Saturday, November 14, 2020

Ambedkar's Perspective

 நாம் பிராமண இந்து மதத்தை ஏன் வெறுக்க வேண்டும்? நான் ஏன் இந்து மதத்தில் இருந்து கிருத்தவனாகவும், இஸ்லாமியனாகவும் மாறினேன் என்பதற்கு 100 காரணங்கள் இதோ....


1) பிராமண இந்து மதம் தான் என்னை கீழ்ஜாதி என்றது.

2) பிராமண இந்து மதம் தான் என்னை சூத்திரன் என்றது.

3) பிராமண இந்து மதம் தான் என்னை வேசிமகன் என்றது.

4) பிராமண இந்து மதம் தான் என் தாயை வேசி என்றது.

5) பிராமண இந்து மதம் தான் என்னைப் பஞ்சமன் என்றது.

6) பிராமண இந்து மதம் தான் என்னை தீண்டத்தகாதவன் என்றது.

7) பிராமண இந்து மதம் தான் என்னை தொட்டால் தீட்டு என்றது.

8. பிராமண இந்து மதம் தான் என்னை பார்த்தால் பாவம் என்றது.

9) பிராமண இந்து மதம் தான் என்னை நிழல் பட்டால் தோஷம் என்றது.

10) பிராமண இந்து மதம் தான் என்னை காலில் செருப்பு போடாதே என்றது.

11) பிராமண இந்து மதம் தான் என்னை தோளில் துண்டு போடாதே என்றது.

12) பிராமண இந்து மதம் தான் என்னை முழங்காலுக்குக் கீழே வேட்டி அணியாதே என்றது

13) பிராமண இந்து மதம் தான் என்னை வீதியிலே நடக்காதே என்றது.

14) பிராமண இந்து மதம் தான் என்னை கோயிலுக்குள் நுழையாதே என்றது.

15) பிராமண இந்து மதம் தான் என்னை கடவுளை தொழாதே என்றது.

16) பிராமண இந்து மதம் தான் என்னை தெய்வ சிலைகளை தொடாதே என்றது.

17) பிராமண இந்து மதம் தான் நான் சாமி சிலைகளை தொட்டால் சாமி செத்துப்போகும் என்றது.

18) பிராமண இந்து மதம் தான் என்னை நல்ல சோறு தின்னாதே என்றது.

19) பிராமண இந்து மதம் தான் என்னை நல்ல துணி உடுத்தாதே என்றது.

20) பிராமண இந்து மதம் தான் என்னை நல்ல வீடு கட்டிக்கூடாது என்றது.

21) பிராமண இந்து மதம் தான் என்னை ஓலை குடிசையில் தான் வாழ வேண்டும் என்றது.

22) பிராமண இந்து மதம் தான் என் பாட்டனை சொத்து வைத்துக் கொள்ளாதே என்றது.

23) பிராமண இந்து மதம் தான் என் பாட்டியை ஜாக்கெட் அணியாதே என்றது.

24) பிராமண இந்து மதம் தான் என் பாட்டி ஜாக்கெட் அணிந்ததற்கு வரி போட்டது.

25) பிராமண இந்து மதம் தான் என் பாட்டனை முண்டாசு அணியாதே என்றது.

26) பிராமண இந்து மதம் தான் என் பாட்டன் முண்டாசு அணிந்ததற்கு வரி போட்டது.

27) பிராமண இந்து மதம் தான் என் பாட்டனை முடி வளர்க்காதே என்றது.

28) பிராமண இந்து மதம் தான் என் பாட்டன் வளர்த்த முடிக்கும் வரி போட்டது.

29) பிராமண இந்து மதம் தான் என் பாட்டியை நகை அணியாதே என்றது

30) பிராமண இந்து மதம் தான் என் பாட்டியை பாட்டனை குடை பிடிக்காதே என்றது.

31) பிராமண இந்து மதம் தான் என்னை கிணற்றிலே நீரெடுக்காதே என்றது.

32) பிராமண இந்து மதம் தான் என்னை குளத்திலே குளிக்காதே என்றது.

33) பிராமண இந்து மதம் தான் என்னை நான் தண்ணீர் அருந்தினால் தீட்டாகிவிடும் என்றது.

34) பிராமண இந்து மதம் தான் அண்ணல் அம்பேத்கர் நீர் அருந்தியதால் குளம் தீட்டாகிவிட்டது என்று அம்பேத்கரை அடித்து உதைத்து ஊர் முன் குற்றவாளி ஆக்கியது.

35) பிராமண இந்து மதம் தான் என் முப்பாட்டன் நந்தனாரை தீயிட்டுப் பொசுக்கியது.

36) பிராமண இந்து மதம் தான் முப்பாட்டன் காத்தவராயனை கழுவிலே ஏற்றியது.

37) பிராமண இந்து மதம் தான் என் முப்பாட்டன் மதுரை வீரனை மாறு கால் மாறு கை வாங்கியது.

38) பிராமண இந்து மதம் தான் என் பாட்டன் இம்மானுவேலை பட்டப்பகலில் வெட்டிக் கொன்றது.

39) பிராமண இந்து மதம் தான் என்னைப் படிக்காதே என்றது.

40) பிராமண இந்து மதம் தான் என்னை படித்தால் நாக்கை அறுப்பேன் என்றது.

41) பிராமண இந்து மதம் தான் என்னை படிப்பதைக் கேட்டால் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்று என்றது.

42) பிராமண இந்து மதம் தான் என்னை படிப்பதை நினைவில் வைத்திருந்தால் நெஞ்சைப் பிள என்றது.

43) பிராமண இந்து மதம் தான் சூத்திர சம்பூகனைக் கொலை செய்தது.

44) பிராமண இந்து மதம் தான் சூத்திர ஏகலைவனின் கட்டை விரலை வாங்கியது.

45) பிராமண இந்து மதம் தான் என்னை உத்தியோகத்துக்குப் போகாதே என்றது.

46) பிராமண இந்து மதம் தான் என்னை தகுதி திறமை இல்லை என்றது.

47) பிராமண இந்து மதம் தான் எனக்கு ஓட்டலிலே தனி டீ கிளாஸ் கொடுத்தது.

48) பிராமண இந்து மதம் தான் என்னை ஒட்டலில் பெஞ்சில் அமராதே என்றது.

49) பிராமண இந்து மதம் தான் என்னை சலூனிலே முடி வெட்டிக்கொள்ளாதே என்றது.

50) பிராமண இந்து மதம் தான் என்னை சாக்கடை அள்ளு என்றது.

51) பிராமண இந்து மதம் தான் சூத்திரன் ஆளும் நாடு சேற்றில் மூழ்கிய  பசுப்போல அழிந்துவிடும் என்றது.

52) பிராமண இந்து மதம் தான் என்னை செத்த மாட்டைத் தூக்கு என்றது.

53) பிராமண இந்து மதம் தான் என்னை செருப்புத் தைத்துக்கொடு என்றது.

54) பிராமண இந்து மதம் தான் செருப்புத் தைத்துக் கொடுத்த என்னை செருப்புப் போடாதே என்றது.

55) பிராமண இந்து மதம் தான் என்னை விவசாயக்கூலியாய் வைத்திருந்தது.

56) பிராமண இந்து மதம் தான் என்னை மற்ற ஜாதிக்காரர்களுக்கு தொண்டூழியம் செய் என்றது.

57) பிராமண இந்து மதம் தான் என்னை பார்ப்பான் கூலிகொடுத்தோ கூலி கொடுக்காமலோ வேலை வாங்கலாம் என்றது.

58) பிராமண இந்து மதம் தான் நான் கொலை செய்தால் எனக்கு தூக்கு. பார்ப்பான் கொலை செய்தால் அவனுக்கு மொட்டை அடித்தால் போதும் என்றது.

59) பிராமண இந்து மதம் தான் சூத்திரனுக்கும் பெண்களுக்கும் சொர்க்கத்திலும் இடம் இல்லை என்றது.

60) பிராமண இந்து மதம் தான் பெண்களை ஆணுக்கு அடிமை என்றது. என் வீட்டு பெண்களை நான் ஏன் அவனுக்கு அடிமை ஆக்கவேண்டும்.

61) பிராமண இந்து மதம் தான் பெண்கள் பாவ யோனியில் பிறந்தவர்கள் அவர்கள் யோனி பாவம் செய்தே அழியவேண்டும் என்றது.

62) பிராமண இந்து மதம் தான் ஆணுக்கு முன் பெண் அமர கூடாது என்றது.

63) பிராமண இந்து மதம் தான் பெண்களைப் படிக்காதே என்றது.

64) பிராமண இந்து மதம் தான் பெண்ணுக்கு சொத்துரிமை கூடாது என்றது.

65) பிராமண இந்து மதம் தான் பெண்ணை விதவை ஆக்கி கொடுமை படுத்தியது.

66) பிராமண இந்து மதம் தான் பெண்ணை உடன்கட்டை ஏற வைத்தது.

67) பிராமண இந்து மதம் தான் பெண்ணை குழந்தையாக இருக்கும்போதே திருமணம் செய்து கொடுத்துவிடு என்றது.

68) பிராமண இந்து மதம் தான் வேலைக்குப் போகும் பெண் ஒழுக்கமற்றவர் என்றது.

69) பிராமண இந்து மதம் தான் விதவைப் பெண்களை தரிசுநிலம் என்றது.

70) பிராமண இந்து மதம் தான் சூத்திரன் நாட்டை ஆளக்கூடாது என்றது.

71) பிராமண இந்து மதம் தான் சூத்திரன் சட்டத்துக்குப் பொருள் சொல்லக்கூடாது என்றது.

72) பிராமண இந்து மதம் தான் சூத்திரன் பட்டினி கிடந்தாலும் பரவாயில்லை என்றது.

73) பிராமண இந்து மதம் தான் பார்ப்பான் பட்டினியாக இருக்கக் கூடாது என்றது.

74) பிராமண இந்து மதம் தான் பறையனும் பிணமும் ஒன்று என்றது.

75) பிராமண இந்து மதம் தான் பறையனைத் தொட்டாலும் குளிக்க வேண்டும் என்றது.

76) பிராமண இந்து மதம் தான் பிணத்தைத் தொட்டால் தீட்டு என்றது.

77) பிராமண இந்து மதம் தான் ஒரு பார்ப்பான் சாப்பிடுவதை சூத்திரன் பார்த்தால் தோஷம் என்றது.

78) பிராமண இந்து மதம் தான் சாதியை இன்னும் பாதுகாத்து வருகிறது. ( இன்றும் நாட்டின் முதல் குடிமகன், ஜனாதிபதி ராஜ்நாத் கோவிந்த அவர்களை கோவிலுக்குள் அனுமதி மறுத்து கோவிலுக்கு வெளியே அவர் பூஜை செய்த பிறகு அந்த இடத்தை மாட்டு மூத்திறத்தால் கழுவி தோஷம் நீக்கியது)

79) பிராமண இந்து மதம் தான் அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகர் ஆகக் கூடாது என்கிறது.

80) பிராமண இந்து மதம் தான் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆனால் சாமி செத்துப் போகும் என்கிறது.

81) பிராமண இந்து மதம் தான் சாதித்தொழிலைத் தவிர வேறு எந்தத் தொழிலும் செய்யக்கூடாது என்றது.

82) பிராமண இந்து மதம் தான் உழைத்துக் கொடுப்பவனைக் கீழ்ஜாதி என்றது.

83) பிராமண இந்து மதம் தான் உழைக்காமல் உண்டுகொழுக்கும் பார்ப்பானை உயர் ஜாதி என்றது.

84) பிராமண இந்து மதம் தான் இந்த உலகமே பார்ப்பானுக்காகவே படைக்கப்பட்டது என்றது.

85) பிராமண இந்து மதம் தான் உலகில் உள்ள செல்வம் அனைத்தும் பார்ப்பனருக்கே சொந்தம் என்றது.

86) பிராமண இந்து மதம் தான் சூத்திரன் சொத்து வைத்திருந்தால் பார்ப்பான் எடுத்துக் கொள்ளலாம் என்றது.

87) பிராமண இந்து மதம் தான் பார்ப்பான் சூத்திரனின் சொத்துக்களைப் பறிக்க கல்யாணம், கருமாதி, திதி, தெவசம், கோயில் திருவிழா, தேர் என்று அனைத்தையும் ஏற்படுத்தி வைத்திருக்கிறது.

88) பிராமண இந்து மதம் தான் சாதிக்கொரு வீதி என்று பிரித்து வைத்திருக்கிறது.

89) பிராமண இந்து மதம் தான் சாதிக்கொரு சுடுகாடு என்று கூறுபோட்டிருக்கிறது.

90) பிராமண இந்து மதம் தான் ஜாதி மாறிக் கல்யாணம் செய்யாதே என்கிறது.

91) பிராமண இந்து மதம் தான் ஜாதி மாறிக்கல்யாணம் செய்தால் ஆணவக்கொலை செய்யச் சொல்கிறது

92) பிராமண இந்து மதம் தான் பார்ப்பானே தெய்வம் என்கிறது.

93) பிராமண இந்து மதம் தான் பார்ப்பானை அனைவரும் வணங்கவேண்டும் என்கிறது.

94) பிராமண இந்து மதம் தான் ஆண்டவனுக்கும் மேலே அந்தணன் என்றது.

95) பிராமண இந்து மதம் தான் அரசனுக்கும் மேலே பார்ப்பான் என்றது.

96) பிராமண இந்து மதம் தான் பார்ப்பான் சொல்படிதான் அரசன் ஆள வேண்டும் என்கிறது.

97) பிராமண இந்து மதம் தான் கடவுளர்களே பார்ப்பானை வணங்குகிறார்கள் என்றது.

98) பிராமண இந்து மதம் தான் சூத்திரன் ஆளும் நாட்டில் பார்ப்பான் வசிக்கக் கூடாது என்றது.

99) பிராமண இந்து மதம் தான் சூத்திர பெண்களுக்கு முலை வரி அவர்களின் முலைகளின் அளவை பொருத்து வரியை கூட்டியும் குறைத்தும் வரியை வசூல்

செய்தது.

100) பிராமண இந்து மதம் தான் கோவிலில் குழந்தையை பாலியல் வல்லுறவு செய்து கொன்ற குற்றவாளிகளுக்கு ஆதரவாக இருந்தது.


   இப்படி பட்ட, என்னை கேவலமாக நடத்திய, நடத்தி கொண்டிருக்கும், நடத்த போகும் இந்த பார்ப்பன இந்து மதத்தில் நான் ஏன் இருக்கவேண்டும் ?.

    எங்களுக்காக எழுதப்பட்ட சட்டத்தை சுதந்திரம் பெற்ற எழுவது ஆண்டுகளுக்கு பிறகும் நடைமுறை படுத்தாத இந்து மதத்தில் நான் ஏன் இருக்கவேண்டும்?

   எங்கள் இன தலைவர் அன்றைக்கு பாராளுமன்றத்தின் வாயிலில் மனு தர்ம புத்தகத்தை எரித்த போதும், நாகபுரியில் ஐந்து லட்சம் தாழ்த்த பட்ட இந்துக்களை பவுத்ததிற்கு மாற்றியபோதும் சொரணை இல்லாமல் வேடிக்கை பார்த்த பார்ப்பன இந்து மதத்தில் நான் ஏன் இருக்கவேண்டும்?

No comments:

Post a Comment

Current Post

எதையும் கண்டுகொள்ளாமல் இருப்பது ஒரு கலை! அதை கற்க 5 சுலபமான வழிகள்!

 எதையும் கண்டுகொள்ளாமல் இருப்பது ஒரு கலை! அதை கற்க 5 சுலபமான வழிகள்! உங்க அமைதியை குலைக்காத/கெடுக்காத எண்ணங்களை மட்டும் தேர்ந்தெடுங்கள்...! ...