Saturday, November 21, 2020

Sadhu Sundar Singh

 ⛱️.சாது சுந்தர்சிங் அவர்களை 

சந்திக்க ஒரு வயதான சன்னியாசி வந்திருந்தார்..⛱️


⛱️.அவர் சுந்தர்சிங்கை பார்த்து நீங்கள்  இவ்வளவு இளம் வயதிலேயே சன்னியாசி ஆகியிருக்ககூடாது. என்னைப் போல உலகத்தில் உள்ளதை எல்லாம் அனுபவித்துவிட்டு வயதானபிறகு சன்னியாசி ஆகியிருக்கலாம்.உங்கள் இளமை காலத்தை வீணாக்கலாமா..?என்றார்..⛱️


⛱️.அதற்கு சாது சுந்தர்சிங்  அவர்கள் ஒரு பலாபழத்தை கொண்டுவர சொன்னார்  அதை வெட்டி பலாசுளையை எடுத்து குப்பையில் தூக்கி எறிந்துவிட்டு அதில் உள்ள சக்கையை சாப்பிட கொடுத்தார்..⛱️

⛱️.அதை கொஞ்சமும் எதிர்பார்க்காத அந்த சன்னியாசி சற்று எரிச்சலோடு பலாபழத்தின் சுளையை குப்பையில் வீசிவிட்டு ஒன்றும் பிரயோஜனமில்லாத அதனுடைய சக்கைபகுதியை தருகிறீர்களே இது முட்டாள் தனமாக அல்லவா இருக்கிறது என்றார்..⛱️


⛱️.அதற்கு சுந்தர்சிங் அவர்கள் பொறுமையாக சிரித்துகொண்டே 

ஐயா சாதாரண மனிதனான நீங்களே  பெலாப்பழத்தின் சக்கையை ஏற்றுகொள்ள மறுக்கிறீரே அப்படி தானே நம்மை படைத்த ஆண்டவரும் நினைப்பார்..⛱️


⛱️.நம்முடைய வாழ்நாட்களில் இளமை பருவம் என்பது பலாச்சுளையை போன்றது. அந்த இளமைபருவத்தை குப்பையான உலக இன்பத்திற்குள் போட்டுவிட்டு சக்கைபகுதியாகிய வயதான பருவத்தை ஆண்டவருக்கு கொடுப்பது என்பது எவ்வளவு பெரிய  முட்டாள் தனம் காரியம் என்றார்..⛱️ 


⛱️.அதை சற்றும் எதிர்பார்க்காத சன்னியாசி வெட்கி தலைகுனிந்தவராக அங்கிருந்து சென்றுவிட்டார்..⛱️


⛱️.அன்பான தேவபிள்ளைகளே உங்கள் வாழ்நாட்களில் வாலிபபருவத்தை ஆண்டவருக்கு கொடுங்கள்..⛱️ 


⛱️.வேதம் சொல்கிறது;-


⛱️.வாலிபனே! உன் இளமையிலே சந்தோஷப்படு, உன் வாலிப நாட்களிலே உன் இருதயம் உன்னைப் பூரிப்பாக்கட்டும், உன் நெஞ்சின் வழிகளிலும், உன் கண்ணின் காட்சிகளிலும் நட, ஆனாலும் இவையெல்லாவற்றினிமித்தமும் தேவன் உன்னை #நியாயத்திலே கொண்டுவந்து #நிறுத்துவார் என்று அறி..⛱️


🚩பிரசங்கி 11:9


⛱️.நீ உன் இஷ்டம் போல் வாழலாம் ஆனால் ஒரு நாள் நியாயதீர்ப்பு உண்டு என்பதை மறந்துவிடாதே..⛱️


 ⛱️.மண்ணானது தான் முன்னிருந்த பூமிக்குத் திரும்பி, ஆவி தன்னைத் தந்த தேவனிடத்திற்கு மறுபடியும் போகாததற்குமுன்னும், அவரை உன் #வாலிபப்பிராயத்திலே_நினை.


🚩பிரசங்கி 12;7


⛱️.அதனால் தான்  பிசாசானவன் உன் வாலிப பருவத்தில் ஆண்டவரை நீ நினைக்க விடாதபடி 

மது,மாது...

நெட்,சிகரெட்...

காதல்,மோதல்,சினிமா,

இப்படியான அந்த நினைவில் அலையவைக்கிறான் இப்படியான சிற்றின்ப வலையில் விழவைக்கிறான் ..⛱️


⛱️ஆதாம் தன்னுடைய வாலிபபருவத்தில் ஆண்டவருக்கு கீழ்படியாமல் செய்த பாவம் எல்லா மனிதனுக்கும்  சாபத்தை வாங்கிதந்தான்..⛱️


⛱️.அதனால் இயேசு அதே வாலிபபருவத்தில் ஆண்டவருக்கு எல்லாவற்றிலும் கீழ்படிந்து சாபத்தை சிலுவையில் நீக்கினார்..⛱️


⛱️.ஆண்டவர் வாலிபபிராயத்தை எவ்வளவு நேசிக்கிறார் என்பதற்கு சிலவற்றை மட்டும் பதிவிடுகிறேன்..⛱️


⛱️இயேசு மரித்தது வாலிபனாக..⛱️


⛱️இயேசு அற்புதம் செய்தது வாலிபனாக..⛱️


⛱️இயேசுவின் சீடர்கள் வாலிபர்களே..⛱️


⛱️இயேசு உயிரோடு எழுப்பிய மூன்றில் இருவர் வாலிபர்..⛱️


⛱️தானியேலை சிங்ககெபியில் வாலிபனே..⛱️


⛱️தானியேல் நண்பர்கள் அக்கினி சூலையிலே வாலிபரிகளே..⛱️


⛱️இன்னும் சொல்லவேண்டும் என்றால் சிம்சோன்,தாவீது,யோசேப்பு..⛱️


⛱️இன்றைய கிழவன் எல்லோரும்  நேற்றைய வாலிபன்..⛱️


⛱️இன்றைய வாலிபன் எல்லோரும் 

நாளைய கிழவன்..⛱️ 


⛱️தேவபிள்ளைகளே உன் வாலிப பருவத்தை வீணாக்காதே இந்த வாலிபமும் மாயையே நிரந்தரமானதல்ல எல்லாம் கடந்து போககூடியது..⛱️


⛱️.உன்னை சுந்தர்சிங்கை போல சன்னியாசி ஆக சொல்லவில்லை. 

அந்த ஊழியம் அந்த அழைப்பு உள்ளவர்களுக்கு மட்டுமே.. ⛱️


⛱️நீ படி, சம்பாதி,வேலைக்கு போ வேண்டாம் என்று சொல்லவில்லை. ஆனால் உன்னை குறித்த அழைப்பு என்ன என்று ஆண்டவரிடம் தினமும் கேள் ஒரு நாள் உனக்கு உன்னதத்தில் இருந்து  அழைப்பு வரும் அதுவரை அவருக்காக ஏதாவது ஒன்றை செய்வாயா..⁉


⛱️தேவபிள்ளைகளே உங்கள் வாலிபபருவம் யாருக்கு என்று முடிவு பண்ணீட்டீங்களா...⁉

No comments:

Post a Comment

Current Post

எதையும் கண்டுகொள்ளாமல் இருப்பது ஒரு கலை! அதை கற்க 5 சுலபமான வழிகள்!

 எதையும் கண்டுகொள்ளாமல் இருப்பது ஒரு கலை! அதை கற்க 5 சுலபமான வழிகள்! உங்க அமைதியை குலைக்காத/கெடுக்காத எண்ணங்களை மட்டும் தேர்ந்தெடுங்கள்...! ...