல்லைகளில் உள்ள காட்டுப் பகுதிகளுக்குச் செல்லுங்கள்.

உங்களிடம் கொடுக்கப்பட்டிருக்கும் சாக்குகளை காய், கனி, கிழங்குகளால் நிரப்ப வேண்டும்.

அப்படி நீங்கள் நிரப்பும் பொருட்களை வைத்துக்கொண்டு ஒரு மனிதன் இரண்டு வாரம் சாப்பிட வேண்டும்.

நீங்கள் கொண்டு வரும் சாக்குகளை நாங்கள் யாரும் பரிசோதிக்க மாட்டோம்.

அதை அப்படியே ஒரு ஏழையிடம் கொடுத்து விடுவோம்.

அவன் அதை உண்டு உங்களை வாழ்த்த வேண்டும்..

இந்தப் பயிற்சி திட்டம் வெற்றி பெற்றால், மக்கள் நலப் பணியாளர்களை இந்தப் பணியில் அமர்த்தி மக்களின் பசி போக்கலாம்.''

மறுநாள் மூவரும் வெவ்வேறு காடுகளுக்கு அனுப்பப்பட்டார்கள்.

காடுகளில் காய் கனி கிழங்குகளுக்குப் பஞ்சமில்லைதான்.

ஆனால், அவற்றை அலைந்து திரிந்து சேகரிக்க வேண்டியிருந்தது.

மேலும் அதை சேகரிக்கும் வரை அதிகாரிகளுக்கும் காட்டில் கிடைக்கும் காய் கனிகள்தான் உணவு.

மூன்று அதிகாரிகளும் அரண்மனை போன்ற வீடுகளில் சொகுசாக வாழ்ந்து பழகியவர்கள்.

அதனால் அவர்களுக்கு அந்த வேலை மிகவும் கடினமாக இருந்தது.

முதல் அதிகாரி நல்ல பொருட்களைச் சேகரித்தார்.

 நாம் துன்பப்பட்டாலும் இந்தத் திட்டம் வெற்றி பெற்றால் மக்கள் பசியாறுவார்களே என்ற நினைப்பே அவருக்கு உந்து சக்தியாக இருந்தது.

சாக்குப்பையை நிரப்ப அவருக்கு மூன்று, நான்கு நாட்கள் தேவைப்பட்டது.

ஆனால், உள்ளே இருந்தவை எல்லாம் தரமான பொருட்கள்.

இரண்டாமவர் கொஞ்சம் குறுக்கு வழியில் யோசித்தார்.

பையை யாரும் சோதிக்க மாட்டார்கள் என்று மன்னரே சொல்லிவிட்டார்.

சோதித்தாலும் மேலோட்டமாகத்தான் பார்ப்பார்கள்.

மேலே நல்ல தரமான பொருட்களை வைத்துவிடலாம். கீழே அழுகிய பழங்கள், கொட்டைகள், என்று வைத்துவிட்டால் யாருக்கு என்ன தெரியப் போகிறது? என்று எண்ணி அப்படியே செய்த அந்த நபர், ஒரே நாளில் தன் பணியை முடித்துவிட்டார்.

மூன்றாம் அதிகாரி அந்த அளவிற்குக்கூடச் சிரமப்படவில்லை.

பைக்குள் என்ன இருக்கிறது என்பதை யார் பார்க்கப் போகிறார்கள்? என்ற நினைப்பில் காய்ந்த இலைகளையும், சருகுகளையும் போட்டு பையை நிரப்பி அரண்மணையில் சேர்த்துவிட்டார்.

ஒரு நாழிகைப் பொழுதில் வேலையை முடித்துவிட்டுத் தன் மாளிகைக்குச் சென்று சுகமாக உண்டு உறங்கிவிட்டார்.

மன்னன் மூன்று அதிகாரிகளையும் அழைத்தான்.

அவர்கள் முன்னிலையில் தன் காவலர்களுக்குக் கட்டளையிட்டான்.

""இந்த மூவரையும் தனித்தனியாகப் பாதாளச் சிறையில் அடையுங்கள்.

அவரவருடைய சாக்குப் பைகளை அவரவரிடம் வைத்துவிடுங்கள்.

சிறைத்தண்டனை இரண்டு வாரங்கள் தொடரும்.

அந்த இரண்டு வாரங்களில் அவர்களுக்கு வேறு எந்த உணவும் வழங்க வேண்டாம்.

அவர்கள் சேகரித்த காய் கனி கிழங்கு வகைகள்தான் அவர்களுக்கு உணவு.''

மூன்றாம் அதிகாரியால் காய்ந்த இலைகளையும் சருகுகளையும் உண்டு உயிர் வாழ முடியவில்லை. ஐந்தே நாட்களில் அவர் பசி தாங்காமல் மாண்டுவிட்டார்.

இரண்டாமவரோ அழுகிய கனிகளையும் நல்ல கனிகளையும் கலந்து உண்டு எப்படியோ இரண்டு வாரங்கள் உயிர் வாழ்ந்துவிட்டார்.

ஆனால், அவர் உடல்நலம் கெட்டுவிட்டது.

மன்னன் அவரைப் பதவியிலிருந்து நீக்கிவிட்டான்.

முதலாம் அதிகாரி இரண்டு வாரங்களையும் தனிமைச்சிறையில் மகிழ்ச்சியாகக் கழித்துவிட்டு வெளியே வந்தார்.

தான் சேகரித்த தரமான காய் கனி கிழங்குகளை உண்டு இன்னும் அதிகமான தெளிவுடன் வெளியே வந்தார்.

மன்னன் அவனுக்குப் பல பரிசுகளைக் கொடுத்து அவனை முதலமைச்சர் ஆக்கிக் கொண்டான்.

இந்தக் கதையில் உள்ள வாழ்வியல் தத்துவத்தை நச்சென்று விளக்குகிறது

அதன் உட்பொருள் இதுதான்.

ஒரு இடத்தில் ஆயிரம் பசுக்கள் இருக்கின்றன.

தன் தாயைத் தேடி வரும் ஒரு கன்று அந்த ஆயிரம் பசுக்களில் தன் தாயைச் சில நொடிகளில் கண்டுபிடித்து அதனிடம் போய்ச் சேர்ந்துவிடுகிறது.

அதேபோல், ஒருவன் செய்யும் வினையின் பயனானது அவன் எங்கிருந்தாலும் அவனைக் கண்டுபிடித்து அவனைச் சென்றடைந்துவிடும்

நாம் அனைவரும் நன்மை செய்கிறோமா, தீமை செய்கிறோமா என்று இறைவன் கண்காணிப்புக் கேமரா வைத்துக் கொண்டு பார்ப்பதில்லை.

நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள் என்று நமக்குப் பூரண சுதந்திரத்தைக் கொடுத்துவிட்டான்.

ஆனால் உங்கள் செயலின் பலனை நீங்கள்தான் அனுபவிக்க வேண்டும் என்ற நியதியையும் அழுத்தமாக வைத்துவிட்டான்.

நீங்கள் உங்கள் பையில் நல்ல பழங்களைப் போடுகிறீர்களா.. இல்லை.. சருகுகளையும் அழுகிய பழங்களையும் போடுகிறீர்களா என்று யாருமே கண்காணிப்பதில்லை..

 ஆனால் நீங்கள் சேகரித்ததை நீங்கள்தான் சாப்பிட வேண்டும் என்பதை மட்டும் மறந்துவிடாதீர்கள்.

"ஐயோ அக்கிரமம் செய்தவன் நன்றாக இருக்கிறானே' என்று ஆண்டவன் மேல் நம்பிக்கை இழக்காதீர்கள்.

 அக்கிரமம் செய்பவன் இப்போதுதான் காய்ந்த சருகுகளையும் அழுகிய பழங்களையும் தன் பைக்குள் போட்டுக் கொண்டிருக்கிறான்.

விரைவில் தனிமைச் சிறையில் அவற்றை உண்ண வேண்டிய காலம் வரும்.

அப்போது அவனுக்குப் பசியும் மரணமுமே பரிசாகக் கிடைக்கும்.

இது மனிதன் இயற்றிய சட்டம் இல்லை; இறைவன் வகுத்த நியதி. இதற்கு விதிவிலக்கு இல்லை💝🔔

-படித்ததில் பிடித்தது.

Infibulation

Ever heard of 'INFIBULATION' ???

This is the practice of excising the clitoris and labia of a girl or woman and stitching together the edges of the vulva to prevent sexual intercourse. It is the complete scraping of vagina and stitching it together to prevent the girl from having sex.

The vagina is sealed leaving a small hole for the girl to menstruate or urinate. 

The girl's legs are tied with rope for days so that the wound can heal.  It usually take 15 to 40 days for the wound to heal. During this period the girl's legs remain tied and she is prevented from moving. 

Basically, the stitches are meant to be reopen by her husband on the wedding night so he can have intimate with her.
Imagine someone opening stitches and immediately having sex with her. 
Just imagine the pains, I mean serious pains!! 

Imagine the traumatic experience, the pains the girl will pass through.

Is it not better to allow her decide if she will marry as a virgin or not than to do this? 
 
At birth many women have to be cut again because the vagina opening is too small for the passage of the baby. 
It also cause urinary tract infections in women, fistulae and infertility etc. 

FYI, this is still practiced in some part of Africa till date.

According to research, it was also practiced in North America,  Australia and New Zealand.

It's disheartening

Say No To INFIBULATION!
Girls do not deserve this ill treatment for being girls. 
It's not a crime to be a girl child.

#SayNoToInfibulation
#LetGirlsLive
#SayNoToChildAbuse
#SayNoToBodyAbuse
#StopAbusingTheGirlChild
#NoInfibulation
#VoicesAgainstViolence

Via: Vocabulary And Dawn News' Informative Articles

Current Post

எதையும் கண்டுகொள்ளாமல் இருப்பது ஒரு கலை! அதை கற்க 5 சுலபமான வழிகள்!

 எதையும் கண்டுகொள்ளாமல் இருப்பது ஒரு கலை! அதை கற்க 5 சுலபமான வழிகள்! உங்க அமைதியை குலைக்காத/கெடுக்காத எண்ணங்களை மட்டும் தேர்ந்தெடுங்கள்...! ...